December 26, 2010

அட்லான்டாவில் ஒரு நெகிழ்ச்சி

அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் உள்ள எமரி சர்வகலாசாலை பட்டமளிப்பு விழா  திறந்த வெளியில் மேடை.
கீழே நாற்காலிகளில் பட்டம் பெற வந்திருக்கும் மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள். அதில் நானும் ஒருவன்.
    லேசான காலை இளம் வெய்யில் இதமாக இருக்கிறது.
    நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. ஒரு பெண் மேடையின் மூலைக்கு வந்து நிற்கிறாள்.
    டீன், புரொபசர், என்று பலர் உரை நிகழ்த்துகிறார்கள். அவர்களின் உரையை அந்தப் பெண் சைகை மொழியால் "மொழி பெயர்க்கி"றார். (காது கேளாதவர்களுக்காக டி.வி.யில் வருவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி.)
    எதற்காக இப்படி செய்கிறார்கள்? ஒருக்கால் அமெரிக்காவில் இது வழக்கமாக இருக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.
    ஒவ்வொருவர் பெயராகக் கூப்பிட, மாணவர்கள் மேடைக்குச் சென்று பட்டத்தைப் பெற்றார்கள். நிகழ்ச்சி முடிவுறப் போகிறது என்று நினைத்த சமயம், டீன் மைக்கில் வந்து, ""கடைசியாக மிகச் சிறந்த ஸ்டூடண்ட் பரிசு அறிவிக்க முன் வந்திருக்கிறேன். அவர் பெயரைக் கூப்பிடுமுன் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவருக்கு பாராட்டைத் தெரிவிப்பதற்குக் கைகளைத் தட்ட வேண்டாம். அதற்குப் பதில் கைகளை உயர்த்தி விரல்களை "வா வா' என்று அழைப்பது மாதிரி காட்டுங்கள். காரணம், பின்னால் சொல்கிறேன்.
    ”முதலில் மாணவர் பற்றி ஒரு சின்ன குறிப்பு.
    ”நமது "ராலின்ஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்"தில் பட்டம் பெற இருக்கும் அவர், இதே சர்வகலாசாலையில் சமூக சேவை படிப்பிலும் தேறியுள்ளார். அத்துடன் டெகடூர் பகுதியில் ஒரு தொண்டு அமைப்பையும் நிறுவி சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரே சமயம் இரண்டு பட்டங்களையும் பெறப் போகிற அவருக்குக் காது கேட்காது. பேச வராது... நான் சொன்னபடி விரல்களை நீங்கள் அசைத்தால், அவரைப் பாராட்டுகிறீர்கள் என்று அவர் தெரிந்து கொள்வார்'' என்று கூறிவிட்டு, அந்த ஸ்டூடண்டின்--  அவர் ஒரு பெண் -- பெயரை அறிவித்தார்.
  ஒரு மாணவி அப்பெண்ணை மேடைக்கு அழைத்து வர, மைதானமே எழுந்து நின்று விரல்களை அசைத்துப் பாராட்டைத் தெரிவித்தது. பலர் கண்களில் நீர்.  மாணவியோ மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே மேடைக்கு வந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டாள்.

( இதே  நாள் நடந்த அனைத்துக் கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பற்றி  பின்னால் எழுதுகிறேன்.  BE PREPARED TO SHED  MORE TEARS!)

2 comments:

  1. A good post. I have known that disabled are differently talented and do not appreciate tears / sympathy. A happy reaction would have been more welcome by the person. In fact, many 'normal' persons fare poorly compared to these otherwise gifted people.

    My sincere prayers to the Lord to Bless you and your family in the New Year with long, healthy, peaceful and cheerful lives.

    R. Jagannathan

    ReplyDelete
  2. Mr Jagannathan:
    Thank you for your comments.

    I am touched by your wishes. I send my good wishes to you and to your family for 2011 and beyond!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!