May 18, 2013

sound of music நையாண்டிகள்

Sound of music  நையாண்டிகள் 


பிரபலமான பாடல்களையும் அதே ட்யூனில் கிட்டதட்ட அதே மாதிரி வார்த்தைகளைப் போட்டு, நையாண்டி பாடல்கள் எழுதுவது எல்லா நாட்டிலுமம் மொழியிலும் உண்டு.  SOUND OF MUSIC  பாடல்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்பே ஒரு பதிவில் போட்டிருக்கிறேன்.
சமீபத்தில்    NEW YORK TIMES   தினசரியின் பழைய இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ’வார இறுதி வார்த்தை விளையாட்டு’ என்ற சுவையான பகுதி கண்ணில் பட்டது. சுமார் 100 வாரங்கள் வந்திருந்தது.
அதில்  ஒரு வாரம் SOUND OF MUSIC  படத்தில் வந்த - These are a few of my favorite things பாடலைப் பின்பற்றி  எழுதச் சொல்லி இருந்தார்கள்.  2 25 பேர் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.




இதுதான் படத்தில் வந்த பாடல். 
YOU TUBEல்  பாடலைக் கேட்க இங்கு கிளிக் செய்யவும்.  கேட்டு விட்டு மீதியைப் படியுங்கள். நன்கு ரசிக்க முடியும்

 Raindrops on roses and whiskers on kittens
Bright copper kettles and warm woolen mittens
Brown paper packages tied up with strings
These are a few of my favorite things

Cream colored ponies and crisp apple streudels
Doorbells and sleigh bells and schnitzel with noodles
Wild geese that fly with the moon on their wings
     These are a few of my favorite things

Girls in white dresses with blue satin sashes
Snowflakes that stay on my nose and eyelashes
Silver white winters that melt into springs
These are a few of my favorite things

When the dog bites
When the bee stings
When I'm feeling sad
I simply remember my favorite things
And then I don't feel so bad


.===============
 1.
Wet snow for packing in snowballs and tossing
Clean snow that covers the world in white frosting
Powder for sledding fast as you can go
These are a few of the good types of snow
When the cars turn
All the snow gray
And it turns to slush
I simply remember it might snow again
And then I don't mind so much.
2
Letters in longhand and faces not lifted,
Children just pleasantly bright, but not "gifted,"
Cell phones quite tuneless with old-fashioned rings:
These are a few of my favorite things.
Hot dogs from street carts and sesame noodles,
Unbottled water and unsculpted poodles,
Taxis sans TVs with strong back seat springs:
These are a few of my favorite things.
When the car stalls; when the train's late--
When I feel annoyed,
I simply remember my favorite thing:
It's that I'm not unemployed!

May 12, 2013

ஆசிரியர் சாவி - காட்டூனிஸ்ட் நடனம்



அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை 2013 ஆண்டுக்கான நகைச்சுவைப் பதக்கத்தை கார்ட்டூனிஸ்ட் நடனம் அவர்களுக்கு அளித்துக் கௌரவித்தது..
அத்துடன் சாவி இரண்டாம் நினைவு சொற்பொழிவையும் நடத்தியது. இந்த பதிவில் நடனம் அவர்களைப் பற்றியும் சாவி அவர்களைப் பற்றியும் சிறு குறிப்புகள்!

சாவி
ஆசிரியர் சாவி அழகான நாய் ஒன்றை வளர்த்து வந்தார். எப்போதும் எதையும் வித்தியாசமாகச் செய்ய ஆசைப்படும் அவர், தன் நாய்க்கு முனிர் என்று பெயர் வைத்திருந்தார், ( மரியாதைக்குரிய முனியசாமி??)
ஒரு சமயம் அவரைப் பார்க்க அவர் வீட்டிற்கு காலை வேளை போயிருந்தேன். அவருடைய அறையில், தரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது பக்கத்து அறையிலிருந்த முனிர் வாலை ஆட்டிக் கொண்டு உள்ளே வந்தது, அதைச் செல்லமாகத் தடவியபடியே என்னிடம் சொன்னார்: பாருங்களேன்.. இப்ப உங்களுக்கு ஒரு வேடிக்கைக் காட்டப் போகிறேன். ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருங்கள்”: என்றார்.
தொடர்ந்து  அவர் தன் பிள்ளை பாச்சாவை உரத்த குரலில் கூப்பிட்டார்.
 
”இந்த பாச்சா, மறக்காம கெட்டிச் சட்னி
வாங்கிண்டு வரணுமே”


பாச்சா வந்ததும்  "பாச்சா, ஒரு காரியம் செய்யறயாநேரே மியுசிக் அகாடமி கான்டீனுக்குப் போய் நாலு இட்லி, நாலு வடை, பொங்கல் வாங்கிண்டு வா" என்றார்.  சரி” என்று சொல்லிவிட்டு, பாச்சா கிளம்பி போய்விட்டார்.

