August 22, 2011

எல்லா வீலர் வில்காக்ஸ்

நாலாயிர திவ்யப் பிரபந்தம் படிக்கும் போது `மகா விஷ்ணு' என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு பல பாடல்கள் எழுதப்பட்டிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.
போகட்டும், இதுவாவது 12 ஆழ்வார்கள் இயற்றியவை. கம்பன்? ஒரே ஒருத்தர் 10000 பாடல்களுக்கு மேல் பாடல்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றி இருக்கிறார். சாதாரண சாதனையா? இந்தப் பாடல்களை எழுதியதால் அவருக்கு என்ன ஆதாயம்? பத்திரிகைகளில் பேர் வரும் என்றோ புத்தக ஆர்டர் வரும் என்றா எழுதினார். புத்தகமாகப் போட்டு வருவாய் ஈட்டலாம் என்றா? அவரை எழுதச் செய்த உந்துசக்தி யாது?
பத்தாயிரம் பாடல்கள் எழுதிய சாதனையை வியந்து கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஆங்கிலக் கவிதை ஒரு பொன்மொழிப் புத்தகத்தில் காணப்பட்டது. அவருடைய கவிதைகளை மேலும் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. தேடினேன். கடைசியில் அவர் எழுதிய பாடல்கள் யாவும் இன்டர்நெட்டில் இருந்தது. இலவசமாகப் படிக்கவும், பதிவிறக்கிக் கொள்ளவும் `குட்டன்பர்க்' வலைமனையில் இருந்தது. அவற்றை டவுன்லோட் செய்து நானே ஒரு புத்தகமாக வடிவைமைத்தேன். இரண்டு பகுதியாகத் தயாரித்தேன். புத்தகத்தில் எங்கு புரட்டினாலும் அழகான பாடல்கள்.
அவர்?
எல்லா வீலர் வில்காக்ஸ் (ELLA WHEELER WILCOX)  சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர். அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் வாழ்ந்த ஒரு ஏழை (மிக மிக ஏழை என்று கூடச் சொல்லலாம்) குடும்பத்துப் பெண். அவர் எழுதியவை  ஆயிரக்கணக்கானi பாடல்களுக்கு மேல்!

வில்காக்ஸிற்கு கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பவும் ஆர்வம் இருந்தது. ஆனால் தபாலில் அனுப்ப பணவசதி இல்லை (உண்மை.) மாதம் ஒரு கவர் மட்டும் எழுத அவருக்கு அனுமதியை அவளது தந்தை தந்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வில்காக்ஸ் தனது நெருங்கிய தோழிக்குக் கடிதம் எழுதவும் ஆசை. தனது தோழிக்கும் கடிதம் எழுதி, அத்துடன் ஒரு கவிதையையும் எழுதி வைப்பார். கவிதையை பத்திரிகைக்கு அவள் செலவில் அனுப்பும்படி கேட்டுக் கொள்வார். அப்படி அனுப்பப்பட்ட கவிதை முதன் முதலில் வெளியாகி வில்காக்ஸிற்கு  ஒரு டாலரோ இரண்டு  டாலரோ சன்மானமாகக் கிடைத்தது.
அதன் பிறகு மெள்ள மெள்ள பல கவிதைகள் பிரசுரமாயின. படித்தவர்களை அசந்து போகச் செய்யும் கவிதைகள்.
கவிதைகள் மட்டுமல்ல, நீண்ட கடித பாணியில் பலருக்கு அறிவுரைகள் போன்று கட்டுரைகளிலும் அவரது கவிதையின் அழகு பிரதிபலிக்கும். கருத்துக்கள் வைரமாக மின்னும்.
ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுரைகளின் சிறு பகுதிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். எனக்கே திருப்தியாக இல்லை! அவரது ஒரு கவிதையை இங்கு தருகிறேன்:

You Never Can Tell

By Ella Wheeler Wilcox

You never can tell when you send a word,
Like an arrow shot from a bow
By an archer blind, be it cruel or kind,
Just where it may chance to go.
It may pierce the breast of your dearest friend.
Tipped with its poison or balm,
To a stranger's heart in life's great mart,
It may carry its pain or its calm.

You never can tell when you do an act
Just what the result will be;
But with every deed you are sowing a seed,
Though the harvest you may not see.
Each kindly act is an acorn dropped
In God's productive soil
You may not know, but the tree shall grow,
With shelter for those who toil.

You never can tell what your thoughts will do,
In bringing you hate or love;
For thoughts are things, and their airy wings
Are swifter than carrier doves.
They follow the law of the universe --
Each thing must create its kind,
And they speed o'er the track to bring you back
Whatever went out from your mind.

2 comments:

  1. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. dear Ranganathan,
    I am only reminded of the school days when you, Sadagopan and Sridhar used to entertain by your dramas. Thanks for the E mail.I am very much pleased to read your short, sweet Stories.I congratulate you and admire your talent
    With best wishes
    A.R.Santhngopalan

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!