எனக்கு டயரி எழுதும் பழக்கம் கிடையாது. (`அதுவரைக்கும் நாங்கள் பிழைத்தோம்' என்று நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது!) அதற்கு பல முக்கியக் காரணங்கள். முதலாவது சோம்பேறித் தனம். இரண்டாவது நாம் மறக்க விரும்பும் விஷயங்களை எழுதித் தொலைப்போம். எப்போதாவது டைரியைப் புரட்டினால் அதுதான் முதலில் கண்ணில் படும். அந்த விஷயத்தை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதபடி பாடாய்ப் படுத்தும். மூன்றாவது: என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது.
அது என்ன கறுப்புப் பணத்திற்கும் டைரிக்கும் சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்காவிட்டாலும் கேட்பதாகப் பாவித்துப் பதில் சொல்கிறேன்!
வருமான வரி அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு சென்றார்கள் என்றால் செய்திகளில் முதலில் வருவது: ``ரெய்டின் போது கணக்கில் காட்டாத பல லேவாதேவி (யார் அந்த `தேவி?!' அசின் மாதிரி இருப்பரா” அல்லது தமன்னா மாதிரி இருப்பாரா? ) விவரங்கள் குறிக்கப்பட்டிருந்த டைரியைக் கைப்பற்றினார்கள்.''
அந்த ஆசாமி எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் டயரி எழுதியிருப்பான்! அப்படித்தான் செய்திகள் வரும்!
இப்படிப்பட்ட செய்திகளை நிறையப் படித்ததன் விளைவாக டயரி = கறுப்புப் பணம் என்று என் மனதில் பதிந்து விட்டது.
இதை எல்லாவற்றையும் விட வேறொரு காரணமும் இருந்தது. சுமார் நூறு வருடங்கள் கழித்து என் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என் டயரியைப் படிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். படிக்கப் படிக்க என்னைப் பற்றிய மதிப்பு அவனுக்குக் குறைந்து கொண்டே போகும்.
உதாரணமாக ``தீபாவளி போனஸ், பிராவிடண்ட் பண்டில் கடன் ,இரண்டையும் சேர்த்து ஒரு 20,000 ரூபாயில் கலர் டிவி இன்று வாங்கினேன்'' என்று எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு அவன் என்ன நினைப்பான் தெரியுமா? ``ஹும் பிசாத்து.. 20,000 ரூபாய்... நாலு ஃப்ரண்ட்ஸுடன் நாம் ஸெவன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் டின்னர் சாப்பிடுவதற்கு ஆகிற செலவு கூட இல்லை. பெரிய டிவி வாங்கிட்டாராம்... ஜம்பமாக டயரியில் எழுதியிருக்கிறார்'' என்று நினைப்பான்.
அது என்ன கறுப்புப் பணத்திற்கும் டைரிக்கும் சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்காவிட்டாலும் கேட்பதாகப் பாவித்துப் பதில் சொல்கிறேன்!
வருமான வரி அதிகாரிகள் எங்கேயாவது ரெய்டு சென்றார்கள் என்றால் செய்திகளில் முதலில் வருவது: ``ரெய்டின் போது கணக்கில் காட்டாத பல லேவாதேவி (யார் அந்த `தேவி?!' அசின் மாதிரி இருப்பரா” அல்லது தமன்னா மாதிரி இருப்பாரா? ) விவரங்கள் குறிக்கப்பட்டிருந்த டைரியைக் கைப்பற்றினார்கள்.''
அந்த ஆசாமி எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர்வழியாக இருந்தாலும் டயரி எழுதியிருப்பான்! அப்படித்தான் செய்திகள் வரும்!
இப்படிப்பட்ட செய்திகளை நிறையப் படித்ததன் விளைவாக டயரி = கறுப்புப் பணம் என்று என் மனதில் பதிந்து விட்டது.
இதை எல்லாவற்றையும் விட வேறொரு காரணமும் இருந்தது. சுமார் நூறு வருடங்கள் கழித்து என் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் என் டயரியைப் படிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். படிக்கப் படிக்க என்னைப் பற்றிய மதிப்பு அவனுக்குக் குறைந்து கொண்டே போகும்.
உதாரணமாக ``தீபாவளி போனஸ், பிராவிடண்ட் பண்டில் கடன் ,இரண்டையும் சேர்த்து ஒரு 20,000 ரூபாயில் கலர் டிவி இன்று வாங்கினேன்'' என்று எழுதியிருப்பேன். அதைப் படித்து விட்டு அவன் என்ன நினைப்பான் தெரியுமா? ``ஹும் பிசாத்து.. 20,000 ரூபாய்... நாலு ஃப்ரண்ட்ஸுடன் நாம் ஸெவன் ஸ்டார் ஓட்டலுக்குப் போய் டின்னர் சாப்பிடுவதற்கு ஆகிற செலவு கூட இல்லை. பெரிய டிவி வாங்கிட்டாராம்... ஜம்பமாக டயரியில் எழுதியிருக்கிறார்'' என்று நினைப்பான்.





