December 05, 2010

ஒருமையுடன் நினதுதிரு மலர்

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை
பேசாதிருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்கவேண்டும்
மதிவேண்டும்  நின் கருணை நிதி வேண்டும்  நோயற்ற
வாழ்வில் நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி  உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
                                                                 திருவருட்பா- ராமலிங்க அடிகள்

2 comments:

  1. Sir,
    Your Tamil Muthu is always superb!!!!!!!! (You are diving deep to get excellent pearls for us) Thank you.

    Kothamalli

    ReplyDelete
  2. இந்த பாடலை ஸ்ரீ. செம்பை அருமையாக பாடி இருக்கிறார். தாங்கள் கூறினால் நான் அதை தங்களுக்கு அனுப்புகிறேன்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!