October 28, 2011

பாப்பாவுக்கு சில கதைகள்

இந்த வலைப்பூவில் குழைந்தகளுக்காக கதைகள் போடுவதில்லையே என்று  ஒருவர் எழுதி இருந்தார். அந்தக்  குறை யாருக்கும் இருக்க வேண்டாம் என்று  ’பாப்பாவுக்கு சில கதை'களை’ இப்போது தந்துள்ளேன்.
குறிப்பு: : To protect the innocent, I am withholding the name of the reader!

நத்தையின் கர்வ பங்கம்
.

ஒரு ஊரில் ஒரு நத்தை இருந்தது.உலகிலேயே மெதுவாக ஊர்ந்து செல்லும் ஜீவன் என்ற பட்டத்தை அது பெற்றிருந்தது.
என்னை விட மெதுவாக எவனாலும் போகமுடியாது" என்று ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தது.
ஒரு நாள்,  அது  குடியிருந்த மரத்திற்கு அருகில் நிறைய ஆட்கள் வந்து பூமியைத்தோண்ட ஆரம்பித்தார்கள். 'சர்க்கார் அலுவலகக் கட்டடம்' என்ற போர்டைப் போட்டார்கள். அங்கு பெரிய  கட்டடம் கட்டப் போகிறர்கள் என்று நத்தைக்குப் புரிந்து விட்டது. அதற்கு ஒரே குஷி.  கட்டடம் கட்டும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் தமாஷாகபொழுதுபோகும் என்று  எண்ணியது. சில நாள் கழித்து கட்டட வேலையும் ஆரம்பமாயிற்று.
செங்கல், மணல், கலவை ஆகியவற்றை சிற்றாட்கள் எடுத்து போவதை பார்த்தது. அப்போதுதான் அதன் கர்வத்திற்குப் பங்கம் ஏற்பட்டது. 'கட்டட சிற்றாட்கள் என்ற ஜீவராசிகளைப் பற்றி அறியாமலேயே ’நம்மை விட யாரும் மெதுவாகப் போகமுடியாது என்று நினைத்திருந்தோமே!' என்று மனதிற்குள் கூறிக் கொண்டது. அன்று முதல் அது ஜம்பம் அடித்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டது!

எல்லாம் நன்மைக்கே


ஒரு முயல் இருந்தது. அதற்குத் எப்போதும் தூக்கமே வருவதில்லை. இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தது. "இது ஏதோ வியாதி. முதலில் டாக்டரிடம் போய்க் காட்டுங்கள்:" என்று திருமதி  முயல் சொல்லியது. டாக்டர் கரடியிடம் சென்று, தன் வியாதியைப் பற்றி முயல் சொல்லியது.
" பைத்தியக்காரா! தூக்கம் வராவிட்டால் என்ன? அதற்காகக் கவலைப்படுவார்களா? மருந்து சாப்பிடுவார்களா? தூக்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லையே என்று  உலகில் பலர் ஏங்குகிறார்கள். இது வியாதியுமில்லை, ஒண்ணுமில்லை. அப்படியே வியாதி என்று நினைத்தால் 'எல்லாம் நனமைக்கே' என்று சும்மா இருந்துவிடு" என்று கரடியார் கூறினார்.


சில நாட்கள் கழித்து காட்டில் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது..”ஓட்டப் பந்தயத்தில் என்னை ஜெயிக்க முடியாது" என்று முயல் சவால் விட்டது. பழைய பஞ்ச தந்திரக் கதையைப் படித்திருந்த ஆமை, "எங்கிட்டே உன் சவால் எல்லாம் நடக்காது" என்றது. " அப்ப்டியானால் பந்தயம் வைத்துப் பார்த்து விடுவோம்" என்றது முயல்.
பந்தயம் ஆரம்பமானது. முயல் சிட்டாய், 'ஜெட்' போல்  பறந்தது. வெகு தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. ஆமை வருகிற அடையாளமே இல்லை. 'சரி, சற்று நேரம் மரத்தடியில் தூங்கலாம்' என்று படுத்தது. தூக்கம் வந்தால்தானே,

October 18, 2011

அறுவை நேரம் ! (உங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்!)


