Showing posts with label ஸ்பெஷல். Show all posts
Showing posts with label ஸ்பெஷல். Show all posts

December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

November 10, 2018

தப்புத் தபால் தலையும், கில்லாடி ஆசாமியும்!

      தபால் தலைகளில் தவறு ஏற்படுவது எப்போதோ ஒரு சமயம்   பல நாடுகளில் நடக்கிறது. ஏன், ரூபாய் நோட்டுகளில் கூட நடக்கிறது.  அலட்சியம்தான் காரணம். 
      ஒரு பெரிய பிரமுகரின் படத்தை ஒரு தபால் தலையில் வெளியிட்டார்கள். (எந்தப் பிரமுகர் எந்த நாடு என்பது முக்கியமல்ல.) அவர் மேஜை முன் உட்கார்ந்து எதையோ எழுதுவது போல் எடுக்கப்பட்ட படம் (அல்லது ஓவியம்). அச்சாகி தபால் தலை விற்பனைக்கு அனுப்பப்பட்டது.  சில நாட்கள் கழித்து அதில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. ஓவியம் வரைந்தவர், அவரது இடது கையில் ஆறு விரல்களைப் போட்டு விட்டார்! இதை ஒருவர் கூட கவனிக்கவில்லை!

 ஐ.நா சபையின் உறுப்பினராக இருந்த    டேக் ஹாம்மர்ஸ்ஷோல்ட் (DAG HAMMARSKJOLD)  காலமான பிறகு, முதலாம்  ஆண்டு நினைவு நாளன்று ( 23 அக்டோபர்,  1962 ) அவரை கௌரவிக்க நாலு சென்ட் தபால் தலையை அமெரிக்கா வெளியிட்டது. ஸ்டாம்பின் வடிவமைப்பு தயாரானதும், அந்த படத்தைப் பத்திரிகையில் வெளியிட்டு, இன்ன தேதியில் ஸ்டாம்பு வெளியிடப்படும் என்றும் அறிவித்து இருந்தார்கள்.  இளஞ்சிவப்பு வண்ண கலர் பேப்பரில் ஹாம்மர்ஸ்ஷோல்டின் படம் டிசைன் செய்யப்பட்டிருந்தது. 

சில நூறு தபால் தலைகளை  இளஞ்சிவப்புக்குப் பதில், மஞ்சள் கலரில் தவறாக அச்சகத்கதில்  அச்சடித்து விட்டார்கள். நல்லகாலம், எல்லா தபால் தலைகளையும் அடிப்பதற்கு முன் தப்பைக்  கண்டுபிடித்து விட்டார்கள். மீதி தபால் தலைகளைச் சரியான வண்ணத்தில் அச்சடித்தார்கள். 

November 09, 2017

டார்ஜான்

எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு டார்ஜான் திரைப் பத்தைப் பார்த்தேன். காட்டுப்பகுதியில் டார்ஜான், அவன் காதலி, அவர்களுடன் ஒரு சிம்பன்ஸி இது  மட்டும்தான்  என் நினவில் உள்ளன. ஒரு ரத்தின் விழுதைப் பிடித்துக் கொண்டு, பயங்கரமான குரலில் கத்திக் கொண்டே (ஊளையிட்டுக் கொண்டே என்று சொன்னாலும் சரி!) டார்ஜான் தாவியதுதான் பெரிய ஸ்டன்ட் வித்தையாக எல்லாரையும் கட்டி போட்ட.து.

 கதை, வசனம், இசை, நடிப்பு எதுவும் ஞாபகத்தில் இல்லை. இந்த அம்சங்களைப் பற்றித் தயாரிப்பாளர்கள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.  படம் பார்த்த்வர்களுக்கு அவை ஊறுகாய் போன்றுதான் இருந்திருக்க வேண்டும்.
சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி சில குட்டித் தகவல்கள் கண்ணில் பட்டன. அவை டார்ஜான் நினைவை எனக்குக் கொண்டு வந்துவிட்டன.  டார்ஜானைப் பற்றி விவரங்களைத் திரட்டும் ஆவலை உண்டாக்கின. ஒரு சில கட்டுரைகளையும் புத்தகங்களயும் கண்டு பிடித்தேன்.  அவற்றில் நிறையத் தகவல்கள் கிடைத்தன.
   *                      *                        *
முதல் டார்ஜான் படம் 1918-ம் ஆண்டு திரையிடப்  பட்டது. ஆம், கிட்த்தட்ட 100 வருஷத்திற்கு முன்பு!

