Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

September 28, 2016

உண்மை, நம்புங்கள்!

Believe it or not   என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று  குட்டித் தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன். அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன். 
அந்த உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ் மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
 இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்: JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25, 30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம்,   ஐம்பதாயிரம் டாலர்,  என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.

August 22, 2016

இரு நகரங்களில்...

மூன்று நட்சத்திரங்கள்

1988-ல் நடந்த உண்மைச் சம்பவம். இதை முதலிலேயே சொல்ல வேண்டியதன் அவசியம், இது உண்மையான சம்பவமாக இருக்க முடியுமா என்ற கேள்வி இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் உங்கள் மனதில் தோன்றக்கூடும். இது 100 சதவீதம் உண்மைச் சம்பவம்.

 சென்னையிலிருந்து டில்லிக்குத் திரும்பிப்  போ தயார் செய்து கொண்டிருந்தோம். எனக்கு டில்லி அலுவலகத்திற்கு மாற்றலாகிவிட்டது. வீட்டில் இருந்த,தேவையற்ற பல பொருள்களை இலவசமாகக் கொடுத்துவிடுவது  அல்லது விற்று விடுவது என்று தீர்மானித்தோம். வீட்டில்நாலைந்து ஈயப்பாத்திரங்கள் இருந்தன. (இன்றைய தேதியில் ஈயப்பாத்திரங்கள் போயே போய் விட்டன என்று நினைக்கிறேன். ஈயப்பாத்திரத்தில் ரசம்  வைத்தால் அதன் ருசியே அலாதி. ஹும்..விடுங்கள்.)  ஈயம் விலை அதிகம். இலவசமாகக் கொடுக்க மனம் வரவில்லை; விலை கொடுத்து வாங்குவாரும் இல்லை.           

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள ஒன்றிரண்டு கடைகளில் வாங்கிக்கொள்வார்கள் என்று யாரோ சொன்னார்கள். என் மனைவியும் நானும் திருவல்லிக்கேணி போனோம். முதலில் தென்பட்ட கடைக்குப் போனோம். ஒரு கிழவர் தாடி, மீசையுடன் களையான முகத்துடன் இருந்தார்.


August 02, 2016

கை கொடுத்த மினி பாபு

டில்லியில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு அரசு குடியிருப்பு மின்டோ ரோடில் கிடைத்தது. மின்டோ ரோடு, கன்னாட் பிளேஸ் பகுதியை மிகவும் ஒட்டியிருந்த இடம்.
என் அலுவலகம் பாராளுமன்றத்தை ஒட்டியிருந்த Parliament Street-ல் இருந்தது. அந்த காலகட்டத்தில் மெதுவாக சைக்கிளிலிருந்து ஸ்கூட்டருக்கு மாறியிருந்தேன்,
நான் பணிபுரிந்த செக் ஷனில் மட்டும்  50 பேர் இருந்தனர். அதில் ஜகதீஷ் பிரசாத் என்ற ஒரு டைப்பிஸ்ட் இருந்தார். வயதில் குறைந்தவர் மட்டுமல்ல; உயரத்திலும் குறைந்தவர். மகா மகா குறைந்தவர் என்று சொல்லலாம். அலுவலகத்தில் அவருக்கு மினி பாபு என்று பெயரிட்டுவிட்டோம்.
நான் மின்டோ ரோடுக்குக் குடிபெயர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, மினி பாபு என்னிடம் வந்து  “நீங்கள் சாயங்காலம் வீட்டுக்குப் போகும்போது நானும் உங்கள் ஸ்கூட்டரில் வரலாமா?” என்று கேட்டார். 

“வாங்களேன். உங்கள் வீடு எங்கே இருக்கிறது?”
“உங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரம் போக வேண்டும். அஜ்மீரி கேட் பகுதியில் உள்ளது.” என்றார்.
 “ தாரளமாக வாங்களேன்” என்றேன்
தினமும் மாலை அவரை  ஏற்றிக்கொண்டு போனேன். கிட்டத்தட்ட பத்து வருஷங்கள்!
சில நாள் அவர் தாமதமாக வந்தாலும் காத்திருந்து அழைத்துப்போவேன். ஆபீசிலிருந்து வீட்டுக்குப் போகாமல் வேறு எங்காவது போகவேண்டியிருந்தால், மினி பாபுவுக்காக  கூடியவரை அதைத் தவிர்த்து விடுவேன்.

July 05, 2016

தப்பு வந்தால் தப்பமுடியாது

கடவுள் கை கொடுத்த கணங்கள்’
இது “கடவுள் கை கொடுத்த கணங்கள்’ வரிசையில் வரும் பதிவு என்றாலும், இதற்குப் பொருத்தமான தலைப்பு “கடவுள் மீட்ட  நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பத்து வருஷம் பணியாற்றினேன். அந்தப் பத்து வருடங்கள் என் வாழ்க்கையின் மிகச் சந்தோஷமான தினங்கள். காரணம், எத்தனையோ வருடங்களாகக் கனவு கண்டு, கடைசியில் ஐம்பதாவது வயதில் எனக்கு இந்தியாவின் மிகப் பெரிய விளம்பரக் கம்பெனியில் யாருடைய, எந்த விதமான சிபாரிசும் இன்றி வேலை கிடைத்தது.
   
