April 03, 2019

கோடி கோடி நன்றிகள்


தெற்குக் கோடி! அமெரிக்க விண்வெளி ஸ்தாபனம் உள்ள இடம் கேப் கெனவரல் புளோரிடா மாநிலத்தில் கிழக்குக் கரையோரம் உள்ளது கென்னடி ஸ்பேஸ் சென்டர்.  ஒரு சமயம்  அங்கு சென்று பார்த்தேன்.
அடுத்த வாரம் விண்ணில் ஏற்படவிருக்கும் ஸ்பேஸ் ஷட்டில், ராக்கெட்டின் முதுகில்   இணைக்கப்பட்டு செங்குத்தாக நின்று கொண்டிருந்தது.  மனிதனின் அபார சாதன களின் உன்னத சிகரம் ஸ்பேஸ் ஷட்டில்.  உலகின் பல அற்புதமான முன்னேற்றங்களுக்கும் வசதிகளுக்கும்ம் வழிவகுத்து உள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் பெற்ற வெற்றிகள். ஏன், தோல்விகளும் கூட !

விண்வெளி பயண முயற்சிகளில் உயிரிழந்த வீரர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அங்கு அமைத்திருக்கிறார்கள். சற்றே வளைந்த, பிரம்மாண்டமான சுமார் 20 அடிக்கு 30 அடி அளவு, கருப்பு கிரானைட்  பலகை   பதிக்கப்பட்டு, வீரர்களின் பெயர்களை பாறையில் முழுவதுமாக செதுக்கி  எடுத்து விட்டு,  பாறையின் பின்னால் இருந்து இயற்கையான சூரிய வெளிச்சம் வருமாறு செய்திருக்கிறார்கள்.  பெயர்கள் வெள்ளியால் பொறிக்கப்பட்டவை போல் கிரானைட்டில் மின்னுகின்றன.
   எப்போதும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வகையில் இந்த கிரானைட் பலகையின் பின்னால் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அவை  சூரியனை நோக்கி மெல்லத் திரும்பும் வகையில் மோட்டாரைப் பொருத்தி இருக்கிறார்கள்.

இந்த நினைவுச் சின்னத்தின் அருகே அஞ்சலியாக சில வாசகங்களை   கிரானைட்டில் பொளிந்து   வைத்து இருக்கிறார்கள். அதைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன்.”
”புதிய எல்லைகளை வெற்றிகொள்ள மனித சமுதாயம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதெல்லாம் இம்முயற்சிகளுக்காகத் தங்கள் உயிர்களை நீத்தவர்கள் உண்டு .விண்வெளியை வெற்றிகரமாக வெற்றி கொள்வதற்காக உயிருக்கு ஆபத்தான முயற்சிகளை  மேற்கொள்ளலாம் என்று நம்பி,  தங்கள் உயிரையே தியாகம் செய்த அமெரிக்க வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அஞ்சலியாக இந்த நினைவுச்சின்னம் மே 9, 1991 அன்று அர்ப்பணிக்கப்படுகிறது.”

இந்த வாசகத்தை படித்ததும் என் கண்களில் நீர் தளும்பியது. இன்றைய இன்டர்நெட்,   பிராட்பேண்ட்,  ஸ்மார்ட்போன்,  டிவி நிகழ்ச்சிகள் என்று பல நூறு வசதிகளை அவர்கள் அனுபவிக்கவில்லை.  அவர்களின்  உயிர்த் தியாகம்  நமக்கு நினைத்துக்கூடப் பார்க்காத பல வசதிகளுக்குப் பாதை அமைத்துள்ளது!
அவர்களின் தியாகத்தை என்றும் மனதிலிருத்தி வைப்போம்! அவர்களுக்குக் கோடி நன்றிகள் உரித்தாகும்.


வடக்கு கோடி
 ஃபோர்டு கார் என்றதும் நினைவுக்கு வரும் நகரம் டெட்ராய்ட். அங்கு ஃபோர்ட் மியூசியம் உள்ளது. அபாரமான மியூசியம்.  அதை முழுதாகப் பார்க்க மூன்று நாள் தேவைப்படும் என்றால் நம்ப மாட்டீர்கள். அங்குள்ள கார்கள், ரெயில் என்ஜின்கள் ,குட்டி விமானங்கள் போன்ற பல முக்கிய பொருட்களை விவரிக்க தனிக் கட்டுரையே தேவைப்படும்.  