புள்ளிகள். -- ரிச்சர்ட் நிக்ஸன்

ஏழாவது பிரச்னை
அமெரிக்க உதவி ஜனாதிபதியா(1953-61) இருந்த  ரிச்சர்ட் நிக்ஸன்,  1962ல் ஒரு  புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்தின் தலைப்பு” ஆறு பிரச்னைகள்.
கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு  புத்தகக்கடையில் அந்த புத்தகத்தை விற்பனைக்கு வைத்தபோது,, நிக்ஸன் அங்கு வந்து,  புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுத்தர ஒத்துக் கொண்டார்..
புத்தகத்தைi வாங்கியவர்கள் அவரிடம் கையெழுத்து வாங்க வரும்போது அவர்களின் பெயரைக் கேட்டு, அதைப் புத்தகத்தில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது ஒரு இளைஞர் ,கையெழுத்துக்காக அவரிடம் புத்தகத்தைக் கொடுத்தார்.  அவரிடம் நிக்ஸன் “ உங்கள் பெயரைச் சொல்லூங்கள்” என்றார்.
அந்த இளைஞர் குறும்புடன் : ”என் பெயரைச் சொல்கிறேன்., ஆறு பிரச்னைகளைச் சந்தித்த உங்களுக்கு அது ஏழாவது பிரச்னையாகி விடும்?.. என் பெயர் STANISLAUS WOJECHLECHKI:”  என்றார்.
(1962-ம் ஆண்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வந்த துணுக்கு!)

மீண்டும் மீண்டும் ஏன் அழவேண்டும்?


A wise man joke 

 A wise man once sat in the audience and cracked a joke..
all of them laughed like crazy
After a moment he cracked the same joke again &
a little less people laughed this time...

He cracked the same one again and no one laughed,
Then he smiled and said
"when you can’t laugh on the same joke again and again
then why do you keep crying over the same thing over and over again".
Forget the past and MOVE ON!

----------- 

October 12, 2011

வாழ்க பாரதியார்!

வாழ்க பாரதியார்!
 அன்றொரு நாள் நான் மகாகவி பாரதியின் பாடல்களை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் என் நண்பரும் அரசியல்வாதியுமான திரு. அசமஞ்சம் என்னைப் பார்க்க வந்தார்.
      ""என்னய்யா படித்துக் கொண்டிருக்கிறீர்'' என்று கேட்டார்.
      ""மகா கவி பாரதியாரின் பாடல்களை இப்படிப் படிப்பது என் வழக்கம்.. இப்போது அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.''
      ""ஒரு பாட்டைப் படியேன்.''
      ""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.  இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை...''
      ""பெர்மாதமா இருக்கே... இது போறும்பா.  இதை வச்சுக்கினு பாரதியார் புகழை நான் பரப்பிடுவேன்.  கூட்டத்துக்குக் கூட்டம் அவரைப் பத்திப் பேசறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் அசமஞ்சம்.  சொன்னபடியே அவர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதியாரைக் கொண்டு வந்தார்.
      அவர் கலந்துகொண்டு சில கூட்டங்களில் பேசிய உரைகளை இங்கு தருகிறேன்.

கோணி வியாபாரிகள் சங்கம்
      ''....எனக்கு முன்பு பேசியவர் "ஐயோ, பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டனவே... கோணி வியாபாரம் படுத்து விடுமா'' என்று கவலைப்பட்டார்.  பெட்ரோல்தான் பிளாஸ்டிக்குக்கு மூலப் பொருள்.  அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.  சணலோ ஆண்டவனால் தாராளமாகத் தரப்படும் செடி. 

புள்ளிகள்: குருஷ்சேவின் மனைவி


சரித்திரம் எப்படி மாறி இருக்கும்?

அமெரிக்க அதிபர் கென்னடி 1963-ல் சுடப்பட்டார். அ தற்குச் சில   வருஷங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் கோர்பசேவிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்: : "அதிபர் கென்னடிக்குப் பதிலாக குருஷ்சேவ் சுடப்பட்டிருந்தால் சரித்திரத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” 

ஆழ்ந்த யோசனை செய்து பதில் கூறும் பாவனையுடன் கோர்பசேவ் சொன்னார்: ”எனக்கென்னாவோ குருஷ்சேவின் மனைவியை அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை!"

