June 25, 2011

கேரக்டர் -அருணாசலம்

சவர்க்கர் குல்லாய், தடித்த பிரேம் மூக்குக் கண்ணாடி, கணுக்காலுக்கு நாலங்குலம் மேலேயே நின்று விடும் பாண்ட், கட் ஷூ, தலையணை மாதிரி உப்பியிருக்கும் ஜிப்-பை, ஐந்தாறு பேனாக்கள், டைரி, பொடி டப்பி, மூக்குக் கண்ணாடி உறை ஆகியவைகள் ஜேபியில் திணிக்கப்பட்டிருக்கும்., மிதமிஞ்சிய தற்பெருமை.  அளப்பு. -- இதுதான் அருணாசலம்.
அவன் சண்டப் பிரசண்டமாகப் பேசுவதைக் கேட்டு, ``கவர்மென்ட் ஆப் இந்தியாவே உன் தலையில் ஓடுகிறதா?'' என்று யாரும் அவனைக் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் கேட்க விடாமல் அவன்தான் மூச்சு விடாமல் பேசுகிறவனாயிற்றே!
சர்க்கார் வண்டியே இவனால்தான் ஓடுகிறது என்று எண்ணி இவன் அண்டர் செக்ரட்டரியோ என்னவோ என்று கருத வேண்டாம். கால்நடை இலாகாவில் ஒரு எல்.டி.சி. -சாதாரண குமாஸ்தா.
``ஏன் அருணாசலம், நம்ப ராஜுவின் கலியாணத்திற்கு நீ வரவில்லை?'' என்ற சர்வசாதாரண கேள்விக்குக் கூட அத்தியாயங்களில் பதில் சொல்வான். எல்லாம் ஆபீஸ் விவகாரமாகத்தான் இருக்கும்.
அருணாசலம் சொல்வதை அப்படியே வாயைத் திறந்து கொண்டு கேட்டால்தான் பிழைத்தீர்கள். நடுவே ஏதாவது பேசினால் போச்சு, மற்றொரு தனி ஆவர்த்தனம் ஆரம்பமாகி விடும்.

``என்னப்பா அருணாசலம்! ஆபீசிலிருந்து இவ்வளவு லேட்டாக வருகிறாய்?'' என்று ஒருவர் கேட்டு விட்டார் ஒரு நாள்.
``பஸ்ஸா விடுகிறான்? ஒரு மணியாக பஸ்ஸே வரவில்லை. நாளை ஜெனரல் மானேஜருக்குப் போன் பண்ணி உலுக்குகிறேன். சே, எதுக்கு? வீணாக கண்டக்டரை சஸ்பெண்ட் பண்ணிடுவாங்க. அவன் வயிற்றெரிச்சலை எதுக்குக் கொட்டிக் கொள்ள வேண்டும்?''
``ஏனப்பா, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொள்ளக் கூடாது?''
``ஆபீசில் `ஐயாயிரம் தருகிறேன். வாங்கிக்கோ' என்கிறார்கள். நான்தான் வேண்டாம் என்று இருக்கிறேன். பெட்ரோல் ரேஷன் இன்னும் பத்து வருஷத்தில் வரப் போகிறது. ஸ்கூட்டர்காரன் எல்லாம் திண்டாடப் போகிறான். நாம் ஏன் இதில் மாட்டிக் கொள்ள வேண்டும்? அதனால்தான் `போய்யா, உன் ஐயாயிரம்  வேண்டாம்' என்று சொல்லி விட்டேன்.''
வெற்றிலை பாக்கு, பூ, பழத்துடன் தட்டில் ரூபாயை வைத்துக் கொடுக்கிறார்களோ என்று எண்ணி விடாதீர்கள். எல்லா சர்க்கார் ஊழியருக்கும் ஸ்கூட்டர் அட்வான்ஸ் கிடைக்கும். இவனுக்கு மட்டும் விசேஷமாக கொடுப்பது போல் சொல்லும் போது ஆச்சரியத்தினால் கண்கள் மலரப் பார்த்தால்தான் அவனுக்கு அபாரத் திருப்தி ஏற்படும்.

