காதலியா? அரச பதவியா? இப்படி ஒரு கேள்வி பல வருஷங்களுக்கு முன்பு இங்கிலாந்து மன்னருக்கு முன்னே தோன்றியது. இந்தக் கேள்வியைக் கண்டு அவர்
கலங்கவில்லை; இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கவில்லை.
காரணம் அவர் காதல் அவ்வளவு தீவிரமாகவும், உண்மையாக இருந்தது. அதனால் அவர் – எட்டாம் எட்வர்ட்- தன்னுடைய அரச பதவியைத் துறக்க முடிவு செய்தார்.
தன்னுடைய குடும்பத்தாரிடமும் மதகுருமார்களும் அரசியல் தலைவர்களுடனும் தன்னுடைய காதலைப் பற்றி கூறியதுடன், வாலிஸைத் திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும் என்றும் கேட்டுப் பார்த்தார். ஆனால் எல்லோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏற்கனவே இரண்டு தடவை திருமணமாகி, இரண்டாவது திருமணம் விவாகரத்து வழக்கில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக உலகெங்கும் எல்லா பத்திரிகைகளும் இதை செய்திகளும் பின்னணியும் காதல் விவகாரம் ஆகியவை பற்றி பத்தி பத்தியாக எழுதின ஆனால் எதற்கும் கலங்கவில்லை. தன் காதலிலிருந்து சிறிதளவும் அவர் விலகவில்லை. அதில் உறுதியாக இருந்தார்.