மியூசியத்திற்குள் நுழையும்போது,கூடத்தில் தரையில் பதிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பெரிய மண்வெட்டி, சிமென்டில் சற்று புதைந்த மாதிரி வைக்கப்பட்டிருக்கிறது.

 மியூசியத்திற்கு அடிக்கல் நாட்டியவர் உபயோகித்த மண் வெட்டி அது!  ஈர சிமென்ட்டில்,  தனது ஆள்காட்டி விரலால் அவர்பெரிதாகk கையெழுத் திட்டிருக்கிறார்.    அப்படி கையெழுத்திட்டவர்: தாமஸ் ஆல்வா எடிசன்!

 அvar ஹென்றி ஃபோர்டின் மிக நெருங்கிய நண்பர்.  எலக்ட்ரிக் பல்பு உள்பட ஆயிரத்து நூறு கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர் எடிசன் அந்த மேடை இருந்த இடத்தில் அvar நின்று, கையெழுத்திட்டிருக்கிறார்.  அந்த இடத்தில் நாம் நிற்கிறோம் என்பதை நினைத்தபோது மனதில் சிலிர்ப்பு ஏற்பட்டது.
        எடிசன் தன்னுடைய ஆராய்ச்சிகளைச் செய்த இடம் நியூ ஜெர்ஸியில் உள்ள ’தெற்கு ஆரஞ்சு’ என்ற பகுதி.   அது நியூஜெர்சியில் உள்ள ஊர். 
 அங்கு உள்ள புத்தக சந்தைக்கு நான் அடிக்கடி போவேன். அப்போதெல்லாம் , அவரது   கண்டுபிடிப்புகளையும், முயற்சிகளையும்  நினைவு கொள்வேன்.

பின் குறிப்பு
தாமஸ் ஆல்வா எடிஸன் பற்றிய ஒருநெகிழ்ச்சியூட்டும் தகவல்:

எடிசன் சிறுவனாக இருந்தபோது, ஏழ்மை காரணமாக் ரயில்களில் பேப்பர் விற்பது உண்டு. அப்படி ஒரு சமயம் ரயிலில் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் எடிசனிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை. ஈவு இரக்கம் இல்லாத aந்த அந்த பரிசோதகர் ‘சின்னப்பையன் பிழைப்புக்காக ஏதோ செய்கிறான்’ என்று ஒரு கணம் கூட நினைக்காமல், கோபத்தை எல்லாம் திரட்டி எடிசனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார். அந்த அறை பாதி கன்னத்திலும், பாதி எடிசனின் காதிலும் பட்டது. அதன் விளைவு என்ன தெரியுமா? எடிசன் முழுச் செவிடாகி விட்டார். இவர்தான் தொலபேசியையும் கிராமபோனை யும் கண்டுபிடித்துப் புகழ் பெற்றார். காது கேட்காதவர் செய்த சாதனை இது! இதை நாம் மறக்கக் கூடாது.

March 11, 2019

நான் ரசித்த எழுத்தாளர் வரிசை-1: கிஷோன்

ஈரமுள்ள வீடு
          இஸ்ரேல் நகைச்சுவை எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய ‘A  HANGING MATTER’ என்ற கட்டுரையைத் தழுவி, தமிழ் முலாம் கொடுத்து இங்கு தருகிறேன்.

                                           *                                       .
                                           *                                       *
     முதலில் ஒன்றைச் சொல்லி விடுவது முக்கியம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.  மோட்ச உலகிலும் இயற்கையின்  நடைமுறைகளிலும்   எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
     ஆனால் சமீபத்தில் குளிர் காலத்தின் போது இயற்கை  மீதிருந்த  மதிப்பு, மரியாதையெல்லாம் மாறிவிட்டது.
     விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.  நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகும்! 
    டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. பொழுது புலர்ந்தது. சூரியன் பளீரென்று உதித்து உலகையே உற்சாகப்படுத்தினான். ஜன்னல் வழியாகச் சூரியனை பார்த்து  “ஆகா, வந்தாயே, என் மகாராஜனே” என்று அவனுக்குச் சின்ன வரவேற்பைச்சொன்னேன்.