 விளம்பரங்களில் சிறு தவறும் வரக்கூடாது. அச்சுப்பிழை இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு ஏதாவது செய்யப்பட்டி ருந்தால் தீர்க்கமாக, சிறப்பானதாக அந்த வாசகங்கள் இருக்க வேண்டும். தப்பு ஏற்பட்டால் வேலையே போய்விடக் கூடும். 
             ஒரு சமயம் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்ட போது எனக்குக் கடவுள் கை கொடுத்த கணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.

முதல் எழுத்தைக் காணோம்:
ஒரு பிரபல கம்பெனியின் புதிய தயாரிப்புக்கு விளம்பரங்கள் தயாரிக்கும்  வேலை எங்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. நான்கு தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் பணி. லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்பதால் எல்லாருமே தீவிரமாகச் செயல்பட்டோம்.
            மாதிரி விளம்பரங்கள், டிவி, ரேடியோ விளம்பரங்கள், போஸ்டர்கள் என்று பல்வேறு விஷயங்களைத் தயார் செய்து, அந்தக் கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் காட்டி, அவர்கள் தேர்ந்தெடுத்தவற்றை ‘பக்கா’ விளம்பரங்களாக உருவாக்கு வதில் ஈடுபட்டோம். டிவி விளம்பரம் தயாரிக்க பம்பாய் போக வேண்டியதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் சென்னையில் பல வசதிகள் இல்லை. கம்ப்யூட்டர்கள் மெதுவாக தலையைக் காட்டிக் கொண்டிருந்த கால கட்டம். உதாரணமாக டிவி விளம்பரங்களில் படங்களின் மீது எழுத்துகள் வரவேண்டுமானால் (இதை SUPER என்பார்கள்.) பம்பாய்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் லண்டன்தான்!
   விளம்பரங்களில் SUPER ஆக வரவேண்டிய வாசகங்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தயார் பண்ணும் பணி என்னுடையது. அந்தந்த மொழிபெயர்ப்பாளர்க ளிடம் ஆங்கிலத்தில் வாசகத்தைக் கொடுத்து, மொழிபெயர்த்து வாங்கிக் கொள்ளவேண்டும். அவற்றைப் படிக்கச் சொல்லி, சரியாக வந்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
            டிவி விளம்பரத்தில்,  விளம்பரம் செய்யப்படும் பொருளின் பெயரையும் அதைப் பற்றி சின்ன SLOGAN-ஐயும் அந்தந்த மொழியில், ஒரே வித LAYOUT-ல், லெட்டரிங் செய்யும் ஆர்ட்டிஸ்ட்டுகள் எழுதிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு மொழி தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பாளர்கள் சற்று பெரிய எழுத்தில், நிறுத்தி நிதானமாகக் கையால் எழுதிக் கொடுப்பார்கள்.  அதைப்பார்த்து  லெட்டரிங் செய்து, புகைப்படம் எடுத்து, டிவி விளம்பரத்தில் சூப்பராகப் போடுவதற்கு உகந்த அளவில் போட்டோ பிரிண்ட் போட்டுக் கொடுக்க வேண்டும். அதைப் பம்பாயில் விளம்பரப் படத்தைத் தயாரித்துத் தரும் நிறுவனம் உபயோகித்துக் கொள்ளும்.
            இதன்படி நான்கு மொழிகளிலும் வாசகங்களை எழுதி, பிரிண்ட் போட்டுக் கொடுத்தேன். பம்பாய் சென்று படப்பிடிப்பை மேற்பார்வை பார்த்து, தயாரித்து எடுத்துக் கொண்டு வரும் கிரியேட்டிவ் டைரக்டரிடம், ஆர்ட்டிஸ்ட் எழுதியதைக் கொடுத்துவிட்டேன். அந்தந்த மொழிக்காரர்கள் “OK” என்று கையெழுத்துப் போட்டு அவைகளைத் தந்தேன்.
    கிரியேட்டிவ் டைரக்டரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பம்பாய் சென்றுவிட்டார்.
 மறுநாள் பிற்பகல், ஒரு மொழிபெயர்ப்பு வேலைக்காக தெலுங்கு மொழிபெயர்ப்பாளரை வரச் சொல்லியிருந்தேன். வந்தவர் என் மேஜை மீதிருந்த லெட்டரிங் செய்யப்பட்ட பேப்பரை சும்மா புரட்டிப் பார்த்தார். கன்னடத்தில் செய்யப்பட்ட லெட்டரிங்கை ஒரு தரம், இரண்டு தரம் பார்த்துவிட்டு “சார், இது என்ன, எப்படி இது ’ஓகே’ பண்ணியிருக்கிறது? இதில் தப்பு இருக்கிறது. ஒரு எழுத்து விடுபட்டுப் போயிருக்கிறது, அதுவும் முதல் எழுத்து.” என்றார்.
            எனக்குப் பெரிய அதிர்ச்சி. “அப்படியா? நிச்சயமாகவா?” என்று கேட்டேன். “இதோ பாருங்கள் ஐந்து எழுத்து மலையாளத்தில் இருக்கிறது. தெலுங்கில் இருக்கிறது, தமிழில் இருக்கிறது. கன்னடத்தில் நாலு எழுத்துக்களே ஆர்ட்டிஸ்ட் எழுதியிருக்கிறார். இதைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்துவிட்டீர்களா?  டிவி விளம்பரத்தில் இதை உபயோ கித்தால், மகா பெரிய தவறு ஆகிவிடுமே” என்று அவர் சொல்லச்சொல்ல என் தலை கிறுகிறுத்தது.