 டார்ஜான் கதைகளை  எழுதியவர் EDGAR RICE BURROUGHS பற்றிய விவரங்களும் மிகவும் சுவாரசியமானவை.

    பர்ரோஸ் (1875-1950). ஒரு பென்சில் மொத்த வியாபார ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தார். என்ன வேலை? கட்டுக் கட்டாக வரும் பென்சில்கள் எல்லாவற்றையும் சீவி வைப்பதுதான் அவர் தினமும்  செய்த வேலை. ஓய்வு கிடைத்த சமயங்களில், சரியான அடாஸ்’ நாவல்களை அவர்  படிப்பது உண்டு. (PULP FICTION என்று கூறுவார்கள் இம்மாதிரி நாவல்களை..)
      ‘இவ்வளவு  குப்பையாக எழுத எனக்குக் கூட வருமே’ என்று அவருக்குத் தோன்றியது.
     அவரது 54-வது வயதில்,  அவர் ஒரு நாவலை எழுதினார். அவருடைய பிள்ளைக்கு சிறிது ஓவியம் வரையத் தெரியும் அவன் படங்கள் போட்டான்.
         1912-ம் ஆண்டு, அவர் எழுதிய TARJAN OF THE APES என்ற நாவல் பிரசுரமாயிற்று. 
     புத்தகம் அதிகம் விற்காவிட்டாலும்சற்று வித்தியாசமான கதைக்களம் என்று இருந்ததால் திரைப்படம் எடுக்க சில 'உப்புமா’ கம்பெனிகள்’  முன் வந்தனர். 
அதைத் திரைப்படமாக விற்பதற்கு ஒரு ஏஜன் டை நியமித்தார்.
ஹிரோ காட்டுவாசி, அரைகுறை ஆடை, இதெல்லாம் மைனஸ் பாயிண்டாக அமைந்தன. சுமார் 4 வருஷம் கழித்து, ஒரு சிகாகோ இன்ஷூரன்ஸ் ஏஜெண்டிற்கு -  சினிமாத்துறை அனுபவமோ, பணவசதியோ சற்றும் இல்லாத BILL PARSONS  என்பவருக்கு- விற்றுவிட்டார்.
BILL PARSONS படத்தைத் தயாரிக்க முற்பட்டார்.  ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்த என்ஜினியர் ஒருவரை ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க ஏற்பாடுகள் செய்தார். அந்த என்ஜினியர் காட்டுவாசிபோல் இருந்து தான் அவருடைய ஒரே தகுதி!

August 15, 2017

ஈரமுள்ள நெஞ்சங்கள் - முதல் பாகம்

 சுமார் 25 வருடங்களுக்கு முன்பு  டில்லியில் ஒரு தொண்டு நிறுவனத்தில் 
தொண்டாற்றிக் கொண்டு இருந்தேன்.   புற்றுநோய்  தகவல் மையம், இலவச பிரசுரங்கள், போஸ்டர்கள், வீடியோ படங்கள் என்று தீவீரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அந்த நிறுவனம்.                                                                    
டெல்லி  பல்கலை கழக மாணவ, மாணவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள்,  ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், ஒய்வு பெற்ற உயர் அதிகாரிகள் (பின்னால் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒருவர் உட்பட!) பலர் ஆர்வத்துடன்  இணைந்து நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பிரபல விளம்பர நிறுவனம் விளம்பரங்களை தயாரிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டது.   