June 20, 2011

எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் -கடுகு

 முன்குறிப்பு:
சில வருஷங்களுக்கு முன்பு  கல்கியிலிருந்து ஒரு கதை வேண்டுமென்று   ஒரு கடிதம் வந்தது. அத்துடன் தலைப்பு: எட்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற தலைப்பிற்கு ஏற்ற கதை வேண்டும் என்றும் எழுதி இருந்தார்கள். ஆப்போது எழுதி அனுப்பிய கதையை இங்கு தருகிறேன்.
--------------------------------------
"எட்டுக்குமேல் எப்போதும் வேண்டாம்."
இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்  ஜோதிடப்புலி, ஆரூட சிங்கம், நியூமராலஜி நரி, கைரேகை கரடியான மூலைக்கொத்தளம் மன்னாரு ஜோதிடர்.
அவருக்கு முன்பு பயபக்தியுடன் கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த அஷ்டபுஜத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
நூற்றியொரு ரூபாய் கொடுத்து ஆரூடம் கேட்க வந்திருந்தார். ஒரு வாக்கியம் மட்டும் சொல்லிவிட்டுச் சும்மா இருக்கிறாரோ ஜோதிடர் என்று யோசித்தபடியே இருக்க, ஜோதிடரின் ஒரு சிஷ்யகோடி, "அவ்வளவுதான்! இனிமேல் ஒண்ணும் வாக்குலே வராது. சுவாமி மௌனத்தில் போய்விட்டார்" என்றார்.
ஆறு மாதம் காத்திருந்து அப்பாயிண்மென்ட் வாங்கி, சிபாரிசு பிடித்து நூற்றியொரு ரூபாய் கொடுத்து- அல்லது அழுது - ஜோதிடம் கேட்க வந்தால் ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டால் எப்படி? அட்சர லட்சம் என்பது மாதிரி அல்லவா இருக்கிறது!
திடீரென்று அஷ்டபுஜத்துக்குச் சந்தேகம் வந்தது. `எட்டுக்கு மேல் வேண்டாம்' என்று சொன்னாரா, ஏட்டுக்கு மேல்  வேண்டாம் என்று சொன்னாரா என்று சந்தேகம் தோன்றியது. காரணம் அஷ்டபுஜம் சாதாரண கான்ஸ்டபிள். அதுவும் கொத்தவால் சாவடி, சினிமாத் தியேட்டர் போன்ற இடங்களில் இல்லாமல்-- `வறண்ட' பிரதேசமான பெசன்ட் நகர் பகுதியில் டியூட்டி! விரைவில் `ஏட்டு' ஆகப் பிரமோஷன் வரக்கூடும். `அதற்கு மேல் பிரமோஷன் வந்தால் விட்டுவிடு' என்று ஜோதிடர் சொல்கிறாரா? சப் இன்ஸ்பெக்டர் மாதிரி உத்தியோகத்தில் ஆபத்துக்களும் அதிகம் என்பதால் சொல்கிறாரா? -புரியவில்லை.
வீட்டுக்கு வந்தார். சடாரென்று அவர் மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. வீட்டு நம்பர் ஒன்பது! ஆகா! எட்டுக்கு மேல் உள்ள நம்பர் வீடு... அதனால்தான் நமக்கு அதிர்ஷ்டம் இல்லையோ!

Begin the day with,,,,,,

This poem will brighten up your day!

Begin the day with Friendliness

Begin the day with friendliness
And only friends you will find.
Yes, greet the dawn with happiness;
Keep happy thoughts in mind.
Salute the day with peaceful thoughts,
And peace will fill your heart;
Begin the day with joyful soul,
And joy will be your part.

Begin the day with friendliness;
Keep friendly all day long;
Keep in your soul a friendly thought,
Your heart a friendly song.
Have in your mind a word of cheer
For all who come your way,
And they will  bless you too, in turn,
and wish you `Happy Day!'

Begin each day with friendly thoughts,
And as the day goes on,
Keep friendly, loving, good, and kind,
Just as you were at dawn.
The day will be a friendly one,
And then at night you'll find
That you were happy all day long
Through friendly thoughts in mind.


---Frank B. Whitney

June 13, 2011

புதுக்கணக்கு -கடுகு

  இன்று புதுக் கணக்கு என்ற பெயரில் புதிய கணித முறை வந்திருக்கிறது.  என்னைக் கேட்டால் கணித முறையில் மேலும் சீர் திருத்தம் செய்ய நிறைய இடம் இருக்கிறது என்பேன்.  யதார்த்தமாக அமைக்கவும் வேண்டும்.  மாணவர்கள், உலகின் உண்மை நிலைகளை உணர முடியாதபடி கணக்குகளை அமைக்கவோ, விடைகளைக் கண்டு பிடிக்க முயலவோ கூடாது.  சில உதாரணங்களைப் பார்ப்போம்.

