October 30, 2010

புள்ளிகள்: இந்திரா காந்தி

புது டில்லியில் பஹார்கஞ்ச் என்ற பகுதியில் ( நம்ம ஊர் கொத்தவால் சாவடி மாதிரி) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் உள்ளது, அங்கு  விசாலமான ஆடிட்டோரியம், புத்தகசாலை எல்லாம்  இருக்கிறது.\

அவ்வப்போது நாங்கள் புத்தகசாலைக்குப் போவோம்.
 ஒரு நாள் மாலை போனபோது, அங்கு ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. “ மாலை 6 மணிக்கு  சுவாமி ரங்கநாதானந்தா பேசுகிறார்....” என்று அதில்  எழுதப்பட்டு இருந்தது..
ரங்கநாதானந்தா உரையைக் கேட்கும் ஆர்வம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி எனக்குத் தெரியாததும் ஒரு காரணம்.
 நாங்கள் புத்தகசாலைக்குள் போய் படிக்க ஆரம்பித்து விட்டோம்.
 சுமார் 6 மணி வாக்கில்  புத்தகசாலைக்கு வெளியே  பரபரப்பு எற்பட்டது தெரிந்தது. எட்டிப் பார்த்தோம்.
சர்ரென்று நாலைந்து கார்கள் வந்தன. சில போலீஸ்காரர்கள் தலைகளும் தெரிந்தன. விசில், சைரன், “ சலோ, சலோ”  அதட்டல்கள் எதுவும் இல்லை.   துறவிகள் சிலர் காரிலிருந்து இறங்குபவரை வரவேற்றனர்.. காரிலிருந்து இறங்கியவர்”: பிரதம மந்திரி இந்திரா காந்தி!

’அட, இந்திரா காந்தியே உரையைக் கேட்க வருகிறர் என்றால் சுவாமி ரங்கநாதானந்தா சாதாரணத் துறவி அல்ல. நாமும் போய் அவரது உரையைக் கேட்கலாம்’  என்று எண்ணி ஆடிட்டோரியத்திற்குள் போய் உட்கார்ந்தோம்.

இந்திரா காந்தி முதல் வரிசையில் உட்காந்திருந்தார். நாலைந்து வரிசைகள் தள்ளி நாங்கள் உட்கார்ந்தோம். சுவாமி  ரங்கநாதானந்தா உரையைத் துவக்கினார். தெளிவான ஆங்கில உச்சரிப்புடன்,  சரளமாகத் தங்கு தடையில்லாமல் சொற்களைப் பொழிந்தார். கேட்டுக் கொண்டே இருக்கலாம்போல் இருந்தது!
சுவாமி  ரங்கநாதானந்தா பேசி முடித்ததும், இந்திரா காந்தி எழுந்து நின்று அவருக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டுப் புறப்பட்டு விட்டார். ஒரு பந்தா, ஒரு அலட்டல், ஒரு கெடுபிடி,எதுவும் இல்லை!
தினசரிப் பத்திரிகையில்வந்த “ இன்றைய நிகழ்ச்சிகள்” பத்தியைப் பார்த்து இந்திராகாந்தி அவராகவே சுவாமி  ரங்கநாதானந்தாவின் உரையைக் கேட்க வந்தார் என்பது சிலர் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது!

ஹூம்.. ( பெருமூச்சு!)

Love - Roy Croft

I love you
Not only for what you are,
But for what I am
When I am with you.

I love you,
Not only for what
You have made of yourself,
But for what
You are making of me.

I love you
For the part of me
That you bring out;
I love you
For putting your hand
Into my heaped-up heart
And passing over
All the foolish, weak things
That you can't help
Dimly seeing there,
And for drawing out
Into the light
All the beautiful belongings
That no one else had looked
Quite far enough to find.

I love you because you
Are helping me to make
Of the lumber of my life
Not a tavern
But a temple.
Out of the works
Of my every day
Not a reproach
But a song.

I love you
Because you have done
More than any creed
Could have done
To make me good.
And more than any fate
Could have done
To make me happy.

You have done it
Without a touch,
Without a word,
Without a sign.
You have done it
By being yourself.
Perhaps that is what
Being a friend means,
After all.
                    - Roy Croft

    October 24, 2010

    அருமைநாயகம் - கேரக்டர்

    அருமைநாயகம் நன்றாகப் படித்தவர். திறமையை விட. சர்வீஸ் காரணமாகப் பதவி உயர்வு பெற்று பம்பாய் அணு கமிஷனில் ஓர் உயர் அதிகாரியாக இருக்கிறவர். வெள்ளை மனது ஆசாமி. தலை முடியும் வெள்ளை. பக்திமான். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் மேரியும் மாரியம்மனும் அவர் வணங்கும் தெய்வங்கள்.
    "என்னைப் பொறுத்த வரை எல்லா சாமியும் ஒன்றுதான்.'' என்பார். அவரது அறையில் சுவரை மறைத்துக் கொண்டு பலவித தெய்வப் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.
    அருமைநாயகம் அப்பாவி மனிதராகக் காட்சி அளிப்பார். "இவர் எப்படி இந்த பதவிக்கு வந்தார்?'' என்று பலருக்கு அவ்வப்போது சந்தேகம் எழும். "போகிறார், நல்ல மனிதர். சமயத்தில் சிறு பிள்ளை மாதிரி  ஏதாவது பேசுவார். தொலைந்து போகட்டும். புரமோஷன் கொடுக்கலாம்,'' என்று சொல்லியே பதவி உயர்வுகள் தரப்பட்டனவே தவிர, இவர் திறமைக்காக அல்ல!
    சாதாரண பியூனிடம் கூட "ஏம்பா, இந்த பைலைக் கொண்டுபோய் கொடுக்கிறியா?... இல்லை, வேண்டாம், நீ உட்கார்ந்துகிட்டு இரு. நான் அந்தப் பக்கம் போகும்போது கொடுக்கிறேன்... சரி, பொடி இருந்தால் கொடு, என்பார்''