      “அப்படியா? ...கிரியேட்டிவ் டைரக்டரிடம் சொல்லி அதை உபயோகிக்காமல் இருக்கச் சொல்லவேண்டும்” என்று அடுத்த நடவடிக்கைக்கு ஆயத்தமானேன்.
  அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பம்பாய்க்குப் போன கிரியேட்டிவ் டைரக்டர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. எந்த ஸ்டூடியோவில் ‘வீடியோ’வைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் என்பதும், எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. (நினைவு கொள்க: செல்போன் என்ற வார்த்தை உலகிற்குத் தெரியாத காலம் அது!)
            வயிற்றில் புளி கரைத்தது; தலையில் ‘குழம்பு’ கொதித்தது. தப்பு சூப்பரைப் போட்டு வீடியோ தயாரித்துக் கொண்டு வந்துவிட்டால், வீடியோவைப் போட்டுக் காட்டாமல் இருக்க முடியாது. போட்டால் எங்களுக்கு விளம்பர பிசினஸைக் கொடுக்க மாட்டார்கள். “இன்னும் ரெடி ஆகவில்லை” என்று பொய் சொன்னால் இன்னும் ஆபத்து.
            கன்னட மொழிபெயர்ப்பாளர் கம்பெனி ஊழியர் அல்ல. அவர் செய்த தப்பு என்று நான் நழுவ முடியாது. என்ன செய்வது என்று புரியவில்லை. ஆறு மணி ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டுக்குக் கிளம்ப மனம் வரவில்லை.
    ஒரு உரக் கம்பெனியின் சின்னப் பிரசுரத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டிய வேலை இருந்தது. அதைச் செய்ய ஆரம்பித்தேன். மணி ஏழு ஆகியிருக்கும். அப்போது போன் வந்தது, ஸ்டூடியோ மேனேஜருக்கு. அவர் வீட்டுக்குப் போய்விட்டதால் நான் எடுத்தேன். ஆஹா...பம்பாயிலிருந்து கிரியேட்டிவ் டைரக்டர்தான்! எனக்குத் தலைகால் பிடிபடவில்லை.
            “என்ன வேண்டும்... நான் மட்டும்தான் இருக்கிறேன். முதலில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். விளம்பர வ்டீயோவில் சூப்பர் எல்லாம் போட்டுவிட்டீர்களா? என்று சொல்லுங்கள்” என்று பரபரப்பாகக் கேட்டேன்.
  “இல்லை. வீடியோ பற்றிப் பேசுவதற்குதான் போன் செய்தேன். விடியோ நாளை பகல்தான் ரெடி ஆகும்”
     “அப்படியா? அதில் கன்னடத்தில் லெட்டரிங் பண்ணின ‘சூப்பரில்’ தப்பு உள்ளது. அதை உடனே KILL பண்ணிவிட வேண்டும். ஒரு எழுத்து விட்டுப் போய்விட்டது.” என்றேன்.
            “அடப் பாவமே? வேறு லெட்டரிங் செய்து அனுப்பமுடியுமா? நாளைக் காலைக்குள் வந்து சேரும்படி கூரியரில் அனுப்ப வேண்டும். அங்கு இப்போது ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார்களா?”
            “இல்லை. நான் விடுபட்ட எழுத்தை எழுதி, புதிதாகப் பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். உங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீங்களே போன் செய்தீர்கள். நான் இப்பவே கூரியரில் அனுப்பி விடுகிறேன். முதலில் உங்களிடம் இருக்கும் கன்னட சூப்பரின் மேல் ஒரு பெரிய ‘எக்ஸ்’ குறியைப் போட்டுவிடுங்கள்.”
    “சரி..சரி.. நான் எதற்கு போன் செய்தேன் என்றால், இங்கு வேலை நாளை மத்தியானம்தான் பூர்த்தியாகும். வீடியோ படத்தை நாளைக்கு மூணு மணிக்குப் சென்னையில் ஒரு ப்ரொஜக்‌ஷன் தியேட்டரில் போட்டுக்காட்ட ஏற்பாடு பண்ணியிருந்தோம். அதை மாலை ஏழு மணிக்கு மாற்றும்படி சொல்லவேண்டும். காலை விமானத்தை என்னால் பிடிக்கமுடியாது. வேலை முடிந்த  பிறகு, பகல் ஃப்ளைட்டில் வருவேன்.”
   “அப்பபடியே சொல்லிவிடுகிறேன். இதோ, கூரியர் கம்பெனி ஆள் வந்துவிட்டார். உங்கள் அட்ரஸ் சொல்லுங்கள்” என்றேன். சொன்னார். புதிதாக எழுதப்பட்ட சூப்பரை அவருக்கு அனுப்பினேன் அப்புறம்தான் உயிர்  வந்தது.
            மறுநாள் பகல் வீடியோவுடன் பம்பாயிலிருந்து வந்து, மாற்றி அமைக்கப்பட்ட நேரத்தின்படி வீடியோ தியேட்டருக்குச் சென்று படத்தைப் போட்டுக் காண்பித்தார் கிரியேட்டிவிவ் டைரக்டர்..
  தியேட்டரிலிருந்து எனக்குப் போன் பண்ணினார். “படம் ஓகே ஆகிவிட்டது.” “தப்பில்லாத சூப்பரைப் வீடியோவில் போட்டீர்களா?” என்று கேட்டேன்.
    “நீங்கள் அனுப்பிய சூப்பர் வந்தது. ஆனால் எந்த மொழியிலும் சூப்பர் போட நேரமில்லை !” என்றார்.
    “அப்பாடி” என்று நான் பெருமூச்சு விட்டேன். மூச்சு விட்ட வேகத்தில் மேஜை மேலிருந்த கண்ணாடி பேப்பர் வெயிட் லேசாகப் பறந்தது என்பது உண்மை !
            கடவுள் கை கொடுத்தது மட்டுமல்ல; கைவிடவும் இல்லை !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

