October 26, 2016

THREE Ks

 துணுக்குத் தோரணம்
K -1: குருஷ்சேவ் வந்தபோது
அமெரிக்காவில் நியூஜெர்சியில் உள்ள 150 வருட பழைய கல்லூரியின் நூல் நிலையத்திற்கு இரண்டு வருஷத்திரற்கு முன்பு முதல் முறையாகப் போனேன்.  நூல்நிலையத்தில் புத்தகங்களை இங்கேயே படிக்கலாம்; ஆனால் வீட்டிற்கு எடுத்துப் போக முடியாது” என்றார்கள்.  

 அது பிரம்மாண்டமான புத்தகசாலை. முதல் நாள் ஒவ்வொரு மாடியாகப் போய், ஷெல்ஃப்களை எல்லாம் ஆசையுடன் தழுவியபடியே, என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்று உத்தேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு திரும்ப வைத்துவிட்டேன். சில புத்தகங்கள் இருக்கும் ஷெல்ஃப் எண், call number போன்ற விவரங்களைக் குறித்துக் கொண்டேன்.
   சுமார் மூன்று மணி நேரம் பார்த்துவிட்டு (கால் ஓய்ந்துவிட்டதால்) வீட்டிற்குத் திரும்ப லிஃப்டை நோக்கி வந்தேன். அப்போது ஒரு ஷெல்ஃபில் ஒரு புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. அதை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிய பக்கத்தில் “குருஷ்சேவ் வந்தபோது” என்கிற மாதிரி தலைப்பில் குட்டிக் கட்டுரை இருந்தது. அதை விரைவாகப் படித்தேன்.
            குருஷ்சேவ் முதன்முதலாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்தபோது நடந்த நிகழ்ச்சி. அவர் முதலில் வந்தது சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு.  அங்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹால் கொள்ளாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் திரண்டு விட்டார்கள். பலருக்கு  உட்கார இடம் கிடைக்கவில்லை.  ஒரே சள சள சப்தம். குருஷ்சேவ் வருகைக்குக் காத்திருந்தனர். ஆனால் அதுவரை பேசாமல், வம்பளக்காமல் இருக்க முடியுமா?
      

October 15, 2016

சில சமர்ப்பணங்கள்

புத்தகங்கள் எழுதுவதைக் காட்டிலும் கடினமான வேலை, புத்தகத்திற்கு பெயர் வைப்பது! அடுத்து சமர்ப்பணம் எழுதுவது. அதுவும் நகைச்சுவைப் புத்தகமாக இருந்துவிட்டால் சமர்ப்பணமும் நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி காரணமாக அந்த வேலை கடினமானதாக ஆகிவிடும்.
சில சமர்ப்பணங்களை  வித்தியாசமான, நகைச்சுவையான, குயுக்தியானவற்றைப் பார்க்கலாம். புத்தகசாலைக்குச்   செல்லும்   போதெல்லாம் புத்தகங்களைப் புரட்டி சமர்ப்பணங்களை மட்டும் குறித்துக் கொள்வேன். இது பல வருடப் பழக்கம்.  சில சமயம் சூப்பர் கருத்துகள் கிடைக்கும்.!
*பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பி.ஜி. வோட்ஹவுஸ், ‘THE HEART OF A GOOF’ புத்தகத்திற்கு எழுதிய சமர்ப்பணம். (1926-ஆம் ஆண்டு வெளியான புத்தகம்).  
      “என் பெண் லியனோராவிற்கு: அவளுடைய தொடர்ந்த பரிவும், ஊக்கமூட்டிய சேவையும் இல்லாதிருந்தால் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க நான் எடுத்துக் கொண்ட காலம் பாதியாகக் குறைந்திருக்கும்.!” 
    குட்டிக் குறிப்புஇது வோட்ஹவுஸின் பழைய ஐடியாதான்.  1910-ஆம் ஆண்டு அவர் எழுதிய “A GENTLEMAN OF LEISURE”என்ற புத்தகத்திலும்
இதே சமர்ப்பணத்தை,  லியனோராவிற்கு பதில்வேறு ஒருவருடைய பெயரைப் போட்டுஒரு வார்த்தையும் மாறாமல் அப்படியே எழுதியிருக்கிறார்.

