Showing posts with label தெரியாத விவரங்கள்!. Show all posts
Showing posts with label தெரியாத விவரங்கள்!. Show all posts

October 07, 2016

நேருஜிக்குப் பிடித்த கவிஞர்

 ராபர்ட் ஃப்ராஸ்ட்
அமெரிக்காவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் ஃப்ராஸ்ட். அவரை இந்தியாவில் பிரபலமாக்கிய பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உரியது.
         மே, 21 1964 அன்று நேருஜி காலமானார். பகல் இரண்டு மணிக்கு அவர் காலமான தகவல் வந்ததுடன் அலுவலகங்களை இரண்டு மணிக்கு மூடப்போவதாக அறிவிப்பும் வந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக அவரது தீன்மூர்த்தி இல்லத்துக்குப் போனேன். கூட்டம் சொல்லி மாளாது. கதவுகளை மூடி யிருந்தார்கள். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நுழைவாயில் அருகிலுள்ள கூடத்தில் உடல் வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
      என் வீடு மிக அருகில் இருந்ததால் வீட்டிற்குப் போய்விடலாம்; இரவு 1 மணி 2 மணிக்குத் திரும்பி வந்தால் கூட்டம் குறைந்திருக்கும், அப்போது அஞ்சலி செலுத்தலாம் என்று எண்ணி வீட்டுக்குப் போய்விட்டேன்.
     இரவு 2 மணிக்குச் சென்றோம்.. கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிஷத்தில் உள்ளே போய்விட்டோம். நேருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். அவருடைய அலுவலக அறையைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. யாரையும் வேறு எங்கும் போக விடவில்லை.
            நேரு இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. அவர் தனது மேஜை மேலிருந்த டயரியில் ஒரு ஆங்கிலக் கவிதையின் நான்கு வரிகளை எழுதி வைத்திருந்ததைப் பத்திரிகைகள் வெளியிட்டன.

November 03, 2014

ஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்


ஐன்ஸ்டீன்,  தனது UNIFIED CONCEPT THEORY என்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம்  முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம்  நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின்  வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார். 
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ  எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன்  குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன.  ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர்   உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.

‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர்  பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
*    *        *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”
*    *        *

August 16, 2014

தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு


என்ன, திடீரென்று அணுகுண்டைக் கையில் எடுத்துக் கொண்டீர்கள் என்று யாராவது கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன்.
அணுகுண்டு பற்றிய சில தகவல்கள் என் நினைவுக்கு வந்ததன் காரணம் சமீபத்திய மூன்று விஷயங்கள் . 
  1.         ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் முதலில் 1945-ல் ஹிரோஷிமாவில் போடப்பட்டது.
2.         ஆகஸ்ட் 9-ம் தேதி (1945)  இரண்டாவது அணுகுண்டு   நாகசாகியில் போடப்பட்டது
3.         நாகசாகியில் அணுகுண்டைப் போட்ட   விமானப்படை வீரர்களில்   ஒருவரான. THEODORE "DUTCH" VAN KIRK -NAVIGATOR  கடந்த மாதம் ஜுலை 28’ம் தேதி, தனது 93-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  (மற்றவர்கள் யாவரும் இவருக்கு முன்பே காலமாகி விட்டார்கள்.)

 
இனி அணுகுண்டு  பற்றி சில தகவல்கள்.
 1996’ ஆண்டு அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, வாஷிங்டன் நகருக்குப் போய், சுற்றிப்  பார்த்தேன். பிரபல ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் ஒரு அரை நாள் செலவழித்தேன். அங்கு ஒரு கூடத்தில் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதுதான்  அணுகுண்டைப்  போட்ட, விமானத்தின் மூக்குப்பகுதி என்று ’போர்ட்’ வைத்திருந்தார்கள். அதன் பின்னால், சுவரில் 10, 12 அடி  அளவு பெரிய புகைப்படம் இருந்தது. அதில் 12 விமானப்படை வீரர்கள், ஒரு ராணுவ விமானத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
அணுகுண்டு LITTLE BOY

*அணுகுண்டு போட்ட விமானத்தின் பெயர்:  ENOLA GAY ( இந்த வித்தியாசமான பெயரின் பின்னே சுவையான விவரம் இருக்கிறது. அது பின்னால்!)

*1970 வருஷ வாக்கில் ஒரு TIME  இதழில்  ‘25 வருஷத்திற்குப் பிறகு’ என்கிற மாதிரி தலைப்பில் ஒரு குட்டிக் கட்டுரை வெளிவந்தது. அணுகுண்டு போட்ட விமானிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு  எழுதி இருந்தார்கள். அப்போது ஒரு சில வீரர்கள், தாங்கள் போட்ட  அணுகுண்டு  செய்த பயங்கர அழிவைப் பார்த்த நினைவால் மனப்பிரமை பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்  என்கிற மாதிரி எழுதி இருந்தது. இந்தத் தகவலை தினமணி கதிரில் துணுக்காக எழுதி இருந்தேன். ( ஆனால் அப்படி எதுவும் இல்லை என்கின்றன  இப்போது சில வலைப் பதிவுகள்.)