Showing posts with label என் கையேடு. Show all posts
Showing posts with label என் கையேடு. Show all posts

October 26, 2016

THREE Ks

 துணுக்குத் தோரணம்
K -1: குருஷ்சேவ் வந்தபோது
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள 150 வருட பழைய கல்லூரியின் நூல் நிலையத்திற்கு இரண்டு வருஷத்திரற்கு முன்பு முதல் முறையாகப் போனேன்.  நூல்நிலையத்தில் புத்தகங்களை இங்கேயே படிக்கலாம்; ஆனால் வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது” என்றார்கள்.  

 அது பிரம்மாண்டமான புத்தகசாலை. முதல் நாள் ஒவ்வொரு மாடியாகப் போய், ஷெல்ஃப்களை எல்லாம் ஆசையுடன் தழுவியபடியே, என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று உத்தேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன். சில புத்தகங்கள் இருக்கும் ஷெல்ஃப் எண், call number போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
   சுமார் மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு (கால் ஓய்ந்துவிட்டதால்) வீட்டிற்குத் திரும்ப லிஃப்டை நோக்கி வந்தேன். அப்போது ஒரு ஷெல்ஃபில் ஒரு புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிய பக்கத்தில் “குருஷ்சேவ் வந்தபோது” என்கிற மாதிரி தலைப்பில் குட்டிக் கட்டுரை இருந்தது. அதை விரைவாகப் படித்தேன்.
            குருஷ்சேவ் முதன்முதலாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்ச்சி. அவர் முதலில் வந்தது சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு.  அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹால் கொள்ளாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் திரண்டு விட்டார்கள். பலருக்கு  உட்கார இடம் கிடைக்கவில்லை.  ஒரே சள சள சப்தம். குருஷ்சேவ் வருகைக்குக் காத்திருந்தனர். ஆனால் அதுவரை பேசாமல், வம்பளக்காமல் இருக்க முடியுமா?
      

November 24, 2014

பென்குரியனும் பில் கேட்ஸும்

 சில பதிவுகளுக்கு முன்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த பென் குரியனைப் பற்றி எழுதி இருந்தேன். ( இங்கே சொடுக்கவும்: பென் குரியன் பதிவு
அதில் ஒரு சுவையான தகவலை எழுத விட்டு விட்டேன். அதை இங்கு தருகிறேன்.

இன்னிக்கு உங்கள் வேலை
David Ben-Gurion
 பென் குரியன் பிரதமராக இருந்த ஒரு சமயம் (செப்டம்பர் 1953 வாக்கில்) தன் வீட்டில் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையிலிருந்த அவருடைய மனைவி குரல் கொடுத்தாராம் ”பென் குரியன். இன்னிக்கு உங்க டியூட்டி” என்று,

“ எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் மினிட்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சமையலறைக்குப் போய் பாத்திரங்களைத் தேய்த்து வைத்து விட்டு வந்தாராம். அன்று  அவர் பாத்திரம் தேய்க்க வேண்டிய முறை தினமாம்!

இப்போது இதை எழுதியதற்கு ஒரு காரணம் இருக்கிறது:

’மைக்ரோஸாஃப்ட்’ பில் கேட்ஸின் மனைவி   MELINDA GATES, ’டைம்ஸ்’ வார இதழின் பத்துக் கேள்விகள் என்ற பகுதியில் இந்த வாரம்   இடம் பெற்றிருக்கிறார்..
Melinda Gates
அதில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் இதோ.
டைம்ஸ் நிருபர்: உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) எப்போதாவது பாத்திரம் கழுவி எடுத்து வைப்பாரா?

MELINDA GATES:  உண்மையைச் சொல்லப் போனால் ‘இல்லை’  இரவு டின்னருக்குப் பிறகு, எல்லாரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.
பாத்திரங்களைக் கழுவுகிற வேலை அவருக்குப் பிடிக்கும்.
அவருடைய வீட்டில் சகோதரியுடன் வளர்ந்தவர். சகோதரியும் அவரும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவது வழக்கம்.
பாத்திரங்களை டிஷ் வாஷரில்   ’லோட்’ செய்ய  அவருக்குப் பிடிக்கும். கழுவின பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலை பிடிக்காது... அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் வேலையை அவர் செய்வதற்கு நாங்கள் விடுவதில்லை!

