December 17, 2009

அன்புள்ள டில்லி- ஒரு சின்ன முன்னுரை

.    சென்னை ஜி.பி. ஓ.வின்  LIFE AND PART- டாக நான் இருந்த சமயம் - வருஷம் 1962- என் உயர் அதிகாரி என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்: டில்லிக்கு டெபுடேஷனில் அனுப்ப உன் பெயரைச் சிபாரிசு செய்திருக்கிறேன்.”     ’’:என்னது. டில்லியா? என்னால் சமாளிக்க முடியுமா? ” என்ற பயம் தோன்றவில்லை. காரணம், அன்று நான் இளங்கன்று.
   டில்லிக்கு வந்தேன். சுமார் 21 வருஷம் கழித்து அரசாங்க வேலையை உதறி விட்டுச் சென்னைக்கு வந்தேன்.
    டில்லியில் 21 வருடங்களில் எனக்குக் கிடைத்தவை ஏராளமான அனுபவங்கள், அரிய அறிமுகங்கள், நட்புகள், சில ஏமாற்றங்கள், பல புதிய பாடங்கள். இவை யாவும் என்னைச் செதுக்கி, செம்மைப்படுத்தி சில உயரங்களைத் தொடவைத்தன என்பது உண்மை.
    அந்த 21 வருட வாழ்க்கையை ‘சாவி’ இதழில் தொடர் கட்டுரையாக எழுதினேன் .இப்போது படித்தபோதும் அவை சுவையாக இருப்பதுபோல் (!) தோன்றியது. அதிலிருந்து பிட்டு பிட்டு இங்கு  வைக்க நினைத்து இருக்கிறேன். வெல்லப் பிட்டு மாதிரி சுவையாக இருக்கும் என்றும் நம்புகிறேன். ((நம்பிக்கைத்தானே வாழ்க்கை என்று எழுதப் போவதில்லை!!)


No comments:

Post a Comment

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!