Showing posts with label சாவி. Show all posts
Showing posts with label சாவி. Show all posts

January 10, 2018

ஆசிரியர் சாவியுடன் சில நாட்கள்

முன் குறிப்பு. இது சில வருஷங்களுக்கு முன்புஎழு தப்பட்டது,

சகோதரி ஷ்யாமா அவர்கள் எழுதியுள்ள சாவியுடன் சில நாட்கள் புத்தகத்திற்கு ஒரு சிறுகுறிப்பு எழுதித் தரவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தேன். படிக்கும்போது சாவி அவர்களைப் பற்றிய பற்பல சம்பவங்கள் எனக்குத் தோன்றியது. அவற்றை ஓரளவு இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஷ்யாமாவின் புத்தகத்தில் நான் நிறைய பக்கங்களை எடுத்துக் கொள்வது தவறு. அவர்தான் என்னை முகவுரை எழுதிக் கொடுங்கள் என்று என்னைக் கேட்ட தவறைச் செய்தார் என்றால் நானும் பதிலுக்குத் தவறு செய்வது சரியில்லை
 ஆகவே சுமார் 10- 15 பக்கங்களுக்குள் சுருக்கமாக எழுத எண்ணியுள்ளேன்.

வாஷிங்டனில் திருமணம் போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய நாவலைப் போல் இன்னும் யாராலும் எழுதப்படவில்லை. அந்த நாவலைப் படித்த நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனானது வியப்பானதல்ல. கல்கியின் எழுத்தைப் படித்து அவரது பக்தனானேன். எனக்கு எழுத்து மோகம் பிடித்ததற்குக் காரணம் கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன் மற்றும் ஆர்.கே.நாராயணன் ஆகியோரின் படைப்புகள்!

தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பை சாவி  ஏற்றதும், முன்பின் அறிமுகம் இல்லாத எனக்கு.கதிருக்குக்   கதை எழுதித்தர முடியுமா என்று   கடிதம் எழுதினார்ஈகோ என்பது முற்றிலும் இல்லாத மிகப்பெரிய ரசிகர். நான் எழுதாத நகைச்சுவையா? நான் எழுதாத கதைகளா? நாவல்களா?’ என்று தனக்குத்தானே மார்பில் மெடல்களைக் குத்திக் கொள்பவர் அல்ல அவர்.

ஷ்யாமா அவர்கள், இப்புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபடி, குமுதம் இதழின் மீது அவருக்கு அபார மதிப்பு உண்டு. அதன் காரணமாக குமுதத்தில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் அவர் மகா ரசிகர். அதனால்தான் எனக்கு அவர் கடிதம் எழுதினார். (இப்படியே அவர் பலருக்கும் எழுதியிருப்பார்.)  நகைச்சுவை கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். எனக்குத் தலைகால் புரியவில்லை. நமக்கும் நகைச்சுவை எழுதும் திறமை இருக்கிறது என்று, எனக்கே நான் ஷொட்டு கொடுத்துக் கொண்டு எழுதி அனுப்பினேன். மிஸ்டர் பஞ்சு என்ற தலைப்பில் ஒரு கதையைஇதழின் அட்டையிலேயே அகஸ்தியன் எழுதிய மிஸ்டர் பஞ்சு ம் பக்கம் என்றும் போட்டு விட்டார். இதுதான் சாவி. இப்படித்தான் தகுதி உள்ளவர்களையும், என்னைப்போல் தகுதி குறைந்தவர்களையும் தூக்கி விடுவார். இத்தனைக்கும் அப்போது என்னை நேரில் பார்த்தது கூடக் கிடையாது.

June 13, 2016

சாவியும் சத்யசாயியும்

ஒரு வியப்பூட்டும் தகவல்.

       ஆசிரியர் சாவி என்மேல் அளவு கடந்த அபிமானம் கொண்டவர். நீங்கள் என் ‘CONSCIENCE KEEPER’ என்று கடிதத்தில் எழுதியது மட்டுமல்ல, எத்தனை எத்தனையோ விஷயங்களில் என் ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார். மகிழ்ச்சிகரமான விஷயங்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்; சோகம், ஏமாற்றம், கஷ்டம், நஷ்டம் போன்றவற்றையும் என்னிடம் பகிர்ந்துகொண்டு ஆறுதல் அடைந்திருக்கிறார். அவர் என்னிடம் என்ன கண்டார் என்று எனக்குத் தெரியாது.
அவரைப் பற்றிய நினைவுகள் எப்போதும் என் மனதில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன.  அவர் என்னிடம் சொன்ன ஒரு வியப்பூட்டும் தகவல்.