தப்பு வந்தால் தப்பமுடியாது

கடவுள் கை கொடுத்த கணங்கள்’
இது “கடவுள் கை கொடுத்த கணங்கள்’ வரிசையில் வரும் பதிவு என்றாலும், இதற்குப் பொருத்தமான தலைப்பு “கடவுள் மீட்ட  நான் ஒரு விளம்பரக் கம்பெனியில் பத்து வருஷம் பணியாற்றினேன். அந்தப் பத்து வருடங்கள் என் வாழ்க்கையின் மிகச் சந்தோஷமான தினங்கள். காரணம், எத்தனையோ வருடங்களாகக் கனவு கண்டு, கடைசியில் ஐம்பதாவது வயதில் எனக்கு இந்தியாவின் மிகப் பெரிய விளம்பரக் கம்பெனியில் யாருடைய, எந்த விதமான சிபாரிசும் இன்றி வேலை கிடைத்தது.
   
 விளம்பரங்களில் சிறு தவறும் வரக்கூடாது. அச்சுப்பிழை இருக்கக்கூடாது. மொழிபெயர்ப்பு ஏதாவது செய்யப்பட்டி ருந்தால் தீர்க்கமாக, சிறப்பானதாக அந்த வாசகங்கள் இருக்க வேண்டும். தப்பு ஏற்பட்டால் வேலையே போய்விடக் கூடும். 
    ஒரு சமயம் இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்ட போது எனக்குக் கடவுள் கை கொடுத்த கணங்களைப் பற்றிக் கூறுகிறேன்.

