Showing posts with label சுயப்பிரதாபம். Show all posts
Showing posts with label சுயப்பிரதாபம். Show all posts

December 30, 2017

வேண்டாம் முதல்வர் பதவி


       குறிப்பு:  எனக்கு  வரும் கேள்விகளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி திரும்பத் திரும்பப் பலரால் கேட்கப்படுகிறது. அதற்குப் பதில் அளித்தால் ரொம்ப நீண்டுப் போய்விடும் என்ற காரணத்தால் பதில் கூறாமலேயே தள்ளிப் போட்டு வந்தேன். ஆனால் பல்லாயிரக்க ணக்கான வாசகர்கள் (எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கான அளவு மிகை என்ற உண்மையைக் கூறிவிடுகிறேன்.!) ஓர் ஆர்வத்துடன் கேட்கும்போது பதில் சொல்லாவிட்டாலும் நன்றாக இருக்காது. ஆகவே இங்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
     கேள்வி இதுதான்; நீங்கள் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது?
     பதில்: ஒரே வார்த்தையில் சொல்வதானால்வேண்டாம்என்று சொல்ல வேண்டும் விளக்கமாகக் கூறாவிட்டால் திருப்தி ஏற்படாது. (எனக்குத்தான்!)
           *                *
     முதல் அமைச்சர் என்றால் தினந்தோறும் அலுவலகம் போகாவிட்டாலும், பேட்டி காண வரும் எம்.எல்.. க்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. அதற்காகக் காலையிலேயே எழுந்திருந்து (கஷ்டமான காரியம்) ஷேவ் பண்ணி (ரொம்பக் கஷ்டமான காரியம்) குளித்து (ரொம்ப ரொம்பக் கஷ்டமான காரியம்) தயாராக வேண்டும் !
     உதவி கேட்டு வரும் பிரமுகர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக உள்ள இடத்தில்நம்ப ஆளை போடணும்என்று கேட்டுக் கொண்டு தனித்தனியாக ஏழு எம்.எல்.ஏக்கள் வந்து கேட்பார்கள். “கட்டாயம் போட்டுடறேன்என்று ஏழு பேருக்கும் மனதறிந்து பொய் சொல்ல வேண்டும். ( பொய் சொல்வது லட்டு மாதிரி என்றாலும், ஒரு நாளைக்கு ஆயிரம்  லட்டு சாப்பிட முடியுமா?). ஏழு பேரையும் விரோதித்துக் கொண்டு என் மைத்துனியின்     பிள்ளைக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும், (யாரை விரோதித்துக்   கொண்டாலும் என் மைத்துனியை விரோதித்துக் கொள்ள முடியாது!)
     அலுவலகத்துக்கு சென்றால் எனக்குப் புரியாத, தெரியாத, தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாத   ஆயிரம் விஷயங்களை பற்றித்  தீவிர ஆலோசனைக்குப் பிறகு (!) முடிவு எடுத்து,  ஃபைல்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
     கவர்மென்ட் ஆபீஸில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை என்பது எனக்குத் தெரியும். எல்லா கோப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிவிடுகிறார்களே! ஏதாவது ஒரு ஃபைலில்இதற்கு காம்பவுண்ட் வரி ஒரு சதவிகிதத்திலிருந்து ஒன்றே கால் சதவீதமாக மாற்றலாம்என்று அதிகாரி எழுதியிருப்பதைப் படித்து, இதனால் சர்க்காருக்கு வருவாய் என்று எண்ணிச் சம்மதம் தெரிவித்துவிடுவேன். (காம்பவுண்ட் என்றால் வீட்டைச் சுற்றி எழுப்பப்படும்  சுவர் வரி என்றுதான் புரிந்து கொள்வேன்!) 