      ""நாலு பேர் ஒரு வேலையை முடிக்க இருபது நாட்கள் ஆகும் என்றால் 
16 பேர் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?''  இது ஒரு கணக்கு.
      இதற்குச் சரியான விடை 5 நாட்கள் என்று ஆசிரியர் சொல்லுவார்.  தவறு என்கிறேன் நான்.  16 பேர் அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும்முதலில் யூனியன் தொடங்குவார்கள். யூனிபாரம், போனஸ், ஊக்க போனஸ், வீட்டு வசதி, மருத்துவ வசதி என்று கேட்பார்கள்.  இரண்டாவது நாளிலிருந்து வேலை நிறுத்தம் செய்வார்கள்.  ஒரு வாரம் வரை முதலாளி தாக்குப்பிடித்து விட்டு, கடைசியில் இறங்கி வருவார்.  அதன் பிறகு வேலை மறுபடியும் துவங்கும்.  லீவு வசதி சலுகை இருப்பதால் நாலு பேர் மூன்று நாள் லீவில் போவார்கள்.  லேட்டாக வேலைக்கு வரும் பறிப்புரிமையும் கிடைத்துவிடும்.  இதன் காரணமாக வேலை ஆமை வேகத்தில் நடந்து 37 நாட்களில் முடியும்.  இதுதான் உண்மையான (சரியான) விடையாக இருக்க, ஆசிரியர் 5 நாட்கள் என்று சொல்லித் தருவது அபத்தமல்லவா?
--------------
      "ஒரு பொருளை நூறு ரூபாய்க்கு வாங்கியவன் பத்து சதவிகிதம் நிகர லாபம் பெறுவதற்கு என்ன விலையில் அதை விற்க வேண்டும்?'' என்ற கணக்குக்கு இந்த ஆசிரியர்கள் 110 ரூபாய் என்று சொல்லித் தருவார்கள்.
      அவன் 110 ரூபாய்க்கு விற்றால் சேல்ஸ் டாக்ஸ் இன்ஸ்பெக்டர், கார்ப்பரேஷன் சூபர்வைசர், ஹெல்த் ஆபீசர், பீட் கான்ஸ்டேபிள் இவர்களுக்கு எல்லாம் கொடுத்தது போக எண்பது ரூபாய் கூட நிற்காது.  ஆக நிகர நஷ்டம் 20 ரூபாயாகும். அவனுக்குப் பத்து சதவிகிதம் லாபம் வரவேண்டுமானால் 140 ரூபாய்க்கு விற்க வேண்டும். இதுதான் சரியான விடை.
------------
      "ஒரு லேவாதேவிக்காரர் ஆயிரம் ரூபாயை 20 சதவிகித வட்டிக்கு கடன் கொடுத்தால் மூன்று வருடத்துக்குப் பிறகு அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்'' என்று ஒரு கணக்கு, இதற்கு விடையைக் கண்டு பிடிக்கக் கணக்குத் தெரியவே வேண்டாம்.  பணம் கடன் கொடுத்தால் வட்டியும் வராது, முதலும் வராது என்கிற யதார்த்த உண்மையை அல்லவா ஆசிரியர் போதிக்க வேண்டும்!
---------
      "இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறைவான தூரமுள்ள பாதை எது?'' என்று ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார்.
      பையன் விழித்துவிட்டு "அரை வட்டமாக வரும் பாதை' என்று சொல்கிறான்.
      "தப்பு. அந்தப் புள்ளிகளை இணைக்கும் நேர் கோடுதான்... இந்தச் சின்ன கணக்குக்கு விடை தெரியாதவன் நீ வாழ்க்கையில் எப்படிப் பொழைக்கப் போகிறாயோ!'' என்று அலுத்துக் கொள்கிறார்.
      உண்மையில் மாணவன் பிற்காலத்தில் நன்றாகத்தான் பிழைக்கப் போகிறான்.
அவனது அரை வட்டப் பாதை விடையைத்தான் தொழிலில் உபயோகித்து.  ஆம், பின்னால் அவன் ஆட்டோ ரிக் ஷா ஓட்டப்போகிறான்.
      சென்ட்ரலிலிருந்து எழும்பூருக்கு ராயபுரம் வழியாக 'மிகக் குறைவான தூரமுள்ள பாதையில்' போய் நிறையப் பணம் பண்ணும் "ஆட்டோ டிரைவராக' உயரப் போகிறான்.  ஆசிரியரோ அப்படியே "தப்பு விடை"யைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு ஆசிரியராகவே அவதிப்பட்டுக் கொண்டு இருக்கப் போகிறார்!   
இப்போது சொல்லுங்கள், புதுக் கணக்கையும் சீர்திருத்தம் செய்யவேண்டுமா, இல்லையா?

