September 27, 2013

ஆ, அமெரிக்கா-2

ஐயோ சிக்கடாஸ்
  
“கொசுத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” ( என்று   எல்லா வலைப்பதிவுகளிலும் ((என் வலைப்பதிவுகளுக்கு நீங்கலாக!?) பின்னூட்டம் போடும் அன்பர்களுக்கு ஒரு சிறப்புச் செய்தி, 

அமெரிக்காவில் கிழக்குக் கரையோரம் உள்ள மாநிலங்களில் ஒரு படையெடுப்பு 17 வருஷங்களுக்கு ஒரு முறை  ஜூலை- ஆகஸ்ட்
மாதங்களில் தவறாமல் நடந்து வருகிறது. கிட்டதட்ட கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும் சிக்கடாஸ் (CICADAS)  மில்லியன் கணக்கில் -- இல்லை, இல்லை பில்லியன் கணக்கில் - வந்து வீதியில் உள்ள  மரங்களையெல்லாம் அப்பிக் கொள்கின்றன. அவை போடும்  இரைச்சல்  (கோஷ்டிகானம்!) கிட்டதட்ட வயல் வெளிகளில் வைக்கப்படும் தண்ணீர் பம்புகளைத் தூக்கிச் சாப்பிட்டு விடும்!

இந்த வருடம் படையெடுப்பு வருஷம். சுமார் 300 வருஷங்களாக இது நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். 17 வருஷம் அவை அங்கு இருக்கிறதாம்? மண்ணுக்குள்!

இந்த வருடம் சிக்கடாஸின் எண்ணிக்கை  அந்தந்த  பகுதி மக்கள் எண்ணிக்கையைப் போல்  தோராயமாக 600 மடங்காக  இருந்ததாம்!
ஐயோ, சிக்கடாத் தொல்லை தாங்கலையேடா, நாராயணா” என்று பின்னூட்டம் போடவிரும்புபவர்கள் 2030 வரை காத்திருக்க வேண்டும்!
 2030-ல் அவை விஜயம் செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை!

ரயிலில் கவிதை
அமெரிக்காவில் விமானம், ரயில், பஸ். கார், சொந்த ஹெலிகாப்டர் என்று பல வேறு வாகனங்களில் ஊருக்குள்ளும், ஊர் விட்டு ஊரும் சளைக்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

September 20, 2013

MAD Magazine-க்கு சஷ்டியப்த பூர்த்தி



புகழ் பெற்ற நகைச்சுவைப் பத்திரிகையான   MAD இதழுக்கு 60 வயது ஆகிவிட்டது.. ‘ MAD  பத்திரிகையும்  நானும்’ என்ற பதிவை முன்பே (இங்கு சொடுக்கவும்)எழுதி உள்ளேன். இது இரண்டாம் பதிவு.
சமீபத்திய ஆண்டுகளில்  MAD  இதழ்களை   நான் பார்க்க வில்லை. ஆனால் அமெரிக்கா வரும் சமயம் புத்தகசாலையில் புரட்டிப் பார்ப்பதுண்டு. பிரசுரகர்த்தர்  வில்லியம் கெய்ன்ஸ்  காலமாகி விட்ட பிறகு பத்திரிகையின் ஜீவன் குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றியதும் ஒரு காரணம். திரைப்படங்கள் பார்ப்பதை நான்  எப்போதோ நிறுத்தி விட்டேன் என்பதால்  அமெரிக்கத்  திரைப்படங்களை நையாண்டி செய்யும் படக்கதைகள் பல  புரிவதில்லை.

சென்ற   வருஷம் ஒரு அகராதி சைஸ் 1000 பக்க   MAD கலெக் ஷன் புத்தகம் கிடைத்தது. அதனால் பழைய பித்து பிடித்துக் கொண்டது!
சமீபத்தில்  60 ஆண்டு நிறைவை ஒட்டி, தீபாவளி மலர்  அளவில் கனமான   ஆர்ட் பேப்பரில் . TOTALLY MAD- 60 years of Humor,Satire, Stupidity and Stupidity என்ற பெயரில்  புத்தகம் வெளியிட்டிருக்கிறர்கள். அபாரமான புத்தகம். பழைய இதழ்களிலிருந்து பல நகைச்சுவை அம்சங்களை தொகுத்துத் தந்திருந்தாலும் புதிதாகச் சில கட்டுரைகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
MAD பத்திரிகையைப் பற்றிய   பல சுவையான  கூடுதல் தகவல்களை இங்கு தருகிறேன்.
MAD பத்திரிகையில் விளம்பரங்களைப் போடுவதில்லை என்பது கெயின்ஸின்  கொள்கை. தொண்ணூறுகளில்  MAD உயர்ந்த பட்சமாக கிட்டத்தட்ட  21 லட்சம் காபிகள் விற்றது. சமீப காலத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாம்.
கறுப்பு வெள்ளையிலிருந்து கலருக்கு மாறியபோது செலவை ஈடு கட்ட விளம்பரங்களை MAD போட ஆரம்பித்தது. அத்துடன்,வருஷத்தில் 8 இதழ்கள் என்பதை 6-ஆகக் குறைத்து விட்டது.
ஒரு சிலர் MAD பத்திரிகை மீது அவ்வப்போது வழக்கு தொடுத்து இருக்கிறர்கள். அதனால், MAD பத்திரிகையில், ஆசிரியர், உதவி ஆசிரியர்,பிரசுரகர்த்தர்,என்ற பெயர்ப் பட்டியலில் தங்களது வழக்கறிஞரின் பெயரையும் சேர்த்து விட்டார் வில்லியம் கெயின்ஸ்!