புள்ளிகள்: ருடால்ஃப் விர்ச்சோ

டாக்டர் பிழைக்க வேண்டுமே!
ருடால்ஃப் விர்ச்சோ (1821-1902) என்ற புகழ் பெற்ற ஜெர்மன் டாக்டரிடம் ஒருத்தர் மிகவும் சீரியஸாகக் கேட்டார்:” டாக்டர்.. எனக்கு ஒரு சந்தேகம். இந்த அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், இல்லையா?

“அதில் சந்தேகமில்லை. அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், ஒரு சிலரைத் தவிர!” என்று ருடால்ஃப்  சொன்னார்.

“ஒரு சிலரைத் தவிர என்றால், யார் அவர்கள்?” என்று நண்பர் கேட்டார்.

“அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்து சம்பாதிக்கும் டாக்டர்களால் மட்டும் உயிர் வாழ முடியாது!”

October 07, 2011

புவியை ஈர்த்த ஆப்பிள்

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர்   ஸ்டீவ் ஜாப்ஸ் (STEVE JOBS) அக்டோபர் 5’ம் தேதி இரவு காலமானார். மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த பல  மின்னணு சாதனங்களை தோற்றுவித்தவர். ‘அமெரிக்கன் ஜீனியஸ்’ என்று டைம் பத்திரிகை இவரை வர்ணித்துள்ளது.
ஸ்டீவ் அக்டோபர் 5.ம் தேதி இரவு காலாமானார்.  7’ம் தேதி அன்று கடைகளுக்கும் தபால் மூலம் சந்தாதாரர்களின் வீடுகளுக்கும் வந்த டைம் பத்திரிகை இதழ் கிட்டதட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறப்பிதழ் என்று சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி கட்டுரைகளையும் படங்களையும் போட்டு அசத்தியுள்ளது .அட்டையில் ஸ்டீவ் ஜாப்ஸின் படம்  ( அடடா, என்ன சுறுசுறுப்பு!)
.
 டைம் இதழில் கிடைத்த சில சுவையான தகவல்கள்:
டைம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்டர் ஐஸக்சன், சுமார் இரண்டு வருஷமாக ஸ்டீவ் ஜாப்ஸைப் பேட்டி கண்டு  ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறை இப்போது எழுதி முடித்திருக்கிறார், புத்தகமும் தயார். முன்னமேயே நிச்சயித்து இருந்தபடி அக்டோபர் 24’ம் தேதி புத்தகம் வெளியிடப்படுகிறது.

October 04, 2011

கோபி -- கேரக்டர்

புல்லாங்குழல் வித்வான் கோபாலன் என்னும் கோபிக்கு பெயர் பொருத்தம் அபாரம்! மனுஷனுக்கு எப்போது எதற்குத்தான் கோபம் வரும் என்பது தெரியாது. இவர் கோபமெல்லாம் தன் மனைவி, மக்களிடம் மட்டும் தான்! வீட்டை விட்டு வெளியே வந்தால் பரம சாந்த சொரூபி. மேடையில் உட்கார்ந்தால் இசை மன்னன் தான்!
கோபம் மட்டும் அவருடைய குறைபாடு அல்ல. தன் மனைவி, குழந்தை குட்டிகளின் நலனைப் புறக்கணிக்கும் அளவுக்கு, சொந்த சௌகரியம், சுகம் ஆகியவைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பார்.
"ஊரெல்லாம் என்ன நல்ல பேர் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் காலை வைத்தால் நரசிம்ம மூர்த்தி தான். "தோடியில் ஒரு கோடி காட்டும் போதே ஓடிப் போய் பாராட்டலாம்.' என்று சுப்புடு எழுதுகிறார். நீங்கள் உச்சி குளிர்ந்து போகிறீர்கள். இந்த தடவை நானே சுப்புடுவைப் பார்த்து சொல்கிறேன், உங்கள் குணத்தைப் பற்றி. அந்த அழகையும்தான் அவர் பத்திரிகையில் எழுதட்டுமே'' என்பாள் மனைவி.
"போய்ச் சொல்லேன்..  இன்னும் குடிகாரன், ஸ்திரீ லோலன், கடன்காரன், அப்பனைக் கொன்றவன், அண்ணன் வீட்டில் திருடியவன், குழந்தையின் கழுத்தை முறிக்கிறவன், கள்ளச் சாராயம் காச்சறவன் என்றெல்லாம் போய்ச் சொல்லு...... மூணு மணி நேரம் கச்சேரி பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு கப் பால், காபி என்று ஒரு மண்ணும் கிடையாது.....