March 01, 2013

அன்புடையீர்,
வணக்கம்.
சமீபத்தில் வந்த ஒரு பின்னூட்டத்தைப் படியுங்கள்.
” சார்.. உங்களுக்கு ஒரு சின்ன யோசனை கூற விரும்புகிறேன்.  பின்னூட்டம் போடுவதற்குச் சில நிபந்தனைகளை பல பதிவர்கள்  வைத்திருக்கிறார்கள். பெயர், ஈ-மெயில் விவரங்கள் முதலியவற்றைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று. இதன் மூலமாமாக சர்வ வல்லமை  பொருந்திய ‘அனானிமஸ்’ பின்னூட்டம் போடுவது  தடுக்கப்படுகிறது.

ஒரு பதிவர், பதிவை எழுதி, அச்சடித்து, தேவையான படங்களைச் சேர்த்துப் பிரசுரிக்கிறார்.  பதிவைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது வாசகர் ஏன் பெயரில்லாமல் எழுதவேண்டும்?  இது பதிவர்க்குச் செய்யும் அவமரியாதை என்று கருதுகிறேன். ஒருக்கால் பதிவைப் பற்றி காரமான கருத்தை  தெரிவிக்கும் வேண்டுமானால். அப்போது பெயரை வெளியிடத் தயக்கம் இருக்கக்கூடும். அந்த சமயத்தில் ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ளலாம்.  இது பற்றி பதிவர்கள் சேர்ந்து, அனானிமஸ் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும் என்றுஒரு முடிவு எடுக்க வேண்டும்: !”

இந்த அன்பருக்கும் தாளிப்பு வாசகர்களுக்கும் அன்புடன் ஒரு அறிவிப்பு:   வாசகரின் யோசனையை ஏற்கிறேன். இனி  with immediate effect 'கடுகு தாளிப்பு' வில் ‘அனானிமஸ்’ பின்னூட்டங்கள் பிரசுரமாகாது
-கடுகு

7 comments:

  1. இப்படியும் செய்யலாம்...

    Settings--->Post and Commands-->Who can comment---> (select) Register User - includes OpenID

    PROBLEM SOLVED

    நன்றி...

    ReplyDelete
  2. மிகவும் சரிதான். பாராட்டினாலும் சரி, திட்டினாலும் சரி... அதைத் தன் பெயரிலேயே செய்யலாமே. படிப்பவருக்கு இரண்டுக்கும் உரிமை உண்டு. எதற்கு ‘பெயரில்லா’வாக வரவேண்டும்? உங்க முடிவு சரிதான் ஸார்!

    ReplyDelete
  3. நல்ல முடிவு. ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? பதிவர்களில் முக்கால்வாசிப்பேர் முகமூடிக்குள்தான் (புனைபெயர்) ஒளிந்திருக்கிறார்கள். அதற்கும் அனானிமஸ் க்கும் என்ன வித்தியாசம்? ஏன் இந்த பாரபட்சம்?

    ReplyDelete
  4. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,
    அப்படி செய்வது வாசககரின் I.D கேட்பது மாதிரி ஆகிவிடுகிறது என்பது என் கருத்து. - கடுகு

    ReplyDelete
  5. அனானிமஸ் பின்னூட்டம் தவிர்க்கப்பட்டது நல்ல காரியம். சமீபத்தில் எங்கள் ப்ளாக்கிலும் இது செயல் படுத்தப் பட்டுள்ளது. பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் அனானி அண்ணாக்கள் வந்து ஏதேதோ விளம்பரம் செய்வது போலவும், லிங்க் கொடுத்தும் படுத்திக் கொண்டிருந்ததால்!

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!