முதல் எழுத்தைக் காணோம்:
ஒரு பிரபல கம்பெனியின் புதிய தயாரிப்புக்கு விளம்பரங்கள் தயாரிக்கும்  வேலை எங்கள் கம்பெனிக்குக் கிடைத்தது. நான்கு தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் தயாரிக்கும் பணி. லட்சக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்பதால் எல்லாருமே தீவிரமாகச் செயல்பட்டோம்.
            மாதிரி விளம்பரங்கள், டிவி, ரேடியோ விளம்பரங்கள், போஸ்டர்கள் என்று பல்வேறு விஷயங்களைத் தயார் செய்து, அந்தக் கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் காட்டி, அவர்கள் தேர்ந்தெடுத்தவற்றை ‘பக்கா’ விளம்பரங்களாக உருவாக்குவதில் ஈடுபட்டோம். டிவி விளம்பரம் தயாரிக்க பம்பாய் போக வேண்டியதாக இருந்தது. அந்த கால கட்டத்தில் சென்னையில் பல வசதிகள் இல்லை. கம்ப்யூட்டர்கள் மெதுவாக தலையைக் காட்டிக் கொண்டிருந்த கால கட்டம். உதாரணமாக டிவி விளம்பரங்களில் படங்களின் மீது எழுத்துகள் வரவேண்டுமானால் (இதை SUPER என்பார்கள்.) பம்பாய்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் லண்டன்தான்!
   விளம்பரங்களில் SUPER ஆக வரவேண்டிய வாசகங்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தயார் பண்ணும் பணி என்னுடையது. அந்தந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் ஆங்கிலத்தில் வாசகத்தைக் கொடுத்து, மொழிபெயர்த்து வாங்கிக் கொள்ளவேண்டும். அவற்றைப் படிக்கச் சொல்லி, சரியாக வந்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
            டிவி விளம்பரத்தில் விளம்பரம் செய்யப்படும் பெயரையும் அதைப் பற்றி சின்ன SLOGAN-ஐயும் அந்தந்த மொழியில், ஒரே வித LAYOUT-ல் லெட்டரிங் செய்யும் ஆர்ட்டிஸ்ட்டுகள் எழுதிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு மொழி தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பாளர்கள், சற்றுப் பெரிய எழுத்தில், நிறுத்தி நிதானமாகக் கையால் எழுதிக் கொடுப்பார்கள்.  அதைப்பார்த்து  லெட்டரிங் செய்து, புகைப்படம் எடுத்து, டிவி விளம்பரத்தில் சூப்பராகப் போடுவதற்கு உகந்த அளவில் போட்டோ பிரிண்ட் போட்டுக் கொடுக்க வேண்டும். அதைப் பம்பாயில் விளம்பரப் படத்தைத் தயாரித்துத் தரும் நிறுவனம் உபயோகித்துக் கொள்ளும்.
            இதன்படி நான்கு மொழிகளிலும் வாசகங்களை எழுதி, பிரிண்ட் போட்டுக் கொடுத்தேன். பம்பாய் சென்று படப்பிடிப்பை மேற்பார்வை பார்த்து, தயாரித்து எடுத்துக் கொண்டு வரும் கிரியேட்டிவ் டைரக்டரிடம், ஆர்ட்டிஸ்ட் எழுதியதைக் கொடுத்துவிட்டேன். அந்தந்த மொழிக்காரர்களிடம் காட்டி “OK” என்று கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டேன். 
    கிரியேட்டிவ் டைரக்டரும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பம்பாய் சென்றுவிட்டார்.
 மறுநாள் பிற்பகல், ஒரு மொழிபெயர்ப்பு வேலைக்காக தெலுங்கு மொழிபெயர்ப்பாளரை வரச் சொல்லியிருந்தேன். வந்தவர் என் மேஜை மீதிருந்த லெட்டரிங் செய்யப்பட்ட பேப்பரை சும்மா புரட்டிப் பார்த்தார். கன்னடத்தில் செய்யப்பட்ட லெட்டரிங்கை ஒரு தரம், இரண்டு தரம் பார்த்துவிட்டு “சார், இது என்ன, எப்படி இது ஓகே பண்ணியிருக்கிறது? இதில் தப்பு இருக்கிறது. ஒரு எழுத்து விடுபட்டுப் போயிருக்கிறது, அதுவும் முதல் எழுத்து.” என்றார்.
            எனக்குப் பெரிய அதிர்ச்சி. “அப்படியா? நிச்சயமாகவா?” என்று கேட்டேன். “இதோ பாருங்கள் ஐந்து எழுத்து மலையாளத்தில் இருக்கிறது. தெலுங்கில் இருக்கிறது, தமிழில் இருக்கிறது. கன்னடத்தில் நாலு எழுத்துக்களே ஆர்ட்டிஸ்ட் எழுதியிருக்கிறார். இதைப் புகைப்படம் எடுத்துக் கொடுத்துவிட்டீர்களா?  டிவி விளம்பரத்தில் இதை உபயோ கித்தால், மகா பெரிய தவறு ஆகிவிடுமே” என்று அவர் சொல்லச்சொல்ல என் தலை கிறுகிறுத்தது.
      “அப்படியா? ...கிரியேட்டிவ் டைரக்டரிடம் சொல்லி அதை உபயோகிக்காமல் இருக்கச் சொல்லவேண்டும்” என்று அடுத்த நடவடிக்கைக்கு ஆயத்தமானேன்.
  அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பம்பாய்க்குப் போன கிரியேட்டிவ் டைரக்டர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. எந்த ஸ்டூடியோவில் ‘விடியோ’வைத் தயார் செய்துகொண்டிருக்கிறார் என்பதும், எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. (நினைவு கொள்க: செல்போன் என்ற வார்த்தை உலகிற்குத் தெரியாத காலம் அது!)
            வயிற்றில் புளி கரைத்தது; தலையில் ‘குழம்பு’ கொதித்தது. தப் சூப்பரைப் போட்டு வீடியோ தயாரித்துக் கொண்டுவந்துவிட்டால், விடியோவைப் போட்டுக் காட்டாமல் இருக்க முடியாது. போட்டால் எங்களுக்கு விளம்பர பிசினஸைக் கொடுக்க மாட்டார்கள். “இன்னும் ரெடி ஆகவில்லை” என்று பொய் சொன்னால் இன்னும் ஆபத்து.
            கன்னட மொழிபெயர்ப்பாளர் கம்பெனி ஊழியர் அல்ல. அவர் செய்த தப்பு என்று நான் நழுவ முடியாது. என்ன செய்வது என்று புரியவில்லை. ஆறு மணி ஆகிவிட்டது. ஆனாலும் வீட்டுக்குக் கிளம்ப மனம் வரவில்லை.
    ஒரு உரக் கம்பெனியின் சின்னப் பிரசுரத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டிய வேலை இருந்தது. அதைச் செய்ய ஆரம்பித்தேன். மணி ஏழு ஆகியிருக்கும். அப்போது போன் வந்தது, ஸ்டூடியோ மேனேஜருக்கு. அவர் வீட்டுக்குப் போய்விட்டதால் நான் எடுத்தேன். ஆஹா...பம்பாயிலிருந்து கிரியேட்டிவ் டைரக்டர்தான்! எனக்குத் தலைகால் பிடிபடவில்லை.
            “என்ன வேண்டும்...நான் மட்டும்தான் இருக்கிறேன். முதலில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன். விளம்பர விடியோவில் சூப்பர் எல்லாம் போட்டுவிட்டீர்களா? என்று சொல்லுங்கள்” என்று பரபரப்பாகக் கேட்டேன்.
  “இல்லை. விடியோ பற்றிப் பேசுவதற்குதான் போன் செய்தேன். விடியோ நாளை பகல்தான் ரெடி ஆகும்”
     “அப்படியா? அதில் கன்னடத்தில் லெட்டரிங் பண்ணின ‘சூப்பரில்’ தப்பு உள்ளது. அதை உடனே KILL பண்ணிவிட வேண்டும். ஒரு எழுத்து விட்டுப் போய்விட்டது.” என்றேன்.
            “அடப் பாவமே? வேறு லெட்டரிங் செய்து அனுப்பமுடியுமா? நாளைக் காலைக்குள் வந்து சேரும்படி கூரியரில் அனுப்ப வேண்டும். அங்கு இப்போது ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார்களா?”
            “இல்லை. நான் விடுபட்ட எழுத்தை எழுதி, புதிதாகப் பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். உங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீங்களே போன் செய்தீர்கள். நான் இப்பவே கூரியரில் அனுப்பி விடுகிறேன். முதலில் உங்களிடம் இருக்கும் கன்னட சூப்பரின் மேல் ஒரு பெரிய ‘எக்ஸ்’ குறியைப் போட்டுவிடுங்கள்.”
    “சரி..சரி.. நான் எதற்கு போன் செய்தேன் என்றால், இங்கு வேலை நாளை மத்தியானம்தான் பூர்த்தியாகும். வீடியோ படத்தை நாளைக்கு மூணு மணிக்குப் சென்னையில் ஒரு ப்ரொஜக்‌ஷன் தியேட்டரில் போட்டுக்காட்ட ஏற்பாடு பண்ணியிருந்தோம். அதை மாலை ஏழு மணிக்கு மாற்றும்படி சொல்லவேண்டும். காலை விமானத்தை என்னால் பிடிக்கமுடியாது. வேலை முடிந்த  பிறகு, பகல் ஃப்ளைட்டில் வருவேன்.”
   “அப்பபடியே சொல்லிவிடுகிறேன். இதோ, கூரியர் கம்பெனி ஆள் வந்துவிட்டார். உங்கள் அட்ரஸ் சொல்லுங்கள்” என்றேன். சொன்னார். புதிதாக எழுதப்பட்ட சூப்பரை அவருக்கு அனுப்பினேன் அப்புறம்தான் உயிர்  வந்தது.
            மறுநாள் பகல் வீடியோவுடன் பம்பாயிலிருந்து வந்து, மாற்றி அமைக்கப்பட்ட நேரத்தின்படி வீடியோ தியேட்டருக்குச் சென்று படத்தைப் போட்டுக் காண்பித்தார் கிரியேட்டிவிவ் டைரக்டர்..
  தியேட்டரிலிருந்து எனக்குப் போன் பண்ணினார். “படம் ஓகே ஆகிவிட்டது.” “தப்பில்லாத சூப்பரைப் வீடியோவில் போட்டீர்களா?” என்று கேட்டேன்.
    “நீங்கள் அனுப்பிய சூப்பர் வந்தது. ஆனால் எந்த மொழியிலும் சூப்பர் போட நேரமில்லை !” என்றார்.
    “அப்பாடி” என்று நான் பெருமூச்சு விட்டேன். மூச்சு விட்ட வேகத்தில் மேஜை மேலிருந்த கண்ணாடி பேப்பர் வெயிட் லேசாகப் பறந்தது என்பது உண்மை !
            கடவுள் கை கொடுத்தது மட்டுமல்ல; கைவிடவும் இல்லை !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

