May 31, 2010

ஒரு மேதைக்கு அஞ்சலி - கடுகு

சில தினங்களுக்கு முன்பு ஒரு எழுத்தாளர் காலமானார். அவர் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். கதையோ நகைச்சுவையோ எழுதுபவர் அல்ல. அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் கணிதம் தொடர்பானவை. கணிதம் இவ்வளவு சுவையானதா என்று என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வியந்து ரசிக்கச் செய்தவர்.
அவர்: மார்ட்டின் கார்டனர்.
தனது 95-வது வயதில் சென்ற ஞாயிறு ( மே 22, 2010) அமெரிக்காவில் காலமானார்.
கார்டனர், 1956’ம் ஆண்டு “ சயண்டிஃபிக் அமெரிக்கன்’ என்ற பத்திரிகையில் 'மேதமேடிகல் ரிக்ரியேஷன்ஸ்' என்ற தலைப்பில் கணிதப் புதிர்களையும் கணிதம் தொடர்பான சுவையான தகவல்களையும் கட்டுரைகளக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து 25 வருஷங்கள் எழுதினார்.
          நான் டில்லி் போன பிறகுதான் சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையை பார்க்க முடிந்தது. சென்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில் பழைய இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் அரை அங்குல தூசியுடன் இருந்தன. எல்லாவற்றையும் படித்தேன். போட்டோ காபி வசதி இல்லாத கற்காலம் அது. ஆகவே எனக்குப் பிடித்தவற்றை நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் கொண்டேன். அவருடை தீவிர ரசிகனானேன்.
  அவர் எழுதியவை  எல்லாம் புத்தகங்களாக வெளியாகி லட்சக்கணக்கில் விற்பனை ஆகி வருகின்றன.  அவரது பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன்

May 29, 2010

மந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு


சமீபத்தில் வீடியோயில் `யெஸ் பிரைம் மினிஸ்டர் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மத்திய மந்திரிக்கே ஒரு அதிகாரி `பேப்பே' சொன்ன கதை அது.
  என் நண்பர் ஒருவருக்குப் பதவி உயர்வு அளித்து திடீரென்று டில்லியிலிருந்து கொச்சிக்கு மாற்றி விட்டார்கள். குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படும் என்றும், வேறு சில காரணங்களையும் சொல்லி, டில்லியிலேயே தன்னை `போஸ்ட்' செய்யும்படி கேட்டுக் கொண்டார். `முடியாது' என்று சொல்லி விட்டார்கள்.
இவர் சிறந்த சமூகநலத் தொண்டர். ஆகவே பலர் இவர் டில்லியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பி, பலவித சிபாரிசுகளைக் கொண்டு வந்தார்கள். பலனில்லை. மாறாக, உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய அதிகாரியின் பிடிவாதம் அதிகரித்தது. ஒருநாள் திடீர் உத்தரவு போட்டார். ``இன்று மாலையிலிருந்து உங்கள் பெயர் எங்கள் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டது.''
அதாவது அவர் புதிய இடத்தில் போய் பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
 இந்தச் சமயத்தில் எனக்குத் தெரிந்த  ஒரு  பாராளுமன்ற உறுப்பினரை  அணுகி, உதவி கோரினேன்.
அவர் என்னை அழைத்துக் கொண்டு (நான் அவர் பி.ஏ.வாம்!) மந்திரியைப் பார்த்தார். மொழிப் பிரச்னையாதலால் நான்தான் `மொழி பெயர்த்தேன்' -இதுதான் சாக்கு என்று என் நண்பரைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி, அவர் கட்டாயம் டில்லியிலேயே இருந்தால்தான் நான் (அதாவது எம்.பி.) அடுத்த தடவை தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற ரீதியில் வலுவாகச் சிபாரிசு செய்தேன்.

நோபல் பரிசு - மொத்த வகுப்பிற்கும்! - கடுகு

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகரைப் பற்றிய விரிவான  ஒரு புத்தகத்தின் தலைப்பு :  உண்மை மற்றும் எளிமை  (TRUTH AND SIMPLICITY). அவரது வாழ்க்கை எவ்வளவ எளிமையானது மற்றும் உண்மையானது என்பதை விளக்க  ஒரு சிறிய தகவலைத் தருகிறேன். ( இந்த தகவல் இருந்த பக்கங்களை போட்டோகாபி பண்ணி வைத்திருந்தேன், அதை தேடி எடுத்துப் போட முடியவில்லை.)