May 05, 2013

புஷ்பா தங்கதுரையும் நானும்

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீவேணுகோபாலனை (அல்லது ஸ்ரீவேணுகோபாலன் என்னும் புஷ்பா தங்கதுரையை நான் சென்னை ஜி.பி..-வில் 50-களில் வேலைக்குச் சேர்ந்த பிறகு சந்தித்தேன். அதே அலுவலகத்தில் இருந்த அவரை சந்தித்தபோது  ஓரளவு பிரபலமான எழுத்தாளராகவே இருந்தார்,

அமுதசுரபியில் கனமான கதைகள் எழுதிவந்தார். ஒரு ரயில் எஞ்சின் டிரைவரைப் பற்றி அவர் எழுதிய கதையைப் படித்து அசந்து விட்டேன். அந்த கால கட்டத்தில் நான் ஒரு எழுத்து ரசிகன். எழுத்தாளன் ஆகும் ஆர்வமும் இருந்தது என்று சொல்லலாம். அதைவிட எழுத்தாளர்களைச் சந்திக்கவும் அவர்களுடைய அறிமுகம் பெறவும் அதிக ஆர்வம் இருந்தது. ஸ்ரீவேணுகோபாலன் துவக்க காலங்களில் எழுதிய கதைகளின்  நடையும் அழுத்தமும் வெகுவாகக் கவர்ந்து விட்டன. இப்படியெல்லாம் கோர்வையாக,, அழகானப் பதப்பிரயோகங்களுடன் நமக்கு எழுத வருமா என்ற அச்சம்தான் ஏற்படும். போதாதற்கு அவர் அழகான பாடல்களும் ’பூங்குயில்’ என்ற பெயரில் எழுதுவார். 

பத்திரிகைகளில் நான் எழுதவில்லையே தவிர ஜி,பி, ஓ, வில் நாடகங்கள் எழுதிப் போட்டிருக்கிறேன், ஒரு நாடகத்திற்கு பாட்டு எழுதித் தரும்படி கேட்டேன், (அவருடன் தொடர்பு வைத்திருக்க!) 
பிறகு வேறொரு நாடகத்திற்கு டான்ஸ் டைரக்டராக, அவரும், நானும்(!) சேர்ந்து பணியாற்றினோம்!
இந்த கால கட்டத்தில் சென்னையிலிருந்து டில்லிக்கு மாற்றலாகிச் சென்று விட்டேன். இருந்தாலும் கடிதத்தொடர்பு வைத்திருந்தேன். 

April 29, 2013

சகுந்தலா தேவி

கம்ப்யூட்டரையே கணிதத்தில் வென்றவர் சகுந்தலா தேவி. 
 சமீபத்தில் காலமானார்.,

தன் ‘அபூர்வ’ சக்தியால் உலகப் புகழ் பெற்ற இவரைiக் கணக்குப் புலி என்றோ, கணித மேதை என்றோ, பிராடிஜி  என்றோ கூற முடியாது.அவரிடம் ஒரு அதிசய சக்தி இருந்தது. அது இறைவன் கொடுத்த அபூர்வத் திறமை. பெரியபெரிய எண்களைப் பெருக்குவது, வர்க்க மூலம், (ஸ்கொயர் ரூட். க்யூப்ரூட், கண்டு பிடிப்பது போன்ற திறமை இருந்தது.

சுமார் 40 வருஷத்திற்கு முன்பு அவரைச் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் சகஜமாகப் பேசினார்.

அவரிடம், “  பெரிய பெரிய கணக்குகளை கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களால் எப்படி . போட முடிகிறது?  அந்த சமயங்களில் ஏதாவது ஆழ்மனதில் யோசிக்கிறீர்களா ? உங்களுக்கே உங்கள் திறமையைக் கண்டு வியப்பு ஏற்படுகிறதா?” என்றெல்லாம் கேட்டேன்.

“ எனக்கு விடை தெரிகிறது, சொல்கிறேன். எப்படி தெரிகிறது என்பதை என்னாலேயே  விளக்க முடியாது.  ... சரி.. உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்... 17-ஐயையும் 18-ஐயையும் கூட்டினால் என்ன வரும்?”என்று கேட்டார்.

நான் உடனே  “35”என்றேன்..

“ சரி.. எப்படி இவ்வளவு சீக்கிரம் சொன்னீர்கள்? மனதிற்குள் கூட்டிப் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.

 ” இல்லை..இது என்ன பெரிய கணக்கு.. கூட்டாமலேயே எனக்கு விடைதெரியும்” என்றேன்


“ அதாவது உங்கள் மூளை எப்படிக் கூட்டியது என்று உங்களுக்குத் தெரியாது. அது மாதிரிதான் எனக்கும்.. மனதில் வரிசையாக எண்கள் தெரிகிறது” என்றார்.

