Showing posts with label புத்தகங்களும் நானும். Show all posts
Showing posts with label புத்தகங்களும் நானும். Show all posts

March 05, 2015

வால் ஸ்ட்ரீட் ஜர்னலும் குறும்(புப்) பாக்களும்

In a complex court settlement our parent company gets
custody of us on weekends!


--அமெரிக்காவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப் புரட்டினால் எல்லாம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட் நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்தித்தாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கிய போதுதான் தெரிந்தது,

Marry me, Judith with the
understanding, of course that
past performance is not
a guarantee of future results.




புத்தகத்தின் தலைப்பு: THE WALL STREET JOURNAL  BOOK OF WIT -EDITED BY CHARLES PRESTON.   வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் 'உப்பும் மிளகும்' என்ற பத்தியில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள், ஒருவரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. 225 பக்கங்கள்.  பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.

(ஒரு  முக்கிய குறிப்பு:  இந்தப்  பதிவில் உள்ள
ஆங்கில பாகத்தை ஒரு  PDF file ஆகத் தயாரித்து உள்ளேன். தேவைப்படுபவர்கள் தெரிவித்தால் ஈ-மெயிலில் அனுப்பி வைக்கிறேன்.)

FACTS OF LIFE
Marriage is a great teacher. And much what it teaches you don't need know unless you get married. - Robert  Fuoss
Write on
The permanence of the marriage pact
Depends on how couples plan it;
With some the vows are written on sand,
While others take them for granite. - George O. Ludcke
Wifely Logic
The toothpaste he forgets to cap:
For neatness he cares not a rap,
At night I listen to him snore;
At parties often  he's  a bore.
But what care I what faults has he
As long as he puts up with me. -- Lea Zwettler
Wistful shrinking
Darling you are always right!
I'm the one who isn't bright.
Wall Street expert, you can tell
When to buy and when to sell,
You bet colds and double chins
Eating proteins, vitamins
Luggage, toasters, wrist watch, car --
You know where the bargains are,
When I spurn your good advice
Later I must pay the price.
Though my love for you is strong,
Sweetheart, can't you one be wrong? -Edith Ogutsch 
Ballot Boxed
My wife and I, on equal terms,
Live happily together.
It is my decision what to do;
She just determines whether.
-Robert W. Campbel

February 14, 2014

சில புத்தகங்கள்: சில வரிகள். கடுகு

சில புத்தகங்கள்: சில வரிகள்.
  புத்தகங்களைப்   படிப்பது  ஒரு சுவையான பொழுதுபோக்கு. அதை விட சுவையான பொழுதுபோக்காக நான் கருதுவது அந்தப் புத்தகங்களைப் பற்றிய தகவல்களைத் தேடிப் படிப்பது.  எத்தனை விதமான, வித்தியாசமான. சுவையான, துணுக்குகளும் விமரிசனங்களும், அனுபவங்களும், அவை எழுதப்பட்ட சூழ்நிலைகளும் படிக்கப் படிக்க நம் மனதைக் கொள்ளை கொள்ளும். எழுதியவரின் அனுபவங்கள் மட்டுமல்ல, அச்சிட்டவர், பிரசுரம் செய்தவர், விற்பனை செய்தவர், படித்தவர்களின் அனுபவங்கள் அதிக சுவையுள்ளவைகளாக இருக்கும்.  
 
