முதலில் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆர். கே. நாராயணனை நான் சந்தித்தது இல்லை. நான் அவருடைய பெரிய விசிறி. அவருடைய நாவல்களும் கதைக் கட்டுரைகளும் என் மீது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சலர் ஆஃப் ஆர்ட்ஸ் நாவலைப் .படித்ததும்
அவரது கதாபாத்திரம் போன்று நானும் ஒரு துறவியாக ஆகவேண்டும் என்ற ஒரு பித்து என்னைப் பிடித்துக் கொண்டது. காவிநிறக் கதர் துணி வாங்கி சட்டைகள் தைத்துக் கொண்டு அவற்றையே அணிய ஆரம்பித்தேன்.
இங்கிலீஷ் டீச்சர் படித்ததும் எனக்கும் ஈ. எஸ். பி. என்னும் ஆவி உலக தொடர்புகள் மேல் திடீர் ஆர்வத்தை உண்டாக்கின. சுமார் ஒரு வருடம் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். இரவு பகல் என்று பாராமல், சென்னைக் கிருஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த திரு. பி. டி. நரசிம்மன் என்பவருடன் சேர்ந்துகொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
அந்த ஆவி உலக அனுபவங்களை பின்னால் ஒரு முழு நீள கட்டுரையாக எழுதுகிறேன். அந்த காலகட்டத்தில் ஆர். கே. நாராயணன் இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மேன் ஈட்டர் ஆஃப் மால்குடி, ஸ்வீட் வெண்டார் தொடர் கதைகளை எழுதி வந்தார். வீக்லியில் அவற்றைப் படிப்பதற்காக. எங்கள் குடும்ப டாக்டரின் கன்ஸல்டிங் அறைக்கு வாரா வாரம் நான் செல்வேன். அவர் மேஜையில் வீக்லியை வைத்திருப்பார். நான் வாரம் தவறாமல் போய்ப் படித்துவிட்டு வருவேன். நான் வீக்லி படிக்க வருவதற்கு அவர் எந்த வித தடையும் சொல்லியதில்லை.(இந்தக் கட்டுரையை எழுதும் இச் சமயத்தில் டாக்டர் வரதராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) என் பிற்கால வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நான் நன்கு அமைத்துக்கொள்ள அவரும் சில கற்களை எனக்குத் தந்துள்ளார்

இங்கிலீஷ் டீச்சர் படித்ததும் எனக்கும் ஈ. எஸ். பி. என்னும் ஆவி உலக தொடர்புகள் மேல் திடீர் ஆர்வத்தை உண்டாக்கின. சுமார் ஒரு வருடம் மிகத் தீவிரமாக ஈடுபட்டேன். இரவு பகல் என்று பாராமல், சென்னைக் கிருஸ்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த திரு. பி. டி. நரசிம்மன் என்பவருடன் சேர்ந்துகொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.
அந்த ஆவி உலக அனுபவங்களை பின்னால் ஒரு முழு நீள கட்டுரையாக எழுதுகிறேன். அந்த காலகட்டத்தில் ஆர். கே. நாராயணன் இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மேன் ஈட்டர் ஆஃப் மால்குடி, ஸ்வீட் வெண்டார் தொடர் கதைகளை எழுதி வந்தார். வீக்லியில் அவற்றைப் படிப்பதற்காக. எங்கள் குடும்ப டாக்டரின் கன்ஸல்டிங் அறைக்கு வாரா வாரம் நான் செல்வேன். அவர் மேஜையில் வீக்லியை வைத்திருப்பார். நான் வாரம் தவறாமல் போய்ப் படித்துவிட்டு வருவேன். நான் வீக்லி படிக்க வருவதற்கு அவர் எந்த வித தடையும் சொல்லியதில்லை.(இந்தக் கட்டுரையை எழுதும் இச் சமயத்தில் டாக்டர் வரதராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) என் பிற்கால வாழ்க்கையின் அஸ்திவாரத்தை நான் நன்கு அமைத்துக்கொள்ள அவரும் சில கற்களை எனக்குத் தந்துள்ளார்