“ நீங்கள் தூங்கும்போது கனவு காண்பதுண்டா?” என்று கேட்டேன்.

“ ஏன், காண்பதுண்டு. எல்லா விதத்தில்லும் நான் சாதாரணமானவள்தான்... இந்தத்  திறமை எப்படி எனக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.. இப்படி அதிசயத் திறமை உள்ளவர்கள் பலர் பல நாடுகளில் இருந்துள்ளார்கள்” என்றார்.

( அவரது பேட்டியைக்  குமுதத்தில் நான் எழுதினேன்)’

April 23, 2013

லால்குடி ஜெயராமன்

 திரு லால்குடி ஜெயராமன் காலமாகி விட்டார்.  அவர் என் நண்பர். அவருக்கு நான் நண்பன்.   அவர் சிறந்த  கலைஞர். நகைச்சுவையாளர். சிலேடை விரும்பி. சுமார் 35 வருஷத்திற்கு முன்பு அவர் என் வீட்டிற்கு வந்து என்னக்  கௌரவப்படுத்தி இருக்கிறார். ( ’கர்வப்படுத்தி இருக்கிறார்’  என்று  சொன்னாலும் தப்பு இல்லை!)    அவருக்கு என் அஞ்சலி.
-------------------------------------------------
’என் அன்புள்ள டில்லி’ தொடரில் எழுதியதை மீள்பதிவு செய்கிறேன்.
                                                     
நான்தான் ’லால்'
டில்லியில் உள்ள சங்கீத சபாக்கள் வருஷத்தில் ஐந்தாறு நிகழ்ச்சிகளை நடத்தும். அதற்கு மேல் நடத்தக் கட்டுப்படி ஆகாது.
இந்த சபா நிகழ்ச்சிகளிலும், ஜுகல் பந்தி போன்ற நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்பவர்களில் ஒருவர் லால்குடி ஜெயராமன். ஒரு சமயம் மாதம் இரண்டு தடவைகூட வந்திருக்கிறார். இதைக் குறிப்பிட்டு நான் பத்திரிகையில் எழுதியிருந்தேன். "டில்லிக்கு லால் என்றால் ஒரு ஈடுபாடு உண்டு போலும். ஜவஹர்-லால், குல்ஜாரி-லால், லால்-பகதூர் ஆகியவர்கள் மாதிரி லால்-குடியும் டில்லியில் ஆட்சி புரிகிறார் இசை ரசிகர்களை'' என்று எழுதியிருந்தேன்.

சில நாள் கழித்து ஒரு காலை நேரத்தில் எனக்குப் போன் வந்தது. என் மனைவி கமலா போனை எடுத்தாள். மறுமுனையிலிருந்த குரல், "ஹலோ, நான் லால் பேசறேன்' என்று சொன்னது குரல்.கமலாவிற்குப் புரியவில்லை. "நீங்க யாரு? யார் வேண்டும்?'' என்று கேட்டாள்.
"நான் லால்குடி ஜெயராமன் பேசுகிறேன். அவருடன் பேச வேண்டும்'' என்றார்.
"ஓ... லால்குடி சாரா? நமஸ்காரம்.  நமஸ்காரம் அவர் பாத்ரூ... இல்லை... இல்லை இதோ கூப்பிடுகிறேன்'' என்றாள் கமலா.


லால்குடியுடன் நான் பேசினேன்.  அவர் ” சார், உங்களைப் பார்க்க வேண்டும். நான் உங்கள் விசிறி. உங்கள் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.  உங்களுக்கு எப்போது   சௌகரியப்படும்?'' என்று கேட்டார்..

எனக்குத் தலைகால் புரியவில்லை. உலகமே என் எழுத்தைப் பாராட்டிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். அட, உண்மையாகவே என் எழுத்திற்கு ஒரு விசிறி கிடைத்து விட்டார்.!

April 16, 2013

பழமொழி விளக்கம் -கடுகு

நமது பழமொழிகளில் பல, வழக்கில் உருவம் மாறிவிட்டுள்ளன,
சிலவற்றைத் தவறான பொருளில் உபயோகிக்கிறோம். செம்மொழிக்குச் செய்யும் பணியாக ஒரு சில பழமொழிகளுக்கு ’சரியான’ விளக்கம் இங்கு தரப்படுகிறது


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


 இந்தப் பழமொழியைத் தோற்றுவித்தவர்  தனவந்த்ரி என்ற வைத்திய நிபுணர் என்பது ஆராய்ச்சியில் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பல டாக்டர்கள் இந்தப் பழமொழியை அறிந்து வைத்திருப்பதுடன், அவர்கள் பெரிய கார்கள், பங்களா, டி.வி, போன்ற பல வசதிகளுடன் வாழ்வதிலிருந்தும் தெரிவதாவது: இந்தப் பழமொழியின் உண்மையான உருவம், நோயுற்ற வாழ்வேு குறைவற்ற செல்வம்.மக்களுக்கு நோய் ஏற்பட்டால், டாக்டர்களுக்கு நல்ல வருவாய்!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
\