     ஆயிரம் வருஷம் காத்திருந்த மாதிரி, சூரியன் தலை காட்டியதற்கு விழாவே எடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியில் குதித்தோம். ஒரு வாரத்திற்கு மேல் துணிகளைத் தோய்க்க முடியாமல், சுருட்டி சுருட்டி மூட்டைக் கட்டி வைத்திருந்தோம். 
  
 மூட்டைகளைப் படுக்கையின் கீழே, மேஜையின் கீழே, (வேண்டாத சாமான்கள்  நிரம்பிய பரணில் (எதையும் தூக்கிப் போடாதீங்க; எந்த சமயத்தில் எந்த சாமான் உதவும்  என்று உங்களுக்குத் தெரியாது.  காதறந்த  ஊசியும் உபயோகப்படும்”-  இது என் மனைவி என்னும் அரிஸ்டாட்டிலின் தத்துவம்!)    நிறைந்து இருந்ததால் அங்கு கிடைத்த இரண்டு அங்குல இடத்தில்,  துணிகளைத்  திணித்து வைத்திருந் தோம்.
மழை காரணமாக ஜன்னல்களைத் திறக்கவில்லை. வீட்டின் தரை  சொத சொதவென்று இருந்தது. மூட்டைகளில் இருந்த துணிகளில், டவல் போன்றவை சற்று ஈரமாக இருந்தன. அதனால், அவை ஒரு ஸ்பெஷல்   வாசனையுடன் இருந்தன. (இந்த வார்த்தை சரியில்லைதான்வேறு வார்த்தையைப்  போட மனம்  வரவில்லை! - கிட்டதட்ட சர்க்கரை ஆலைகளிலிருந்து வரும் மொலாசஸ்ஸே  சந்தனமணம்  என்று நாங்கள் கருதும் அளவுக்குத் துணிகளின் வாசனை  எங்கள் மூக்கை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டன!)
     விடிந்தது காலை. வாராது வந்த மாமணி போல சூரியன் வந்தது. யாம் செய்த தவத்தால் பளிச்சென்ற ஒளிச்சிதறலுடன் சூரியன் வந்தான்.  

February 25, 2019

மக்கள் வேடிக்கையானவர்கள்!

மெரிக்க ரேடியோ  மற்றும் டி.வி.யில் பல தொடர் நிகழ்ச்சிகள் பெயர் பெற்று விளங்கியுள்ளன. இன்றும் பலர் அவற்றை நினைத்துப் பார்த்து வருகிறார்கள். ஆர்ட் லின்க்லெட்டர் என்ற  நகைச்சுவையாளர்   ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அதன் பெயர்   ‘பீப்பிள் ஆர் ஃபன்னி (PEOPLE ARE FUNNY).  
ஒரு முக்கியமான புட்பால் போட்டி நடந்து கொண்டிருந்த  மைதானத்திற்குஅவரை  அனுப்பினோம் இரண்டு நடிகர்களுக்கு  போலீஸ்காரர்கள் மாதிரி நாங்களே டிரஸ் போட்டுத் தயார் செய்து விட்டோம்.
x
 இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் ரேடியோ நிகழ்ச்சியாக   நடந்ததுபிறகு டி. வி.  நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 1943 முதல் 1960 வரை   நடந்தது.  அதில் 1943 முதல் 1960 வரை ஆர்ட் லின்க்லெட்டர்  என்ற நகைச்சுவையாளர் நிகழ்ச்சி   அமைப்பாளராக இருந்தார்.   அவர் எழுதிய ‘ பீப்பிள் ஆர் ஃபன்னி’ என்ற புத்தகத்தைப்  பல வருஷங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். அவர் நடத்திய பல நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. மூன்று நிகழ்ச்சிகளைப் பற்றிய    விவரங்களைச்  சுருக்கமாக தருகிறேன்.
புது மணப்பெண்! ஒரு அழகான பெண்ணை மணப்பெண் மாதிரி
தடபுடலாக அலங்காரம் செய்தார்கள். அவருடைய கையில் பெரிய
பூங்கொத்தைக் கொடுத்தார்
கள்யாரும் அறியாதபடி ஒரு முக்கிய தெருவில் அவளை இறக்கி விட்டார்கள்.  இவர் சொல்லிக்கொடுத்தபடி அவள் நடித்தாள்.

