November 16, 2010

துவளாத மனத்தின் வெற்றி

ஃப்ரெட் ஸ்மித்தின் ( FRED SMITH) கதையைப் பாருங்கள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது புதிய தொழில் முயற்சி பற்றி ஒரு "தீஸிஸ்' எழுதினார்.
      "24 மணி நேரத்திற்குள் வினியோகம்' என்ற தலைப்பில்.
      இன்று ஒப்படைக்கப்பட்ட தபாலையோ, பார்சலையோ மறுநாளே நிச்சயமாக டெலிவரி செய்தால் அம்முயற்சிக்கு மகத்தான வரவேற்பு இருக்கும் என்கிற ரீதியில் எழுதித் தந்தார்.
      ஆசிரியர், ""உருப்படாத யோசனை. தனியே தபால் துறையை நடத்தலாம் என்கிறாய். சொந்தமாகப் பல ஊர்களில் அலுவலகங்கள் வேண்டும். விமானக் கம்பெனிகள் ஆயிரம் தொல்லைகள் கொடுக்கும். ஏகப்பட்ட முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய விமானக் கம்பெனிகள் போட்டிக்கு வந்தால் எதிர்த்து நிற்க முடியுமா?'' என்று கூறி ஸ்மித்தின் யோசனையை நிராகரித்து விட்டார்.
      ஸ்மித்திற்குத் தன் யோசனை மீதும் அது நிச்சயம் வெற்றியடையும் என்பதின் மீதும் அயராத நம்பிக்கை இருந்தது. படிப்பை முடித்த பிறகு தொழில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது, "24 மணி நேரத்தில் டெலிவரி' என்று உத்தரவாதத்துடன் "ஃபெடரல் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தை ஆரம்பித்தார்.
      அமெரிக்காவின் அரசு வங்கியின் (நமது ரிசர்வ் வங்கி மாதிரி) பணத்தை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்ல, வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். (இதனால் வங்கிக்குக் கணிசமான செலவு மீதம் என்பதால் வங்கி இவருடன் ஒப்பந்தம் செய்து  கொண்டது.)
      ஃப்ரெட், இரண்டு விமானக் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சுமார் நாலு கோடி டாலரைக் கடனாக வாங்கி, ஒரு விமானத்தை வாங்கினார்.
      அப்போது (1971) அவருக்கு வயது 26. ஆனால் வங்கி ஒப்பந்தத்தை ஒரு சில காரணங்களுக்காக வாபஸ் வாங்கிக் கொண்டது.
      "நான் மூழ்கிப் போக மாட்டேன்' என்று சூளுரைத்து, தனது கம்பெனியை கடிதங்கள், பார்சல்கள் எடுத்துச் செல்லும் கூரியர் கம்பெனியாக ஆக்கினார். முதல் மூன்று வருடங்கள் திவால் ஆகிவிடும் போலிருந்தது. சிறிதும் தளராமல், கம்பெனியை நடத்தினார். தன் சொந்த சொத்தக்களை எல்லாம் விற்றார். கம்பெனி மெதுவாகத் தலை தூக்கியது.
      1983-ல் அதாவது 10 வருஷங்களுக்குள் சரித்திரம் படைத்து விட்டது. மிக குறுகிய காலத்தில் நூறு கோடி வருவாயைத் தொட்டது.
      இன்று "ஃபெடக்ஸ்' இல்லாவிட்டால் அமெரிக்காவே ஸ்தம்பித்து போய்விடும் என்றாகி விட்டது. ஃபெடக்ஸ், ஃப்ரெட் ஸ்மித்தின் வெற்றி மட்டுமல்ல. துவளாத மனத்தின் வெற்றியும் கூட.

November 11, 2010

FOOTPRINTS

             குறிப்பு: சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன்பு புத்தகசாலையில்  FOOTPRINTS  என்ற இந்த அற்புதமானப் பாடலை படித்து மெய்மறந்தேன். அப்போதே அதைத் தமிழ்ப் படுத்த முனைந்தேன். சுமாராக மொழிமாற்றம் செய்தேன். ’சாவி’க்கு அனுப்பினேன்.  முதல் பக்கத்தில் பிரசுரமாயிற்று.
           இப்போது மீண்டும் படிக்கும்போது இதை இன்னும் சிறப்பாக  மொழிபெயர்த்து இருக்கலாமே என்று தோன்றியது.  அதற்கு எனக்குத் திறமை இல்லை என்றும் உணர்ந்தேன்.
படிப்பவர்கள் முயற்சி செய்யலாம்.  திருத்தமும் கூறலாம்.
 =================================

FOOTPRINTS
By Margaret Fishback Powers

One night I dreamed a dream.
I was walking along the beach with my Lord.
Across the dark sky flashed scenes from my life.
For each scene,
I noticed two sets of footprints in the sand,
One belonging to me and
One to my Lord.

When the last scene of my life shot before me
I looked back at the footprints in the sand.
There was only one set of footprints.
I realized that this was at the lowest
And saddest times of my life.
This always bothered me
And I questioned the Lord
about my dilemma.

