April 16, 2013

பழமொழி விளக்கம் -கடுகு

நமது பழமொழிகளில் பல, வழக்கில் உருவம் மாறிவிட்டுள்ளன,
சிலவற்றைத் தவறான பொருளில் உபயோகிக்கிறோம். செம்மொழிக்குச் செய்யும் பணியாக ஒரு சில பழமொழிகளுக்கு ’சரியான’ விளக்கம் இங்கு தரப்படுகிறது


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


 இந்தப் பழமொழியைத் தோற்றுவித்தவர்  தனவந்த்ரி என்ற வைத்திய நிபுணர் என்பது ஆராய்ச்சியில் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பல டாக்டர்கள் இந்தப் பழமொழியை அறிந்து வைத்திருப்பதுடன், அவர்கள் பெரிய கார்கள், பங்களா, டி.வி, போன்ற பல வசதிகளுடன் வாழ்வதிலிருந்தும் தெரிவதாவது: இந்தப் பழமொழியின் உண்மையான உருவம், நோயுற்ற வாழ்வேு குறைவற்ற செல்வம்.மக்களுக்கு நோய் ஏற்பட்டால், டாக்டர்களுக்கு நல்ல வருவாய்!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
\

இதைப் போல் தவறான பழமொழி எதுவும் இருக்கமுடியாது. அம்மியைப் போய் யாராவது அடிப்பார்களா? அடியின் வலி தாங்காது அது நகர்ந்து போகுமா?அம்மியை நகர்த்த வேண்டுமென்றால் அதைத் தூக்கி வைத்தால் ஆயிற்று. அதை போய் அடிப்பானேன்? அது என்ன பாவம் பண்ணிற்று? சரியான பழமொழி என்ன தெரியுமா?
அடி மேல் அடி அடித்தால் அம்மாமியும் நகர்வாள். கொடுமைபப்டுத்தும் மாமியாரை ஊருக்கு எப்படி அனுப்புவதாம். என்ன கேட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக் கொண்டே இருந்தால் ”போதுமடா சாமி” என்று சொல்லி ஊருக்குக் கிள்ம்பிப் போய் விடுவார்!  யாரோ ஒரு கெட்டிக்கார நாட்டுப்பெண் கண்டுபிடித்த பழமொழி அல்லது சூத்திரம் இது,

 சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

சங்கு என்பது ஊதுவதற்காகவே அமைந்தது. அதை ஊதினால் எப்படிக் கெட்டுப் போகும்? மேலும் ஆண்டிகள் சங்கு  ஊதி பிழப்பை நடத்துகிறவர்கள், அவர்களுக்கா  சங்கு ஊதத் தெரியாது? ’சும்மா இருந்த சங்கை’ என்றால் என்ன அர்த்தம்?  சங்கு சும்மா இல்லாமல் ஓடி ஆடி ‘ஐஸ்பாய்’ விளையாடிக் கொண்டிருக்குமா, என்ன?
இந்த பழமொழியின் சரியான  உருவம்  ”சும்மா இருந்த சங்கை ஊதி கொடுத்தான் ஆண்டி” என்பது தான்!

ஆண்டி சங்குக் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வந்து சங்கு வாங்குபவர்களுக்கு. சங்கை ஊதிக்காட்டிக் கொடுக்கிறான். இது தான் உண்மையான கருத்து.

காற்றுள்ளபோதே தூற்று
இது சரியான அபத்தப் பழமொழி. நமக்குக் கோபம் வரும்போது தூற்றிப் பேசக்கூடாது. இதற்காக காற்று வரும்வரை காத்திருக்க வேண்டுமா? அதற்குள் கோபம் ஆறிவிடாதா? அது மட்டுமில்லை, அவர் யாரைத் தூற்ற வேண்டுமோ அந்த ஆசாமி பேசாமல் காத்திருப்பாரா?

இதற்குச் சரியான விளக்கம். காற்று = மூச்சு. ஒருவனை தூற்றவேண்டுமானால் அவனுக்கு மூச்சு உள்ளபோதே அவனைத் தூற்றிவிடு. அவனுடைய  மூச்சு போன பிறகுத் திட்டி லாபமில்லை: பண்புமில்லை!

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
ஏதோ கழுதையை இகழ்ந்து கூறுவதாக நினைக்க வேண்டாம். “ நல்ல கற்பூரம் தானா?  பார்த்து சொல்” என்று கழுதையிடம் கேட்பவன் அடி முட்டாள் .கற்பூர வாசனை அதற்குத் தெரியாது என்பதை அறியாதவன் வடிகட்டின ஆசாமியாகத்தான் இருக்க வேண்டும். 
மேலும் அது என்ன ஆறு கால பூஜை செய்து கற்பூர ஆரத்தி எடுக்கிறதா? இந்தப் பழமொழியின் முழு வாசகம்”: அட முட்டாளே. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?  கழுதையிடம் கேட்பவனைப் பார்த்துச் சொல்வது.

 
தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே.

 பார்த்தால் என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா? பார்ப்பது அநாகரீகம் என்ற பொருளில் அது கூறப்படவில் ஆபத்துதான் என்பதுதான் உண்மையான கருத்து,


 தானமாகப் பெற்ற மாட்டை, தானம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க. அதன் வாயைத்திறந்து பல்லைப் பிடித்தால் அது சும்மா இருக்குமா? வெடுக்கென்று கடிக்கலாம்: அல்லது முட்டி விட்ம். ஆக, இந்த பழமொழி ஒரு எச்சரிக்கை வாசகம். அவ்வளவுதான்!

8 comments:

  1. நல்ல விளக்கம். காலையில் படித்து ரசித்தேன்!

    ReplyDelete
  2. நகைச்சுவை தாளிப்பு அருமை. மாடு கடி,கழுதை உதை இரண்டும் அன்பவித்தவர் எழுதின மொழியாக இருக்கும் அந்தப் பழமொழிகள்:)
    நன்றி கடுகு சார்,

    ReplyDelete
  3. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

    I heard, in olden days, the camphor will be kept with books in order to avoid worms/insects. A donkey, who is busy in eating, won't look for camphor smell.


    தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே.

    Age of cow & horse will be identified based on their teeth row only. So, do not check for age of the cow, which is given to you for free.

    ReplyDelete
  4. அம்மியை அடித்தல், ஆண்டி ஊதிய சங்கு, நோயுற்ற வாழ்வே... எல்லாப் பழமொழிகளுக்கும் அருமையான விளக்கம் தந்து அசத்திட்டீங்க! ரசிக்கவும் வெச்சுட்டீங்க ஸார்!

    ReplyDelete
  5. Thoodtrudhal' also means a kind of winnowing for seoarating the grain from the chaff and needs strong air to blow away the lighter chaff

    ReplyDelete
  6. <>
    Yes, I know that. The article was meant to give twisted explanation and interpretations to the proverbs!" =Kadugu

    ReplyDelete
  7. Madhav22 April 2013 5:38 pm

    IS this comedy are serious ?

    aha.. this is comedy. i am relling you seriously! -kadugu

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!