January 06, 2010

கேரக்டர்: சாரு

மெல்லிய லக்னோ மல் ஜிப்பா, கருப்பு பாண்ட், ஜீனத் அமன் ஹேர் ஸ்டைல், கறுப்பு மூக்குக்கண்ணாடி ,’பிளாட்பாரம்'. என்று நாகரீக நங்கையர்களால் அழைக்கப்படும் உயரமான மிதியடி,

தோளிலிருந்து தொங்கும் "ஜம்பப் பை', முகத்தில் ஓர் அலட்சியம், தவறிப் போய் பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்கிற நினைப்பு,, அந்த நினைப்பினால் உண்டான ஆண்மைத்தனமான அட்டகாசப்பேச்சு,  இவைகள் ஓரளவுதான் சாருவைப் படம் பிடித்துக் காட்டும். காரணம் சாருவின் குணமோ, நடை உடை பாவனைகளோ வர்ணனைக்குள் அடங்காதவை -சாருவைப் போல!

"யாருக்கு எதுக்கு அடங்கி நடக்கணும்? சொஸைடியில் பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்பது தவறு மட்டுமல்ல, சரியான அசட்டுத் தனமும் கூட, வாட் டு யூ ஸே, ராஜா?'' என்று கேட்பாள் சாரு. ராஜா என்பது அவள் கணவன்!

அன்புள்ள டில்லி - 4

அருமையான அமைச்சர்
மறுநாள் பாதுகாப்பு துணை அமைச்சரின் வீட்டிற்குப் போய் அவரைப் பார்த்தேன். மனுவைப் படித்துப் பார்த்தார். அடுத்த நிமிஷமே - ஆம்  அடுத் த நிமிஷமே-- "ஓ.கே. உங்கள் சகோதரரை ராணுவப்பணியிலிருந்து விடுவித்து விட உத்தரவு போடுகிறேன்.'' என்று சொன்னார்.  கை குலுக்கி எனக்கு விடை கொடுத்தார். அமைச்சர் உத்தரவு போட்டாலும் அதை செயல் படுத்த  அரசு அதிகாரிகள் எத்தனை முட்டுக்கட்டைகள் போடுவார்களோ என்று யோசித்துக் கொண்டே விடை பெற்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! அடுத்த மூன்றாவது தினம் புனாவிற்கு ஒரு  ராணுவ உத்தரவு ஒயர்லெஸ்ஸில்  சென்றது: "அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கவும். ரிலீஸ் உத்தரவு பின்னால் வருகிறது.''
             ரிலீஸ் உத்தரவு கிடைத்து விட்ட செய்தியை என் சகோதரர் தெரிவித்ததும், நன்றி தெரிவிக்க திரு சவானைப் பார்க்கச் சென்றேன். நிறைய பழம்,  அவருடைய 3 வயது பேத்திக்கு பிஸ்கட் என்று வாங்கி கொண்டு போனேன்! ஆனால் அவர் ஒரு பழம் கூட வாங்கிக் கொள்ளவில்லை. "உங்கள் சகோதரருடைய கேஸ் லட்சத்தில் ஒன்று. இம்மாதிரியான உண்மையான, நியாயமான கோரிக்கையை எற்காவிட்டால் நான் மந்திரியாக இருக்க லாயக்கில்லாதவன். மேலும் நீங்கள் வாதித்த விதமும் என்னைக் கவர்ந்து விட்டது. பெஸ்ட் ஆப் லக்'' என்று சொன்னார்.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவது என்றால் சுலபமில்லை. பென்ஷன் பேப்பர்கள் பல இடங்களுக்குப் போய் வர மூன்று மாதமாவது ஆகும். என் சகோதரர் விஷயத்திலும் அப்படியே மூன்று மாதம் ஆயிற்று.  அதுவரை அவர் டியூட்டியில் இருந்ததாகக் கருதி முழுச் சம்பளமும் கொடுத்தார்கள்.
என் சகோதரர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தனது 45 வது வயதில் டாக்டர் ஆனார். அவரது வாழ்க்கை லட்சிய்ம் பூர்த்தி  ஆயிற்று. எல்லாம் அமைச்சர் டி.ஆர்.சவானின் உதவியால்!  மறக்க முடியாத மந்திரி டி.ஆர்.சவான்.