MAD பத்திரிகை மீது போடப்பட்ட  வழக்குகளில் இரண்டு  சுவையானவை.

September 12, 2013

ஜி-மெயிலில் வந்த கடிதம்


எனக்கு தினம் யார் யாரிடமிருந்தோ கடிதங்கள் வருகின்றன. லாட்டிரி பரிசு விழுந்ததாக இரண்டு கடிதமாவது வரும், அரசியல், ஆன்மீகம், புகைப்பட ஆல்பங்கள் என்று  பல. பெரும்பாலானவற்றை முதல் வேலையாக குப்பைத்  தொட்டிக்கு அனுப்பி விடுவேன். இன்று ஒரு  கடிதக் கவிதை வந்தது. அதை பதிவாகப் போடலாம் என்று எண்ணினேன். அதற்கு முன்பு ஒரு முன்னுரை எழுதுவது அவசியம்.
*                   *               *
இது 60-களில் நடந்த கதை. அந்த இளைஞன் புனேயில் ராணுவ மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான்.   ஏ.எஃப்.எம்.சி எனப்படும்  (ARMED FORCES MEDICAL COLLEGE) மருத்துவக் கல்லூரி ஆரம்பித்த வருஷம் முதல் செட் மாணவர்களில் அவனும் ஒருவன். படிப்பில் கெட்டிக்காரன். எம்.பி.பி.எஸ் பரீட்சையில் புனே சர்வகலாசாலையிலேயே முதல் ரேங்க் மாணவனாகப் பாஸ் செய்தான்.
மேலே எம்.டி படிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். எம். பி. பி. எஸ் முடிந்ததும் ராணுவத்தில் 2 (5 ?) ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தான். (அதன் காரணமாக கல்லூரியில் இடமும்,  கட்டணத்தில் சலுகையும் அவனுக்குக் கிடைத்தது.) ஆகவே அவன் எம்.டி சேர அனுமதி கிடைக்கவில்லை.  (பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனி ஒன்று அவன் படிப்பிற்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்றுக் கொள்ள, தானாகவே முன் வந்தது!) அதை நிராகரிக்க வேண்டியதாகி விட்டது.

அவன் ராணுவத்தில் பணியாற்றத் துவங்கினான். பிறகு மேலே படிக்க அவனுக்கு அனுமதி தந்து விட்டார்கள் - ஒன்றிரண்டு நிபந்தனைகளுடன். அவனும் எம்.டி படிப்பில் சேர்ந்தான். இந்த சமயத்தில் பங்களா தேஷ் போர் துவங்கியது. அவனை டியூட்டிக்கு வரச் சொன்னார்கள்.
போர் முடிவதற்கு முந்தைய தினம் புனேயிலிருந்த அவனை அஸ்ஸாம் போகச் சொன்னார்கள். அங்கு சில ராணுவ வீரர்களுக்கு அவசர மருத்துவ சேவை செய்வதற்கு (என்று நினைக்கிறேன்). விமானப் படை விமானம். அஸ்ஸாமில் இந்திய எல்லையினருகில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் தொடர்பு விட்டுப் போய்விட்டது.

பயங்கர காட்டுப் பகுதியில் நடந்தே போய்த் தேடினார்கள். இரண்டு நாள் கழித்து, எரிந்த விமானத்தை கண்டு பிடித்தார்கள். விமானத்தில் சென்ற ஐந்து ராணுவ அதிகாரிகளும் பரிதாபமாக எரிந்து போயிருந்தார்கள்.


