October 12, 2010

சென்றால் குடையாம்

சென்றால் குடை,யாம்;  இருந்தால் சிங்காசனம் ஆம்
நின்றால் மர அடி ஆம்;  நீள் கடலுள் - என்றும்
புணை ஆம்; மணி விளக்கு ஆம், பூம் பட்டு ஆம்; புல்கும்
அணை ஆம் திருமாற்(கு) அரவு.
- பொய்கை ஆழ்வார் ( முதல் திருவந்தாதி)

பெருமாள் செல்லும்போது ஆதிசேஷன் குடை ஆவான்;
உட்கார்ந்தால் சிம்மாசனம் ஆவான்;
 நின்றால் பாதுகை ஆவான்;
அவர் சயனித்தால் படுக்கை ஆவான்;
மங்கல விளக்கு ஆவான்;
அவருக்குப் பூம்பட்டு ஆவான்,
அவர் அணைத்துக் கொள்ள தலையணை ஆவான்!

நாமும் ஆதிசேஷனைப் போல  இப்படிப் பல விதமாகப் பகவானுக்குப் பணி செய்து வாழ்வோம்!

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!