November 17, 2013

புள்ளிகள்: சச்சின்........

பாரத ரத்னா சச்சின்
சச்சின் டெண்டுல்கர்  கொண்டாட்டத்தின் நம் பங்காக ”சச்சினும் நானும்” என்று ஒரு பதிவு எழுத எண்ணினேன்.  சச்சினை எனக்குத் தெரியாதது மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொருத்தவரை  நான் ஒரு பெர்னார்ட் ஷா. (எழுத்தைப் பொருத்தவரை அல்ல!) (கிரிக்கெட்டைப் பற்றி பெர்னார்ட் ஷா சொன்ன  ஒரு பொன்மொழி கிரிக்கெட்டை விடப் பிரபலம்,)
ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.
’பூஸ்ட் ஈஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி” என்று கபில்தேவ் கூறும் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். 90-களில் அது பிரபலமான விளம்பரம்.
உலக கோப்பையை வென்றதும் இந்திய டீமின் காப்டன் கபில் தேவ் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நான் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம்தான் பூஸ்ட் விளம்பரத்தை  உருவாக்கியது.
சில வருஷங்களுக்குப் பிறகு,சிறுவர்களை வளைத்துப் போட புதிய பூஸ்ட் விளம்பரத்தைத் தயார் பண்ண முனைந்தோம்.
அதன்படி உருவாக்கப்பட்ட விளம்பரம் இது தான்” ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மைதானத்தில் கபில் தேவ் வெளுத்துக் கட்டுவதை,  கூட்டத்தில்  ஒரு பையன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன் உற்சாக மிகுதியால் எழுந்து நின்று கையை உயர்த்தி, உரத்தக் குரலில் ” ”நானும் பூஸ்ட் சாப்பிட்டுப் பெரியவனானதும் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட் வீரனாவேன்” என்று சொல்கிறான்.

இந்த பூஸ்ட் விளம்பரமும் பிரபலமாயிற்று. இதைத் தமிழில் முதலில் தயாரித்த போது கபில்தேவ் குரலில் பேசக்கூடிய ஒரு தமிழரை பம்பாயில் தேடிப்பிடித்து ரிகார்ட் செய்தது தனிக் கதை.
 இந்த கால கட்டத்தில் சச்சின் பிரபலமடைய ஆரம்பித்தார். எங்கள் கிரியேட்டிவ் டைரக்டருக்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. ”நான் கபில்தேவ் மாதிரி பெரிய கிரிக்கெட்டராக ஆவேன்” என்று சூளுரைத்த அந்தப் பையன் வளர்ந்து பெரியவனானதும், சச்சின் டெண்டுல்கராக ஆவது போல் மார்ஃபிங் செய்து  காட்டலாம், என்று ஐடியா கொடுத்தார். அப்படியே படம் எடுக்கப்பட்டது. அத்துடன்  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப மை எனர்ஜி’ என்று கபில் தேவ் சொன்னதும்  அந்த சிறுவன் (அதாவது, சச்சின்) அதை மாற்றி  ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர்  எனர்ஜி’ என்று   கூறுவார். பின்னால் மேலும்  இருவரும் சேர்ந்து ஒரே குரலில் ’பூஸ்ட் ஈஸ் த ஸீக்ரெட் ஆஃப் அவர் எனர்ஜி’ என்று கூறுவதாக மாற்றப்பட்டது.

இந்த விளம்பரங்களும் பரபரப்பாகப் பிரபலமாகிவிட்டது.  ஒரு தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட  விளம்பரமாக இது பாராட்டும் பரிசும் பெற்றது.
இந்த விளம்பரப் படம் தயாரான சமயம் சச்சின் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தாராம். (அந்த சமயத்தில் நான் சென்னை  வந்திருந்தேன்.).