இதைப் போல் தவறான பழமொழி எதுவும் இருக்கமுடியாது. அம்மியைப் போய் யாராவது அடிப்பார்களா? அடியின் வலி தாங்காது அது நகர்ந்து போகுமா?அம்மியை நகர்த்த வேண்டுமென்றால் அதைத் தூக்கி வைத்தால் ஆயிற்று. அதை போய் அடிப்பானேன்? அது என்ன பாவம் பண்ணிற்று? சரியான பழமொழி என்ன தெரியுமா?
அடி மேல் அடி அடித்தால் அம்மாமியும் நகர்வாள். கொடுமைபப்டுத்தும் மாமியாரை ஊருக்கு எப்படி அனுப்புவதாம். என்ன கேட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக் கொண்டே இருந்தால் ”போதுமடா சாமி” என்று சொல்லி ஊருக்குக் கிள்ம்பிப் போய் விடுவார்!  யாரோ ஒரு கெட்டிக்கார நாட்டுப்பெண் கண்டுபிடித்த பழமொழி அல்லது சூத்திரம் இது,

 சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

சங்கு என்பது ஊதுவதற்காகவே அமைந்தது. அதை ஊதினால் எப்படிக் கெட்டுப் போகும்? மேலும் ஆண்டிகள் சங்கு  ஊதி பிழப்பை நடத்துகிறவர்கள், அவர்களுக்கா  சங்கு ஊதத் தெரியாது? ’சும்மா இருந்த சங்கை’ என்றால் என்ன அர்த்தம்?  சங்கு சும்மா இல்லாமல் ஓடி ஆடி ‘ஐஸ்பாய்’ விளையாடிக் கொண்டிருக்குமா, என்ன?
இந்த பழமொழியின் சரியான  உருவம்  ”சும்மா இருந்த சங்கை ஊதி கொடுத்தான் ஆண்டி” என்பது தான்!

ஆண்டி சங்குக் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வந்து சங்கு வாங்குபவர்களுக்கு. சங்கை ஊதிக்காட்டிக் கொடுக்கிறான். இது தான் உண்மையான கருத்து.

April 10, 2013

மகளும் பெற்றோரும்— இரண்டு செய்திகள்


1, ஜீவிகா
 விஜய் டி.வியில் வெல்லலாம் ஒரு கோடி ஷோவில் மார்ச் மாதத்தில் ஒரு நாள் 25 லட்சம் ரூபாய் பரிசு வென்றவர் ஜீவிகா.
 
போட்டி ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும்  மிகவும் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார்.
தான் வென்ற 25 லட்ச ரூபாய் செக்கையும், உறவினர் பெண்ணைக் கூப்பிட்டுப் பெற்றுக் கொள்ளச் சொன்னார் – அந்த பெண்ணின் படிப்பிற்காக!
“அப்பா, அம்மாவிடம் பணம் வாங்கி கொண்டால் கூட செக் கொடுத்து விட்டுத்தான் வாங்கிக் கொள்வேன்” என்று கூறிச் சிலிர்க்கச் செய்தார்..

பாராட்டுகள், ஜீவிகா! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்!

2. மார்ச் 28’ம் தேதி ‘ஹிந்து’ வில் வந்த வாழ்த்து விளம்பரம்  இதுவும் ஒரு பெண், அவளுடைய பெற்றோர் தொடர்பானது
 

சங்கரலக்ஷ்மி, 2011 வருடம்  B.E யில் தங்கப் பதக்கம்; 2013-ல்  M.E யில் தங்கப் பதக்கம் பெற்றார்.!
பெற்றோர்  செல்லா சுந்தரம், சுந்தரம் தங்கள் பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.. 
பார்க்க: படத்தை! 