"Lord, You told me when I decided to follow You,
You would walk and talk with me all the way.
But I'm aware that during the most troublesome
Times of my life there is only one set of footprints.
I just don't understand why, when I need You most,
You leave me."

புள்ளிகள்” சாவி


ஒரு சமயம் சாவி அவர்கள் டில்லியில் என் வீட்டிற்கு வந்திருந்தார். ``சும்மா உங்களுடன் ஒரு வாரம் இருப்பதற்காகவும் உங்களுடன் பேசி என்னை `சார்ஜ்' பண்ணிக் கொள்வதற்காகவும் வந்தேன்'' என்றார்.
ஒரு வாரம் ஒரே அரட்டை. ஊருக்குக் கிளம்புகிற சமயம் அவரிடம் ஒரு பிளாஸ்டிக் பாயைக் காண்பித்தேன். அப்போதுதான் அத்தகைய பாய்கள் டில்லிக்கு வந்திருந்தன. ``ஆஹா... டிசைன் எல்லாம் ரொம்ப அழகாக இருக்கிறது'' என்று என்னிடம் பேசியபடியே பாயை நிதானமாகச் சுருட்ட ஆரம்பித்தார்.
``அகப்பட்டதைச் சுருட்டறது என்பது இதுதான். நல்ல பொருளைப் பார்த்தால் சுருட்டி விடுவேன்'' என்றார்.

திருக்குறளை எழுதியது நான்.-கடுகு

`திருக்குறள் எழுதியது நான்' என்ற தலைப்பைப் பார்த்ததும் `ரீல்' என்று எண்ணி விடாதீர்கள். விவரமாகச் சொல்கிறேன்.

 டில்லியில் வள்ளுவர் கழகம் என்ற அமைப்பை நாங்கள் சிலர் உருவாக்கினோம். அமைச்சராக இருந்த க.ராசாராம் அதன் தலைவர். அவர் முயற்சியில் டில்லியில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் திருக்குறளை செதுக்கி வைக்க விரும்பினோம். சென்னையிலிருந்து செய்து கொண்டுவர நேரம் இல்லை. ஒரே இரவில் முடித்தாக வேண்டிய கட்டாயம். ஆகவே டில்லியில் உள்ளவர்களைப் பிடித்து இதைச் செய்ய முடிவு செய்தோம்.

அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதால் பீடத்தின் ஒரு பக்கத்தின் அளவுக்குப் பேப்பரில் குறளை  எழுதித்தர முடிவெடுத்தோம்.எனக்கு ஓரளவு லெட்டரிங் தெரியும் என்பதால் எனக்கு இந்த வேலை தரப்பட்டது. அவ்வளவு பெரிய அளவில் எழுதிப் பழக்கம் இல்லாததால் எனக்கு உதவி செய்தவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைமை இன்ஜினியர்! பேப்பரில் கோடுகள் போட்டு, எழுத்தின் அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் விவரமாகச் சொன்னார். அதன்படி நான் எழுதிக் கொடுத்தேன்

 நான் பெரிய காகிதத்தில் எழுதிக் கொடுத்ததை கிரானைட் கல்லின் மீது ஒட்டி வைத்து, அதன் மேலேயே பொளிந்தார்கள். எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். ஆகவே கூடவே இருந்து தவறு வராதபடி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 டில்லி சென்றால், டில்லி தமிழ்ச் சங்கத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பெரிய திருவள்ளுவர் சிலையின் பீடத்தைப் பாருங்கள். சிலையின் பீடத்தில் சில திருக்குறள்கள் செதுக்கப்பட்டிருக்கும். என் கையெழுத்தில்!
.

November 10, 2010

உப்பும் மிளகும்

உப்பும் மிளகும்
அமெரிக்கவில் பிரசுரமாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித் தாளைப்
புரட்டினால் எல்லம் பிஸினஸ் செய்திகளாகவும் பங்கு மார்க்கெட்
நிலவரங்களும் மில்லியனும் பில்லியனுமாக இருக்கும்.
ஆகவே அமரிக்கன் லைப்ரரியில் அதன் கிட்டேயே போகமாட்டேன்.. இந்த செய்திதாளில் நிச்சயமாக எனக்குப் பிடித்த நகைச்சுவை அம்சமே இருக்காது .என்பது எனக்குத் தெரியும். ஆனால் மற்ற பகுதிகளுடன் தொடர்பில்லாத்த ஒரு பத்தி அவ்வப்போது வெளியாகிறது என்பது, ஒரு பழைய புத்தகத்தை நடைபாதைக் கடையில் வாங்கியபோதுதான் தெரிந்தது,
புத்தகத்தின் தலைப்பு: உப்பும் மிளகும்.  வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்த தலைப்பில் அவ்வப்போது பிரசுரமாகும் ஜோக்குகள்,ஒரு வரி சிரிப்புகள், நகைச்சுவைக் குட்டி பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. ஒரு பத்து ஆண்டுகளில் வந்தவற்றில் சிறந்தவற்றைப் போட்டிருந்தார்கள்: அதிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.