 ’நான் ஒரு இந்தியன்” என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவர் இந்தியன் மட்டுமல்ல, பாரத ரத்னாவும் ஆகிவிட்டார்.
 சச்சினுக்கு வாழ்த்துகள்!
அமுல் விளம்பரம்


நான் ஒரு இங்கிலீஷ்காரன். 
  இங்கிலாந்தின் பிரதமராக (1885) இருந்தவர் லார்ட் பாமர்ஸ்டன் (  LORD PALMERSTON)
பாமர்ஸ்டனிடம் ஒரு ஃப்ரெஞ்சு தொழிலதிபருக்கு ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. பாமர்ஸ்டனுக்கு ஐஸ் வைக்கும் உள் நோக்கத்துடன் அந்த தொழிலதிபர் சொன்னார்  **“நான்  ஃப்ரெஞ்சுக்காரனாக பிறந்திருக்காவிட்டால், இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்.”

இதைக்கேட்ட லார்ட் பாமர்ஸ்டன், “ஓ அப்படியா! நான் இங்கிலீஷ்காரனாக பிறந்திருக்காவிட்டால்,  இங்கிலீஷ்காரனாக இருக்க விரும்புவேன்!”
நான் ஒரு இந்தியன் என்று ஒரு சமயம் சச்சின் சொன்னது  மாதிரி இவர் சொல்லவில்லையே தவிர ’நான் ஒரு  இங்கிலீஷ் காரன்’ என்று கூறாமல் கூறியிருக்கிறார்.

** If I was not born a Frenchman, I would wish to be an Englishman!"
 ** If I was not born  an  Englishman, I would wish to be an Englishman!"

November 11, 2013

ஸ்ரீவேணுகோபாலன் மறைந்தார்

±ý «Õ¨Á ¿ñÀ÷ ‚ §Åϧ¸¡À¡Äý (Ò‰À¡  ¾í¸Ð¨Ã) »¡Â¢Ú Á¡¨Ä ¦ºý¨É¢ø ¸¡ÄÁ¡É¡÷.
«ÚÀÐ ÅÕ¼ ¿ñÀ÷.«Å÷ Á¨È× ±ÉìÌ Á¡¦ÀÕõ þÆôÒ.
þô§À¡Ð «¦Á¡¢ì¸¡Å¢ø þÕ츢§Èý.
§¿¡¢ø «ïºÄ¢ ¦ºÖò¾ÓÊ¡¾Ð ±ý §º¡¸ò¨¾ §ÁÖõ «¾¢¸¡¢ì¸î¦ºö¸¢ÈÐ.
«Å÷ ¬ýÁ¡ º¡ó¾¢Â¨¼Âô À¢Ã¡÷ò¾¢ì¸¢§Èý 
- À¢ ±Š Ãí¸¿¡¾ý,
¸ÎÌ
¾¡Ç¢ôÒ
அவரைப் பற்றி நான் எழுதிய பதிவுக்குச் செல்ல
இங்கே சொடுக்கவும்:  ஸ்ரீவே


November 02, 2013

கதம்பம்

 கலியாணங்கள்
கலியாணங்கள் பல விதத்தில் மாறிப் போய் விட்டன. திருமணத்திற்கு முதல் தினமே ரிசப்ஷன் என்று வந்து விட்டது.  முதல் தினம் அரை நாள், முகூர்த்தம் அரை நாள் என்று கல்யாணங்களைச் சுருக்கி விட்டார்கள். .(பழைய காலத்தில்  5 நாள் கலியாணம்  நடந்தது என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.) ஒர் விதத்தில் இப்படி ஒரே நாளில் நடத்துவது   நல்லது தான், பெண் வீட்டாருக்குச் செலவு குறைகிறது.
ஆனால் சில புது வழக்கங்கள் வந்து  விட்டன. தரையில் அமர்வது போயே போய்விட்டது. எல்லாருக்கும் நாற்காலிதான்.  பொதுக் கூட்டங்களுக்கே நாற்காலி என்று ஆகி விட்டது என்னும்போது கலியாணங்களில் வராமல் இருக்குமா?
வரவேற்பு மேஜையில் பூ, பன்னீர், சர்க்கரை அல்லது கற்கண்டு இருக்கும். சமீப காலங்களில் அவற்றுடன்  வேறொன்றும் சேர்ந்துவிட்டது, அது ஒரு ’கவர்கள் பண்டில்’. அதில் டிசைன்களுடன், “வாழ்த்துகளுடன்” என்றும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  தவறாமல் மொய் எழுதுவதற்கு மறைமுக நினைவூட்டல்!

