Showing posts with label பேனா கதை. Show all posts
Showing posts with label பேனா கதை. Show all posts

February 26, 2017

பேனா படுத்திய பாடு - பாகம் 2


புதுப் பேனாவை எடுத்து வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்தேன்இரண்டு வரிகள் கூட எழுதி இருக்க மாட்டேன்பேனா எழுதவில்லைஎன்ன செய்வது என்று தெரியவில்லை.
அம்மாபேனா எழுதவில்லைகடையில் எழுதிப் பார்த்தேன் சூப்பராக எழுதியது...”

கொஞ்சம் கையை உதறிப் பார்இங்க் இரண்டு மூன்று சொட்டு வந்து விழும்.  அதற்கப்புறம் எழுதும்நிப்பில் இங்க் உலர்ந்து போயிருக்கும்.” என்றாள் அம்மா.
உதறினேன்உதறினேன்கையில் வலி வந்ததே தவிரபேனாவிலிருந்து இங்க் வரவில்லைபார்த்துக் கொண்டிருந்த அம்மா, “முட்டாள்... பேனாவில் இங்க் தீர்ந்து போயிடுத்து...”  என்றாள்.
“நூர் இங்க் போட்டுக் கொடுத்தார் அம்மா.”
 “கொஞ்சம் எழுதறதுக்கு இரண்டு சொட்டு போட்டிருப்பான்வீட்டில் கட்டைப்பேனா இங்க்  இருக்கிறதுஅதைப் போட்டால் பேனா எழுதாது.  போய் சின்ன புட்டி இங்க் வாங்கிக் கொண்டு வா” என்றாள் அம்மா,.
நூர் கடைக்கு ஓடினேன்அவர் ஒரு சின்ன புட்டி இங்க் கொடுத்ததுடன் இன்னொரு இங்க் வில்லையையும் கொடுத்தார்.
ஐயய்யோ   ... வில்லை வேண்டாம்.  அது வில்லை இல்லை ; அது  தொல்லை.  ” என்றேன்
(அந்த வயதிலேயே வார்த்தைகளுடன் விளையாடும் திறமை வெளிப்பட்டதுவிளையும் பயிர்! :)
    வீட்டுக்கு வந்து அம்மாவிடம் கொடுத்தேன்அம்மா, பேனா கழுத்தைக் கழட்டிகவனமாக குழந்தைக்குப் பாலாடையால் பால்  புகட்டுவதுபோல் மையை நிரப்பிலாகவமாகத் திருகிலேசாக இரண்டு உதறு உதறி பேப்பரில் ஒரு கோடு போட்டாள்.
அம்மா... அம்மா... இப்படிக் கொடுநான் எழுதிப் பார்க்கிறேன்.” என்று பிடுங்கிக் கொண்டு எழுதினேன்அடாடா.... அப்படியே வழுக்கிக் கொண்டு போயிற்று.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்குப் பேனாவை வைத்துக் கொண்டு புறப்பட்டேன்பேனாவின் கிளிப்பை விட என் முகம் பளபளப்பாக மாறி இருந்ததுகாரணம்பேனா தந்த மகிழ்ச்சி