அதிசய அமைச்சர்
இந்த சமயம் டெல்லியில் ஆண்டுதோறும் நடக்கும் TRADE FAIRல் ஒரு ஸ்டால் வைத்து  அதில் பிரசுரங்கள், போஸ்டர்கள் எல்லாம் வைத்து ஒரு வீடியோவை  தயாரித்து அதை அங்கு திரையிட்டு, புற்றுநோய் பற்றிய
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று தீர்மானித்தது.
  மிகவும் கஷ்டப்பட்டு பணம் திரட்டி, ஸ்டாலை புக் பண்ண பிறகு, அந்த ஸ்டால் வைக்க ஆகும் செலவுக்குப் பணத்திற்கு  என்ன செய்வது என்று தெரியவில்லை . பிரசுரங்கள், போஸ்டர்கள் தயார் செய்து அச்சடிப்பது போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை.  ஸ்டாலை நிர்மாணித்துத் தர அரசு செய்தித்துறையான. D.A.V.P-யை அணுகலாம் என்று ஓர் யோசனை தோன்றியது.  நாம் ஒரு தொண்டு நிறுவனம். நமக்கு எப்படி அரசுத் துறை ஸ்டால் அமைத்துத் தரும். நாம் I&B அமைச்சரைப் பார்த்துக் கேட்டுப் பார்க்கலாம்;. அவர் உத்தரவிட்டால், எந்த ஆட்சேபனையும் செய்யாமல் D.A.V.P  ஸ்டாலை அமைத்துக் கொடுக்கும் என்ரு ஒரு ஐடியாவை ஒருவர் சொன்னார்.  
அன்று ஞாயிற்றுக்கிழமை. I&B அமைச்சர் திரு. உபேந்திரா வீட்டிற்குப் போன் செய்தோம். அவரது  பி. ஏ .இருந்தார். அமைச்சரை பார்க்க வேண்டும். நாங்கள் இத்தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்றோம். பி. ஏ உடனே அமைச்சரிடம் சொன்னார். ”அமைச்சர்  இன்னும் அரைமணி நேரம்  கழித்து உஙளை வரச் சொன்னார்” என்றார். அடித்து பிடித்துச் சென்றோம். இனிய முகத்துடன் அமைச்சர் பேசினார். ‘அப்புறம்’ ‘அப்படியா’ ’ஓ.கே' சரி  செய்கிறேன்  என்று சொல்லிக் கொண்டே வந்தார். பி. ஏ விடம், யாரோ ஒருவர் பெயரைச் சொல்லி அவரை டெலிபோனில் கூப்பிடச் சொன்னார். அதற்கு முன் எங்கள் டெலிபோன் நம்பரை அமைச்சர் வாங்கிக் கொண்டார்.  
 பி.ஏ,  அமைச்சர் சொன்ன நபருக்குப் போன்  செய்து அமைச்சரிடம் கொடுத்தார். அமைச்சர், அவரிடம் எங்கள்  நம்பரை கொடுத்துவிட்ட்ட “இது ஒரு தொண்டு நிறுவனம் Trade Fair-ல்  ஸ்டால் அமைத்து தர நான்  ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு என்னென்ன  தேவையோ அதை செய்து கொடுங்கள்” என்றார். அவர்  பேசியது   D.A..V.P  டைரக்டருடன்!.      

May 30, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 2

ஜிம் சொன்னான்: "நான் குடித்திருக்கலாம்ஆனால் இந்த மாதிரி உண்மையை அவர்கள் பார்த்திருக்க  முடியாது.  ஏனெனில்  உலகம்  தோன்றி இத்தனை பெரிய அதிசயம் இதுவரை எங்கும் நிகழ்ந்ததே இல்லை.... நான் ஒரு பெரிய திட்டம்  வைத்திருக்கிறேன்.  நீங்கள்  ‘ம்’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்கோடி கோடியாக உங்கள் காலில் கொட்டுகிறேன் பணத்தை!"