புத்தகம் என்றால்  அதில் எழுதப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல, புத்தகத்திற்குத் தலைப்பு தேர்ந்தெடுத்தது, சமர்ப்பணம், முகவுரைகள், முன்னுரைகள், விமர்சனங்கள், அட்டை வடிவமைப்பு, அச்சுப் பிழைகள், பாராட்டுகள், பரிசுகள் என்று நிறைய உள்ளன. இந்தக் கட்டுரை இந்த பத்திரிகையில் வந்த கட்டுரையின் காபி’ என்று ‘நக்கீரன்கள்’ கண்டுபிடித்துச் சொன்ன குற்றச்சசாட்டுகள் – எல்லாமே தெவிட்டாத விஷயங்கள்தான்.
BOOKS ON BOOKS என்ற வகை வரிசையில் நிறைய புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன நோபல் பரிசுகள் பின்னனணியில் இர்விங்க் வாலஸ் ’தி பிரைஸ்’ என்ற நாவலை எழுதினார். அது வெகு வரைவில் பிரபலமாகி விட்டது. நோபல் பரிசுகள் பற்றிய பல சுவையான தகவல்கள் அதில் இருந்ததாலும் அது மிகவும் புகழ் பெற்ற நாவலாகவும் ஆகிவிட்டது. 
அவர் அந்த நாவலை எழுத  எடுத்துக்கொண்டப் பிரயாசைகளை விவரித்து  ஒரு புத்தகமாகமே எழுதினார், The Writing of One Novel என்ற தலைப்பில். அதுவும் மிகப் பிரபலமான புத்தகமாக பெயர் பெற்றது. அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து தினமணி கதிரில் நான் எழுதினேன்.
(இடைச்செருகல்: அப்போது ஆசிரியர் சாவியிடம் ஒரு ஐடியா கொடுத்தேன். ”கதிரில் வாசகர்கள் கேள்விக்கு இர்விங்க் வேலஸ் பதில் எழுதினால் வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் இருக்கும்” என்றேன். “எழுதுவதற்கு
இர்விங்க் வேலஸ் சம்மதித்தாலும், சன்மானம், அதுவும் டாலரில் கொடுத்துக் கட்டுப்படி ஆகுமா?”  என்றார். சில வாரங்கள் கழித்து அவர் அமெரிக்க சென்றார். யார் யாரையோ  எப்படியோ பிடித்து  (சன்மானமில்லாமல்?)  வேலஸிடம் சம்மதம் பெற்று வந்து விட்டார்.)  

December 21, 2013

புத்தகங்களும் நானும்-1

புத்தகங்களும் நானும்
(பல பகுதிகளாக நிறைய எழுத உத்தேசம்.)

எனக்கு எப்போது புத்தகப் பைத்தியம் பிடித்தது என்பது தெரியாது. என் அப்பாவிற்குப் பலதரப்பட்ட புத்தகங்கள் மிது ஈடுபாடு உண்டு, இசை, மொழி, வான சாஸ்திரம்.  தெலுங்கு. சமஸ்கிருத புத்தகங்கள், நிகண்டு, நாலாயிரம் என்பவை மட்டுமல்ல, அந்த காலத்தில் TIMES OF INDIA-வின் ஹோம் லைப்ரரி கிளப்பில் சேர்ந்து  Worlds Best Short Stories  போன்ற பல தடிமனான புத்தகங்களையும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும்  POPULAR SCIENCE  போன்ற பத்திரிகைகளையும்  வரவழைத்தார்; இத்துடன் தியாகராஜர் கீர்த்தனைகள், திலகர் கீதை, அயினி அக்பரி என்று பலதரப்பட்ட புத்தகங்கள். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்ப்பேன். ‘
எதிர் வீட்டிலிருக்கும் என் நண்பன்  வெங்கடேசன் வீட்டில்.வடுவூர்  ‘திகம்பரசாமியார், ஜே. ஆர். ரங்கராஜு நாவல்கள் இருந்தன. அவைகளை கடன் வாங்கி விழுந்து விழுந்து படிப்பேன்.

விகடன், கல்கி வார இதழ்களைத் தேடித் தேடி படிப்பேன். தீபாவளியன்று விடிகாலையில் தீபாவளி மலர்களை படித்தால்தான் பண்டிகை முழுமையடையும்.
அதனால், பணத்தைச் சேர்த்து, செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டால்’  நாராயணனிடம் முன்பணம் கட்டி விடுவேன். பாவம், நாராயணன், அவசரம் அவசரமாகத் தன் வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு, தீபாவளி மலரை வீடு வீடாகப் போய்ப் போடுவார். விடிகாலை ஐந்தாவது மணிக்குள் மலரை என் வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
எனக்கு நாராயணன் மீது கொஞ்சம் பொறாமையும் உண்டு. எத்தனைப் புத்தகங்களுக்கு மத்தியில் அவருடைய பொழுது கழிகிறது! காசு செலவில்லாமல் அவர்  எல்லா பத்திரிகைகளையும் படிக்கலாம்.