பாராட்டுகள், சங்கரலக்ஷ்மி! பெற்றோருக்குப் பெருமை சேர்த்தீர்கள்

April 06, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 3


  சித்ராவுக்கு டானிக், வைட்டமின் என்று பலவற்றை வாங்கி வந்தான் சிவா.
    ஆஸ்பத்திரியில் பெயரை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்தாள் சித்ரா.
    பேபி பவுடர், ஃபீடிங் பாட்டில், நாப்கின் என்று பல பொருள்களை வாங்கினார்கள்.
    "தொட்டில் வாங்க வேண்டாமா?''
    "சித்ரா, தொட்டில் போட இடம் இல்லையே?''
    "தூளியில் போட்டால் என் செல்ல ராஜா நன்றாகப் புரண்டு தூங்க முடியாதே!''
    "செல்லராஜா இல்லை, செல்லதுரை.''
    "ஆமாம்... திடீர் என்று ராத்திரியில் நோவு எடுத்தால் எப்படி ஆஸ்பத்திரிக்குப் போகிறது?''
    "தெருக்கோடி டாக்ஸி ஸ்டாண்டு சர்தார்ஜியிடம் சொன்னேன். அவன் வீட்டு அட்ரஸையும் வாங்கி வந்திருக்கிறேன். நல்ல மனிதன். "நீ எப்போது வந்து குரல் கொடுத்தாலும் வண்டியை எடுத்துக் கொண்டு வரேன்' என்று சொல்லி இருக்கிறான்... ஆமாம்... சித்ரா... உன் வாய்க்குப் பிடிச்சதைப் பண்ணிப் போட ஆள் இல்லையே!''
    "நீங்க ஒருவர் அன்பாக இருக்கிறபோது எனக்கு வேறு எதுவுமே வேண்டாம்! அண்ணாவுக்கு லீவு கிடைக்கலியாம்.''
    "சித்ரா, நான் அடுத்த வாரத்திலிருந்து லீவு போட்டு விடுகிறேன். உனக்கு ஹெல்ப் பண்ண''
    "இன்னும் இரண்டு மாசம் கழிச்சுதான் குவா, குவா. அதற்கப்புறம் இரண்டு மூன்று மாசம் தான் முக்கியம். அப்போது லீவு போட்டால் நல்லது. அம்மாடி... பாருங்களேன், வயிற்றில் உதைக்கிறான் உங்கள் செல்வம்.''
    "ஏண்டா, சுட்டிப் பயலே. அம்மாவைத் தொந்தரவா பண்றே?'' என்று சித்ராவின் வயிற்றைப் பார்த்துச் சொல்லி, மெள்ளமாகத் தட்டினான்.
    "அவனை ஏதாவது அடித்தீர்கள் என்றால் எனக்கு ரொம்பக் கோவம் வரும்!''
    "சித்ரா. உனக்குக் கோபம் வந்தே நான் பார்த்ததில்லை'' என்று கூறியபடியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.


April 03, 2013

இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

 இரண்டு சிட்டுக்குருவிகள் - பாகம் 2

"ஹலோ... நமஸ்தே... ஐ மீன், குட்மார்னிங்... மிஸ்... சித்ரா'' என்றான் சிவா, லைப்ரரி "இஷ்யூ' டெஸ்க்கில் இருந்த சித்ராவைப் பார்த்து.
    ""உஷ்... உரக்கப் பேசக்கூடாது... இது லைப்ரரி... நமஸ்காரம். அன்றைக்குப் படம் முடிந்த பிறகு உங்களைப் பார்க்க முடியவில்லையே. உங்கள் போன் நம்பரைக் கேட்க வேண்டும் என்று அண்ணா சொன்னார்'' - கிசு கிசு குரலில் சித்ரா சொன்னாள்.
    ""மருந்து தானே? சொல்லியிருக்கிறேன். கிடைத்தவுடன் கொண்டு வந்து தருகிறேன்.''
    ""உஷ்... மறுபடியும் உரக்கப் பேசுகிறீர்கள்.''
    ""சாரி...  "சைலன்ட் மூவி"யில் பேசுகிற மாதிரி பேச வேண்டுமா?.. ஒன்றுமில்லை, அந்த லெட்டர்...''
    ""இதோ வைத்திருக்கிறேன்'' என்று சொல்லிச் சித்ரா டிராயரைத் திறந்து எடுத்துக் கொடுத்தாள்.
    "தாங்க்ஸ்...''
    அச்சமயம் வேறொரு பெண் அங்கு வந்து, ""சித்ரா நீ லஞ்சுக்குப் போ. நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள்.
    கைப் பையை எடுத்துக் கொண்டு சித்ரா புறப்பட்டாள். சிவா தயங்கியபடியே லைப்ரரியை விட்டு வெளியே வந்தான். சித்ராவும் வெளியே வருவதைப் பார்த்த, சிவா, பைத்தியக்கார இளிப்பை இளித்து வைத்தான்.
    "ஒன்றுமில்லை. அம்மா எழுதியிருந்த கடிதத்தை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பா வந்தது'' என்றான்.
    ""உம்.''
    ""நானும் லஞ்சுக்குத்தான் போகிறேன். "ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கான்டீனுக்கு, இஃப் யூ டோண்ட் மைண்ட், நீங்களும் வரலாம். கான்டீனில் போய் உட்கார்ந்து பேசலாம். ரொம்ப இன்டரஸ்டிங்காகப் பேசறீங்க...''


