August 18, 2010

குட்டிக் கதை

என் பதிவு ஒன்றிற்குப் பதிவர் ரவிபிரகாஷ் அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்:

உமி என்றதும் எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.
ஒரு பணக்காரன் தன் சொத்துக்களை தனது நான்கு மகன்களுக்கும் பிரச்சனை இல்லாமல் உயில் எழுதி வைப்பதற்கு, ஓர் உத்தியைக் கையாண்டான். மேஜை மீது உமி, கரி, மண், எலும்பு ஆகியவற்றை வைத்து ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளச் சொன்னான். அப்படியே எடுத்துக் கொண்டார்கள்.
உமி எடுத்தவனுக்கு பயிர் நிலத்தையும், கரி எடுத்தவனுக்கு தங்கம், வைர நகைகளையும், மண் எடுத்தவனுக்கு வீட்டையும், எலும்பு எடுத்தவனுக்குக் கால்நடைகளையும் எழுதி வைத்தான்.
அதாவது, 'சொத்துக்கு நீங்கள் இப்படி அடித்துக் கொள்கிறீர்களே, அவற்றின் கடைசி கதி இதுதான்' என்று சொல்லாமல் உணர்த்தினான் அவன்.

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!