Showing posts with label ரா.கி.ர. Show all posts
Showing posts with label ரா.கி.ர. Show all posts

August 11, 2018

ரா கி. ரங்கராஜனின் முத்தாய்ப்பான முடிவுரை!

ரா கி. ரங்கராஜன்எழுதிய நாவல்களில் மிகச் சிறந்ததாக  ‘படகு வீடு’ நாவலைக் கூறுவார்கள். அந்த நாவலுக்காகவும் வேறு ஒரு நாவலுக்காகவும் (அடிமையின் காதல்?) தகவல் திரட்ட காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்குச் செல்ல, இரண்டு தடவை டெல்லி வந்து என் வீட்டில் தங்கினார். 

அவர் கையுடன் கொண்டு வந்திருந்த  200 பக்க பவுண்ட் நோட் புத்தகத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார், மெள்ள அதை எடுத்துப் பார்த்தேன். கிட்டதட்ட 200 பக்கமும் ஒரு நாவல் அளவு குறிப்புகள் வரிந்து தள்ளி இருந்தார்!
  ‘படகு வீடு' நாவலின் கடைசி அத்தியாயத்தில் முத்தாய்ப்பாக அவர் எழுதி முடித்து இருப்பது, ஒரு அற்புத இலக்கிய விருந்து என்பேன்.
*                       *                                  *


*                                       *                     *
x

படகு வீடு

பிரபஞ்சத்தினும் பெரிதானாற் போலவும் சொல்லிற்கு அப்பாற்பட்ட உணர்விலே ஒன்றுகிறது அவர் சிந்தை.
     அவர் குறளடிகளைத் தியானிக்கிறார்:"யானெனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் பெறும்."
     அவர் கீதையின் திருவாசகத்தைத் தியானிக்கிறார்.; அவ்வுயிர்களிடத்தும் பகைமை இல்லாதவனாய், சினேகம், பூண்டவனாய், கருணையே உடையவனாய், எனது, நான் என்னும் எண்ணம் இல்லாதவனாய், இன்பத்தையும் துன்பத்தையும், சமமாய்க் கருதுபவனாய், பொறுமையுடையவனாய், எப்போதும் சந்தோஷமுடையவனாய் யோகத்தில் நாட்டமுடையவனாய் அடங்கிய  மனத்தினனாய், திடமான நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும்  புத்தியையும் அர்ப்பணம் செய்தவனாய் எவன் இருக்கிறானோ அவன் என் பக்தன்; எனக்கு பிரியமானவன்.
     அவர் பகவான் அரவிந்தரின் பொன் மொழிகளை தியானிக்கிறார்: “வாள் தன்னை ஆக்கச் சொல்லவில்லை. தன்னை உபயோகிப்பவனை தடுக்கவில்லை. நான் உடைந்து போனாலும், ஒதுக்கி வைக்கப்பட்டாலும் வருந்தவில்லை; ஆக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு; உபயோகப்படுவதிலும் ஆனந்தமுண்டு; ஒதுக்கி வைக்கப்படுவதிலும் ஆனந்தமுண்டு அந்த சமமான ஆனந்தத்தை நீ கண்டுகொள்.”
     அவர் திருநாவுக்கரசரின் பாடலை தியானிக்கிறார்:”மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி, சினமெனும் சரக்கை ஏற்றிச் செருகடல் ஓடும்போது மதமெனும் பாறை தாக்கி மறியும்போது அறிவவொண்ணாது உனையுன்னும் உணர்வை நல்காய். தான் என்பது அடங்கினால் சகலமும் அடங்கும். எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு தன்மையுண்டு. மனத்தை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கே இருந்தாலும்  இருக்கலாம்.”
     
அவர் தியானித்துக் கொண்டே இருக்கிறார்.
விமானம் உயர உயர எழும்பிக்கொண்டே இருக்கிறது

===================
ரா.கி.ரங்கராஜனைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை முன்பே எழுதியுள்ளேன். பார்க்க விரும்புபவர்களுக்கு இதோ சுட்டி:  ரா.கி.ரங்கராஜன்

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி . சுமதி  ராஜா.  அவருக்கு என் நன்றி  

February 11, 2013

லைட்ஸ் ஆன்

 லைட்ஸ் ஆன்!
 இந்த இரண்டு சிறிய பதங்கள் ஒரு பெரிய எழுத்தாளரின் அடையாளமாகப் போய்விட்டது என்றால் அது அந்தப் பதங்களின் சிறப்பு அல்ல. அவரால் அந்த பதங்கள் பெற்ற கௌரவம்.

