March 06, 2011

பையச் சென்றது பன்றி

தெளிவற்ற நிலையில் நான் இருந்த தருணம்,
சுமையேற்றிய ஆண் திமிரில் வீடு திரும்பும் நேரம்,
எனது கால்கள் நிலையற்ற நடனம் ஆட,
மோன நிலையில் சாக்கடையில் கிடக்க,
அப்பக்கம் வந்த வராகம் என் அருகில் கண்ணசர,
போகிற போக்கில் அப்பெண் கூறினாள்,
“கூட்டாளிகளை வைத்தே கூறிடலாம்,
ஒருவன் குடிகாரனா என்பதெல்லாம்”
“ஹும்” என பெருமூச்சுடன் அங்கிருந்து பையச் சென்றது பன்றி.

- Judged by the company  என்ற ஆங்கிலப் பாடல்.
தமிழாக்கம்: டோண்டு ராகவன்  அவர்கள் .

( டோ.ரா.விற்கு நன்றி- கடுகு)

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!