பணமா..?” முல்லி பேச்சில் நாசூக்காகக் கலந்துகொண்டாள்.
"ஆமாம்எக்ஸிபிஷன்வொர்ல்ட் டூர் எல்லாம் ஏற்பாடு செய்கிறேன்!'
*அதெல்லாம் எதற்குநான் பேசாமல் என் சொந்த ஊரான யார்க்ஷையருக்குத் திரும்பிப் போகலாம் என்று நினைக்கிறேன்!" என்றார் ஸாம்.
ஏதாவது தத்துப்பித்துன்னு பேச வேண்டாம்நான் சொல்லுகிறபடி கேளுங்கள்!' என்றாள் முல்லி.
'பறக்க வேண்டியவன் நான்ஆகவே நான் சொல்லுகிறபடிதான்..." என்று ஸாம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.
முல்லி குறுக்கிட்டு, ''அடாடாஇந்த மனுஷனுக்கு மூளை ஏன் இப்படித் திடீர்னு வக்கரித்துக் கொள்ள வேண்டுமோதெரிய8லயே!.. சரி சரிஇத்தனை நாளாக இல்லாமல் இது என்ன  புது வழக்கம்?.... நான் பார்த்துக்கறேன்!' என்று ஒரு   போடு போட்டதுதான் தாமதம்ஸாம் வாயை மூடிக்கொண்டார்.
"நியூயார்க் மாடிஸன் அவென்யூவின் பரந்த மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டம் தயாரானதும்உங்களுக்கு நான் பிளேன் டிக் கெட் வாங்கி அனுப்புகிறேன்!" என்றான் ஜிம்.
"ஸாமுக்கு டிக்கெட் ஏன்நாம் பிளேனில் போவோம்அவர் அந்தப் பிளேனுக்குப் பின்னல் பறந்து வரட்டும்டிக்கெட் செலவு மிச்சமாகும்!" என்றாள் முல்லி.
"அதெல்லாம் கூடாதுஸாம் அதிக நேரம் பறந்தால் ஆபத்து ஏற்படலாம்என்று ஜிம் கடைசியாகக் கூறியதை முல்லி ஒப்புக்கொண்டாள்.
நியூயார்க்கிலிருந்த ஒரு பிரம்மாண்டமா ஓட்டலில் ஸாம் குழு தங்கியிருந்ததுஹோட்டல் அறை வழிய வழிய வந்து சேர்ந்த நிருபர்கள்போட்டோகிராபர்கள்டெலிவிஷன்காரர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்.
மனிதனாவதுபறப்பதாவது!...”