June 09, 2011

பேசினால் பிழைத்தீர்கள் - கடுகு

* எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவது எளிது உங்களுக்குப் பேசத் தெரிந்திருந்தால்!  உங்கள் வாடிக்கையாளரை உங்கள் பேச்சினால் பிரமிக்க வைக்க வேண்டும்.   அல்லது குறைந்தபட்சம் குழப்பி வைக்க வேண்டும்.  எவ்வளவுக்கெவ்வளவு புரியாத வார்த்தைகளைப் போட்டுப் பேசுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு லாபம்.  இதைச்  சமீபத்தில் இரண்டு மூன்று பேரிடம் சென்ற போது நான் அறிந்து கொண்டேன்.

     * ஜோசியர் சோணாசலத்திடம் போயிருந்தேன், ஜாதகத்தைக் கொடுத்தேன்.
      ''....உம்... ஏழில் குரு.  குரு தன் வீட்டில் இருக்கிறான்.  சனியைப் பார்க்கிறான்.  ஆனால் சுக்கிரன் நீசமாகி விட்டான்.  ரிஷப ராசியில் மிதுன அந்தரத்தில் சூரியன் உச்சமாகிறான்.''
      ""சூரியன் உச்சமானால் நல்லதா கெட்டதா?''
      ""புதன் எப்படி இருக்கிறான் என்பதைப் பொறுத்திருக்கு.  எட்டாம் வீட்டில் இருக்கிறான். அது சந்திரனின் வீடு.''
      ""ஏதோ ஒரு வீட்டில் இருந்துவிட்டுப் போகட்டும்.  எனக்கு என்ன ஆகும்?''
      ""முதலில் அறுபது ரூபாயை வையும்.... குரு பார்வை சரியில்லை.  ... சந்திரன் தன் சொந்த வீட்டுக்குப் போனால் உங்களுக்கு நல்ல காலம். இன்னும் 2 வாரத்தில் போய் விடுவான். கவலைப் படாதீர்கள்.''
      ""வெரி குட்'' என்று சொல்லிவிட்டு வந்தேன்.  60 ரூபாய் அழுதுவிட்டோமே என்று தோன்றினாலும், .சந்திரன் வீடு காலி பண்ணுவதற்கு லாரி, கூலி ஆட்கள் எல்லாம் என்னை ஏற்பாடு பண்ணச் சொல்லவில்லையே என்ற நிம்மதியுடன் வீடு திரும்பினேன். அவரது ஞானம் என்னை வியப்படையச் செய்தது


    *  டீ.வி. மெக்கானிக் பத்ரிநாத்திடம் என் டிரான்சிஸ்டரைக் காட்டினேன். சரசரவென்று பிரித்தார்.
      "ஐ.எஃப் போயிருக்கும்னு நினைக்கிறேன்.  டயோட் ''' மல்டி மீட்டரை வச்சுப் பார்த்துத்தான் சொல்ல முடியும்.  ஐயாயிரம் ஓம்ஸ் நடுவிலே சோல்டர் பண்ணிடணும்....''
      "எதையாவது பண்ணுங்க, பாடணும்,''
      ""டிரான்ஸ்ஃபார்மர் ஓபனாயிட்டதுபோல இருக்கு. ஃபெர்ரைட் ராட் புதுசா போட்டு காயிலைச் செக் பண்ணிப் பார்க்கலாம். நூறு ரூபாய் ஆகும்'' என்றார். 
      நூறு ரூபாய்க்கு இவ்வளவு செய்யப் போகிறார் என்ற திருப்தியுடன் ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தேன்.