May 23, 2016

லட்ச தீபம்


சென்னை ஜி.பி.ஓ.வில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த வருடங்களில் செங்கல்பட்டிலிருந்து தினமும் போய் வந்து கொண்டிருந்தேன்.
ஒருநாள் வேலை முடித்துவிட்டு வழக்கம்போல் பீச் ஸ்டேஷனி லிருந்து புறப்படும் காஞ்சிபுரம் பாசஞ்சரில் ஏறப் போனேன். எல்லாப் பெட்டியும் கிட்டத்தட்ட நிரம்பி விட்டிருந்தது. கல்யாண சீசன்களில் இப்படி கூட்டம் அதிகமாக இருப்பது சகஜம். ஏதோ ஒரு மூலையில், கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். ரயில் கோட்டை ஸ்டேஷன் போயிற்று. அங்கு அலைமோதுகிற மாதிரி கூட்டம் பெட்டிகளில் ஏறியது. பூங்கா,  எழும்பூர் ஸ்டேஷன்களில் மேலும் பயணிகள் ஏறினார்கள். பெரும்பாலும் குடும்பப் பெண்கள்.
“என்ன இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே...  நிறைய முகூர்த்தங்களா?” என்று கேட்டேன், ஒரு பெண்மணியிடம்.

“கல்யாணமுமில்லை, ஒண்ணுமில்லை. இன்னிக்கு ராத்திரி திருக்கழுக் குன்றத்தில் கோவிலில் லட்சதீபத் திருவிழா...ரொம்ப விசேஷம். 12 வருஷத்து ஒரு தபா வர்ற விழாவாச்சே! அதுக்குத்தான் அல்லாரும் போய்க்கிட்டு இருக்கோம்” என்றார்.

May 04, 2016

டில்லி நார்த் அவென்யூவில்

என் வாழ்க்கையில் நடந்த சம்பவம். (1964ல் நடந்தது.) டில்லியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் குடியிருந்தோம். குடி என்றால் தனியாக இல்லை. எம்.பி யின்  நார்த் அவென்யூவில் இருந்த அபார்ட்மெண்டில் இருந்தோம்.    எம். பி. நிரம்பப் படித்தவர். டாக்டர் பட்டம் பெற்றவர். மொழிகளில் ஆர்வம் உடையவர். என்னை விட மூத்தவர். பெண்மணி. திருமணம் ஆகாதவர். (பின்னால் அவர் ராஜாங்க மந்திரியும் ஆனார்.) எம்.பி.  ஒரு அறையைத்    தனக்கு என்று வைத்துக் கொண்டு வீடு முழுவதையும் எங்களுக்குக் கொடுத்து விட்டார். ஒரு குடும்பமாக இருந்தோம் என்று சொல்லலாம்அவருக்குத் தமிழ் மொழியைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகத் தான் அவருடைய அறிமுகமும், தொடர்பும் எனக்கு ஏற்பட்டது. பின்னால் அவர் எங்களைத் தன் வீட்டிற்கே குடிவந்து விடும்படி சொன்னார். நாங்களும் அதன்படியே அவரது வீட்டிற்குக் குடி போனோம். 
இந்தப் பதிவு அவரைப் பற்றி அல்ல. என் வாழ்க்கையில் கடவுள் கை கொடுத்த சம்பவத்தைப் பற்றியது.