இன்னொரு புது வழக்கம்  வந்துவிட்டது. தாலி கட்டப்பட்டதும் எல்லாரும் அரக்கப் பரக்க,மேடைஏறி, மணமகன், மணமகள். அவர்களது பெற்றோர்கள் ஆகியவர்களுக்குக் கை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே களேபரம்.  புரோகிதரோ,  “இன்னும் சப்தபதி எல்லாம் இருக்கு.. அதுவரைக்கும்  பொண்ணு  கையை மாப்பிள்ளை  பிடிச்சுண்டே இருக்கணும். அதுதான் சாஸ்திரம்” என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. மேடையில் இருக்கும் பூ, பழங்களை  மிதித்துகொண்டே போய், கைகுலுக்குவதோடு, கவரையும் திணித்துவிட்டு ”ஆபீஸில் மீட்டிங்”, “இன்ஸ் பெக் ஷன்” என்று (பொய்) சொல்லிவிட்டு, நேரே டைனிங் ஹாலுக்குப் போகிறார்கள்! இந்த சமயத்தை நழுவவிட்டால், அன்பளிப்பு கொடுக்க பின்னால் அரை மணி அல்லது ஒரு மணி நேரம்  கியூவில் நிற்க வேண்டி இருக்கும் என்பது ஒரு ரகசிய காரணம்!!
ஒன்றிரண்டு திருமணங்களில் புரோகிதர்,  சப்தபதியின் முக்கியத்துவம் என்ன, எப்போது கை கொடுக்கலாம் என்று ஒரு சின்ன உபன்யாசமே செய்கிறார். ஆனால் யார் கேட்கிறார்கள்? இனிமேல் அழைப்பிதழ்களில் ”சப்தபதி முடியும்வரைக் கைகுலுக்குவதைத்  தவிர்க்கவும்” என்று  அச்சடிப்பார்கள் என்று நினக்கிறேன்!
(கலியாணங்களில் செருப்பு திருடு போகும் ( அறுவை) ஜோக்குக்கள்  இப்போது பத்திரிகைகளில் வருவது இல்லை. காரணம் யாரும் செருப்பைக் கழட்டுவதில்லை -டைனிங் ஹாலில் கூட!)

 மாறிப் போன டயலாக்குகள்.
  OVER THE YEARS சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்டவை.
1960  களில்
“ குழந்தை.. டில்லி போனதும் ‘பத்திரமாய்ப் போய் சேர்ந்தேன்னு ஒரு கார்டு போட்டுடு.”
“ சரிப்பா. அப்படியே செய்றேன்.”
*          *            *
1970  களில்:
”குப்பு.. டில்லி போனதும் தந்தி கொடுத்துடு.”
“ஓ,கே, அப்பா.”
1980 களில்
”சுரேஷ்.. டில்லி போனதும் எகஸ்பிரஸ் தந்தி கொடுத்துடு”
“ஓ,கே, டாடி.”
1990 களில்
“நீல்.. டில்லி  போனதும் ஒரு டிரங்கால் பண்ணி சொல்லிடு.”
“ யா.. டாட், ஐ வில்!”
2000 களில் .
“அக்‌ஷய்..டில்லி  போனதும் ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடு.”
 ”DONE....Bye.."
2010 களில்
” ஷிவ்..டில்லி  போனதும்  எனக்கு மிஸ்டு கால் கொடு. நான் கூப்பிடறேன்!:”
“எந்த போனுக்கு? லேண்ட் லைனுக்கா? ஐஃபோனுக்கா?  பிளாக் பெர்ரிக்கா?
ஐ-பேடுக்கா?
2020 களில்
“இத பாரு.. பேஸின் ப்ரிட்ஜ் போனதும் போன் பண்ணு. அப்புறம் விஜயவாடா, நாக்பூர், இடார்ஸி, ஆக்ராவில் பண்ணு. டில்லியிலே ரயிலை விட்டு இறங்கறதுக்கு முன்னே பண்ணு.,  மொத்தம் ஆறு பையையும்  எடுத்துண்டுட்டியான்னு சொல்லு.”
“சரி..சரி..ச்ர்ர்ர்ர்ர்ரி... அடுத்த தடவையிலிருந்து ஏர்ல தான்.”