    அடுத்த அரைமணி நேரம். இருவரும் கான்டீனில் - இல்லை. அது ஒரு சின்ன சொர்க்க லோகம்! அவனைப் பொறுத்தவரை  -பல விஷயங்களைப் பேசினார்கள்.
    ""அம்மாவுக்கு ஊரைவிட்டு வருவதற்கு இஷ்டமில்லை. நான் இங்கே தனியாக ஓட்டலில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறேனாம்.''
    ”உம்''
    "இத்துடன் பத்து லெட்டர் போட்டு விட்டாள்.''
    ""கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லியா?''
    "ஆமாம்.''
    "செய்து கொள்வது தானே?''
    "நான் தயார். அவள்?''
    "அவள் யார்? உங்களுக்கென்ன குறை. மெடிகல் ரெப்ரசென்டேடிவ். சம்பளம், டி.ஏ., அது இது என்று வரும்... முக்கியமானது ஒண்ணு கேட்க மறந்துட்டேனே, வென்டாலினுக்காக எவ்வளவு பணம் தரணும்?''
    "இப்போது பணம் வேண்டாம். மருந்து கிடைச்சதும் கேட்டு வாங்கிக் கொள்கிறேன். உங்கள் மாமாவுடன்தான் இருக்கீங்களா?''
    "மாமா கிராமத்தில் இருக்கிறார். நானும் அண்ணாவும் தனியாகத்தான் இருக்கிறோம்.''
    "அப்படியா? காலையில் சமையல் வேலை. பகலில் லைப்ரரி ட்யூடி... மறுபடியும் ஈவினிங் சமையல், பாவம் ரொம்ப எக்ஸாஸ்டிங்!''
    "அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது ஒரு பெரிய பிராப்ளம் வந்திருக்கிறது''  சித்ராவின் முகத்தில் கவலையின் ரேகைகள் ஓடின.
    "என்ன விஷயம், சித்ரா?''
    "எங்க அண்ணாவுக்கு நேஃபாவிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது.''
    "உங்க அம்மா, அப்பா யாராவது இங்கு வரமாட்டார்களா?''
    ""இங்கு எப்படி வர முடியும்? இந்த உலகத்திலேயே அவங்க இல்லையே!'' þ சித்ராவின் கண்களில் இரண்டு முத்துக்கள்.
    "மை காட்... உங்க மனசை வருத்தப்படச் செய்துட்டேன்... உங்கள் பிரதர் நேஃபா போய்விட்டால்?''
    ""என்ன செய்வது என்று தெரியவில்லை.''
    "யார் வீட்டிலாவது பேயிங் கெஸ்ட்டாக இருக்கலாமே.''
    "நல்லவங்களாக இருக்கணும். நம்பிக்கையானவங்களாக இருக்கணும். எங்க அண்ணாவும் ஒரு சிலர் கிட்டே சொல்லியிருக்கிறார்.''
    ""நானும் யாராவது இருந்தால் சொல்கிறேன்.''

   

March 30, 2013

இரண்டு சிட்டுக் குருவிகள் -பாகம் 1

இரண்டு சிட்டுக் குருவிகள்   --- எழுதியது ???

    குளுகுளுவென்று முழுதும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அமெரிக்கன் லைப்ரரிக்குள் செல்லும் போது சிவாவுக்கு எப்போதும் கிளுகிளுவென்று இருக்கும். காரணம், அந்த லைப்ரரியில் பணியாற்றும் பல அழகிய பெண்களில் ஒருத்தி அவனது மனத்தைக் கவர்ந்தவள். அதாவது, அவனுக்கு அவள் மேல் ஒரு "இது!'  இத்தனைக்கும் அவளுடன் பேசியது கூடக் கிடையாது. அந்தப் புத்தகசாலைக்கு வரும் பல புத்தகப் புழுக்களில் அவனும் ஒரு புழு - அவனைப் பொறுத்தவரை.

    அவளது கவனத்தைக் கவருவதற்கு அவன் பல முயற்சிகள் செய்திருக்கிறான். அவள் ரெஃபரன்ஸ் டெஸ்க்கில் இருக்கும் போது வேண்டுமென்றே 'எஸ்கொயர் ஏப்ரல் 74 இஷ்யூ வேண்டுமே' என்பான். அல்லது ' வில்லியம் ஹாஸ்லிட் அப்ச்ன்' என்ற அமெரிக்க எழுத்தாளரின் விலாசத்தைக் கண்டுபிடித்துத் தரமுடியுமா?'' என்று கேட்பான்! இதுமாதிரி எத்தனையோ விசாரணைக்கள் வருவது சகஜமாதலால், அவள் பதில் சொல்லி விட்டுப் போவாளே தவிர, அவனை இரண்டாம் தடவையாகத் திரும்பிப் பார்த்ததில்லை.
    சிவாவுக்கு அன்றைய தினம் லைப்ரரி மாடிப்படி ஏறும்போது வழக்கமான கிளுகிளுப்புடன் சிறிது குறுகுறுப்பும் சேர்ந்து கொண்டது. ஏனெனில், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பத்து நாட்களுக்கு முன்பே திருப்பி இருக்க வேண்டும்! கவுண்டரில் "அவள்' இருந்தாள். (ஆமாம், "அவள்' பெயர் என்ன?)

