February 22, 2016

பூங்கா ஸ்டேஷனில்..

கடவுள் கை கொடுத்த  கணங்கள்!

நம் வாழ்க்கையில் எத்தனையோ  மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிக்கின்றன. மறக்க முடியாது என்று நாம் கருதிய நிகழ்ச்சிகளைப் பிறகு மறந்தே போய்விடுகிறோம்.  வேறு சில சம்பவங்கள் நிகழ்ந்த கணம் மனதில் உறைந்து விடுகின்றன – நடந்த தேதி, ஆண்டு போன்றவை மறந்து விட்டாலும்!
என் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை எழுதலாம் என்று இருக்கிறேன். அவை என் வாழ்வில் நடந்தது என்பது முக்கியமே இல்லை.  ஆனால் இந்த சம்பவங்களில் எல்லாம் கடவுள்  கை கொடுத்த கணங்கள் உள்ளன.  கடவுள் ஒரு  SPLIT SECOND-ல் செய்த அற்புதங்கள் உள்ளன! இது தான் முக்கியம்.
சிலவற்றை  COINCIDENCE என்று சொல்லிவிடலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை அவை யாவும் கடவுள் செய்த அற்புதங்கள்தான்.
இது பல  EPISODE கொண்டது. ஒருதொடராகப் போடப் பார்க்கிறேன். 
  
மின்சார ரயிலில், மில்லி செகண்டில் நடந்த அற்புதம்!இது 
1956-ல் நடந்த சம்பவம்.

செங்கல்பட்டில் நான் இருந்த கால கட்டம். அப்போது என் இரண்டாவது  மூத்த  சகோதரருக்குக் கலியாணம் நிச்சயமாயிற்று. ஈரோட்டில் செப்டம்பர்  15-ம் தேதியென்று முகூர்த்தம் குறித்தாகிவிட்டது.  நிச்சயம் ஆன தேதி செப்டம்பர் 1!  அவரை விட மூத்த அண்ணா காஷ்மீரில் ராணுவ மருத்துவ மனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடிதம் போட்டோம், (போன் இல்லாத காலம் அது!) அவரிடமிருந்து ஒரு வாரம் கழித்துப்  பதில் வந்தது,  கட்டாயம் வந்து விடுகிறேன்” என்று.

ஆனால் அதற்குள் பெண் வீட்டார், 15-ம் தேதியை விட 14-ம் தேதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லி முகூர்த்த தேதியை மாற்றிவிட விரும்பினார்கள். நாங்களும்  சம்மதித்தோம்.  அதன் பிறகு மறுபடியும், தேதி மாறியத் தகவலை எழுதி பெரிய அண்ணாவுக்குக் கடிதம் போட்டோம்..

February 16, 2016

என் அன்பான நேயர்களுக்கு,

 என் அன்பான நேயர்களுக்கு, 
வணக்கம்.
எட்டு மாதங்களுக்கு மேலாகப்  புதிய பதிவுகள் போட் இயலாமல் போனது.
கண் கோளாறு இன்னும் முற்றுமாகக் குணமாகவில்லை.  தினமும் கிட்டதட்ட எட்டு மணி நேரம் படிப்பது, எழுதுவது என்று இருந்தது, போய், பன்னிரண்டு மணி நேரம் படுப்பது, தூங்கி எழுவது என்று ஆகிவிட்டது.  இந்த சோம்பல் வாழ்க்கையே சுகம் என்று ஆகி விடப் போகிறதே என்று அடிமனதில் கவலை ஏற்படத் துவங்கியது!  அப்படி ஏற்படாமல் இருக்கவோ என்னவோ, சோபானா,  நெல்லைத் தமிழன்  போன்றவர்கள்  பின்னூட்டம், ஈ-மெயில்  என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாருக்கும் நன்றி.
விசையுறு பந்தினைப் போல் செலும் உடல் வந்துவிடும் இன்னும் சில நாட்களில்.
 இன்னும்  ஒரு வாரத்தில் அடுத்த பதிவு - போடுகிறேன்.
- கடுகு



November 17, 2015


 பித்துக்குளி முருகதாஸ் இன்று காலமானார். அற்புதமான பாடகர். குரல் வளம் மட்டுமல்ல; ஹார்மோனியத்தில் புகுந்து விளையாடும் விரல் வளமும் கொண்ட இசைக் கலைஞர்.
முன்பு எழுதிய பதிவை மீள்பதிவாகப் போடுகிறேன்’

பித்துக்குளி முருகதாஸும் நானும்

ஐம்பதுகளில் கொத்தவால் சாவடி, பூக்கடை பகுதிகளில் கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி சமயங்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் நடு வீதியில் போடப்பட்ட சுமாரான மேடையில் இசைக் கச்சேரிகள் நடைபெறும். அதில் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் பக்தி பாடல் நிகழ்ச்சி இல்லாமல் இருக்காது.. தரையில் தான் உட்கார்ந்து கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அந்த கூட்டத்தில் நான் நிச்சயமாக இருப்பேன். ஒரு பக்கமாக நின்று கொண்டே கூட இரவு12, 1 மணி வரை கச்சேரிகளைக் கேட்பேன்
முருகதாஸின் பயங்கர அபிமானி. வார்த்தைத் தெளிவு,  உச்சரிப்பு சுத்தம், அலட்டல் இல்லாத சங்கீதம் ஆகியவை காரணமாக தமிழ் மொழியின் அழகும், பாடல்களின் சிறப்பும் முருகதாஸின் குரலும் என்னை எங்கோ கொண்டு போய்விடும். பாரதி விழாக்களில் பித்துக்குளி பாடாமல் இருக்க மாட்டார்.
பின்னால் டேப் ரிகார்டர்கள் வந்ததும், நிறைய ரிகார்ட் பண்ணி வைத்துக் கொண்டு கேட்டேன். திருப்புகழ், கந்தர் அனுபூதி, ஊத்துக்காடு, மகாகவி பாரதி ஆகியவர்களின் பாடல்களை எனக்கு அறிமுகப் படுதியவர் பித்துக்குளிதான்.

பிறகு நான் டில்லிக்குப் போய் விட்டேன். டில்லிக்கு பல சமயம் அவர் வந்திருக்கிறர். ( ஏன், யூ.என். ஐ. கேன்டீனுக்குக்கூட வந்திருக்கிறார்.)

October 07, 2015

அதே பாடல்: அதே ராகம்!

அதே பாடல்: அதே ராகம்!
ஆமாம். முதுகு வலி போய்விட்டது. இப்போது கண்களில் பிரச்னை.  ஆகவே. மேலும்  SICK LEAVE  தேவைப்படுகிறது. விரைவில்  SICK-கிற்கு விடை கொடுத்துவிட்டு ‘CHIC- என: வருவேன்.
-- கடுகு