February 24, 2019

அன்புடையீர்!,

அறிவிப்பு

அன்புடையீர், தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு போடுவதற்குச் சற்று தாமதம் ஆகிறது. இரண்டொரு  நாள் கழித்து போடுகிறேன். - கடுகு

February 11, 2019

பறக்கும் தட்டு


ஒவ்வொரு கால-கட்டத்திலும் ஏதாவது ஒரு  புருடா கிளப்பப்படுகிறது. எட்டு கிரகங்கள் ஒரே பாதையில் வரப் போகிறது, அத்துடன் உலகம் அழிந்து விடப் போகிறது என்ற பீதி உண்டாக்கும் புரளி சில வருஷங்களுக்கு முன்பு பரவியது.  ஆனால் கிளப்பப்பட்டது  மட்டும்தான் மிச்சம். இந்த உலகத்திற்கு எதுவும் நேரவில்லை. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு  சிறிய  நல்ல பலன் கிட்டியது என்று சொல்லலாம். மகா பெரியவா சொன்னதன் பேரில், எட்டு கிரகங்களால் ஏற்படும் அபாயத்தை தவிர்க்க தனியாகவோ சேர்ந்ததோ கோளறு பதிகம்
பஜனை பலர் செய்தார்கள். அதனால் தமிழ் மொழியின் அழகை ரசிக்க முடிந்தது; பாடல்களை தெரிந்து கொள்ளவும், மனனம் செய்யவும் முடிந்தது. எட்டு கிரகங்கள் சேர்ந்து தமிழுக்கு செய்த சேவை என்று இதைக் கருதலாம்.

 இந்த காலகட்டத்தில் மற்றொரு ஆதாரம் இல்லாத செய்தி பல நாடுகளில் பரவியது. அது பறக்கும் தட்டு. அயல் கிரகங்களிலிருந்து, அந்த ‘பயங்கர’ கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் (Unidentified Flying Object)  வந்து இறங்க போகிறார்கள் என்று யாரோ திரித்துவிட்டார்கள்.  கூகுள் இல்லாத காலத்தில் கூட மிக வேகமாக  உலகெங்கும் பரவி விட்டது.

 இந்த ஊரில் பறக்கும் தட்டு வந்தது;  அந்த ஊரில் பறக்கும் தட்டு தெரிந்தது,  என்று பல கற்பனை மன்னர்கள் வதந்திகளைப் பரப்பிக் கொண்டே இருந்தனர். இந்த பறக்கும் தட்டு சரடு அவ்வப்போது அடங்கிப்போகும் அவ்வப்போது வெளியே வரும்.

பறக்கும் தட்டு
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இரவு 8.15 மணியிலிருந்து 9 மணி வரை, அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில்  மாரிஸ் டவுன் என்ற ஊரில் - கிட்டத்தட்ட நம் மயிலாப்பூர் மாதிரியான ஊர் - ஓரிரவு பறக்கும் தட்டைப் பலர் பார்த்தனர். அந்தத் தட்டில் பெரிதாகத் தீவட்டி ஏதோ எரிந்து கொண்டிருந்தது. தாழ்வான உயரத்தில் அது பறந்து போவதைப் பார்த்து பயந்து, பலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உட்பட பலர் பார்த்தார்கள். எல்லோருக்கும் இனம் தெரியாத ஒரு பயமும், கிலியும் ஏற்பட்டது. தீயைக் கக்கிக் கொண்டு தட்டு பறந்தது.  சிறிது நேரத்திற்கு பிறகு அது எங்கேயோ போய் மாயமாகி விட்டது.