அட்வான்ஸ் கொடுக்கும் சாக்கில் அவருடைய ஸ்டாலில் உள்ள தமிழ்ப் புத்தகங்களை மேய்வேன். சில சமயம் மாலை வேளைகளில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவருடைய ஸ்டாலில் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பேன்.

என் பொறாமை வளையத்திற்குள் இருந்த மற்றொருவர் வாசு(?) என்பவர். வாசு எங்கள் ஊர்க்காரர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக ஸ்டாலை நிர்வகித்து வந்தார். அது சற்று பெரிய ஸ்டால். பல மொழிப் பத்திரிகைகளும், வீக்லி, பிளிட்ஸ், காரவன். போன்ற பத்திரிகைகளும் இருக்கும். எனக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் போக வேண்டிய வேலை வந்தால், சற்று முன்னதாகப் போய்,  பத்து பதினைந்து நிமிஷம் ஸ்டாலில்  இருப்பேன்.

  சென்னை ஜி,பி. ஓ.வில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீச் ஸ்டேஷனில் இருந்த சுதேசமித்திரன் புக் ஸ்டாலில் வாரம் ஒரு புத்தகமாவது வாங்கி விடுவேன். புலியூர் கேசிகனின் தமிழ் இலக்கிய புத்தகங்கள் (இரண்டு ரூபாய்தான்!), மர்ரே ராஜம் புத்தகங்கள் (ஒரு  ரூபாய்தான்!), சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை, அரு. ராமநாதனின் வெளியீடுகள், அமுத நிலையம் வெளியீடுகள் என்று வாங்கி விடுவேன். ( ஒரு ரூபாய் என்பதே அதிக விலைதான். சென்னை-செங்கல்பட்டு பஸ் கட்டணம் 75 பைசா என்று இருந்த காலம்!)

டில்லி வந்த பிறகு என் அலுவலகத்திலிருந்து மூன்றாவது கட்டடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்ததை பார்த்த எனக்கு லாட்டிரி பரிசு அடித்த மாதிரி மகிழ்ச்சி ஏற்பட்டது, சில வருஷங்கள் உறுப்பினர் சந்தா எதுவும் இல்லை. பிறகு 15 ரூபாய் என்று வைத்தார்கள்.
சுமார் பத்து நிமிஷ நடை தூரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகமும் இருந்தது. அது ஒரு சுரங்கம். . பல அரிய புத்தகங்கள், பழைய இதழ்கள் எல்லாம் மண்டிக் கிடந்தன. புத்தகங்கள் படிந்திருந்த தூசு. எல்லா புத்தகங்களையும் ‘கனமான’  புத்தகங்களாக ஆக்கி விட்டிருந்தன! அங்கிருந்து  ஒரு சமயம் இரண்டு புத்தகங்கள் தான் எடுத்து வரமுடியும்.

இந்த சமயத்தில் யாரோ ஒரு புண்ணியவான், “ ஞாயிற்றுக் கிழமைகளில் பழைய டில்லியில் இருக்கும் தாரியாகஞ்ச் தெருவிற்குப் போயிருக்கிறாயா? தெரு முழுதும் நடைபாதையில் பழைய புத்தகங்கள்தான்” என்றார். முதன் முதலில் போனபோது பிரமித்துப் போனேன்.  டில்லி கேட் எனப்படும் இடத்திலிருந்து துவங்கி ஜம்மா மசூதி வரை போகும்  வீதி. ஒரு பக்க நடைபாதையில் தான் கடைகள் இருக்கும். எதிர்ப்பக்கம் பரிதாபமாகக் காலியாக இருக்கும்.