May 25, 2017

மனிதன் பறவை ஆகலாம் - பாகம் 1


 முன் குறிப்பு:
சுமார் 45 வருஷத்திற்கு முன்பு தினமணி கதிரில், நான் மொழிபெயர்த்த இந்த கட்டுரை சமீபத்தில்  ஒரு வாசக ரசிகர் கண்ணில் பட்டிருக்கிறது.  படித்துப் பார்த்திருக்கிறார்.. அவருக்குப் பிடித்திருந்தது. ‘தாளிப்பு’வில் போட சிபாரிசு செய்ததுடன், அதை தட்டச்சும் செய்து அனுப்பி விட்டார்.
அதை இரண்டு பாகங்களாகப் போடுகிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் என்னைப் பாராட்டுங்கள்; இல்லாவிட்டால் அந்த  நேயரைக் காய்ச்சுங்கள்.. அடடா. அவசரத்தில் மாற்றி எழுதி விட்டேன்!  அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!
=============================
திடீரென்றுதான் ஸாமுக்குத் தோன்றியது, தம்மால் பறக்க முடியும் என்று. மாதா கோவிலில் வேதத்திலிருந்து சில அத்தியாயங்களைப் படித்துக் கொண்டிருந்த ஸிஸ்டர் மின்னியின் சொற்பொழிவை வேண்டாவெறுப்பாக , ஸாம், அவர் மனைவி முல்லி இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். "ஆழமான நம்பிக்கை மலையையும் நகர்த்தும்" என்ற வேத வாக்கியத்திற்கு அவர் அப்போது விளக்கம் தந்துகொண்டிருந்தார்.
"கோவிலில் கூடியிருக்கும் ஆயிர கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து மலையடிக்குப் போய், "மலை நகர வேண்டும்" என்று திடநம்பிக்கையுடன் விரும்பினால் போதும்; அது தானாகப் பத்தடி ஒதுங்கிப் போகும். ஆனால் மலையை நகர்த்த வேண்டிய அவசியம் இப்போது யாருக்கும் இல்லையாதலால், நம்பிக்கையால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை" என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்....
கடைசியாகத் தொண்டை கிழிய அந்த வேத வாக்கியத்தைப் பாடி முடித்துவிட்டுச் சபை கலைந்தது.
வெளியே பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த முல்லியும் ஸாமும் காலிபோர்னியாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஸாமுக்குத் தெரியும், காலிபோர்னியாவிலேயே நிரந்தரமாகத் தங்க நினைக்கிறாள் முல்லி என்பது. ஏனெனில் முல்லியாவது, அவர்களது பெண் லாவினியாவது காலிபோர்னியாவை ஒரு நாளைக்கு நாற்பது தரமாவது புகழ்வார்கள். லாவினியாவுக்கு ஹாலிவுட்டில் பெரிய சினிமா ஸ்டாராக ஜொலிக்க ஆசை. ஆக, அவர்களுக்கு இங்கிலாந்து திரும்பும் எண்ணமே கிடையாது.
பஸ் வருகிற வழியாக இல்லை. சளசளவென்று முல்லி ஏதோ பேசிக் கொண்டே இருந்தாள்- சாதாரண பெண்களின் வழக்கப்படி. ஸாம் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தலையை ஆட்டிக் கொண்டே இருந்தார்-சாதாரண ஆண்களின் வழக்கப்படி, ஆனால் அவர் மனது மட்டும் நம்பிக்கை, மலை, நகர்தல்- இவைகளை அசை போட்டுக்கொண்டே இருந்தது. நகர்த்துவது என்பது பெரிய விஷயம். சின்னதாக ஆரம்பித்துத்தான் பெரிய விஷயங்களுக்குப் போக வேண்டும். சரி, இப்போது நம்பிக்கையால் நமக்கு வேண்டிய டவுன் பஸ்ஸை வரவழைப்போம்.
கண்களை/ மூடிக்கொண்டு ஸாம் முணுமுணுத்தார்: "எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கண்களைத் திறக்கும்போது ஒன்பதாம் நம்பர் பஸ் வந்திருக்கும்". அவர் இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னால் முல்லி அவரை உலுக்கி, "பஸ் வந்து விட்டது, அதற்குள் என்ன தூக்கம்?" என்றாள்.
ஸாம் கண்களைத் திறந்தார். என்ன ஆச்சரியம், அதே பஸ் வந்து நின்று கொண்டிருந்தது! தற்செயலாக இது நிகழ்ந்திருக்கலாம். இருந்தாலும் ஸாமுக்கு அந்த சக்தியின்மேல் பலத்த நம்பிக்கை விழுந்துவிட்டது. பஸ் அவர்கள் இறங்க வேண்டிய இடத்துக்கு வந்து நின்றது. முல்லியும் ஸாமும் வீட்டை நோக்கி நடந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரத்திலிருந்த கடல், அலை வீசிக்கொண்டிருந்தது. அந்தக் கடலுக்கு வெகு தூரத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் மாளிகைகள்: கடல் பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்தன.
இந்தச் சமயத்தில்தான் ஸாமுக்குத் திடீரென்று தோன்றியது, மனிதன் பறக்க முடியும் என்று!

January 09, 2017

"நான் ரசித்த ஒரு வாசகம்" -- ஹிட்ச்காக்

A tale which holdeth children from play and old men from the chimney corner… . – Sir Philip Sidney.