February 19, 2017

பேனா... பேனா... பேனா... (முதல் பாகம்)

        சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு பேனா பரிசாக அளித்தார். அதாவது, வேறு வழியின்றி அளித்து விட்டார். என்ன ஆயிற்று ன்றால்,  என்னுடையகமலாவும் நானும்புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத் தரும்படி அவர் கேட்டார்ர். புத்தகம் கொடுத்த கையோடு அவர் தன் பேனாவையும் கொடுத்தார். நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தபோது அவரது பேனா அனாயசமாகப் பேப்பரில் வழுக்கிச் செல்வதை உணர்ந்தேன்.
சார், உங்கள் பேனா அட்டகாசமாக எழுதுகிறது. இது என்ன பேனா?” என்று கேட்டேன். ‘என்ன பேனாவாக இருந்தால் என்ன..? என்னுடைய அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்என்று சொன்னார். பாதி உண்மையாகவும், பாதி பாசாங்காகவும் வேண்டாம் சார்,, விலை உயர்ந்த பேனா மாதிரி இருக்கிறது. நான் சும்மா சொன்னேன்.” என்றேன்.  (இப்படிச் சொன்னதுதான் சும்மாஎன்பதை  இப்போது ஒப்புக் கொண்டு விடுகிறேன்.)
      நான் ஒரு பேனாக் காதலன்; பித்தன்; அபிமானி. என் காதல் கதையை நாவலாகச் சொல்கிறேன்.

 என் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை பலகை, பலப்பம்தான். பென்சிலால் எழுதுவதற்குவாய்ப்பே     கிடையாது.
     பள்ளிக்கூடத்தில் பேப்பர், நோட்டுப் புத்தகம் எதுவும் 5-வது வகுப்பு முடியும் வரை கிடையாது.  முதல் ஃபாரம் வந்தபோது நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கொடுத்தார்கள். அவ்வப்போது ஊக்கு உடைந்ததால் மட்டுமல்ல, பேனாவின் பளபள நிப்பும் கிளிப்பும்  என்னைக் கவர்ந்து   அதன்   மீது தீராத காதலை ஏற்படுத்தி விட்டன.. பள்ளிக் கூடத்தில் பேனாவுக்குத் தடை.   என்ன   காரணம்  சொன்னார்கள் தெரியுமா..? பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக இருக்காது என்றுதான். ஏதோ சப்பைக்காரணம் என்று நான் அதை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், என் ஆசிரியர்கள் பலரின் கையெழுத்து எழுத்தாணியால் எழுதியது போல் இருந்த துன்,லீக்ஆகும் பேனாவாக இருந்தால், வலதுகை பெருவிரல் அடையாளங்க ளுடன்ள அங்கங்கே இருக்கும்.  அசப்பில் பார்த்தால் வீடு விற்பனை (அல்லது வாங்கிய) பத்திரம் போல் இருக்கும்.
அது மட்டுமல்ல, சற்றுச் சிவப்பாக இருந்த என் கணக்கு வாத்தியாரின் கட்டை விரலும், ஆள்காட்டி விரலும்,  பேனாவில் எழுதி எழுதி, நீலம் பாய்ந்த விரல்களாக எப்போதும் காட்சி அளிக்கும். ஒரு டம்ளர் தண்ணிரில் அவர்கள் விரலைப் பத்து நிமிஷம் வைத்திருந்தால் அரை புட்டி பேனா மை ரெடியாகிவிடும் என்று சொல்லலாம். அதனாலோ, வேறு என்ன காரணத்தாலோ அவர் எப்போதும் ஒரு மாதிரியான நீலநிறச் சட்டைதான் அணிந்திருப்பார்.
எப்போது ஆறாம் வகுப்பு (முதல் ஃபாரம்) போவோம் என்று இருந்தோம். போனதும் அப்பாவிடம் நாலணாவோ, எட்டணாவோ (மறந்து விட்டது) வாங்கி, நேரே கடைத்தெரு நூர்தாஜ் கடைக்குச் சென்றேன்.
நல்ல பேனா கொடுங்க’ என்று மிதப்பாகக் கேட்டேன்.
என்ன விலையில் வேணும்..? கழட்டி எடுத்து இங்க் போடற பேனா எட்டணா ஆகும். பணம் வெச்சிருக்கியா..? என்ன கலர்ல வேணும்.?’ என்று கேட்டார்.
எந்தக் கலராக இருந்தாலும் பரவாயில்லை. சரி, நீலக்கலர் பேனா கொடுங்க.’ என்றேன்.
கொடுத்தார். அதன் கிளிப் பளபளாவாக இருந்தது. தங்கப் பேனா என்று  சொல்லிக் கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன்.
அடாடா... எழுதிப் பாக்கணுமே... பேனாவுக்கு இங்க் போட்டுத்தர முடியுமா?’ என்று கேட்டேன்.
தரேன். உனக்கு இனாமா ஒரு இங்க் மாத்திரை தரேன். வீட்டுக்குப் போய் ஒரு சின்ன புட்டியில் போட்டு, கொஞ்சம் தண்ணி விடு. கொஞ்ச நேரத்தில் மாத்திரை கரைந்து இங்க் ஆயிடும்’ என்றார். பேனா வாங்கிய சந்தோஷத்தைவிட இலவச (அதாவது புதுத் தமிழில் விலையில்லா) மாத்திரை கிடைத்தது அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது.
மாத்திரையைச் சின்னக் காகிதத்தில் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தார். பேனாவை ஜேபியில் குத்திக் கொண்டேன். தங்க மெடலைக் குத்திக்  கொண்டது போல் உற்சாகம் பொங்கியது.
வீட்டுக்குப்போகுமுன் மழை பெய்தது. ‘அச்சமில்லை, அச்சமில்லை... உச்சி மீது மழை பொழியும் போதிலும்...’ என்று பாடிக் கொண்டு வீட்டுக்குப்  போனேன்.பேனா மன்னராகி விட்டதால் ராஜநடை போட்டுக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
அம்மா, புதுப் பேனா வாங்கி விட்டேன்’ என்று தலையைத் தூக்கி, புருவத்தை உயர்த்தி ஒரு கெத்துடன் ஜேபியிலிருந்து பேனாவை ஸ்டைலாக எடுத்து அம்மாவிடம் நீட்டினேன்.
அம்மா பேனாவை வாங்காமல், ‘என்னடா இது அநியாயம்? இப்படி நீல வண்ணக் கண்ணனாக வந்திருக்கே?’ என்றாள்.

