Showing posts with label அறுவை. Show all posts
Showing posts with label அறுவை. Show all posts

February 17, 2011

வீரகுண பாண்டியனின் காதலி -எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

  சரித்திரக் கதைகள் பல புருடாவாக இருக்கின்றன என்று பலர் சொல்வதால் ஆதார பூர்வமான சரித்திரக் கதையை  எழுதித் தரும்படி எழுத்தாளர் ஏகாம்பரத்திடம் கேட்டோம். அவர் எழுதி தந்த முதல் அத்தியாயம். இது! ( இதையே கடைசி அத்தியாயமாகவும் செய்து விடப் போகிறேன்!!)


வீரகுண பாண்டியனின் காதலி 
`ஈராயிரம்1 ஆண்டுகளுக்கு2 முன்பிருந்த3 வீரகுண4 பாண்டிய5 மன்னனின் சௌந்தர்யமே6 உருவான மணிமண்டபத்தின்7 மீது குணவாயில்8 எழுந்த கதிரவன் தன் தேஜோமயமான9 கிரணங்களை மகோன்னதமாகவும்10 ஜாஜ்வல்யமாகவும்11 வீசிக் கொண்டிருந்தான்.
(தொடரும்) 12

அடிக்குறிப்புகள்:
1. ஈராயிரம் என்பதைப் பதம் பிரிப்பின் ஈர் ஆயிரம் என்றாகும். சிலரது தலைமுடியில் ஈர், பேன் முதலியவை ஆயிரக் கணக்கில் இருக்கும். அந்த ஈரை இது குறிக்காது. எனினும் நீலகண்டராய சிங்கரையர் நிகண்டில் ஈர் என்பது இரண்டைக் குறிக்கும் என்றிருப்பதை நோக்குமிடத்து இது இரண்டாயிரம் என்பதைக் குறிக்கும் எனலாம்.
2. ஆண்டு எனப்படுவது ஆண்-டூர் என்பதன் சுருக்கம். ஆண்களுக்கு ஆணான சூரியன் ஒரு தரம் பூமியை வலம் வரும் காலத்திற்கு, ஆணைச் சுற்றி ஒரு டூர் போய்விட்டு வர ஆகும் பொழுதிற்கு ஆண்டூர் என்பதாகும். இதுவே வழக்கில் ஆண்டு என்றாகி, ஒரு வருஷத்தைக் குறிக்கும் சொல்லாயிற்று. இந்த விளக்கம் டூரிஸ்ட் இலாகாவின் பழைய குறிப்பேடுகளில் காணப்படுகிறது.
3. இந்தச் சொல் `முன் பிறந்த' என்றிருக்க வேண்டும் எனப் பல கல்வெட்ட ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதாவது இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு பிறந்த என்று பொருள்படும். `முன்பிருந்த' எனின் ஆண்டு என்பதற்கு முன்னே இருந்த என்ற கருத்து வருகிறது. ஆண்டு என்பது உருவமற்றது. ஆதலால் அதற்கு முன்பு எப்படி ஒருவர் இருக்க முடியும்? பிறந்த என்பதே ஏற்புடைய சொல்லாகும்.
4. `நீரகுண' என்றும் வழக்கில் இருந்தது. இது `வர்லாரே டி பாண்ட்யா' என்ற பழைய பிரெஞ்சுப் புத்தகத்தில் உள்ள தகவல். மனதில் இரக்கம் மிகுந்தவன் என்ற பொருளில் `ஈரகுண' என்றும் இருக்கலாம். இது முற்றிலும் கரையானால் அழிந்து போன பழைய ஏட்டுச் சுவடியில் பல இடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்.
5. சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள `பாந்தியன் தெரு' உண்மையில் `பாண்டியன் வீதி' என்றுதான் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக இருந்தது. வீதியின் பெயரை எழுதிய பெயிண்டர் சற்று காது மந்தமுடையவராதலால் பாண்டியன் என்ற சொல் பாந்தியன் என்று அவர் காதில் விழுந்திருக்க வேண்டும். `தி ஹிஸ்டரி ஆஃப் டெஃப் பெயிண்டர்ஸ் ஆஃப் தி கார்ப்பரேஷன் ஆஃப் மெட்ராஸ்' என்ற ஏழு தொகுதியுள்ள புத்தகத்தின் மூன்றாவது தொகுதியில் 768ம் பக்கத்தைக் காண்க.

டி.வி. பேட்டிகள் -- கடுகு


ரேடியோ, டி.வி. பேட்டிகளில் பல சமயம் பேட்டி காண்பவர் பேசுவதுதான் அதிகபட்சமாக இருக்கும். தங்களுடைய கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். இது எல்லா பேட்டியிலும் நடைபெறுவதுதான். பல வருஷங்களுக்கு முன்பு (JEAN PAUL SARTRE)  (ஜீன் பால் சார்த்ரே)விடம் நடத்திய பேட்டியிலிருந்து ஒரு பகுதியை ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். அதை என் டயரியில் எழுதி வைத்தேன். (நிஜமான பேட்டியா, நையாண்டியாக எழுதப்பட்டதா என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை.) இந்தப் பேட்டியைப் பார்த்து நான் ஒரு கட்டுரையை எழுதினேன். தினமணி கதிரில் வெளியான அந்தக் கட்டுரையை இங்கு தருகிறேன்.  ஜீன் பால் சார்த்ரே பேட்டியையும் இங்கு முதலில்போடுகிறேன்.

Interviewer:
Borrowing the terms employed by the structuralists, one might say that signification is the product of the articulation of signifiers themselves considered as non-articulated constituent elements; signification would be the unit of meaning which brings about the unification of the discontinuous data of your verbal material.

Sartre: Exactly!
----------------------------------------------

ஒரு சிறப்புப் பேட்டி!
எழுத்தாளர் ஏகாம்பரம் எழுதியது

முன்னுரை: சமீபத்தில் நான் காட்டாங்குடி சென்று வந்ததையும் அந்த அனுபவங்களை எழுதியதையும் அறிவீர்கள். `இவ்வளவு சிறப்பாக உங்களால் எப்படி எழுத முடிகிறது?' என்று உங்களில் பலர் என்னைக் கண்டு வியந்திருப்பீர்கள். இதற்கே வியந்து விட்டால் போதுமா? இன்னும் நான்- அதாவது எழுத்தாளர் ஏகாம்பரம்- எழுதும் கட்டுரைகளைக் கண்டு மேலும் வியப்படையப் போகிறீர்கள். இதோ ஒரு பேட்டி:
*                *                 *
டிம்பக்டு நாட்டிலிருந்து வந்துள்ள எழுத்தாளர் ஜீரோவைப் பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்குப் போகிறோம். புன்சிரிப்புடன் அவர், ``பிரபல தமிழ் எழுத்தாளர், கட்டுரையாளர் திரு.ஏகாம்பரம் அவர்களே!'' என்று வரவேற்கிறார். பேட்டி ஆரம்பமாகிறது.