Showing posts with label அன்புடையீர். Show all posts
Showing posts with label அன்புடையீர். Show all posts

April 03, 2020

என் அருமை நேயர்களுக்கு,

என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். 

நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
-- கடுகு

April 30, 2019

தாமதம்

அன்புடையீர்,
தவிர்க்க முடியாத சில்லறைக் காரணங்களால் அடுத்த பதிவு போடத் தாமதமாகிறது. - கடுகு

December 04, 2018

அன்புடையீர்!


அன்புடையீர்!
 வணக்கம். 
பத்து ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 5-ஆம் தேதி ’கடுகு தாளிப்பு’ என்ற பெயரில் என் வலைப்பூவை தொடங்கினேன். தொடர்ந்து எத்தனை பதிவுகள் போட முடியும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் அல்லது கவலைப்படாமல் துவக்கி விட்டேன். 

    அமரர் கல்கியின் நினைவு தினத்தில் துவக்கிய நான், அவரது ஆசியையும் வழிகாட்டுதலையும் நம்பிதான் ஆரம்பித்தேன். அவர் என் ஊனிலும் ,உயிரிலும் கலந்து, பதிவுகள் எழுத எனக்கு அளித்த ஊக்கத்தினால், கிட்டத்தட்ட 700 பதிவுகளை எழுதி உள்ளேன். அவர் கொடுத்த ஊக்கத்திற்குச் சற்றும் குறையாத அளவு ஊக்கத்தை நீங்கள்  தந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த மைல்கல்லை நான் தொடுவதற்குத் தோள் கொடுத்த உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளவே இந்த குறிப்பை எழுதி உள்ளேன். 
உங்களில் பலர் பின்னூட்டத்தில் தெரிவித்து வரும் பாராட்டுகள் மட்டும் அன்றி,   தனிப்பட்ட முறை யிலும்   எனக்கு ஈ-மெயிலில் பலர் எழுதி வரும் பாராட்டுகளும், எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டி, கிரியா ஊக்கியாக விளங்கி வருகின்றன.  (இந்தக் கடிதங்களைப் பதிவில் போட என் மனம் ஒப்பவில்லை.)
 இதை எல்லாம்  என்னுடைய  சாதனையாகக் கூறிவிட்டு, வணக்கம் போட்டுவிடலாமா என்று மனதில் சில சமயம் தோன்றுவது உண்டு. அந்த சமயங்களில் எல்லாம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு "தம்பி! நீ எழுது" என்று பணித்த குரல், மீண்டும் சன்னமாக என் காதுகளில் கேட்கும். அந்த குரலுக்கு வந்தனை கூறி, மனதில் இருத்தி, வாயுற வாழ்த்தி, வணங்குகிறேன்; பதிவுகளைத் தொடர்கிறேன்!

- பணிவுடன் 
கடுகு
-----------------------------------------------------------------------------

\*** அடுத்த பதிவை இரண்டு மூன்று  நாளில் போடுகிறேன்.

April 25, 2018

 அன்புடையீர்!
பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது  சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும்.
- கடுகு

March 06, 2018

அன்புடையீர்,
வணக்கம்,
அமெரிக்காவிலிருந்து சென்னை  வந்திருக்கிறேன்.
பதிவு போட நேரமில்லை. 
ஆகவே  4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

.             =கடுகு

February 07, 2018

ஒரு அறிவிப்பு

 ஒரு  அறிவிப்பு
 தவிர்க்க முடியாத சில சில்லறைக்
காரணங்களால் அடுத்த பதிவு
சில நாள் தாமதமாக வரும். --- கடுகு

October 07, 2015

அதே பாடல்: அதே ராகம்!

அதே பாடல்: அதே ராகம்!
ஆமாம். முதுகு வலி போய்விட்டது. இப்போது கண்களில் பிரச்னை.  ஆகவே. மேலும்  SICK LEAVE  தேவைப்படுகிறது. விரைவில்  SICK-கிற்கு விடை கொடுத்துவிட்டு ‘CHIC- என: வருவேன்.
-- கடுகு

July 20, 2015

மன்னிக்கவும்.. .மன்னிக்கவும்... மன்னிக்கவும்...


தாமதத்தைத் தவிர்க்க  முடியவில்லை.
கண்ணிற்கு லேசர் சிகிச்சை நடக்க இருக்கிறது.
ஆகவே மேலும் சில நாள் தாமதம் ஆகும்.
அன்புடன்
கடுகு

June 27, 2015

உங்கள் கனிவான கவனத்திற்கு

வணக்கம்.
அடுத்த பதிவு 15 நாள் கழித்து வரும்.  JET LAG காரணம். இந்தியா திரும்பிவிட்டேன்.
-கடுகு

 பின்னூட்டம்:  நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு விட்டு வெளுத்துக் கட்டுங்கள்.