       சாவி அவர்களுக்கு சத்ய சாயிபாபா மீது அளவற்ற பக்தி. வீட்டில் பூஜை அறையில் பெரிய படம் வைத்திருப்பார். அவர் வீட்டிற்கு எப்போது நான் சென்றாலும் பூஜை அறைக்கு அழைத்துச் செல்வார்.

     பாபாவின் வரலாறை. ஸ்ரீவேணுகோபாலனை எழுதச் சொல்லி சாவியில் தொடராகப் போட்டதுடன், புத்தக வெளியீட்டையும் விழாவாகக் கொண்டாடினார். பாபாவின் புகைப்படங்கள், ஓவியங்கள் என்று ஒரு கண்காட்சியையும் (மியூசிக் அகாடமி ஹாலில் என்று நினைவு)  நடத்தியிருக்கிறார்.

அதில் ஒரு பெரிய படம் -- பெங்களூர் ஓவியர் வரைந்தது -- அற்புதமாக இருந்தது; அனைவரையும் கவர்ந்தது. (இந்தக் கால கட்டத்தில் நான் டில்லியில் இருந்தேன்.)  ந்தப் படத்தைப் பார்த்ததும் சாவி மேலும் தீவிர சாயி பக்தராகி விட்டார்.

சாவி காலமாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என் மனைவியும் நானும்  சென்னை வந்தோம்.  சாவியை அவர் வீட்டில் சந்தித்தோம்.

அப்போது அவர் சத்ய சாயியின்  இந்த ஓவியத்தைப்ப ற்றி ஒரு அரிய அனுபவத்தைக் கூறினார். சிற்சில குட்டி விவரங்கள் மறந்துபோய் விட்டன.  நினைவில் உள்ளதைக் கூறுகிறேன்.

April 05, 2014

பெரியவா செய்த அற்புதம்

ஒரு கிளியாட்டம் இருந்த பெண்.
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனைப் பற்றி  எத்தனையோ ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டாலும், இன்றும் அவரைப் பற்றிய துணுக்குத் தகவல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதுமாதிரி தான் காஞ்சி மகா பெரியாவாளைப் பற்றிய பல அரிய தகவல்கள், அனுபவ பூர்வமான சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  இதுவரை வராத ( என்று நினைக்கிறேன்!)  ஒரு வியப்பூட்டும் தகவலை இங்கு தருகிறேன்.

ஆசிரியர் சாவி  பல வருஷங்களுக்கு முன்பு என்னிடம் விவரித்ததை அப்படியே தருகிறேன்..
*            *
 சாவி சொன்னது:
கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.

நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.

இந்த தடவை போனபோது  வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.

சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு .குடும்பம் வந்தது.  அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று  ஐந்து பேர்.
நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது.  சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும்,  களையான முகமும், அடக்க ஒடுக்கமான  பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.
அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக  வைத்துவிட்டு நஸ்கரித்தார்கள்.  பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.

அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நஸ்கரித்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு போனபடி இருந்தனர்.
பெரியவா  எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும்,  பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பதுபோல் எனக்குப் பட்டது.

February 24, 2013

சாவி...


பிப்ரவரி மாதம் வந்தாலே ஆசிரியர்  சாவியின் நினைவு கூடுதலாகவே   வந்து மனதில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அவரது 85 வது பிறந்த தின பாராட்டு விழாவில் மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே இறைவன் திருவடி அடைந்தார்.
நம்ப மாட்டீர்கள், பிறந்த தின விழா அழைப்பிதழை டில்லியில் இருந்த எனக்கு
அவர் கைப்பட முகவரி எழுதி எனக்கு அனுப்பி இருந்தார்! குறைந்தது 500-600 அழைப்பிதழ்களாவது அனுப்பபட்டிருக்கும். அதில் என் அழைப்பிதழில் அவரே எழுதியதை எண்ணி நான் ஜம்பம் அடித்துக் கொள்ள இதைக்குறிப்பிட வில்லை.  நட்பைப் போற்றும் அவரது  பண்பை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
விழா நடந்த அன்று நான் அமெரிக்காவிற்குப் புறப்பட்டேன். அருமை நண்பர் ராணி மைந்தன், தான் எழுதிய “ சாவி 85” புத்தகத்தை ( விழாவில் வெளியிடுவதற்கு முன்பே!) எனக்கு அனுப்பியிருந்தார்.   நான் புறப்படும் தினம் புத்தகம் எனக்கு வந்தது. விமானத்தில் படிக்க எடுத்துக் கொண்டேன். அப்படியே படித்துக் கொண்டு போனேன். ” எத்தனை பெரிய எழுத்தாளர்  சாவி. அவருடைய தொடர்பும் பாசமும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்ததை எண்ணி, கண்களில் நீர் மல்க மெய்மறந்தேன். அமெரிக்காவில் இறங்கியதும்  அவர் மயங்கி விழுந்த தகவல்  வந்தது.  அப்போது கண்ணீர் விட்டு அழுதேன்.

சாவியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம், அவ்வப்போது எழுதினால் தான் எனக்கு மன நிம்மதி ஏற்படும்,
=                           =
ஒரு சமயம் அவரிடம் சொன்னேன்: “  சார்..உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட   பல வேறு அனுபவங்களை என்னிடம்  பல சமயம் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சுய சரித்திரத்தை   நீங்கள் எழுதுங்களேன்”
அதற்கு அவர், “நான் என்ன சாதனை செய்திருக்கிறேன், சுய சரித்திரம் எழுதுவதற்கு?” என்று கேட்டார்.

”இல்லை செய்துதான் இருக்கிறீர்கள். சில சம்பவங்கள் நெஞ்சைத் தொடுகின்றன. சில, எங்கள் போன்றவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் ஊட்டக்கூடியவை. தோல்விகளைக் கண்டு துவளாது, அவற்றிலிருந்து மீண்டு கம்பீரமாக நீங்கள் எழுந்து வந்திருப்பது பலருக்கு நம்பிக்கையைத் தரும்” என்றெல்லாம் சொன்னேன்.
”உங்கள் ஆசை எனக்குத் தெரிகிறது. சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் பிரமாதமாக எதையும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை என்றார். அத்துடன் நான் நிறுத்திக்கொண்டேன்.  

அவர் சொன்ன ஒரு குடும்ப நிகழ்ச்சியை அவர் எழுதுவது மாதிரி ஒரு கட்டுரையை சில நாட்கள் கழித்து எழுதினேன். அதில்  என் பெயரைப் போட்டுக் கொள்ளவில்லை. தபாலில் அவருக்கு அனுப்பினேன்.  

January 13, 2012

சாவிக்கு ஒரு புகழ் மாலை - ரவிபிரகாஷ்


கடுகு குறிப்பு:
சாவி அவர்களைப் பற்றி ஒரு புததகமே எழுதலாம். ராணிமைந்தன். புஷ்பா தங்கதுரை, கோபுலு,ரவி பிரகாஷ், நான் ஆகியவர்களிடம் அத்தனை தகவல்கள் உள்ளன.
அவரது  எழுத்துத்திறமையை விட்டுத் தள்ளுங்கள். மனிதநேய சம்பவங்கள் ஏரராளமாக உள்ளன.
தன்குறைகளை தயங்காமல் எடுத்துச் சொல்வார்.
மாபெரும் ரசிகர். அவரால் செதுக்கப்பட்டவர் என்றும் சோடை போனதில்லை. ரவியின் கட்டுரையில் கடைசியில் காத்திருக்கிறது ஒரு முத்தாய்ப்பு..
ரவியின் ” உங்கள் ரசிகன்” வலைப்பூவில் வந்த பதிவை இங்கு தருகிறேன்.
நன்றி :ரவிபிரகாஷ்.உங்கள் ரசிகன்:
=============================================
 சாவி சாரின் அபூர்வ படம். தன் மகன்கள் பாச்சா (எ) பாலசந்திரன், மணி மற்றும் மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் மாலதியுடன் சாவி சார். கடைக்குட்டிப் பெண்தான் மாலதி.
-                 -                      -


‘சாவி’ என்று அந்த மாமனிதரின் பெயரை தட்டச்சு செய்யும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியது நான் செய்த பாக்கியம். ஆனால், அவரிடம் பணியாற்றிய காலத்தில் அதை நான் பூரணமாக உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.