October 07, 2016

நேருஜிக்குப் பிடித்த கவிஞர்

 ராபர்ட் ஃப்ராஸ்ட்
அமெரிக்காவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ராபர்ட் ஃப்ராஸ்ட். அவரை இந்தியாவில் பிரபலமாக்கிய பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உரியது.
         மே, 21 1964 அன்று நேருஜி காலமானார். பகல் இரண்டு மணிக்கு அவர் காலமான தகவல் வந்ததுடன் அலுவலகங்களை இரண்டு மணிக்கு மூடப்போவதாக அறிவிப்பும் வந்தது. அஞ்சலி செலுத்துவதற்காக அவரது தீன்மூர்த்தி இல்லத்துக்குப் போனேன். கூட்டம் சொல்லி மாளாது. கதவுகளை மூடி யிருந்தார்கள். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நுழைவாயில் அருகிலுள்ள கூடத்தில் உடல் வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
      என் வீடு மிக அருகில் இருந்ததால் வீட்டிற்குப் போய்விடலாம்; இரவு 1 மணி 2 மணிக்குத் திரும்பி வந்தால் கூட்டம் குறைந்திருக்கும், அப்போது அஞ்சலி செலுத்தலாம் என்று எண்ணி வீட்டுக்குப் போய்விட்டேன்.
     இரவு 2 மணிக்குச் சென்றோம்.. கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிஷத்தில் உள்ளே போய்விட்டோம். நேருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். அவருடைய அலுவலக அறையைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. யாரையும் வேறு எங்கும் போக விடவில்லை.
            நேரு இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. அவர் தனது மேஜை மேலிருந்த டயரியில் ஒரு ஆங்கிலக் கவிதையின் நான்கு வரிகளை எழுதி வைத்திருந்ததைப் பத்திரிகைகள் வெளியிட்டன.

September 28, 2016

உண்மை, நம்புங்கள்!

Believe it or not   என் பதிவுகளைப் படிப்பவர்கள், அவை சுவையாக உள்ளன என்றோ, அறுவை என்றோ, சிரிப்பை உண்டாக்கியது என்றோ, கண்ணில் நீரை வரவழைத்தது என்றோ கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாரும் ‘ரீல் விடுகிறீர்கள்’ என்றோ, ‘சும்மா கதை விடுகிறீர்கள், நம்ப மாட்டோம’’ என்றோ கூறியதில்லை. இந்தப் பதிவில் மூன்று  குட்டித் தகவல்களை, என் வாழ்க்கை அனுபவங்களைத் தருகிறேன். அவை முழுக்க முழுக்க உண்மை என்று முதலிலேயே தெரிவித்துவிடுகிறேன். நம்ப முடியாத அளவு, ஆனால் உண்மைச் சம்பவங்கள்.
1.டான் கீ ஹோட்டே
ரே பிராட்பரி என்ற பிரபல எழுத்தாளரைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அந்தப் பதிவு எழுதியபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். அதன் சுட்டி: ஆகா! புத்தகங்கள்! அதில் அவர் ஒரு புத்தகத்திற்கு எழுதிய அறிமுக உரையைத் தமிழ்ப்படுத்தித் தந்திருந்தேன். 
அந்த உரையில் DON QUIXOTE என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. உச்சரிப்பும் தெரிய வில்லை. ஸ்பானிஷ் மொழி வார்த்தை அது! எதற்கு வம்பு என்று ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். அதை எழுதும்போது இரவு மணி ஏழு.. தினமும் இரவு 7-7.30 மணிக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சியை எல்லாரும் பார்ப்போம். (மற்ற சமயத்தில் டிவியே போட மாட்டோம்.)
 இரவு ஏழு மணி நிகழ்ச்சியின் பெயர்: JEOPARDY. மிகவும் பிரபலமான, மிகவும் பாப்புலரான வினாடி வினா நிகழ்ச்சி. கடந்த 25, 30 வருஷமாக வாரத்தில் ஐந்து நாள் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒரே நாளில் நாற்பதாயிரம்,   ஐம்பதாயிரம் டாலர்,  என்று கூட ஜெயித்திருக்கிறார்கள்.

September 17, 2016

விளம்பர வாசகங்கள்

ஒரு பொருளைத் தயாரிப்பதை விடக் கடினமானது, அதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்துவது, விளம்பரத்தில் அந்தப் பொருளைப் பற்றி ஒரு குட்டி வாசகம் இருந்தால், அது பலரையும் கவரும்படியாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கவேண்டும்.
            சில வருடங்களுக்கு முன்பு பாப்புலராக இருந்த பல வாசகங்கள் இன்று மறைந்து போய்விட்டன.
            “தொண்டையில் கிச்..கிச்.”, “பேஷ்..பேஷ்..”, “இதை...இதை... இதைத் தா நினைச்சேன்” என்பவை எல்லாம் இப்போதும் உள்ளனவா என்று தெரியவில்லை. அவை இருந்த காலத்தில் பலரின் கவனத்தை அவை கவர்ந்தன என்பதில் சந்தேகமில்லை.
      நான் எழுதிய ஒரு விளம்பர JINGLE, 10-15 வருடங்கள் ரேடியோவிலும் டிவியிலும் சக்கைப் போடு போட்டது. காரணம் அந்த ட்யூன் அவ்வளவு சிறப்பாக அமைந்து விட்டதுதான்.  என் பாடலில் தனி சிறப்பு எதுவுமில்லை.
            இந்த விளம்பரத்தைப் பல மொழிகளில் தயாரித்துத் தர ஒப்பந்தம் செய்யப்பட்ட பம்பாய் நிறுவனம், சென்னை வந்து படப்பிடிப்பை நடத்தியது.
ஒன்றரை வரிப் பாடலுடன் விளம்பரத்தை முடிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஈ. சி ஆரில் படப்பிடிப்பு செய்ய ஏற்பாடு  கொண்டிருந்தார்கள்.