அந்த எம்.பி.யின் பிளாட்டில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்திருப்போம். ஒரு நாள் அவர் என்னிடம் “என் பெற்றோர் என்னுடன் தங்க வருகிறார்கள். அதனால் நீங்கள் ஒரு இடம் பார்த்து காலி செய்து விடுங்கள்” என்றார். தேதியும் சொல்லிவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தன் ஊருக்குப் புறப்பட்டு விட்டார். “நான் இன்ன தேதிக்கு அப்பா அம்மாவுடன் வருகிறேன். ஆகவே அதற்குள் நீங்கள் காலி செய்து விடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

April 15, 2016

கல்யாண மண்டபம்!

கடவுள் கை கொடுத்த கணங்கள்

  சில வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். என் பெண்ணின் திருமணம் நிச்சயம் ஆயிற்று. டில்லியிலேயே கல்யாணத்தை நடத்தத் திட்டமிட்டோம். தேதி பிப்ரவரி 5. கல்யாணம் உறுதியான தேதி ஜனவரி 1. ஒரு மாதத்தில் எல்லா ஏற்பாடும் செய்துவிடலாம் என்று எண்ணினோம். துணி மணி, பூமாலைகள், வாழை மரங்கள், சமையல் கான்ட்ராக்டர், திருமண வாத்தியார்கள் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டோம். கூடவே கல்யாண மண்டப வேட்டையையும் ஆரம்பித்தோம். அங்குதான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

  கல்யாண மண்டபங்கள் ஏழு, எட்டு மாதங்களுக்கு முன்பே ‘புக்’ பண்ண வேண்டுமாம். தினமும் ஐந்தாறு மணி நேரம், மண்டபம் மண்டபமாக அலைந்தோம். டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன்   (M C D) மற்றும் டில்லி நகராட்சி (N D M C) பல  கல்யாண மண்டபங்களை (Barat Ghar) கட்டி வாடகைக்குத் தருகின்றன. அவை வசதியானவை; வாடகையும் குறைவானவை. பட்டியல் போட்டுக் கொண்டு எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத மண்டபங்களைத் தேர்ந்தெடுத்து போய் விசாரிக்க ஆரம்பித்தோம்;, எங்கு போனாலும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
            நாங்கள் குடியிருந்த காலனியில் இருக்கும் குட்டி மைதானத்தில் ஷாமியானா போட்டுக் கல்யாணத்தை நடத்தலாம் என்று நினைத்தோம். சென்னையிலிருந்து வரும் உறவினர்கள் பிப்ரவரி மாதம் ஷாமியானாவில் குளிரை எப்படித் தாங்குவார்கள்? அதுவும் வயதில் மூத்தவர்கள்?
எங்களைக் கவலை பிடித்துக் கொண்டது. 

March 30, 2016

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

கடவுள் கை கொடுத்த கணங்கள்!

ஒரு சமயம் புனேவில் பணிபுரிந்து கொண்டிருந்த என் சகோதரன் லீவில் சென்னைக்கு வந்திருந்தான். புனேக்குத் திரும்பிப் போக 3-டியர் டிக்கெட்டை வாங்கி ரிசர்வ் செய்யும்படி அவனுடைய நண்பனிடம் சொல்லியிருந்தான். அவனும் வாங்கி வைத்திருந்து என் சகோதரனிடம் கொடுத்தான்.
  குறிப்பிட்ட தினம் பெட்டி படுக்கையுடன் என் சகோதரனும் அவனை வழியனுப்ப நானும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி முன்னதாக காலை 10 மணி வாக்கில் சென்றோம்  சென்றோம்..
            அவனுடைய டிக்கெட்டில் G-பெட்டியில் 17வது பர்த்’ என்கிற மாதிரி எழுதப்பட்டு இருந்தது. (இது 50 வருஷத்திற்கு முந்திய கதை).
            புனா ரயில் பிளாட்ஃபாரத்துக்கு வந்து நின்றது. அதில், G-பெட்டியைத் தேடிப்போய் வெளியே ஒட்டப்பட்டிருந்த பட்டியலைப் பார்த்தோம். ஷாக். அதில் என் சகோதரனின் பெயர் இல்லை.
            பிளாட்ஃபாரத்த்தில் இருந்த ஒரு டி.டி.ஆரிடம் டிக்கெட்டைக் காட்டி, விஷயத்தைச் சொன்னோம்.
            அவர் டிக்கெட்டைப் பார்த்து “ என்ன சார்...இது இன்னிக்குக் காலைல புறப்பட்டுப்போன 7 மணி வண்டிக்கு ரிசர்வ் பண்ணியிருக்கிறது... அதைக் கோட்டை விட்டு விட்டீர்களே...” என்றார். அது மெயில்..இது எக்ஸ்பிரஸ் என்ற ரீதியில் ஏதோ சொன்னார். அது எங்கள் காதில் விழவில்லை.
            “சார்...பர்த் ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டோம்.
Image result for no vacancy sign
            “இல்லை சார்...எல்லாம் FULL என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.என் தம்பியிடம், “நீ இங்கேயே பெட்டி படுக்கையுடன் இரு. நான் புக்கிங் ஆபீசில் போய்க் கேட்டுவிட்டு வருகிறேன்.” என்று சொல்லி ஓடினேன். ஒரு ரயில் பெட்டியில் R.M.S என்று போர்டு போட்டிருந்தது. நான் G.P.O -வில் பணியாற்றிக்கொண்டிருந்ததால் அதைச் சொல்லி R.M.S.காரரைக் கேட்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கே போனேன். 