நேயர்கள் சர்பாக நானே ஒரு பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்! என் பிளாக்கின் முதல் நேயர் நான்தானே!
 

April 07, 2015

அன்புடையீர்!

அடுத்த பதிவு சற்று தாமாதமாக வரும்.

மன்னிக்கவும். ஒரு வாரத்திற்குள்
போடப் பார்க்கிறேன்.

-கடுகு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

November 17, 2014

அன்புடையீர்,

வணக்கம்.

அடுத்த பதிவு தாமதமாக வரும்.

எனக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

-கடுகு

# # # # # # # # # # # # 

July 18, 2014

ஒரு வேண்டுகோள்!

அன்புடையீர், 

வணக்கம். என் வலைப்பூவிற்கு தவறாது வருகை புரிந்து, நான் போடும் பதிவுகளைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன், ” உங்களுக்கு அல்லவா நாங்கள்  THANKS   சொல்ல வேண்டும்?” என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும்.
நீங்கள் வலைப்பூவிற்கு வந்து என் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதே என்னைச்  சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உங்கள் பின்னூட்டங்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எனக்கு இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. 

சிலசமயம் FEEDJIT- ஐப் பார்ப்பேன்.  உலகின் எங்கெங்கோ உள்ளவர்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதே எனக்கு உந்து சக்தியாக செயல் புரிகிறது. பல சமயம்  பெயரே கேள்விப்படாத ஊராக இருக்கிறது. அந்த ஊர்/ நாடு எங்கிருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படிக்கும் அவரது ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். பிழைப்புக்காக  எங்கோ ’டிம்பக்டூ’விற்குப் போனாலும் அந் தமிழரின்  ஆர்வம், ரசனை, ஈர்ப்பு  எல்லாம்   தமிழ் நாட்டிலும், தமிழ் இலக்கியம், கலை ஆகியவைகளில் தான் உள்ளன. 
அவர்  ஒருவருக்காகவாவது   வலைப்பூவில் ஒழுங்காகப் பதிவுகளைப் போட போடவேண்டும் என்று என் மனம் அறிவுறுத்துகிறது! முக்கியமாக அவருக்கு ஒரு ஸ்பெஷல் ’தேங்க்ஸ்’ சொல்லுகிறேன். 

பதிவுகள் போட என் பழைய நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். புதிதாகப் பல (பழைய!) புத்தகங்களை வாங்கி இரவு பகலாகப் படிக்கிறேன். நோட்டுப் புத்தகம், நோட்டுப் புத்தகமாகக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்கிறேன்.
காலையில் கண் விழிக்கும்போது, ’இன்று எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், எவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், மொழி பெயர்க்க வேண்டும்’ என்று உத்தேசமாக திட்டமிடச் செய்கிறது வலைப்பூ பணி. இந்த ‘நிர்ப்பந்தம்’ என்னைச்    சோம்பேறித்தனமின்றி  செயல்பட வைக்கிறது. இதன் காரணமாக அதிக பலன் அடைபவன் நான்தான்.
ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது: ”யார் கஞ்சன்? தான் படித்தவற்றை, ரசித்தவற்றை, அறிந்துகொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருப்பவன்தான் மகா கஞ்சன்!”. நான் வள்ளலாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; கஞ்சனாக இருக்க விரும்பவில்லை!
நான் எழுதும் பல  விஷயங்கள், தகவல்கள், என் வலைப்பூவில் போடும் பொன்மொழிகள் எல்லாம் புதியவை என்று கூறமுடியாது. உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

EMERSON-னின் ஒரு பொன்மொழியைத் தருகிறேன் : What I need is someone who will make me do what I can. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்!

நிற்க, உங்களிடம் ஒரு வேண்டுகோள். சமீபத்தில் எனக்கு வந்த மூன்று கடிதங்கள்தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.  மூன்று பேர் எழுதியுள்ள கடிதங்களிலும் உள்ள முக்கிய வரிகள்: ”உங்கள் வலைப் பூவை இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன்.”, மற்றும், “முதல் பதிவிலிருந்து மூச்சு விடாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன்...”.