அவர் என்னிடம் உரிமையோடு கோபித்துக்கொண்டபோதெல்லாம் அது என் நன்மைக்காகவே என்பது புரியாமல், மோதிரக் கையால் பெறப்படும் குட்டுக்கள் அவை என்பதை உணராமல், பதிலுக்கு பதில் நானும் அவரிடம் முறைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பு கூசுகிறது. என்னை நானே எதாலாவது அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சாவி பத்திரிகையை முழுக்க முழுக்க என்னை நம்பி விட்டிருந்தார் சாவி. அவர் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே கவனிப்பார். மற்ற விஷயங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வடிவமைப்புகளை எல்லாம் என் விருப்பத்துக்கேற்பத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். ஒரு முறை, சிறுகதை ஒன்றின் படத்தை சாவி பத்திரிகை அட்டையில் வெளியிட்டு, அதன் கீழேயே கதையின் ஆரம்பச் சில வரிகளைப் பெரிய எழுத்தில் பிரசுரித்து, தொடர்ச்சி உள்ளே எனக் குறிப்பிட்டேன். அவ்வளவு ஏன்... இம்ப்ரிண்ட் என்று சொல்லப்படும் ஆசிரியர் குழுப் பட்டியலை சாவி பத்திரிகை அட்டையிலேயே ஒருமுறை வெளியிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்குமே மாற்றுக் கருத்து சொன்னதில்லை அவர். ‘இம்ப்ரிண்ட்டை அட்டையில் வெளியிடணும்கிற விசித்திரமான யோசனை யாருக்குமே தோணாது, ரவி!’ என்று புன்னகைத்துப் பாராட்டத்தான் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் என் மீது அக்கறை கொண்டு உரிமையோடு கோபித்துக் கொண்டபோது அதை ஆசீர்வாதமாக ஏற்காமல், பதிலுக்கு நானும் முறுக்குக் காட்டியதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

ஒருமுறை, எஸ்.சங்கரநாராயணன் என்கிற எழுத்தாளர் ‘அன்றிரவு’ என்று ஒரு சிறுகதையை என்னிடம் பரிசீலனைக்கு நேரில் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அண்ணா நகரில், சாவி இல்லம் - கம் - அலுவலகத்துக்கு அருகில் இருந்த போஸ்ட் அண்ட் டெலகிராஃப் ஆபீஸில் அப்போது பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனவே, தனது படைப்புகளைப் பொடி நடையாக நேரிலேயே வந்து கொடுப்பது அவர் வழக்கம். அவர் தந்த ‘அன்றிரவு’ கதையை அன்றிரவே படித்து, அந்த வார சாவி இதழிலேயே பிரசுரித்துவிட்டேன்.

சாவி இதழுக்கு பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள் மொத்தத்தையும் என் ஒருவனால் படிக்க முடியாது என்பதால், அவற்றை சாவி சாரின் கடைசி மகள் மாலதிக்கு அனுப்பி வைப்பேன். அவர் படித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சிறுகதைகளையும் வெளியிடுவேன். ஆனால், அப்படி அனுப்புவதற்கு முன்பு, உடனடி தேவைக்காக, நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை நானே பரிசீலிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

‘அன்றிரவு’ சிறுகதை ‘சாவி’யில் வெளியாகி, இரண்டு நாட்கள் கழித்து, சாவி சார் என்னை அழைத்தார். “இந்த வார இஷ்யூவுல வந்திருக்கிற ‘அன்றிரவு’ கதையை யார் படிச்சு செலக்ட் செஞ்சது?” என்று கேட்டார். “நான்தான் சார்” என்றேன். “கதை அப்படி ஒண்ணும் நல்லா இல்லையாமே? எப்படி இதை செலக்ட் பண்ணினே?” என்றார். “இல்ல சார், நல்ல கதைதான்...” என்றேன். “ம்ஹூம்! கதை ரொம்ப சுமாரா இருக்குப்பான்னு மாலதிதான் போன் பண்ணிச் சொன்னா!” என்றார் சாவி. “இல்ல சார், அந்தக் கதை அப்படி ஒண்ணும் மோசமான கதை இல்லே!” என்றேன். “மோசமான கதை இல்லேங்கறியே தவிர, நல்ல கதைன்னு சொல்ல மாட்டேங்கிறே பார்த்தியா?” என்று என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்கியவர், “கதை செலக்ட் பண்றதுல நீ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும் ரவி! சுமார் ரகக் கதைகளை எல்லாம் யோசிக்காம தள்ளிடு. நல்ல கதைகள் மட்டும்தான் சாவியில் வெளியாகணும். பக்கத்துல இருக்கிறவங்க நேர்ல கொண்டு வந்து கொடுத்தாங்கன்னு முக தாட்சண்யத்துக்காக எல்லாம் சிறுகதைகளைப் பிரசுரிச்சோம்னா பத்திரிகை பேர் கெட்டுடும்” என்றார் சாவி.