அந்த மருத்துவனின் ஈமச் சடங்குகளை நான் செய்தேன். அவன்: என் 26 வயது தம்பி.
இந்த விவரங்கள் இப்போதைக்குப் போதும்.   இனி கவிதை வடிவில் உள்ள கடிதத்தைத் தருகிறேன்..
*                   *           
Dear Sir: A poem by a young Indian Army Officer..
A brief note: It has been composed by a fourth generation, 24-year old career officer in the Indian Armed Forces, spurred by the report of the Sixth Pay Commission and an insensitive article written by a 'respectable' citizen of the country in a national daily on the armed forces and the pertinence of the Sixth Pay Commission therein.

This free-flowing verse has not been edited; it's to ensure that the originality of the angst is maintained. After all, when you are in pain, the language of expression is the last thing in your mind --Chandra
 ______________________
Dear Sir!
How you play with us, did you ever see?
 At Seven, I had decided what I wanted to be;
 I would serve you to the end,
 All these boundaries I would defend.


 Now you make me look like a fool,
 When at Seventeen and just out of school;
 Went to the place where they made "men out of boys"
 Lived a tough life …sacrificed a few joys…


In those days, I would see my 'civilian' friends,
 Living a life with the fashion trends;
 Enjoying their so called "College Days"
 While I sweated and bled in the sun and haze…
But I never thought twice about what where or why
 All I knew was when the time came, I'd be ready to do or die.

September 04, 2013

ஒரு அசாதாரணப் பெண்: அருணிமா

சமீபத்தில் பரோடா ராமகிருஷ்ண மிஷன் மடத்தில் சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த விழாவை, இரண்டு நாள் சர்வ தேச இளைஞர்கள் மகாநாடாகக் கொண்டாடினார்கள். 24 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அதில் உரை நிகழ்த்தினார்.
அமெரிக்காவிலிருக்கும் என் பேத்தி அருந்ததி அதில் கலந்து கொண்டாள். (அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் நியூ ஜெர்சியில் உள்ள விவேகானந்தா வித்யாபீட் என்ற, இந்திய கலாசாரத்தை  போதிக்கும் பள்ளியில் பயில்கிறாள். அந்த அமைப்பிலிருந்து சுமார் 60 பேர்  (மாணவர்கள்+பெற்றோர்+ஆசிரியர்கள்) மகாநாட்டில் கலந்து கொண்டார்கள்.(ஆசிரியர்கள் எல்லாரும் தொண்டு பணி புரிபவர்கள். யாரும் சம்பளம் வாங்குவதில்லை!)
விவேகானந்தரின்  பிறந்தநாள்  விழாவில் பலர் உரை ஆற்றினார்கள். அவர்களில்,  அருணிமா சின்கா எனும் 25 வயது பெண்மணியும் ஒருவர்.  அவர் எவரஸ்ட் சிகரத்திற்குப் போய் வந்த வீராங்கனை.  எந்த ஒரு பெண்ணிற்கும் இது பெரிய சாதனைதான். அருணிமாவைப் பொறுத்த வரை இதை அசாதாரணமான சாதனை என்றுதான் கூறவேண்டும். காரணம், அவருக்கு ஒரு கால் கிடையாது! செயற்கைக் கால்தான்!
அருணிமா கால்களை இழந்தது எப்படி என்று துவங்கி,  மெய்சிலிர்க்கும் தகவல்கள் பலவற்றை என் பேத்தி அருந்ததி (வயது:15) என்னிடம் கூறினாள். அவளிடம். “நீயே ஒரு கட்டுரை எழுதிக் கொடு. என் பிளாக்கில் ஒரு பதிவாகப் போட்டு விடுகிறேன்” என்றேன்.
அருந்ததி   ஆர்வத்துடன் எழுதிக் கொடுத்த, நம்மை நெகிழ வைக்கும். அந்த ஆங்கிலக் கட்டுரை இதோ!

Arunima Sinha – An Inspiring Story
by Arundhati Johri
         Have you ever wondered what it would be like to climb Mt. Everest?
How about with an amputated leg?

Arunima Sinha, (25) the first lady in the world to climb Mt. Everest with an amputated leg, has an inspiring story behind her success.

            While aboard a train travelling from Lucknow to Delhi on the 11th of April, 2011, for an interview, she was threatened by a band of dacoits. The robbers had entered her train car, and were robbing and injuring the passengers.
Arunima resisted the robbers when they attempted to take her gold chain. In anger, they picked her up and threw her out the train, on to the adjacent railway tracks below. Unfortunately, a train was coming her way! The train ran over her leg. As she lay injured between the tracks, Arunima frantically called for help and screamed and screamed. To her dismay, no help came to her aid, as it was 1:00 a.m. in the morning. Forty-nine more trains passed over her all night long. “Yes,  I counted” she says!