இந்த வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர் ஒருவருக்குத் (ஒரே ஒருவருக்குத்) தெரிவியுங்கள். படிப்பதும் படிக்காததும் அவர் இஷ்டம். என் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது ஆசையால்) நான் இதைக் கூறவில்லை.
இந்த வலைப்பூவிற்கு ஒரே  ஒரு வாசகர் இருந்தாலும் எனக்கு ஆர்வம் குறையாது.

அந்த ஒரே வாசகர் நானாக இருந்தாலும் கூட! வலைப்பூவில் எழுதுவது எனக்கு உற்சாகமூட்டும் பணி.
மீண்டும் நன்றி கூறுகிறேன்.
-கடுகு

பி.கு: அடுத்த பதிவை விரைவில் போடப் பார்க்கிறேன்.

June 29, 2014

அன்புடையீர்

அன்புடையீர்,

வணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக  வரும்.

பதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.

-அன்புடன் கடுகு

January 04, 2014

அன்புடையீர்!

அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துகளும்.‘கடுகு தாளிப்பு’ துவங்கி  4 வருஷங்கள் ஓடிவிட்டன. 500 பதிவுகள் என்று கூகுள் கணக்குப் பண்ணிச் சொல்கிறது. அந்த கணக்குகளையோ எத்தனை ’ஹிட்கள்’ என்பதையோ நான் அதிக அக்கறை கொண்டு பார்ப்பதில்லை.

படிப்பதும் எழுதுவதும் என் வலது  மூச்சும் இடது மூச்சுமாகக் கருதுகிறேன்.  எவ்வளவு படித்தாலும் திருப்தி ஏற்படுவதில்லை;  தாகம் தீர்வதில்லை,(ஆம், எதற்குத்  தீரவேண்டும்?) எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்றுதான் மனம் குதூகலிக்கிறது! புதுப்புது  புத்தகங்கள் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கின்றன.
நான் எழுதுவது யாருக்குப் பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு இருக்கிறது. என்னைச் சுறுசுறுப்பாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பதிவுகள் போடுவது நானே எனக்கு வைத்துக் கொண்ட வேலை. அந்த வேலையைத் தினமும் செய்து கொண்டிருக்க வேண்டும். லீவு எடுக்க முடியாது. காரணம் நான்தான்  CEO ; நான்தான் ஊழியன்!
பாரபட்சமின்றி வேலைவாங்கும்  CEO நான்;  உண்மையுடன் பணி புரியும் ஊழியனும் நான். இப்படி டபுள் ரோலில் என்னை இயங்க வைத்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு ஆயிரம் கோடி  நன்றிகள்.

பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.  ‘தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு விண்ணப்பம் செய்திடுவேன்... விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்.”   இதை எனக்கு அருளுவதில் உனக்கு ஒரு தடையும் இல்லை என்பதை நிதர்சனமாகக் காட்டி  வருகிறாய். உனக்கோர் ஆயிரம் கோடி  நன்றிகள்.
-கடுகு

அடுத்த பதிவு இரண்டொரு நாட்களில்.

July 22, 2013

அன்புடையீர்!


அன்புடையீர்,
வணக்கம். சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அடுத்த பதிவு
3,4 நாள் கழித்து வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

-கடுகு

March 01, 2013

அன்புடையீர்,
வணக்கம்.
சமீபத்தில் வந்த ஒரு பின்னூட்டத்தைப் படியுங்கள்.
” சார்.. உங்களுக்கு ஒரு சின்ன யோசனை கூற விரும்புகிறேன்.  பின்னூட்டம் போடுவதற்குச் சில நிபந்தனைகளை பல பதிவர்கள்  வைத்திருக்கிறார்கள். பெயர், ஈ-மெயில் விவரங்கள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று. இதன் மூலமாமாக சர்வ வல்லமை  பொருந்திய ‘அனானிமஸ்’ பின்னூட்டம் போடுவது  தடுக்கப்படுகிறது.

ஒரு பதிவர், பதிவை எழுதி, அச்சடித்து, தேவையான படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கிறார்.  பதிவைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது வாசகர் ஏன் பெயரில்லாமல் எழுதவேண்டும்?  இது பதிவர்க்குச் செய்யும் அவமரியாதை என்று கருதுகிறேன். ஒருக்கால் பதிவைப் பற்றி காரமான கருத்தை  தெரிவிக்கும் வேண்டுமானால். அப்போது பெயரை வெளியிடத் தயக்கம் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளலாம்.  இது பற்றி பதிவர்கள் சேர்ந்து, அனானிமஸ் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்றுஒரு முடிவு எடுக்க வேண்டும்: !”

