June 26, 2010

கோளறு பதிகம்-1: என்பொடு

பாடல் 1:
என்பொடு கொம்பா டாமை இவைமார் பிலங்க
      எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
      உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டோ டாறும்
      உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
      அடியா ரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க         \
எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்
ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்
ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்
பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்
ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்
உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

3 comments:

  1. அருமை! நன்றி!

    ReplyDelete
  2. Dear PSR,
    I was thrilled and delighted today when my friend mailed your blog. I am an ardent admirer and fan of PSR and Kadugu since my college days. My name is Manakkal M J Raman - now 65 years old. Perhaps my name will ring a bell....I was a prolific writer of letters ( to the Editor) in Kalki, Kumudam, Vikadan, Dinamani Kadir, Savi, Kanaiyazhi etc. I remember to have recd your mention and appreciation in one of your regular weekly columns in Dinamani Kadir.Very grateful to God that you continue to entrall all of us with your writings. We will be in touch through this blog for many many years to come.
    Endrum Anbudan
    Manakkal M J Raman (now in Vashi, Navi Mumbai)

    ReplyDelete
  3. Thanks for your nice words. I would only wish you to go through the nearly 200 posts I have posted so far.--Kadugu

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!