August 05, 2014

தெரிந்த பெயர், தெரியாத தகவல்கள்: பென் குரியன்

ஒரு முன்குறிப்பு:
 சில வருஷங்களுக்கு முன்பு என் பெண் கூறிய ஒரு சுவையான அனுபவம். அவள் அப்போது AIIMS மருத்துவக் கல்லூரி மாணவி.ஒருநாள் கல்லூரி நூலகத்தில் ‘மூளை’யை ப்பற்றி ஒரு பெரிய புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த போது  அதில் ஒரு இடத்தில் “ மேலும் விரிவான தகவல்களுக்கு  ’ A HANDBOOK OF  CLINICAL NEUROLOGY’ புத்தகத்தைப் பார்க்கவும்”   என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலகத்தில், அந்த புத்தகம் இருக்கிறதா  என்று கேட்டாள். “இல்லை” என்றார்கள்.
தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த போது பல இடங்களில் இந்த ’HANDBOOK-கை பார்க்கவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு  தலையணை அளவுப் புத்தகத்தில் இருப்பதைவிட  அதிக தகவல்கள்   கையடக்கப் புத்தகத்தில் (HANDBOOK !) இருக்கும் என்றால், அது மிகவும்  சிறப்பானதாக இருக்க வேண்டும்; எப்படியாவது அதைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.  பல இடங்களில் வேட்டை ஆடினாள். டில்லியில்  NATIONAL MEDICAL LIBRARY என்ற நூலகம் இருக்கிறது. மிகப் பழமையான நூலகம்.( தூசு அகம் என்றும் சொல்லலாம்!) அங்கு போய்க் கேட்டாள்.
“ ஓ, இருக்கிறதே.. முதல் மாடியில் ஷெல்ஃப்கள் ’எம்’,  ‘என்’னில்  இருக்கிறது” என்றார்கள்.
‘ என்னது..நாம் ஹேண்ட்புக் தானே கேட்டோம். இரண்டு ஷெல்ஃப்கள் என்று சொல்கிறார்களே?” என்று யோசித்தபடியே மேலே சென்றாள்.  ஷெல்ஃப்களைப் பார்த்தபோது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.காரணம், வரிசையாக 26 ஹேண்ட்புக் புத்தகங்கள் இருந்தன;  A முதல்  Z வரை 26 வால்யூம்கள்! ( இப்போது 123 வால்யூம்கள்!)

சரி, திடீரென்று இந்த விஷயம் இப்போது என் நினைவுக்கு வந்ததற்குக் காரணம், இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக இருந்த DAVID BEN GURION-ஐப் பற்றி ஒரு சுவையான தகவலை ஒரு புத்தகத்தில் பார்த்ததுதான்!
========================
DAVID BEN GURION (1886 –1973) இஸ்ரேல் நாட்டு முதல் பிரதமர்.. பயங்கரப் புத்தகப்  பிரியர்.அவ்வப்போது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுவார். அதில் அவருக்குத்  தேவையான புத்தகங்கள் பட்டியல் இருக்கும். பட்டியல் சற்று நீளமாக இருக்கும். நண்பரும், நியூயார்க்கில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகப் பட்டியலைக் கொடுப்பார். கடைக்காரர் பல இடங்களில்  புத்தகங்களைத் தேடிப்பிடித்து சப்ளை செய்வார்.
  ஒரு சமயம் (அக்டோபர் 1952) அந்த நண்பருக்கு பென் குரியனிடமிருந்து கடிதம் வந்தது. புத்தகப் பட்டியலில் ஏழே ஏழு புத்தகங்கள் தான் இருந்தன.
“பரவாயில்லை, ஏழு புத்தகங்கள்தான் ..அப்பாடி. அதிக அலைச்சல் இல்லை”என்று எண்ணியபடி, நியூயார்க் சென்று பட்டியலைப் புத்தகக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவர் ஐந்தே நிமிஷத்தில் 6 புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். பட்டியலில் ஏழாவதாக இருந்தது: “ A COLLECTION OF CASTILLION LITERATURE.”
”ஏழாவது புத்தகத்தை எப்படி எடுத்துப் போவீங்க? காரில் பிடிக்காது.மொத்தம் 134 வால்யூம்கள்!” என்றார் கடைக்காரர்.
நண்பருக்குத் தலை சுற்றியது.
*       *       *
 இந்த சுவையான தகவலுடன்  BEN GURION-ஐப் பற்றிஇன்னும் சில தகவல்கள்
இருந்தன. அவைகளையும் இங்கு போடுவதில் தப்பில்லை.