தேவனும் நானும் -- கடுகு

துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம். மல்லாரி ராவ் கதைகள் போன்ற நகைச்சுவைக் கதைகளையும், மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான்      சுதர்சனம், லக்ஷ்மி கடாக்ஷம் போன்ற அற்பதமான குடும்ப நாவல்களையும் எழுதி, கல்கிக்கு அடுத்தபடியாக தனது பெயரை எழுத்துலகில் இடம்பெறச்  செய்திருப்பவர் திரு. தேவன். என் அபிமான எழுத்தாளர்.
பள்ளிக்கூட வயதிலேயே பத்திரிகை ஆர்வமும், ஓரளவு எழுத்து ஆர்வமும் இருந்த எனக்கு, தேவன் ஒரு எழுத்துலக 'ரஜினி! என் வயது ஒத்த இளஞர்கள் விஜயா, வாஹினி, ஏ.வி.எம் ஸ்டூடியோ - வாசல்களிலும்,, கோடம்பாக்கம் ரயில்வே  கேட்டருகேவும் (இன்றைய ஃப்ளை ஓவர் இருக்கும் இடத்தில் இருந்த  கேட் மூடியிருக்கும்போது யாராவது நடிகர், நடிகைகளின் கார் வந்து நிற்காதா என்று வாயைப் பிளந்து) காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்,, தேவனைச் சந்திக்க வேண்டும் என்ற வெறி எனக்கு  ஏற்பட்டது. (பின்னால் நான் ஒரு பிரபல(?)  நகைச்சுவை எழுத்தாளனாக ஆனதற்கு இது ஒரு அறிகுறி என்று நான் எழுதினால் "போடா தற்குறி" என்று நீங்கள் தூற்றக்கூடும்.
ஐம்பதுகளில் ஒரு நாள், ’சென்னை அரண்மனைக்காரத் தெருவில் ஒரு நிகழ்ச்சியில் தேவன் பேசுகிறார்’ என்ற செய்தியை தினசரியில் பார்த்தேன். எப்படியாவது அந்த கூட்டத்திற்குச்  சென்னை செல்லவேண்டும் என்ற தீவிரம் பற்றிக்கொண்டது. நான் செங்கல்பட்டுவாசி.  சென்னைக்குப் போய் வர இரண்டு ரூபாயாவது தேவைப்படும். என் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாத  என் அப்பா இரண்டு ரூபாய் கொடுத்தார். இது சற்று பெரிய தொகைதான். வேறு ஏதோ செலவைக் குறைத்துக் கொண்டு தான் அப்பா கொடுத்திருக்கிறார்.

January 01, 2010

அன்புள்ள டில்லி --3


           அந்தப் பெண் எம்.பி. எங்களைக் காலி செய்யச் சொன்னது ஏன் என்பதைச் சொல்வதற்கு முன்  வேறு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
அந்தப் பெண் எம்.பி.யின் வீட்டுக்கு வந்த பல பிரமுகர்களில் ஒருவர், ஒரு மகாராஷ்டிர மாநில எம்.பி.  தன்னுடைய தமிழ் மாஸ்டர்ஜி என்று என்னை செல்வி அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அவருடன் நான் ஆங்கிலத்தில் உரையாடுவது உண்டு.. என்னுடைய ஆங்கிலப் புலமை அவரைக் கவர்ந்து விட்டது. ஆகவே ஒரு நாள், "எனக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர முடியுமா?'' என்று கேட்டார்.
அவர் மகாராஷ்டிராவில் ஒரு மிகப் பெரிய பிரமுகர். எதிர்க் கட்சியின் தலைவராக இருந்தவர், அசெம்பிளியில் பின்னால் காங்கிரஸிற்கு வந்தார். இவரது மாப்பிள்ளை சில வருடங்கள் கழித்து பம்பாய் முதலமைச்சர் ஆனார்.
அவருக்கு இங்கிலீஷ் ட்யூஷன் சொல்லித் தர ஒத்துக் கொண்டேன். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாடல், டிக்டேஷன் போன்று பாடங்கள். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் நிறையத் தவறுகள் ஏற்பட்டு விடும். அவருடைய வீக் பாயிண்டுகளைக் கண்டுபிடித்து அக்கறையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தேன். என் மேல் அபார மதிப்பும் பிடிப்பும் எற்பட்டு விட்டது.

டெய்லி ரேட்
சுமார் மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். "கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது'' என்றேன்.
"அடேடே, உங்களுக்கு பீஸ் கொடுக்கவே மறந்து விட்டேனே... முன்னேயே ஏன் கேட்கக் கூடாது?'' என்று சொல்லிக் கொண்டே தன் ப்ரீஃப் கேஸைத் திறந்தார். அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தார். சுமார் ஐந்து நிமிஷம் என் பொறுமையைச் சோதித்து விட்டுச் சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ஷாக் அடித்தது!

கேரக்டர்: மாரிமுத்து -- கடுகு

          கோடம்பாக்கம் ஒவர்பிரிட்ஜ் கைப்பிடி சுவரில் அமர்ந்திருக்கும் ஏழு ஆசாமிகளில் நடுநாயகமாக இருப்பவரைக் கவனியுங்கள். அவர் தான் சினிமா ரசிகர் மாரிமுத்து!

கண்ணைப் பறிக்கும் சிவப்பு சாட்டின் சட்டை, லுங்கி, பஞ்சாபி சப்பல், படியாத கிராப்பு, கழுத்தில் மைனர் செயின் (பித்தளை தான்),  வாயில் வெற்றிலைப் பாக்கு, பன்னீர் புகையிலை-- இதுதான் மாரிமுத்து..
அரண்மனைக்காரத் தெருவில் வாட்ச்மேன். ஆகவே பகலெல்லாம் ஐயா ப்ரீ!தூங்கி ரெஸ்ட் எடுப்பதைவிடப் பாலத்தின் மேல் உட்கார்ந்து காரில் போகும், வரும் சினிமா நட்சத்திரங்களைப் பார்ப்பதும், அவர்களைப் பற்றி கிசுகிசு செய்திகளை உற்சாகமாக அரட்டை அடிப்பதும் தான் அவருக்கு பொழுது போக்கு, ஓய்வு எல்லாம்!
இடது கையில் பெரிய ரிஸ்ட்  வாட்ச் கட்டியிருக்கிறாரே, அது மூர் மார்க்கெட்டில் வாங்கியது. விலை முப்பது ரூபாய். பார்க்கப் பிரமாதமாக இருக்கும். அவ்வப்போது உதறினால் தான் ஓடும்! இதன் காரணமாக கையை அடிக்கடி உதறும் பழக்கமே வந்து விட்டது மாரிமுத்துவிற்கு!