     * சின்ன வழக்கு விஷயமாக வக்கீல் சட்டநாதனைப் பார்க்கப் போனேன்.
      ''...ஒண்ணும் கவலைப்படாதீங்க.  கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கு.  சுப்ரீம் கோர்ட் வரை போகலாம்.  முதலில் ஒரு ரிட் போடலாம்.  சி.ஆர்பி.சி.யில் இடம் இருக்கான்னும் பார்க்கிறேன்.  ரங்கசாமி வர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் காட்டாங்குளத்தூர் கேஸ்லே எவிடன்ஸ் ஆக்ட்டுக்குக் கொடுத்திருக்கிற இன்டர்பிரடேஷன் நமக்குச் சாதகமாக இருக்கும்.  ஹேபியஸ் கார்பஸ் அப்ளை ஆகாது. ஆனால் ஜூரிஸ்புரடன்ஸயும் புரட்டிப் பார்க்கணும்.  முதலில் ஐந்நூறு ரூபாய் ஃபீஸ வையுங்க.  எஃப்.ஐ.ஆர். காபி கேட்கலாம்.  ஆனால் விட்னஸ் ஹாஸ்டைல் ஆகிவிட்டால் ஆபத்து.... சரி.... முதலில் டைம் பார் ஆகிறதுக்குள்ளே ஃபைல் பண்ணிடலாம்....''
      ""இவ்வளவு வேலை இருக்கிறது.   ஐந்நூறு ரூபாய் தான் கேட்கிறார்.  நல்ல மனிதர்''  என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
     * இந்த உத்தியைப் பின்பற்றி ஒரு எடிட்டரிடம் என் கதையைக் கொடுத்துவிட்டுப் பேசினேன்.
      ஒரு அழுத்தமான கேரக்டரைப் பரவலாக உலவ விட்டு, டீப் ஸ்டெடி பண்ணி சிச்சுவேஷன்லே பஞ்ச் கொடுத்திருக்கேன்.  கதையின் அட்மாஸ்ஃபியருக்காக நிறைய ஃபீல்ட் ஒர்க் பண்ணி, ஒரு இன்-டெப்த் அனாலஸிஸ் செஞ்சு ஒரு கான்ùஸப்டை லாஜிக்கலா அப்ரோச் பண்ணி எழுதியிருக்கிறேன்'' என்றேன்.
      ஆசிரியர் கதையை மளமளவென்று படித்து விட்டு "ரிஜக்டட்' என்றார்!

June 03, 2011

நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி-This week's winners

சில நாட்களுக்கு முன்பு  நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன் .
http://kadugu-agasthian.blogspot.com/2011/05/blog-post_23.html      
அதற்கு வரவேற்பே  இல்லை  என்று நினைக்கிறேன். இத்தகைய போட்டிகளில் பரிசு பெறுவது முக்கியமில்லை. கலந்து கொள்ளும்போது நமது சிந்தனைகள். கற்பனை திறன், சவால்களை ஏற்கும் ஆர்வம் எல்லாம் மேம்படுகிறன, ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. ஆனால் உங்களில் பலர் முயற்சித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கடந்த  ஒரு மாதம் நான் செய்த முக்கிய வேலை: (பெருமை அடித்துக் கொள்வதாக வைத்துக்கொண்டாலும் சரி)  நியூ ஸ்டேட்ஸ்மென் போட்டி எண் 3700-லிருந்து 4169 வரை எல்லா போட்டிகளையும் அவைகளின்  பரிசு பெற்ற   ENTRYகளையும் ஒவ்வொறு வார இதழிலிருந்தும் டவுன்லோட் செய்து,  DTP   செய்து புத்தகங்களை உருவக்கியுள்ளேன். இனிமேல் நிதானமாக அவற்றைப் படிக்க வேண்டும். அவற்றிலிருந்து சுவையானவைகளைத் தேர்ந்தெடுத்துப் போடலாம் என்றிருக்கிறேன்.
 ’தாளிப்பு’ பதிவில் போட்ட போட்டிக்கு நியூ  ஸ்டேட்ஸ்மென் இதழுக்கு வந்த நுழைவுக் கட்டுரைகளை  இங்கு தருகிறேன்.
Competition:
Highly paid people often justify their wealth by saying they "work very hard", without mentioning what it is that they do. We would like an account of a highly paid person who works very hard at something totally useless.

