February 16, 2016

என் அன்பான நேயர்களுக்கு,

 என் அன்பான நேயர்களுக்கு, 
வணக்கம்.
எட்டு மாதங்களுக்கு மேலாகப்  புதிய பதிவுகள் போட் இயலாமல் போனது.
கண் கோளாறு இன்னும் முற்றுமாகக் குணமாகவில்லை.  தினமும் கிட்டதட்ட எட்டு மணி நேரம் படிப்பது, எழுதுவது என்று இருந்தது, போய், பன்னிரண்டு மணி நேரம் படுப்பது, தூங்கி எழுவது என்று ஆகிவிட்டது.  இந்த சோம்பல் வாழ்க்கையே சுகம் என்று ஆகி விடப் போகிறதே என்று அடிமனதில் கவலை ஏற்படத் துவங்கியது!  அப்படி ஏற்படாமல் இருக்கவோ என்னவோ, சோபானா,  நெல்லைத் தமிழன்  போன்றவர்கள்  பின்னூட்டம், ஈ-மெயில்  என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாருக்கும் நன்றி.
விசையுறு பந்தினைப் போல் செலும் உடல் வந்துவிடும் இன்னும் சில நாட்களில்.
 இன்னும்  ஒரு வாரத்தில் அடுத்த பதிவு - போடுகிறேன்.
- கடுகு



10 comments:

  1. விரைவில் நலம் பெற்று, தாளிக்க வாருங்கள். காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. விரைந்து நலம் பெற்று , பதிவுகள் தர, வர கேட்டுக்கொள்கிறேன்...

    ReplyDelete
  4. வணக்கம்
    விரைவில் நலம் பெற இறைவனை பிராத்திக்கிறோம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. தாங்கள் குணமடைந்ததும் பணிக்கு வருக.
    தாங்கள் குணமடைய இறைவனை வேண்டி நிற்கிறேன்.

    ReplyDelete
  6. பாரதி பராசக்தியைக் கேட்டு, இப்போது உங்களுக்குத் தருகிறாள் போலிருக்கிறது. நலமுடன் வருக.

    இந்த கடுகு லோகோ வரைந்தது கோபுலு சாரா நடனமா?

    ReplyDelete
  7. Wishing you a Speedy recovery.Waiting for your Humorus experiences.Regards to family members.If you do n't mind send your Number by EmailWrite2ragavan@gmail.com

    ReplyDelete
  8. Very very happy to see your writing after a long time.

    ReplyDelete
  9. Much relieved to see this blog up and running again Periappa.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!