November 19, 2012

நாலு பேரு சொன்னாங்க!

மே வேஸ்ட் சொன்னது:
ஹாலிவுட் நடிகை  மே வேஸ்ட் சரியான வாயாடி. அசைவ ஜோக் ராணி! அவரைப்பற்றி ஏராளமான துணுக்குகள் உள்ளன. பல அச்சில் போட முடியாதவை.
மே வேஸ்ட், தன்னுடன் நடிப்பவர்களை  மிஞ்சிவிடத்தான் பார்ப்பார். ‘நைட் ஆஃப்டர் நைட்’ என்ற படத்தில் அவருடன் நடித்த அலிஸன் ஸ்கிப்வொர்த்திற்கு பல சீன்களில் நடிக்க வாய்ப்பே தராமால், தன்னைத்  தானே  முன்னுக்குத் தள்ளிக்கொண்டார். ஷூட்டிங் முடிந்ததும்,  அலிஸன் கோபமாக அவரிடம் “இத பாரு, உனக்கு ஒண்ணு சொல்றேன், , நான் ஒரு நடிகை என்பதை தெரிஞ்சுக்கோ” என்றார் .
மே வேஸ்ட், ” அப்படியா...? கவலைப்படாதே.. நீ சொன்ன ரகசியத்தை யார் கிட்டேயும் நான் சொல்லமாட்டேன்!” என்றார் கூலாக!
==========================
பிக்காஸோ சொன்னது
உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காஸோ ஒரு குறும்புப் பேர்வழி. ஓவியங்கள், சிலைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏராளமாக
உருவாக்கியவர்.
(50,000 -க்கு மேல் இருக்குமாம்  .

அவருடைய  வண்ண ஓவியங்களை அதிக அளவில் வாங்கியவர் கெர்ட்ரூட் ஸ்டீன் என்ற அமெரிக்கப் பெண்மணி.
கெர்ட்ரூட்டை வண்ண ஒவியமாக  பிக்கஸோ வரைந்தார். அதைப் பார்த்த ஒருவர் , பிக்காஸோவிடம், ”நீங்கள் வரைந்த ஓவியம் மாதிரியே கெர்ட்ரூட்  இல்லையே?” என்றார்.”
”அப்படியா.. கவலைப்படாதீர்கள்! சீக்கிரம் அது மாதிரி ஆகிவிடுவார்!” என்றார் பிக்காஸோ அலட்டலாக!

+    +  +
பிக்காஸோவின் ஒரு ‘பொன்மொழி” மறக்க முடியாதது.
அவர் சொன்னார்: என் அம்மா எனக்குக் கொடுத்த அட்வைஸ்: ” நீ ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தால் மேஜர் ஜெனரலாக வேண்டும்.  சர்ச்   பாதிரியானால், போப்பாண்டவராக ஆகவேண்டும்:” இதைப் பல தடவை சொல்லியிருக்கிறார்.  நான் என்ன செய்தேன் தெரியுமா? ஓவியன் ஆனேன். அதனால் பிக்காஸோவாக ஆனேன்!"
(I became an artist and became Picasso!)

November 09, 2012

மகத்துவம் மிக்க முருங்கைக்காய்


முருங்கைக்காய் ஒரு அசாதாரணமானது.
மருத்துவ குணங்கள் கொண்டது.
இதை நான் சொல்லவில்லை.  NATIONAL GEOGRAPHIC  பத்திரிகையின் நவம்பர் 2012 இதழில் வந்திருந்த விவரத்தை  இங்கு தருகிறேன்,
ஆங்கிலத்தில் அதன் பெயர் MORINGA.