November 11, 2010

திருக்குறளை எழுதியது நான்.-கடுகு

`திருக்குறள் எழுதியது நான்' என்ற தலைப்பைப் பார்த்ததும் `ரீல்' என்று எண்ணி விடாதீர்கள். விவரமாகச் சொல்கிறேன்.

 டில்லியில் வள்ளுவர் கழகம் என்ற அமைப்பை நாங்கள் சிலர் உருவாக்கினோம். அமைச்சராக இருந்த க.ராசாராம் அதன் தலைவர். அவர் முயற்சியில் டில்லியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் திருக்குறளை செதுக்கி வைக்க விரும்பினோம். சென்னையிலிருந்து செய்து கொண்டுவர நேரம் இல்லை. ஒரே இரவில் முடித்தாக வேண்டிய கட்டாயம். ஆகவே டில்லியில் உள்ளவர்களைப் பிடித்து இதைச் செய்ய முடிவு செய்தோம்.

அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பீடத்தின் ஒரு பக்கத்தின் அளவுக்குப் பேப்பரில் குறளை  எழுதித்தர முடிவெடுத்தோம்.எனக்கு ஓரளவு லெட்டரிங் தெரியும் என்பதால் எனக்கு இந்த வேலை தரப்பட்டது. அவ்வளவு பெரிய அளவில் எழுதிப் பழக்கம் இல்லாததால் எனக்கு உதவி செய்தவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை இன்ஜினியர்! பேப்பரில் கோடுகள் போட்டு, எழுத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதன்படி நான் எழுதிக் கொடுத்தேன்

 நான் பெரிய காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை கிரானைட் கல்லின் மீது ஒட்டி வைத்து, அதன் மேலேயே பொளிந்தார்கள். எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். ஆகவே கூடவே இருந்து தவறு வராதபடி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 டில்லி சென்றால், டில்லி தமிழ்ச் சங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய திருவள்ளுவர் சிலையின் பீடத்தைப் பாருங்கள். சிலையின் பீடத்தில் சில திருக்குறள்கள் செதுக்கப்பட்டிருக்கும். என் கையெழுத்தில்!
.