     1940களில் டாக்டர் சந்திரசேகர் (அமெரிக்காவில் அவரைச் சந்திரா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.) சிகாகோ சர்வகலாசாலையில் பகுதி நேரப் பணி ஆற்றி வந்தார். அவர் `வில்லியம்ஸ் பே' என்று ஊரில் இருந்த வான் ஆராய்ச்சி மையமான பெர்க்கிஸ் ஆப்சர்வடேரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இருப்பினும் சுமார் 100 மைல் தள்ளியிருந்த சர்வகலாசாலைக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குப் பாடங்களைப் போதித்து வந்தார். ஒரே ஒரு வகுப்பிற்காக நூறு மைல் காரில் வந்து பாடம் சொல்லித் தருவதை தவிர்க்கக் கூடிய வேலையாக அவர் கருதவில்லை. இதற்காக செலவழியும் நேரம், சக்தி ஆகியவை பற்றிக் கவலைப்படாமல்
சர்வகலாசாலைக்குப் போய் வந்தார்.
   அவரது அக்கறை மற்றும் ஈடுபாடு காரணமாக 1957ல் ஒரு வியப்புக்குரிய விஷயம் நடந்தது. அவரது வகுப்பில் இருந்த எல்லாருக்கும் பௌதிகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது! பரிசு பெற்றவர்கள் லீ மற்றும் சென்ஜிங் யாங்  (  T.D.LEE, C.N.YANG)! ஆமாம். அவர் வகுப்பில் இரண்டே மாணவர்கள்தான். இருந்தார்கள். இந்த இரண்டு பேருக்காக நூறு மைல் காரில் வந்து பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார் சந்திரா. தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் தனது இரண்டு மாணவர்கள் பரிசு பெற்றது பற்றி அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
ஸீங் டா யீ மற்றும் சென் ஜிங் யாங் ஆகியவர்களுக்கு 1957ல் நோபல் பரிசு கிடைத்தது என்றால், அவர்களுடைய ஆசிரியரான சந்திராவிற்கு 26 வருடம் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது!
ஆக, அந்த மொத்த கிளாஸுக்கும் ஆசிரியர், மாணவர் உட்பட எல்லாருக்கும் நோபல் பரிசு கிடைத்து விட்டது. சமீபத்தில் `நாசா' ஒரு சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பிய போது அதன் ராக்கெட்டிற்கு `சந்திரா' என்று பெயர் வைத்தது.
 ( இவரது அம்மாவின் சகோதரர்தான் சி.வி. ராமன்!)

சந்திராவைப் பற்றி இந்தத்  தகவலைப் படித்ததும் நோபல் பரிசுகள் பற்றி இன்டர்நெட்டில் துழாவிய போது மேலும் சில சுவையான விஷயங்கள் தட்டுப்பட்டன.

May 26, 2010

நடேசன் - கேரக்டர்

மதுராந்தகத்தில் ஏராளமான நஞ்சை புஞ்சை நிலங்களுக்கும், ஊரில் ஏழெட்டு வீடுகளுக்கும், வாழை, வெற்றிலைத் தோட்டங்களுக்கும் அதிபரான நடேசன் சுயமாகச் சம்பாதித்தது ஒன்றுமில்லை. எல்லாம் பரம்பரை பரம்பரையாக வந்தது. நடேசனின் `ஆட்சிக் காலத்தில்' இந்த பரம்பரைச் சொத்துகள் சிறிது குறைந்தனவே தவிர கூடவில்லை.
தோப்பிற்கோ, களத்துமேட்டிற்கோ நடேசன் போவது அபூர்வம். அவரைச் சந்திக்க வேண்டுமானால் செங்கற்பட்டு கோர்ட்டுத் தாழ்வாரங்களில்தான் பார்க்கலாம்! அந்த கோர்ட் பியூனுக்கு அடுத்தபடி அதிக `சர்வீஸ்' போட்டவர் அவர்தான்! முப்பது வருஷங்களாக கோர்ட் வராந்தாக்களில் உலாத்திவரும் நடேசனுக்கு கோர்ட்டில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு சுவரும் பரிச்சயமானவை. வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது கோர்ட்டிற்கு வராவிட்டால் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். வரப்பு வழக்கு, சொத்து வழக்கு, குத்தகை கேஸ், வீட்டு வாடகை பாக்கிக வழக்கு, தோப்பு காண்ட்ராக்ட் வழக்கு, வட்டி பாக்கி வழக்கு என்று ஏதாவது வழக்கு நடந்துகொண்டே இருக்கும்!
நடேசனால் லாபமடைந்தவர்களில் கோர்ட் ஊழியர்கள் நீங்கலாக முக்ககியமானவர், `வாய்தா' வரதராஜன். இவர் ஒரு வக்கீல். வாய்தா எக்ஸ்பர்ட். நடேசனுக்கு எதிராக கேஸ் போடுபவர்களை, வாய்தாக்கள் வாங்கியே படாத பாடு படுத்துவார். வரதராஜனின் வீட்டிற்கு `நடேச நிலையம்' என்று பெயர் வைத்தாலும் தகும். எல்லாம் நடேசனின் பணம்தான்!

கொத்தலர் குழலி --கோளறு பதிகம்

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே

கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு

விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக

குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்

நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

நன்றி: நன்றி: koodal1.blogspot.com/