இரண்டடி இடைவெளியில் அவளை நெருக்கமாகப் பார்க்க -அதாவது அவள் புத்தகத்தின் டிக்கட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது - அவளைக் கண்களால் ரசிக்க வாய்ப்பு கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சி வேறு உள்ளத்தில் ஊறியது.

    "ஐ யம் சாரி... டூர் போய்விட்டேன். அதனால்தான் லேட்டாகிவிட்டது...'' என்று குழைந்து கொண்டே சொன்னான், புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது.
    "தட் ஈஸ் ஆல்ரைட்... டூர் போகும் முன்பு புத்தகம் திருப்பிதர வேண்டிய தேதியைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போவது நல்லது.''
    அவனது லைப்ரரி டிக்கட்டைக் கொடுத்துவிட்டு, புத்தகங்களை அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டாள்.
    "எந்த ஊருக்கு டூர்? என்ன வேலை உங்களுக்கு?' என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராக இருந்தான் சிவா. ஆனால் அவள் கேட்டால் தானே!
    லைப்ரரியில் அரைமணி நேரம் இருந்துவிட்டு ஒரு பிரம்மாண்டமான புத்தகத்தை எடுத்தான். அதன் தலைப்பு கூட அவனுக்குப் புரியவில்லை. சும்மா அவளை "இம்ப்ரெஸ்' செய்வதற்காகத்தான்! கவுண்ட்டரில் அவன் போன போது, அவள் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

March 23, 2013

விளம்பர மாடல் அப்புசாமி

(ஒரு சமயம்,  நகைச்சுவை மலரைத் தயாரித்துத் தரும்படி ‘கல்கி’என்னைக் கேட்டுக் கொண்ட போது,  பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம். ராமசாமியிடம் ஒரு ’அப்புசாமி கதை' கேட்டேன். "ஆகட்டும் பார்க்கலாம்' என்று பாக்கியம் ராமசாமி சொன்னார். இதழ் அச்சுக்குப் போகும் தினம் வரை கதை வராததால் நானே, பாக்கியம் ராமசாமியின் பாணியில் ஒரு அப்புசாமி கதையை எழுதிவிட்டேன்.) 
விளம்பர மாடல் அப்புசாமி  
       மரவட்டை மாதிரி நன்றாகச் சுருட்டி படுத்துக் கொண்டு விடிகாலைத் தூக்கத்தை ரசித்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. அபாரமான கனவு.
 
      ராத்திரி வெகுநேரம் வரை தெருவோர விளக்கின் கீழ் அவருடைய நண்பர்கள் ரசகுண்டுவும் பீமாராவும் தாங்கள் பார்த்த விட்டலாசார்யா படத்தை அப்புசாமிக்குக் காட்சி காட்சியாக விவரித்திருந்தார்கள்.
      “தாத்தா, நீ ஜெயமாலினியின் அட்டகாசமான டான்ஸைப் பார்த்திருந்தால் ஸும்மா கிர்ரிங் ஆயிருப்பே'' என்றான் ரசம்.
      “டேய் அவரேனு ஹாகே ஆகுவதில்லை. அவரு தும்ப வயசானவரு'' என்றான் பீமா.
      “யாருடா கெயம்...? நீ கெயம், ஒன் தாத்தா கெயம்... அந்தத் தாத்தாவுக்குத் தாத்தா கெயம்... வாயை வாஷிங் சோடா போட்டுக் கழுவு. அய்யாவா கெயம்?... வூடு கட்டிடுவேன்'' என்று பீமாராவின் மேல் பாய்ந்தார்.
      “தாத்தா... பீமாவை வுடு. கதையைக் கேளு. ஒரு சீன்லே ஜெயமாலினி பயங்கர மழையிலே மாட்டிக்கிறா... அடாடா...''
      “ஏய், ரசம்... நீனு ஏனாதரு ஹேளி அவரிகே வயித்தெரிச்சலைக் கிளப்பாதே. அவரெல்லி சினிமா, சினிமாகே ஹோகுத்தாரே? பாட்டி தான் ஃபுல் கண்ட்ரோல் நல்லி இட்டித்தாரே...''
     “போடா குண்ரோல்! கண்ட்ரோலாம் ஒண்ணாம்... மேலே கதையைச் சொல்லுடா...''
      “தாத்தா மீதிக் கதை நாளைக்கி ராத்திரி தான். ருக்மணி திட்டும்...'' என்று ரசகுண்டு சொல்ல, கூட்டம் கலைந்தது.

