July 11, 2018

கடவுளின் கரங்கள்

இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே . பார்த்தசாரதி அவர்கள் கூறிய உண்மைச் சம்பவம். அவர் சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன்.
    *                        *                           *
    " என் கண்ணின் முன்னே நடந்த அதிசயம் அது. சத்தியமான நிகழ்ச்சி, ஆண்டவனின் அபார கருணையை, லீலையை அப்போது  கண்டேன்.
     விவரமாகக் கூறுகிறேன்;
     என்னுடன் பணியாற்றும் நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மனக் கோளாறு வேறு ஏற்பட்டு விட்டது. பிழைப்பதே அரிது என்று ஆகிவிட்டது. மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தார் பிறகு,”வாரத்துக்கு இரண்டு ஷாக் வீதம், பத்து மின்சார ஷாக் கொடுத்தால்,‘மன நோய் சரியாகிவிடும்என்று சொல்லி  மருத்துவமனையிருந்து  டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்.
     வீட்டிற்கு வந்தும், அந்த அம்மாள் படுத்தபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே என் நண்பர் தன் மைத்துனரைத் தஞ்சாவூரிலிருந்து டில்லிக்கு வரவழைத்தார். அவர் வந்த பிறகு ஒருதரம் ஷாக் கொடுத்தார்கள். ஆனாலும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
     இந்த சமயம், அந்த அம்மாளிடம் நான் திருப்புகழ். புத்தகங்களைக் கொடுத்து, அவற்றைப் படித்து மனச்சாந்தி பெறும்படி சொன்னேன். அவரும் படிப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டார்.
     அந்த திருப்புகழ் பிரதி என் நண்பருடையது.   அந்தப் பிரதியை எனக்குக் கொடுத்த அவர் “முருகன் அருள் தருவான்என்று எழுதிக் கொடுத்திருந்தார்.
 மருத்துவர் அடுத்த ’ஷாக்’ கொடுத்த பிறகும்   அந்த அம்மாவிற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில், அவருடைய கிராமத்திலிருந்து ஒரு தந்தி வந்தது., அந்த அம்மாளின் தாயார் கிராமத்தில் காலமாகிவிட்டதாகத் தந்தியில் தெரிவித்து இருந்தார்கள்.  தன் நோயை மறந்து, “ ஐயோ அம்மா”  என்று அழுது அரற்றினார் என் நண்பரின்மனைவி.

June 22, 2018

ஒரு கல்லறை வாசகத்தின் கதை

ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இறந்து போனவரை நல்லடக்கம் செய்த இடத்தில் அழகாக வடிவமைக்கப்பட்ட கல்லை நிறுத்திவைத்து அதில் அடக்கம் செய்யப்பட்டவரைப் பற்றி ஒரு வாசகம் எழுதி வைத்திருப்பார்கள். (சமீப காலங்களில் இந்தப் பழக்கம் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.)
இந்த வாசகங்களைத் தொகுத்துப் பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் உள்ளவை எல்லாம் உண்மையா, கற்பனையா என்றெல்லாம் கூற முடியாது.
ஆனால் சில பிரபல அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களின் கல்லறை வாசகங்கள் சிறப்பாக உருவாக்கப் பட்டிருக்கின்றன.

இப்படி சிறந்த கல்லறை வாசகங்களைப் பற்றியும் கல்லறையில் நீண்ட உறக்கத்தில் இருப்பவர்களைப் பற்றியும் எழுதலாம் என்றெண்ணி, பலரது வாழ்க்கை வரலாறுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். புவி ஈர்ப்புச் சக்தியை (அது மட்டுமல்ல இன்னும் பல நூறு விஷயங்களை) கண்டுபிடித்த) சர் ஐசக் நியூட்டனைப் பற்றிப் படித்தபோது ஐசக் நியூட்டன் தனது வழிகாட்டியாக சர் கிரிஸ்டபர் ரென் என்பவரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரென் புகழ்பெற்ற கட்டட நிபுணர். லண்டனில் உள்ள, அபாரமாக வடிவமைக்கப்பட்ட செயின்ட் பால்’ஸ் கதீட்ரலை உருவாக்கியவர்.