May 07, 2012

மோனா லிசா


 


உலகப்புகழ் பெற்ற  மோனா லிசா ஓவியத்தைப் பற்றி ஒரு செய்தியைப் பல வருஷங்களுக்கு முன் படித்திருக்கிறேன்.
 பாரீஸில் லூவ்ர் மிஸியத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியம் ஒரு நாள் திருடு போய்விட்டது. இரண்டு வருஷத்திற்குப் பிறகு தான் அது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் படித்திருக்கிறேன்,
ஆனால் அதற்கு மேல் அதைப் பற்றி நான் யோசித்தது கூட இல்லை, உங்களிடம் யாராவது ‘மோனாலிசா ஓவியம் திருடு போய் அப்புறம் அகப்பட்டதாமே?” என்று கேட்டால், “ ஆமாம்..,,இத்தனை பிரபலமான ஓவியம் திருடு போகிற அளவுக்கு அலட்சியமாக இருந்திருக்கிறார்களே. பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்களா?” என்றுதான் கேட்டிருப்பீர்கள்.

அதை விடுங்கள். என் மனதில் எழுந்த ஒரு கேள்வியைச் சொல்லுகிறேன்,
 சரி, இந்த ஓவியத்தைத் திருடியவன் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?அது, அந்த காலத்திலேயே (1911) 50 லட்சம் டாலர்  மதிப்புள்ளது, யார் வாங்குவார்கள்? வாங்கி வீட்டில் வைக்க முடியுமா?  யாரும் வாங்க மாட்டார்கள்  என்று தெரிந்தும் ஏன் அது திருடப்பட்டது?
இது பற்றி  தகவல்களைத்  திரட்டினேன்,

முதலாவது அந்த மியூசியத்தில் இருந்த பல அற்புதமான ஓவியங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அவ்வளவு பிரபலமான  ஓவியமல்ல. பார்க்கப்போனால் அது திருடு போய்  மீண்டும்  அகப்பட்டதால்தான் அதற்குத் திடீர் பிராபல்யம் கிடைத்தது என்கிறார்கள்.
 சுமார் 200 அறைகள் கொண்ட அந்த மியூசியத்தில் அவ்வளவு அதிக பாதுகாப்புகள் கிடையாதாம். திருடு போனதே  தற்செயலாகத்தான் கண்டு பிடிக்கப்பட்டதாம்.
1911’ம் ஆண்டு 21’ம் தேதி  அதை படம் எடுக்க ஒரு போட்டோகிராபர் போனார். வழக்கமான இடத்தில் அது காணவில்லை,  “ “எங்கே மோனாலிசா படம்?” என்று விசாரித்ததும்தான் மியூஸிய அதிகாரிகளுக்கு  படம் திருடு போனது தெரிந்தது!

அதை விற்கமுடியாது என்று தெரிந்தும் யாரோ எடுத்துப் போயிருக்கிறார்கள்.
பாரிஸில் இருந்த பல ஓவியர்களிடம் போலீஸ் விசாரித்தது. ( பொறமை காரணமாகக்கூட அதைத்  திருடி மறைத்து வைத்திருக்ககூடும். ( ஓவியர் பிக்காஸோவையும் கூட விசாரித்தார்களாம்!)
பல மாதங்கள் வலை வீசியும்ஓவியம்  கிடைக்கவில்லை, ஆனால் அந்த படத்தை பலவித வியாபாரப் பொருளாகச் செய்து நிறைய பேர் விற்க ஆரம்பித்தார்கள்.
போதக்குறைக்கு மோனாலிசா படம் மாட்டப்பட்டிருந்த இடத்தைப் பார்க்க (!) மியூசியத்தில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது!

சுமார் இரண்டு வருடம் கழித்து இத்தாலியில் இருந்த கெரி என்ற  ஒரு ’ஆர்ட்’ வியாபாரிக்கு ஒரு கடிதம் வந்தது.
 “மோன லிசா ஓவியம் இத்தாலி ஓவியர் லியனார்டோ டாவின்சி வரைந்தது. இந்த பொக்கிஷம் இத்தாலிக்குச் சொந்தமானது, பிரான்சில் அது இருக்கக்கூடாது. மோனாலிசா  ஓவியம் என்னிடம் இருக்கிறது. அதை இத்தாலிக்கேத் திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன், அதற்காக எனக்கு ஒரு சிறிய தொகை  தரவேண்டும்” என்று கடிதத்தில் எழுதி இருந்தது. கீழே ‘லியானார்டோ வின்சென்ஸா” என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது,
அவனுடன் தொடர்பு கொண்டு அவனைக் கெரி சந்தித்தார், ஓரு தொகை தருவதாகச் சொல்லி ஓவியத்தை வாங்கி கொண்டு வந்தார், உடனே போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்,