 ரா, கி, ரங்கராஜன் கலைமாமணிக்கோ பத்மஸ்ரீக்கோ ஆசைப்படவில்லை. இதற்கெல்லாம் எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது என்று அவருக்குத் தெரியும். பார்க்கப் போனால், இந்தத் திறமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை,வேறு சில ‘திறமைகள்’ இருக்கவேண்டும்.
ஆகவே அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. 

ஆனால் தனது  லைட்ஸ் ஆன்! கட்டுரைகள் புத்தகமாக வரவேண்டும் என்று விரும்பினார். துரதிர்ஷ்டவசமாக எந்த பதிப்பகமும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் எழுத்தாளர்கள் ‘சுபா’ வின் தங்கத்தாமரைப் பதிப்பகம் அதை வெளியிட்டது. . (அவர் அதைப் பார்க்காமல் காலமாகி விட்டார் என்பது சோகம்!)

புத்தகத்திலிருந்து  இரண்டு மூன்று பத்திகளை இங்கு தருகிறேன்.  புத்தகத்தை வாங்கி முழுமையாகப் படியுங்கள். சுவையோ சுவை!
தொடர்பு கொள்க: தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை,கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020  போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70.
******                                                                       
* சூப்பர் ஸ்டார்களின் லட்சணம் யாது? அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது. ரஜினிக்கு சௌந்தர்யா, ஐஸ்வர்யா. கமலுக்கு முதலில் சுருதி ஹாசன். இப்போதும் பெண் (என்ன ஹாசன் என்பது இன்னும் தெரியவில்லை). கமல்தான் ஹாசனை விடமாட்டேன் என்கிறாரே தவிர, ஹாசன்களுக்குக் கமலிடம் இன்னும் பாசம் ஏற்படக் காணோம். சாருஹாசன் குடும்பத்திலிருந்து யாரும் கமலின் லஸ் சர்ச் வீட்டுக்கு வந்து புதிய வாரிசைப் பார்க்கவில்லை. -Still maintaining a stiff upper lip!

* Oh, by the way, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஒரு பயிற்சி முகாமில் பங்கு கொள்வதற்காகப் புறப்பட்ட பாரதிராஜா சோழா ஓட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தார். (அது ஒரு ஆச்சரியமான விஷயம். பாரதிராஜா இதுவரை Press meet வைத்ததாக சரித்திரம் கிடையாது.)
 

"26 படங்கள் தயாரித்தேன். அதில் எட்டுப் படம் சில்வர் ஜூபிளி, ஆறு படம் நூறு நாள்" என்ற புள்ளி விவரங்களை வழங்கினார். அவர் அறிமுகம் செய்த ஹீரோ, ஹீரோயின்கள் முப்பது பேராம். அவர் கீழே உதவி டைரக்டர்களாக இருந்து டைரக்டர்களாகியிருப்பவர்கள் எட்டுப் பேராம்.
"இந்த அமெரிக்க அழைப்பு அவார்டு கிடைப்பதை விடப் பெரிசு" என்று பாரதிராஜா சொன்னார். மனிதர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டுமா? Amusing!
*ரஜினி கெட்டிக்காரர். எந்தச் சமயத்தில் எதிலிருந்து கழட்டிக் கொள்ள 
வேண்டுமென்ற தெரிந்து வைத்திருப்பவர்.
திருநாவுக்கரசுவின் மருதுபாண்டி நூறாவது நாள் விழாவுக்கு அவர் வருகை தர ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் அழைப்பிதழில் ரஜினிகாந்த் என்று தமது பெயரைப் பாட அனுமதிக்கவில்லை. சூப்பர் ஸ்டர் என்று குறிப்பிட்டிருந்தார்கள். (Ôசூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால்...Õ) பேசும்போது கூட தானும் திருநாவுக்கரசும் நெருங்கிய நண்பர்கள் என்பதால்தான் இந்த விழாவுக்கு வந்ததாக அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டார். Unenviable position தான் பாவம்.



*எம்.எஸ்.விசுவநாதனிடம் ஒரு Sense of Humour உண்டு என்று அன்று தெரிந்து கொண்டேன். மரியாதையுடன் ஒரு அன்பர் அவர் காலைத் தொட்டு வணங்கினார். அவரை யாரோ ஒரு இசை டைரக்டர் போலிருக்கிறது என்று எண்ணிய எம்.எஸ்.வி. "நல்லா மியூசிக் செய்யுங்க" என்று ஆசீர்வாதம் பண்ணினார். "ஐயோ, எனக்கு மியூசிக் வராதுங்க" என்றார் அந்த அன்பர். எம்.எஸ்.வி. சளைக்கவில்லை
"அட, அப்படியானால் நீதான் இன்று தமிழ்நாட்டிலேயே பெஸ்ட் மியூசிக் டைரக்டர்!" என்றார்.