    மறக்க முடியாத ராபர்ட் - கடுகு

    சில ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் உள்ள சேப்பல்ஹில் என்ற ஊரில் நான் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அங்குள்ள சர்வகலாசாலை மாணவர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தேன். அந்த சர்வகலாசாலையில் மிகப் பெரிய புத்தகசாலை இருந்தது. .மாணவர்கள் பல்வேறு ஹாஸ்டல்கள், டிபார்ட்மெண்டுகள் எல்லாம் போவதற்கு இலவச பஸ் சேவையும் இருந்தது.  பத்து பதினைந்து நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். அந்த பஸ்ஸில் நான் லைப்ரரிகளுக்கு  அடிக்கடி போவதுண்டு.
    ஒரு நாள் கல்லூரி விடும் நேரம் புத்தகசாலையிலிருந்து வீட்டுக்கு வர ஒரு பஸ்ஸில் ஏறினேன்.

    பஸ் கிளம்பியதும். பஸ்ஸிலிருந்த மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. மாணவர்கள் சட்டென்று பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். பஸ் திடீரென்று நிசப்தமாகி விட்டது.  மைக்கில் தொடர்ந்து வந்த அறிவிப்பு:” .. ஹலோ. நான் உங்கள் பஸ் டிரைவர் ராபர்ட் பேசுகிறேன்... CALL ME BOB...குட் ஈவினிங்” என்றார்.. உடனே எல்லா மாணவர்களும் ஒற்றைக் குரலில்  ”குட் ஈவினிங், பாப்” என்றார்கள்.
    ” உங்களுடைய ஐந்து நிமிஷத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்... நீங்கள் எல்லாரும் நமது சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்று பல திசைகளுக்கும் செல்லப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை நமது சர்வகலாசாலை அமைத்துத் தருகிறது.

    October 18, 2010

    ஆபீசுக்குள் பாம்பு! அடிப்பதா, வேண்டாமா?-கடுகு

        வேலை செய்யாத லிஃப்ட்டை சபித்துக் கொண்டே ஐந்து மாடிகளையும் கடந்து ஆறாவது மாடியில் உள்ள தன் டிபார்ட்மென்டிற்குள் நுழைந்தார் ஹெட்கிளார்க் தலசயனம்.

      ஒரு   அரசுத்துறை கட்டிடத்தில்  ஆறாவது மாடியில் உள்ள
    அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் தலைமை குமாஸ்தா அவர். \
    அட்டென்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு குமாஸ்தா கூட வரவில்லை. மணி பத்தரை ஆகியிருந்தது. ஆபீஸ் நேரம் ஒன்பதரை.
    "என்னய்யா அக்கிரமம்! ஏழு மாசமா பென்ஷன் கேஸ், ஜி.பி.எஃப் அக்கவுண்ட் எல்லாம் பெண்டிங்காக இருக்கிறது. எந்தப் பயலாவது நேரத்தில் வந்து வேலை செய்து, நேரத்தில் வீடு போவோம் என்று கிடையாது. ஓவர்டைம் பில் தவிர வேறு  எதையும் கவனிக்க மாட்டார்கள். மனச்சாட்சி என்று இருந்தால் தானே? நிதானமாக ஆடி அசைந்து வர வேண்டியது. காப்பி சாப்பிடுவது, லஞ்ச், டீ,  ... இன்றைக்கு எல்லோரையும்என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?"

    தலசயனம் தனியாக இருக்கும்போது தன் கீழ் உள்ள குமாஸ்தாக்கள் மேலுள்ள கோபத்தை இப்படிப் பேசித் தீர்த்துக் கொள்வார்:
    "அப்படித்தான் வருகிறார்களே, நாலு நிமிஷம் தொடர்ந்தாற்போல் ஸீட்டில் உட்கார்ந்திருப்பார்களா? பேசக் கூடாது. நான்அப்படி ஒரு லைட்டாக கண்ணை மூட வேண்டியதுதான். பாம்பு மாதிரி நழுவி விடுவார்கள். சரியான நல்ல பாம்புகள்... சரியான... ந..ல்..ல..பா..ம்........."
    தலசயனம் முடிக்கவில்லை. மூலையில் பைல்களுக்கு இடையே ஏதோ பளபளவென்று மழமழவென்று தெரிந்தது. உற்றுப் பார்த்தார். அது நெளிந்தது. சரசரவென்று  ஊர்ந்து பைல் காடுகளில் புகுந்தது... பாம்புதான்...
    "பாம்புதான் வந்திருக்கிறது." என்று தலசயனம், வேறு யாரிடமோ கூறுவது போல் உரக்கத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
    கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்துக் கொண்டு பாம்பு நுழைந்த மூலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
    அவருக்கு பாம்பைக் கண்டு பயம் இல்லை; கவலைதான், அந்த மூலையில் இருக்கும் ஷெல்ஃபில் அவருடைய பிளாஸ்க்கும், டிபன் டப்பாவும் இருந்ததுதான் காரணம்.!
    இரண்டு நிமிஷம்அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் உட்கார்ந்தபடியே தூங்கி விட்டார். (தலசயனம் நின்று கொண்டே தூங்கக் கூடியவர். ஏன், கண்களை திறந்து கொண்டு கூடத் தூங்குவார்!)