லியானார்டோ வின்சென்ஸா கைது செய்யப்பட்டான். கோர்ட் அவனுக்கு ஒரு வருஷம் சிறைத் தண்டனை கொடுத்தது,
 அதன் பிறகுதான் மோனாலிசாவின் புகழ் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது! 



 -------------------------------------
இங்கு இரண்டு நையாண்டி படங்கள்  1.மோனாலிசா  பார்பி!
2.  மோனாலிசா MAD Magazine


August 16, 2011

என் கையேடு:: தப்பிப் பிறந்த மேதை

ஒரு மகப் பேறு மருத்துவர் தனது நண்பரான மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வந்தார்.
:” டாக்டர்.. ஒரு சின்ன அட்வைஸ்.. ஒரு குடும்பத்தில் அப்பாவுக்கு ஒரு தீராத நோய்.. அம்மாவுக்கு காச நோய். அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தைக்குக் கண்பார்வை இல்லை. இரண்டாவது, பிறந்த சில நாட்களிலேயே இறந்து விட்டது. மூன்றாவது குழந்தை ஊமை- செவிடு. நான்காவது குழந்தைக்கு டி..பி.... இப்போது அந்த தாய் மறுபடியும் கர்ப்பம். இந்த நிலையில் அவர்களுக்கு என்ன  யோசனை சொல்லலாம்?” என்று கேட்டார்.
இரண்டாவது  டாக்டர் சொன்னார்,” இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? நானாக இருந்தால் அந்தப் பெண்ணின் கருவைக் கலைத்து விடுவேன்...”
“ அப்படியா?.. நல்ல காலம் .. உங்கள் யோசனைப்படி சுமார் 250 வருஷத்திற்கு முன்பு  ஒரு டாக்டர் செய்திருந்தால்,  பிறப்பதற்கு முன்பே பீத்தோவனைக் கொன்றிருப்பார்!:

ஆம்.. பீத்தோவன் என்ற  இசை மேதை இப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்தார்!

நான் ஒரு நார்!


 சில நாட்களுக்கு முன்பு  Other men's flowers  என்ற பதிவைப் போட்டிருந்தேன். அதைப் படித்த ஒரு வாசகர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் Other men's flowers பற்றி மேலும் சில தகவல்களை எழுதி இருந்தார், கடிதம் ஆங்கிலத்தில் உள்ளதால்,  தகவல்களைத் தமிழில் தருகிறேன். ( தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். ஆகவே வெளியிடவில்லை!

*                                                    * 
இந்தியாவில்   1943 லிருந்து 1947 வரை வைசிராயாக இருந்தவர்  ஃபீல்ட் மார்ஷல் வேவல். பின்னால் இவர் லார்ட் வேவல் ஆனார்.
தனக்குப் பிடித்த 260 பாடல்களைத் தொகுத்து புத்தகமாகப் போட விரும்பினாராம். லண்டனில் உள்ள புத்தக நிறுவனம் அதைப் போட முன்வந்தது. பாடல்களுக்கு சிறு குறிப்பு, விளக்கம் எல்லாம் எழுதிக் கொடுத்தால் போடுவதாகச் சொன்னது. வேவல் அப்படியே எழுதிக் கொடுத்தார். 1944-ல் புத்தகம்  வெளியாயிற்று. அந்த குறிப்புகளின் சிறப்பு காரணமாக அடுத்த 30-35 வருஷங்களுக்கு அந்தப் புத்தகம் அச்சில் இருந்து கொண்டே வந்திருக்கிறது. ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளனவாம். (சமீபத்தில் 1992-ல் ஒரு பதிப்பு வெளியாகி இருக்கிறது.)
சரி, இப்போது எதற்கு இந்த விவரங்கள் எல்லாம் என்று கேட்கிறீர்களா?

