August 28, 2011

குட்டிக் கதைக்களஞ்சியம்

இப்போதெல்லாம் வாரப் பாத்திரிகைகளில் குட்டிக் கதைகளுக்கு ஏக மவுசு!  பிரபல எழுத்தாளர் ஏகாம்பரம் மட்டும் சும்மா இருப்பாரா? மிக இலகுவாக ஆயிரக்கணக்கில் குட்டிக் கதைகளை எழுதிக்குவித்தார்.  அவற்றில் சில:
கொலை விழுந்தது!
      கருகும்மென்று இருட்டு, கையை நீவிவிட்டுக் கொண்ட கருக்கரிவாளை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டான் காளி.  "ஒரே வெட்டு, விழவேண்டும் கொலை' என்று தனக்குள் சொல்லிக் கொண்டே போனான்.
      மெதுவாகச் சுவரேறிக் குதித்தப் பூனை போல் அடியெடுத்து வைத்து முழு பலத்துடன் அரிவாளால் ஒரு போடு போட்டான்.  விழுந்தது "கொலை காளி ஒரு வாழைக்குலைத் திருடன்!


காபரே பார்க்கணும்
      ""ராஜம், எனக்கு ரொம்ப நாளா ஆசை, காபரே போய்ப் பார்க்கணும்னு.''
      ""என்ன சொன்னே, பட்டு...காபரேயா? அசிங்கம். அதுவும் நாம்ப போனால் நல்லா இருக்குமா? எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க.''
      "பார்க்கட்டுமே ராஜம்... நாம் மட்டும் என்ன அதிசயப் பிறவியா?
      "இல்லைதான்.  இருந்தாலும் பேப்பரில் போட்டாலும் போட்டுவிடுவாங்க பட்டு.''
     ""என் அப்பா அறநிலைய மினிஸ்டர் உங்க அப்பா சன்மார்க்க சபாத் தலைவர்.  அதனால் நாம் எதையும் அனுபவிக்கக்கூடாதா? ராஜம், நீ, பயந்தங்கொள்ளி பையண்டா'' என்றான் பட்டு தன் அரும்பு மீசையைத் தடவியபடியே.
சங்கிலியைக் காணோம்!
      நூறு படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த  மாதவிப்ரியா கோபமும் அழுகையுமாக இருந்தாள்.  ""என் சங்கிலி எப்படிக் காணாமல் போகும்சங்கிலி எப்படித் திருடு போகும்இங்கேதான் சோபா செட்டு மேலே வெச்சுட்டுக் குளிக்கப் போனேன்.  போலீசுக்குப் போன் பண்ணட்டுமா?'' என்று இரைந்து கொண்டிருந்தாள்.
      அரை டஜன் வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். 
      அப்போது வேலைக்காரிகளில் ஒருத்தி, "அதோ. . அதோ. . . சங்கிலி. . . அதோ!'' என்று கத்தினாள்.  அவள் காட்டிய திசையில் ஒரு சோபா செட்டின் கீழே இருந்து மெள்ள எட்டிப் பார்த்தது சங்கிலி என்னும் அந்த பத்தாயிரம் விலையுள்ள நாய்க்குட்டி!
சிலீர்! சிலீர்!
      ஊரடங்குச்சட்டம், கத்திக்குத்து, கொலை என்று ஹைதராபாத் இருக்கும் சமயத்தில், ரயில் தாமதமாக வந்தது, இந்த அகால நேரத்திலா வந்து இறங்க வேண்டும்? ரயிலடியில் இருந்த லாட்ஜ் மாடி அறையில் பால கோபாலுக்கு இடம் கிடைத்தது.
      "இதுவரை கத்திக் குத்துக்குப் பலியானவர் 70 பேர்' என்று நாளிதழ் வயிற்றில் பயத்தை விதைத்தது.
      நள்ளிரவு, கீழ்  அறையிலிருந்து சில குரல்கள் : ""கழுத்தை வெட்டுடா... பிசிர் இல்லாதே வெட்டு காதர், கையை வெட்டியாச்சா? அப்படியே  வை... காலைச் சின்னதாக வெட்டிடு...''  தீடீரென்று யாரோ அடிக்கயாரோ அழுகிறார்கள்.
     பாலகோபால் பயத்தால் மயக்கமான தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
      காலையில் லாட்ஜை விட்டு வெளியே வந்து கீழ் அறையைப் பார்த்தார்.  "விக்டரி டெய்லரிங்க் ஷாப்' என்ற போர்டு அங்கு மாட்டப்பட்டு இருந்தது.!

3 comments:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!