சமீபத்தில் ஒரு வித்தியாசமான புள்ளிவிவரம் என் கவனத்திற்கு வந்தது. சற்று நம்ப முடியாததாக இருந்தது அது: ஒரு ஆண்டில் அமெரிக்க வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்திற்குச் சிகிச்சை பெற தூக்க மாத்திரை உட்கொள்ள டாக்டர்கள் எழுதிக்கொடுத்துள்ள மருந்து சீட்டுகளின் எண்ணிக்கை 40 கோடியாம். எந்த மருந்தைக் கொடுத்தார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மருந்தை விட சிறந்த வேறொரு விஷயத்தை மருந்து சீட்டாகக் கொடுக்க என்னிடம் ஒரு யோசனை உள்ளது.
            ஒரு திகில் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் குலுக்குங்கள். மனதில் மேலும் மேலும் குலுக்குங்கள்.
            துணிகரமான செயல்களைப் பற்றியும் பல மரணங்களைப் பற்றிய கதைகளையும் தெருப்பாடகர்கள் பாடிய அந்தக் காலத்திலிருந்து, திகிலும் மர்மமும் நிறைந்த கதைகள் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டதுடன், அவர்கள் வாழ்வில் உள்ள பிரச்னைகளை சிறிது நேரமாவது மறக்கச்செய்து கட்டிப்போட்டன. ஒரு மணி நேரம் இப்படிக் கட்டுண்டவன், மர்மக்கதையின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியே வரும்போது புத்துணர்ச்சியுடன் நாளைய தினத்தை அணுகுகிறான். 
மர்மக்கதை உலகம் ஒரு கட்டுக்கதை உலகம்தான். விமர்சகர்கள் இதை பிரச்னைகளிலிருந்து தப்பிக்கும் வழி என்கிறார்கள். இது என்ன தீமையானதா? பலவித கேளிக்கைகள் உள்ளன – உங்களை உங்களிடமிருந்து வெளியே கொணர்ந்து நீங்கள் படிக்கும் கதை அல்லது பார்க்கும் திரைப்படம் காட்டும் கற்பனை உலகை உண்மை போல் சித்தரிக்கின்றன. படிக்கும்போது அல்லது படித்து முடித்தபின், குற்றவாளி பிடிபட்டதும், நீங்கள் உங்கள் உலகத்திற்கும் உங்கள் கவலைகளுக்கும் திரும்புகிறீர்கள். நீங்கள் மர்மக்கதை சுற்றுலா பயணத்திற்குப் பிறகு திரும்பும்போது உங்கள் மனதில் தெளிவும், உங்கள் உணர்வுகளில் அமைதியும், உங்கள் பிரச்னைகள் ஒன்றும் சமாளிக்க முடியாததல்ல என்ற தெம்பும் உண்டாகும்.
     பிரச்னைகள் உள்ள சிலருக்கு ஒரு மனோதத்துவ நிபுணரிடம் செல்வது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்களை என்னுடைய மாயாஜாலக் கஷாயமே குணப்படுத்திவிடும்.
     ஒரு மர்மக்கதை அளிக்கும் தூய்மையான பொழுதுபோக்கை ரசிப்பது பற்றி உங்கள் மனதில் ஏதாவது குற்ற உணர்ச்சி இருந்தால் அதை நீக்கவே இந்த சிறிய உபதேச வரிகளை எழுதுகிறேன். இந்த மர்மக் கதைகள் தரும் ‘திக் திக்’ கணங்களையும் உற்சாகமூட்டும் தருணங்களையும் நீங்கள் ஹாயாக ரசிக்கலாம். மன அழுத்தம் போக இது ஒரு மருத்துவ யோசனை. இவை உங்கள் மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் தந்து, மகிழ்ச்சிகரமான மனிதனாக ஆக்கினால், இந்த மர்மக்கதை உலகில் நான் ஆற்றிய பணிகள் வீண் செயல் அல்ல என்று நான் உணர்வேன்.
பி.கு.  இக்கட்டுரை  பல வருடங்களுக்கு முன்பு  எழுதப்பட்டது.

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!



December 30, 2016

புத்தக அபேஸ் : ஒரு ‘சாதனை’யாளரின் கதை

கடை கண்ணிகளில், முக்கியமாக சூப்பர் பஜார், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் ஆகியவைகளில் பொருள்களை கடத்திப்போவது சற்றுச் சுலபம். இப்போது கண்காணிப்பு காமிராக்கள் வந்துள்ளதால் ஓரளவு குறைந்திருக்கக் கூடும்.

புத்தக சாலைகளில் இப்படி நடப்பதும் சகஜம். ஆனால் புத்தகத்தை அபேஸ் செய்பவர்கள் சற்றுப் படித்தவர்கள் என்பதால் இது ஒரு கௌரவமான திருட்டாக (அவர்களால்) கருதப்படுகிறது.
அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பல்கலைக்கழகப் புத்தக சாலையில் உறுப்பினராகச் சேர்ந்தேன்எனக்குப் பிடித்த சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றை இஷ்யூபண்ணுவதற்குக் கொடுத்தேன்.
அதில் பார் கோடுகள் ஒட்டப்பட்டிருந்ததால் அவற்றை சர் சர்ரென்று தேய்த்து வைத்தார். அவற்றை எடுக்கப் போனேன். ஒரு நிமிஷம் இருங்கள்என்று சொல்லி, அவற்றை எடுத்து புத்தகம் ஒவ்வொன்றையும் மணை மாதிரி இருந்த ஒரு பலகையின் மீது ஒரு செகண்டு தேய்த்துவிட்டுக் கொடுத்தார்கள்.