இந்த தொடரை சென்ற பதிவில் எழுதிய அத்தியாயத்துடன் முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அர்ச்சனைகள் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் All good things must come to an end எனறு 1374’ல் Chaucer சொல்லியிருக்கிறாரே!
இந்த அர்ச்சனைகள் என் சொந்த ஐடியா அல்ல. 1902’ம் வருஷம் வெளியான MRS. CAUDLE'S CURTAIN LECTURES என்ற புத்தகத்தைப் படித்ததின் விளைவு. இதை எழுதியவர் DOUGLAS JERROLD. அவருடைய புத்தகத்தில் இன்னும் நிறைய அர்ச்சனைகள் உள்ளன.
டகள்ஸ் ஜெரால்ட் ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கிறார். PUNCH பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
Mr.PUNCH என்று குறிப்பிடும் அளவுக்குப் பிரபலமானவர். இவர் எழுதிய புத்தகங்கள் இண்டர்னெட்டில் வெளியாகியுள்ளன.
ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை PROJECT GUTENBURG என்றஅமைப்பு தங்கள் இணைய தளத்தில் (http://www.gutenberg.org/wiki/Main_Page) வெளியிட்டு வருகிறார்கள். அதில் நான் கண்டெடுத்த பல நல்ல புத்தகங்களில் இதுவும் ஒன்று.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்க்கை நமது வாழ்க்கை மாதிரியே இருந்திருக்கிறது. ஆகவே தான் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் அர்ச்சனைகள் அப்படியே தமிழில் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, ஓரே மூச்சில் ’அம்புஜத்தின் அர்ச்சனைகள்’ தொடரை எழுதினேன்.
இன்னும் வேறு பல புத்தகங்களையும் தமிழில் தர உத்தேசம்.









