December 11, 2010

ஜோக்

என்ன செய்கிறான் சம்பளத்தை?
ஒரு நாள் என் ஆபீஸ் நண்பன் நாராயணன் என்னிடம் வந்து, ``இந்த கேசவன் வாங்கற சம்பளத்தை என்ன பண்றான் என்றே எனக்குத் தெரியலை'' என்றான்.
`` இன்னிக்கு தேதி மூணு. ஏன்,  என்ன சமாச்சாரம்? உங்கிட்ட வந்து பணம் கடன், கிடன் கேட்டானா?'' என்று கேட்டேன்.
``இல்லைப்பா... நான் கேட்டேன். கையிலே ஒரு பைசா இல்லை என்று சொல்கிறான்..''

 எனக்குத் தெரியலை
( ஒரு பள்ளிக் கூடத்தில் நடந்தது!)

ஆசிரியர்: ஏண்டா, சோமு... ஒரு நாளில்  நீ எப்படி இத்தனை தப்பு பண்றேன்னு எனக்குத் தெரியலை!
சோமு:  ஒண்ணுமில்லை சார்... நான் விடிகாலையில் சீக்கிரமே  5 மணிக்கு எழுந்துவிடுவேன்!

அத்தையோ சித்தியோ...
“ ஏங்க, என் அத்தை,  தன்னோட சொத்தை என் மேலே எழுதி வெச்சிருக்கிறதாலதானே  என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க?”
“ சீச்சீ.. பைத்தியம். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அததை என்ன பெரிய அத்தை? ..  உன் சித்தி எழுதி வச்சிருந்தால்கூடஉன்னைக் கலியாணம் பண்ணி கிட்டிருப்பேன்...!”

5 comments:

  1. nice ones... i liked the second one more..

    scrazyidiot.blogpost.com

    ReplyDelete
  2. i liked the second one a lot.. nice one sir!!

    scrazyidiot.blogspot.com

    ReplyDelete
  3. என் பங்கு!:

    மேனேஜர் (டைபிஸ்டிடம்): பலே!
    டைபிஸ்ட்: எதுக்கு சார்?
    மேனேஜர்: இத்தனை மாசத்தில் இன்றுதான் நீ டைப் அடித்ததில் ஒரு தப்பும் இல்லை...
    டைபிஸ்ட்: ஹி..ஹி.. ரொம்ப நன்றி சார்.
    மேனேஜர்: இரு, இரு . இரண்டாவது வரியைப் பார்க்கிறேன்!

    -ஜெ.

    ReplyDelete
  4. //“ ஏங்க, என் அத்தை, தன்னோட சொத்தை என் மேலே எழுதி வெச்சிருக்கிறதாலதானே என்னைக் கலியாணம் பண்ணிக்கிட்டீங்க?”
    “ சீச்சீ.. பைத்தியம். அதெல்லாம் ஒண்ணுமில்லை. அததை என்ன பெரிய அத்தை? .. உன் சித்தி எழுதி வச்சிருந்தால்கூடஉன்னைக் கலியாணம் பண்ணி கிட்டிருப்பேன்...!” // really nice...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!