March 20, 2010

தமிழ் முத்து - 5 -- நல்லாளை இட மருவும் தியாகய்யா

நல்லாளை இட மருவும்  தியாகய்யா
           உம்மிடத்தில் நியாயம் காணோம்.
கல்லாலே எறிந்தோர்க்கும், செருப்படியால்
           உதைத்தோர்க்கும், கடிந்து போரில்
வில்லாலே அடித்தோர்க்கும்  கொடுத்தீரே
            அல்லாமல்,  விழி நீர் சோர
எல்லாம்  உன்  செயலேன்றே  இருப்போர்க்கு
           யாதொன்றும் ஈகிலீரே!

( இயற்றியவர்: தெரியவில்லை)

2 comments:

  1. அருமையான கருத்துக்களுடன் உள்ள பாட்டு! நன்று! எங்கிருந்து இவற்றை கண்டு பிடித்தீர்கள்! இறைவனை தமிழாலேயே இவை போல சின்ன சின்ன பாடல்களால் பாடினாலே இறைவனின் கருணை புரிந்து அவரிடம் அன்பு பெருகுமே!

    ReplyDelete
  2. அன்புள்ள SNKM:
    பல வருஷங்களக என் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்திருந்த பாடல்களில் ஒன்று.

    -

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!