This week's winners
Responsible for Cornwall
Each morning one has to wait whilst the valet runs one's bath and dresses one. One's asked Camilla but her attitude to waiting on one hand and foot seems to have hardened somewhat lately. One works very hard, you know. It's not easy being, sort of, responsible for Cornwall and, er, Wales. Then there are all those organic biscuit thingies to bake. Well, not one personally, obviously the workers, but one has to oversee the profits. Well, not one personally, the manager and accountant, but its all hard work. Then one must find the energy to wave at the commoners but the ungrateful blighters recently attacked one's limousine. One drove off quickly. Well, not one personally, the chauffeur . . . --David J Cormack

June 01, 2011

ஒரு நையாண்டிப் புத்தகம் - கடுகு

நியூ யார்க்கிலிருந்து ஆனியன் ( THE  ONION) என்ற பத்திரிகை வருகிறது. நகைச்சுவை, நையாண்டி நிறைந்த பத்திரிகை. தரமான ஆங்கில நடையில்  கட்டுரைகள்  இருக்கும். சில இடங்களில் தரக்குறைவான ஜோக்குகள் இருக்கும்!

என்னிடம்  OUR DUMB CENTURY, FINEST NEWS REPORTING, DISPATCHES FROM THE TENTH CIRCLE ஆகிய மூன்று ’ஆனியன்’ தொகுப்புகள் - தீபாவளி மலர் அளவு -உள்ளன.
ஒரு அட்டைப் பெட்டியில்  ‘பேக் செய்து கொடுக்கிறார்கள். அந்த பெட்டியின் முன்பக்கத்தின் படத்தை இங்கு போடுகிறேன். அதில் அச்சடிக்கப் பட்டிருப்பதைப் படிக்கக் கஷ்டமாக  இருக்கக்கூடும் என்பதால், அவற்றை இங்கு தருகிறேன்.

முன் பக்கம்:
ROUND SEAL
LIMITED EDITION
1,778.467
OF 4,500.000
the ONION
Platinum Prestige
Encore Gold Premium
Collector's Collection

Contains Three Onion Classics
Plus Brand-New, Never-Before-Seen Box
OUR DUMB CENTURY, 
FINEST NEWS REPORTING, 
DISPATCHES FROM THE TENTH CIRCLE

SEAL-1
ONION PACKAGING INC
BOX CERTIFICATE
Seal of Authenticity

SEAL-2
ONION PACKAGING INC

BOX CERTIFICATE

Seal authenticating 
the above seal of 
Authenticity's Authenticity.
--------------
 பின்பக்கம்
* Truly turnable pages
* Lovingly reprinted from the Originals
* Genuine repackaging
* Now available for purchase
*Remastered binding
* Fully gift-wrappable
* Easy-to-Read Black Type
*Thousands of Commas
*Suitable for owning
*Only available wherever Books are sold.
*Comes with one-of-a-kind- ISBN number
* King James Version

THREE BOOKS FOR THE PRICE OF THREE
----------------------------------------
புத்தகத்தில் எழுத்துகள் ரொம்பப் பொடியாக இருப்பதால் நிதானமாகப் படித்து வருகிறேன்.

நிற்க, அமெரிக்கா சென்றிருந்த போது   OUR DUMB WORLD  என்ற புதிய ONION புத்தகம் வெளியாகி இருந்தது. 256 பக்கங்கள். புத்தகசாலையிலிருந்து வாங்கிப் படித்தேன். அதில் நாலு பேர் படிக்ககூடிய சில பாராக்களை என் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். இங்கு சிலவற்றைத் தருகிறேன்.
* The word 'CARTOGRAPHY' stems from the Greek word 'Chortis' meaning 'Carto' and ’graphien' meaning 'graphy'. The arbitrary term is used to describe the art of map making!
* The Unites States was found on the principles of life and liberty, and the reckless pursuit of happiness at any cost - even life and liberty,
* Year 1636. Harvard University  is founded but does not admit any students until the SAT's are invented in 1901.
* 1927: Charles Lindbergh becomes the first person that no one wants to fly non-stop across the Atlantic Ocean with.
* H-------------:Boasts a startling array of criminal life sure to take any visitor's breath, wallet, and often both kidneys away.
* El--------------: The nation prays every minute desperately praying for Jesus to return and bring a new country with him.
 * Be---------: 98% illiterate in two languages. Is so tiny that they even consider Guatemala a Superpower.
* India: Bollywood becomes the biggest film industry in the  world, releasing an average of 800 identical movies each year.
No..............:Is  committed  to helping its citizens quit smoking but to do so the state insists it must first get them to start.
இப்படி ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது, நைஜீரியாவைப் பற்றிய கட்டுரை, அங்கிருந்து வரும்  SPAM mail  பாணியில்,அத்ற்கேற்ற  FONT-ல் டைப் செய்து, அந்தக் கடிதத்தைப் படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.