April 10, 2013

மகளும் பெற்றோரும்— இரண்டு செய்திகள்


1, ஜீவிகா
 விஜய் டி.வியில் வெல்லலாம் ஒரு கோடி ஷோவில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றவர் ஜீவிகா.
 
போட்டி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும்  மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
தான் வென்ற 25 லட்ச ரூபாய் செக்கையும், உறவினர் பெண்ணைக் கூப்பிட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னார் – அந்த பெண்ணின் படிப்பிற்காக!
“அப்பா, அம்மாவிடம் பணம் வாங்கி கொண்டால் கூட செக் கொடுத்து விட்டுத்தான் வாங்கிக் கொள்வேன்” என்று கூறிச் சிலிர்க்கச் செய்தார்..

பாராட்டுகள், ஜீவிகா! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்!

2. மார்ச் 28’ம் தேதி ‘ஹிந்து’ வில் வந்த வாழ்த்து விளம்பரம்  இதுவும் ஒரு பெண், அவளுடைய பெற்றோர் தொடர்பானது
 

சங்கரலக்ஷ்மி, 2011 வருடம்  B.E யில் தங்கப் பதக்கம்; 2013-ல்  M.E யில் தங்கப் பதக்கம் பெற்றார்.!
பெற்றோர்  செல்லா சுந்தரம், சுந்தரம் தங்கள் பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.. 
பார்க்க: படத்தை! 

பாராட்டுகள், சங்கரலக்ஷ்மி! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்

4 comments:

  1. பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்த இரண்டு முத்துக்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ‘ஈன்‌ற பொழுதின்’ என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டான பெண்கள்! அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. சிறப்பான இரண்டு பெண்களைப் பற்றிய தகவல்கள் நன்று.

    ReplyDelete
  3. அந்த பெண்களுக்கும் அவர்களை பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.- ஜெ.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!