April 25, 2018

 அன்புடையீர்!
பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது  சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும்.
- கடுகு

March 06, 2018

அன்புடையீர்,
வணக்கம்,
அமெரிக்காவிலிருந்து சென்னை  வந்திருக்கிறேன்.
பதிவு போட நேரமில்லை. 
ஆகவே  4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

.             =கடுகு

February 18, 2018

ஐயோ வேண்டாம், லாட்டரிப் பரிசு

இந்தப் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு இது என்று, பதிவைப் படித்து முடித்த பறகு நீங்கள்  நிச்சயம் சொல்வீர்கள். லாட்டரியில்  அதிக தொகையைப் பரிசாகப் பெற்றவர்களின் கதையைத் தர உள்ளேன்.
     1970-களில் திடீரென்று இந்தியாவில் ஒரு பயங்கர தொற்று நோய் பரவியது. எல்லா மாநில அரசுகளையும் அது பிடித்துக் கொண்டது. அவை அவை லாட்டரி டிக்கெட்டுகளைப் போட ஆரம்பித்தன. ‘டிக்கெட் விலை ஒரு ரூபாய்; பரிசு ஒரு லட்சம்என்று இருந்தாலும், அன்றைய கால கட்டத்தில் ஒரு லட்சம் என்பது பெரிய தொகை. (இன்று வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கூட வாங்கமாட்டார்கள். “ஹும்ஒரு லட்சத்திற்கு நாலு பாப்கார்ன் பொட்டலம் கூட வராது என்று சொல்லி வாங்க மறுப்பார்கள்.!)
     உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கால கட்டத்தில் தமிழ்நாடு அரசும்  லாட்டரி திட்டத்தைக் கொண்டு வந்தது. லாட்டரி டிக்கெட் விற்கும் கடைகளில் கூட்டம் அலை மோதியது. சட்டம், ஒழுங்கு குலைந்து விடுமோ என்று கருதி. லாட்டரி டிக்கட்டுகள் சில சமயம் காவல் நிலையங்களில் விற்பனை செய்தார்கள்!).
     ஒன்றிரண்டு வருஷங்கள் கழித்து, டில்லிஸ்டேட்ஸ்மென்  பத்திரிகையில்லாட்டரியில் பரிசு பெற்றவர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் அனுபவத்தைத் தொடர் கட்டுரையாக வெளியிட்டார்கள்.. (அவற்றிலிருந்து சில தகவல்களைத் திரட்டி, தமிழில் நான் எழுதிய கட்டுரை 
தினமணி கதிரில் ஒரு இணைப்பு அளவிற்கு, ஏழு, எட்டு பக்கங்களில்  வந்தது.)
     பரிசு பெற்றவர்கள் யாரும் மன நிம்மதியோ சந்தோஷமோ அடைய வில்லை. உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல  திடீர்நண்பர்கள் பணம், பணம் என்று பிய்த்ததையும், பலர் கோபித்துக் கொண்டு உறவையே துண்டித்து விட்டதையும் வருத்தத்துடன் சொல்லி இருந்தார்கள்.
     சரி, இதெல்லாம் பழைய கதை. நாற்பது, ஐம்பது வருஷத்திற்கு முந்தையது என்று தள்ளிவிடலாம்.
     சமீப ஆண்டுகளில் பரிசு பெற்றவர்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
     முக்கியமாக, அமெரிக்காவில் ஒரு பிரம்மாண்ட லாட்டரியில் 314.9 மில்லியன் டாலர் பரிசு பெற்ற விட்டேகர் என்பவரைப் பற்றி எழுத கொஞ்சம் வலை போட்டேன். TIME இதழில் சில வருஷங்களுக்கு முன்பு வெளி வந்த தொடர் கட்டுரையும் கிடைத்தது. அப்போது வேறு சில லாட்டரி வெற்றியாளர்களைப் பற்றியும் தகவல் கிடைத்தது.
முதலில் என் கவனத்தைக் கவர்ந்தது இங்கிலாந்தில் ஒரு லாட்டரியில் வெற்றி பெற்ற MICHAEL CARROL என்பவரின்கதை’.  முதலில் அதைப் பார்த்துவிடலாம். பிறகு விட்டேகர் கதைக்குப் போகலாம்.
     கேரல் என்ற 19 வயது இளைஞனுக்கு தேசிய லாட்டரியில் 2002’ம் ஆண்டு சுமார் 18 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது. முனிசிபல் குப்பை லாரியில் சென்று குப்பையை எடுத்துக் கொட்டும் வேலையில் கேரல் இருந்தான்.

ஏராளமான தொகைப் பரிசாகக் கிடைத்தும், அவன் அதை எந்த ஹோட்டலிலும் கொண்டாட முடிவில்லை காரணம், அவன் அந்த வயதிலேயே ஏகப்பட்டச் சில்லறை குற்றங்கள செய்து பல தடவைக் கைதாகி இருக்கிறான்.