March 15, 2013

அப்புசாமி விருது - என் ஏற்புரை

முன் குறிப்பு: சென்ற ஆண்டு எனக்கு அப்புசாமி நகைச்சுவை பதக்கம் அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையால் தரப்பட்டது,  விழாவில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டில்லி கணேஷ், சித்ராலயா கோபு, பாக்கியம் ராமசாமி அவர்கள், எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள், எழுத்தாளர்  ராணிமைந்தன் அவர்கள் பேசினார்கள்.
அப்போது நான் பேசிய உரையை இங்கு தருகிறேன். =================================================== 
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள், இன்று என் வாழ்நாளில் ஒரு முக்கிய தினம்.  அற்புத தினம், உன்னத தினம், பெருமைக்கும் பெருமிதத்திற்கும் உரிய தினம்.
நான் கனவிலும் எதிர்பாராத ஒரு கௌரவம் எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவைக்காகவே அமைக்கப்பட்டடுள்ள ஒரு அறக்கட்டளை என்னைக் கௌரவித்து இருப்பதாலும், அந்த அறக்கட்டளையை அமைத்துள்ளவர் திரு பாக்கியம் ராமசாமி என்பதாலும் அது தரும் விருது, கூடுதல் மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
=                   =            =
கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான்
நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆர்வமே திறமை என்று  எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் நான்.
1962-ல்  டில்லி சென்றதும்,, குமுதத்திற்குச் சில பேட்டிக் கட்டுரைகள் நான் அனுப்பினேன். அவைகளைச்  செதுக்கிச் சரிப்படுத்தி, குமுதத்தில் பிரசுரித்தார்கள். தொடர்ந்து எழுதி வந்தேன்.

இந்த சமயத்தில் 1967-ல் தினமணி கதிரில் சாவி பொறுப்பேற்றதும் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சாவியே கைப்பட எழுதியிருந்தார். அறிமுகம் கூட இல்லாத எனக்கு சாவியிடமிருந்து கடிதம்!.


“தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். கதிருக்கு ஒரு நகைச்சுவை கதையை எழுதியனுப்புங்கள்” என்று எழுதியிருந்தார்.

’எனக்கு எழுதத் தெரியும், அதுவும் கதை எழுதத்தெரியும், அதுவும் நகைச் சுவையாக!’ என்ற தவறான தகவலை அவருக்கு யார் சொல்லியிருப்பார்கள்?

அந்த கடிதத்தை என் தலையில் வைத்த கிரீடமாக கருதிக்கொண்டேன். ’மிஸ்டர் பஞ்சு’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். மறு வாரமே அது பிரசுரமாயிற்று. இது விசேஷமல்ல. கதிரின் அட்டையில் ’மிஸ்டர் பஞ்சு நகைச்சுவை கதை --- அகஸ்தியன்’ என்று வேறு போட்டுவிட்டார்.

நகைச்சுவை என்னும் கரைகாணமுடியாத கடலில் என்னை இறக்கி, நீந்தச் செய்துவிட்டார் சாவி. அன்றிலிருந்து நகைச்சுவை புத்தகங்களாகவே படித்து வருகிறேன் MAD MAGAZINE துவங்கி SPIKE MILLIGAN, GEORGE BURNS, EVAN ESAR, JOEY ADAMS, WILLIAM HAZLETT UPSON, RICHARD ARMOUR, BOB HOPE, ART BUCHWALD, OGDEN NASH, PIERRE DANINOS என்று பல நூறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து, அவர்களின் செய்முறைகளை உள்வாங்கி ஓரளவு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளேன்,
சாவியின் கேரக்டர் கட்டுரைகளைப் பார்த்து நானும் கேரக்டர் கட்டுரைகளை கதிரில் எழுதினேன். அவரைப் பின்பற்றி நானும் ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளை எழுதினேன்.

இது மாதிரியே மதிப்பிற்குரிய குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்திற்குத் தீவிர ரசிகனானேன். ஒரு சில சமயம் அவர் எழுதிய பதப்பிரயோகங்களை அப்படியே நானும் உபயோகித்துள்ளேன்.

 
ஒரு நகைச்சுவை கதையில் சீரியஸான விஷயம் வந்தால் அதையும் அவர்  நகைச்சுவையாக எழுதியிருப்பார். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சொல்லுகிறேன். அவர் எழுதினார்: ”அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் முகத்தில் எள் பிளஸ் கொள் வெடித்தது என்று எழுதியிருந்தார். வெறுமனே எள்ளும் கொள்ளும் என்று எழுதியிருந்தால் அதில் நகைச்சுவை இருந்திருக்காது.