March 12, 2016

கடவுள் கை கொடுத்த கணங்கள்!-2

சாந்தினி சௌக்கில் ஒரு அற்புதம்.... 
 இது நடந்த வருஷம் தோராயமாக நினைவிருக்கிறது. ஆனால் மாதம், தேதி மறந்து விட்டது. மறக்காதது அந்த அரிய சம்பவம் நிகழ்ந்த கணம். மூன்று குடும்பங்களை அப்படியே மாற்றி எங்கேயோ  எடுத்துக்கொண்டு போனதைக் கூறுகிறேன்.

70’களில் நடந்தது. 
ஒரு ஞாயிற்றுக்கிழமை என் மனைவியும் நானும் தில்லி சாந்தினி சௌக்கின் 'சண்டே மார்க்கெட்'டுக்கு போனோம், ஞாயிற்றுக்கிழமைகளில் சாந்தினி சௌக்கில் வீதியில் பாதிக்கு மேல் நடைபாதைக் கடைகள் வந்து விடும். நடைபாதையிலும் பல நல்ல பொருள்கள் மலிவாகக் கிடைக்கும். சரியான அடாஸ்  பொருள்களும் இருக்கும்.

அந்தக் காலத்தில் சற்று பிரபலமாக இருந்தது ஃபோம் சில்க்  என்ற ஜப்பான் துணி. உண்மையிலேயே மிருதுவாகவும் நல்ல டிஸைன்களிலும் கிடைக்கும். என் பெண்ணுக்கு ஒரு frock தைக்கலாம் என்று துணி வாங்கப் போனோம். வழக்கமாக வாங்கும் கடைக்காரரிடம் சென்றோம். எங்களுக்குப் பிடித்த துணிக்கு வழக்கத்தை விட அதிக விலை சொன்னார். எட்டணா விலை வித்தியாசத்தால் விலை படியவில்லை. வேண்டாம் என்று சொல்லித் திரும்பி விட்டோம். பாதி தூரம் வந்திருப்போம்  எட்டணாவிற்காக நல்ல டிசைனை விட்டு விடுவதா என்று வழக்கம்போல்  பின்புத்தியில் தோன்றவே, மறுபடியும் அந்த கடைக்குச் சென்று துணியை வாங்கி வரலாம் என்று தீர்மானித்தோம். 

February 22, 2016

பூங்கா ஸ்டேஷனில்..

கடவுள் கை கொடுத்த  கணங்கள்!

நம் வாழ்க்கையில் எத்தனையோ  மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன. மறக்க முடியாது என்று நாம் கருதிய நிகழ்ச்சிகளைப் பிறகு மறந்தே போய்விடுகிறோம்.  வேறு சில சம்பவங்கள் நிகழ்ந்த கணம் மனதில் உறைந்து விடுகின்றன – நடந்த தேதி, ஆண்டு போன்றவை மறந்து விட்டாலும்!
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். அவை என் வாழ்வில் நடந்தது என்பது முக்கியமே இல்லை.  ஆனால் இந்த சம்பவங்களில் எல்லாம் கடவுள்  கை கொடுத்த கணங்கள் உள்ளன.  கடவுள் ஒரு  SPLIT SECOND-ல் செய்த அற்புதங்கள் உள்ளன! இது தான் முக்கியம்.
சிலவற்றை  COINCIDENCE என்று சொல்லிவிடலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை அவை யாவும் கடவுள் செய்த அற்புதங்கள்தான்.
இது பல  EPISODE கொண்டது. ஒருதொடராகப் போடப் பார்க்கிறேன். 
  
மின்சார ரயிலில், மில்லி செகண்டில் நடந்த அற்புதம்!இது 
1956-ல் நடந்த சம்பவம்.

செங்கல்பட்டில் நான் இருந்த கால கட்டம். அப்போது என் இரண்டாவது  மூத்த  சகோதரருக்குக் கலியாணம் நிச்சயமாயிற்று. ஈரோட்டில் செப்டம்பர்  15-ம் தேதியென்று முகூர்த்தம் குறித்தாகிவிட்டது.  நிச்சயம் ஆன தேதி செப்டம்பர் 1!  அவரை விட மூத்த அண்ணா காஷ்மீரில் ராணுவ மருத்துவ மனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடிதம் போட்டோம், (போன் இல்லாத காலம் அது!) அவரிடமிருந்து ஒரு வாரம் கழித்துப்  பதில் வந்தது,  கட்டாயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அதற்குள் பெண் வீட்டார், 15-ம் தேதியை விட 14-ம் தேதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி முகூர்த்த தேதியை மாற்றிவிட விரும்பினார்கள். நாங்களும்  சம்மதித்தோம்.  அதன் பிறகு மறுபடியும், தேதி மாறியத் தகவலை எழுதி பெரிய அண்ணாவுக்குக் கடிதம் போட்டோம்..