அந்த புத்தகத்தின் தலைப்பு:  OTHER MEN'S FLOWERS!.

I have gathered a posie of other men's flowers, and
nothing but the thread that binds them is my own
Montaigne, 1533-1592

 பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்


அந்த புத்தகத்தில் வேவல் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து சில பாராக்களைக் கொடுக்கிறேன் . ---அபிராமி

FOREWORD
'I have gathered a posie of other men's flowers and nothing but the thread that binds them is my own.' So wrote Montaigne; and I have borrowed his title, my memory being the binding thread.
This is a purely personal anthology. I have read much poetry; and since I had once a very retentive memory for verse much has remained in my head. I have had less opportunity to read poetry during these late years of war. When I do so, I find that I read the old favourites rather than fresh poets or poems; so that with failing memory it is un- likely that I shall acquire much more by heart.
It amused me lately to set down in a notebook--mainly with a view to discussion with my son, who shares my liking for poetry-- the poems I could repeat entire or in great part. I have now collected and arranged the poems I set down. I did it with no idea of publication, but my son and others have suggested that the collection might appeal to a wider circle.
I ask no one to applaud my choice. I do not always applaud it myself, but a part of me from which I cannot dissociate myself, my memory, has made this selection and I am too old to alter it. On the whole I think it is a reason- able choice from the almost inexhaustible treasure of English poetry, for a workaday man who prefers plain gold, silver or metal work to elaborate jewellery.
Browning and Kipling are the two poets whose work has stayed most in my memory, since I read them in impression- able youth. I have never regretted my choice. They have courage and humanity, and their feet are usually on the ground. G. K. Chesterton has the same qualities, with a more romantic and less practical strain; he has become my third favourite, and much of his verse is in my heart and my head; there also is much of Masefield, the poet of adven- ture and toil by land and sea......


March 30, 2011

அலட்டல் விமர்சனங்கள்

இலக்கியப் பத்திரிகைகளிலும் சரி ஒரு சில விமரிசனங்களிலும் சரி,  விமரிசகர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது கடினம். தங்கள் கெட்டிக்காரத்தனத்தை காட்டும் HIGH BROW  கட்டுரைகளாகத்தான் இவை எழுதப்படுகின்றன.

எழுபதுகளில் பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வந்த இத்தகைய அலட்டல்களை டயரியில் நான் குறித்து வைத்துக்கொள்வது உண்டு. அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.
* Food is a complicated subject which doesn't begin or end with the meal on the dinner table; it's a fabric of moods, responses and encounters, a fascinating blend of pleasures, problems and disasters.
* Fassbinders's plays are not sociograms but phlegmatic situational evocations.
*  The films structure is simple and linear, its varied resonances complex even mystical.
* Peter De Vries wields a cool, down-beat, deadpan humour which is  unorthodox as quantum theory, as elusive as avocado pear, as a improbably piercing as a left-handed screw. - Penguin Books
*  Thomas hardy and British poetry raise confusion to the level of criticism: it is a testament to Britain's fertility as an intellectual acerage in which ideas will flourish as  rigour's expense, the insights blooming like orchids while the valid syllogisms wither  on the vine - TLS
*  " Your own special way" a captivating love song explored an unusual variety of textures and rhythms, while "... in that quiet earth" used wide ranging melismas accompanied by keyboard and guitar ostinato figures to create a curious but presumable intentional air of eventlessness about much of it--  Clive Bennett  in " The times"
*  There is something, perhaps about a photograph, which pierces the protection behind which an individual contemplates what is nasty and terrifying. It has a singleness of purpose, a documentary quality and an inescapable contemporaneity.
- New Society.

*  We have in these poems a venture into modes of sensibility and compassion which will play their limited yet crucial note in the re-fructifying of Society itself.
- Terry Eagleton

 போதுமா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா? இவைகளுக்குக் கோனார் நோட்ஸ் போடப்படவில்லை!

( இதைப் படித்த சூட்டோடு, தாளிப்பு கட்டுரைகளைப் படித்தால் ஆஹா, ஓஹோ என்று  தலைமேல்  வைத்துக் கொண்டாடுவீர்கள்!)