இந்த அன்பருக்கும் தாளிப்பு வாசகர்களுக்கும் அன்புடன் ஒரு அறிவிப்பு:   வாசகரின் யோசனையை ஏற்கிறேன். இனி  with immediate effect 'கடுகு தாளிப்பு' வில் ‘அனானிமஸ்’ பின்னூட்டங்கள் பிரசுரமாகாது
-கடுகு
அன்புடையீர்,
வணக்கம்.
சமீபத்தில் வந்த ஒரு பின்னூட்டத்தைப் படியுங்கள்.
” சார்.. உங்களுக்கு ஒரு சின்ன யோசனை கூற விரும்புகிறேன்.  பின்னூட்டம் போடுவதற்குச் சில நிபந்தனைகளை பல பதிவர்கள்  வைத்திருக்கிறார்கள். பெயர், ஈ-மெயில் விவரங்கள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று.
இதன் மூலமாமாக சர்வ வல்லமை  பொருந்திய ‘அனானிமஸ்’ பின்னூட்டம் போடுவது  தடுக்கப்படுகிறது.

ஒரு பதிவர், பதிவை எழுதி, அச்சடித்து, தேவையான படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கிறார்.  பதிவைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது வாசகர் ஏன் பெயரில்லாமல் எழுதவேண்டும்?  இது பதிவர்க்குச் செய்யும் அவமரியாதை என்று கருதுகிறேன். ஒருக்கால் பதிவைப் பற்றி காரமான கருத்தை  தெரிவிக்கும் வேண்டுமானால். அப்போது பெயரை வெளியிடத் தயக்கம் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளலாம்.  இது பற்றி பதிவர்கள் சேர்ந்து, அனானிமஸ் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்றுஒரு முடிவு எடுக்க வேண்டும்: !”

இந்த அன்பருக்கும் தாளிப்பு வாசகர்களுக்கும் அன்புடன் ஒரு அறிவிப்பு:   வாசகரின் யோசனையை ஏற்கிறேன். இனி  with immediate effect 'கடுகு தாளிப்பு' வில் ‘அனானிமஸ்’ பின்னூட்டங்கள் பிரசுரமாகாது
-கடுகு

September 11, 2012

அன்புடையீர்,

அன்புடையீர்,
வணக்கம். 
அடுத்த பதிவுக் கட்டுரையைத் தட்டச்சு செய்வதில் தாமதமாகிறது.
 என்னுடைய  இலக்கியத்  தரமான பதிவுகளைப் படிக்க ஆவலாக இருப்பவர்களுக்கு: ஒரு ஆலோசனை: அடுத்த பதிவு வரும் வரை தொல்காப்பியம் போன்ற நகைச்சுவைப் புத்தகங்களைப் படியுங்கள்!
- கடுகு

பின்னூட்டம்::
சரியாகச் சொன்னீர்கள். இரண்டும் சுலபத்தில் புரியாது! -- அனானி

July 21, 2012

அன்புடையீர்

ஒரு ஜோக்:
  ஒருத்தர் டாக்டரிடம் போனார்.” டாக்டர், எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. எப்பவும் அசதியாக இருக்கிறது” என்றார். டாக்டர் அவரை நன்கு பரிசோதித்துப் பார்த்தார். எல்லா டெஸ்ட்டும் பண்ணினார். கடைசியில் அவர் சொன்னார்: “ உங்களுக்கு ஒரு உடம்பும் இல்லை.. உங்களிடம் இருப்பது  மித மிஞ்சிய சோம்பேறித்தனம்தான்” என்றார்.
”அப்பபடியா சொல்றீங்க டாக்டர்?.. அப்ப ஒண்ணு செய்யுங்க.. இந்த வியாதிக்கு மெடிக்கல் பாஷையில் ஏதாவது பெரிய வார்த்தையாகச் சொல்லுங்கள். என் மனைவியிடம் சொல்லி விடுவேன்...அது போதும்: என்றார்.
“சரி.. உமக்கு  வந்திருப்பது  ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” என்றார்.
“தாங்க் யூ, டக்டர்..தாங்க் யூ, டக்டர்..: என்று சந்தோஷமாக் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார்
ஜோக் இத்துடன் முடிந்து விட்டது!


ஒரு அறிவிப்பு:
இந்த ப்ளாக்கின் வாசகர்களுக்கு  அடுத்த பதிவு போட சற்று தாமதமாகிறது. எனக்கு ”எக்ஸ்மிலோனோட்ரோஃபி” இருப்பதே காரணம். விரைவில் ஒன்றிரண்டு நாளில் குணமடைந்து விடுவேன். அப்போது புதிய பதிவு வரும்
அது வரை இந்த புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்.