July 11, 2018

கடவுளின் கரங்கள்

இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே . பார்த்தசாரதி அவர்கள் கூறிய உண்மைச் சம்பவம். அவர் சொன்னதை அப்படியே இங்கு தருகிறேன்.
    *                        *                           *
    " என் கண்ணின் முன்னே நடந்த அதிசயம் அது. சத்தியமான நிகழ்ச்சி, ஆண்டவனின் அபார கருணையை, லீலையை அப்போது  கண்டேன்.
     விவரமாகக் கூறுகிறேன்;
     என்னுடன் பணியாற்றும் நண்பரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மனக் கோளாறு வேறு ஏற்பட்டு விட்டது. பிழைப்பதே அரிது என்று ஆகிவிட்டது. மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தார் பிறகு,”வாரத்துக்கு இரண்டு ஷாக் வீதம், பத்து மின்சார ஷாக் கொடுத்தால்,‘மன நோய் சரியாகிவிடும்என்று சொல்லி  மருத்துவமனையிருந்து  டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்.
     வீட்டிற்கு வந்தும், அந்த அம்மாள் படுத்தபடியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே என் நண்பர் தன் மைத்துனரைத் தஞ்சாவூரிலிருந்து டில்லிக்கு வரவழைத்தார். அவர் வந்த பிறகு ஒருதரம் ஷாக் கொடுத்தார்கள். ஆனாலும் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
     இந்த சமயம், அந்த அம்மாளிடம் நான் திருப்புகழ். புத்தகங்களைக் கொடுத்து, அவற்றைப் படித்து மனச்சாந்தி பெறும்படி சொன்னேன். அவரும் படிப்பதாகச் சொல்லி வாங்கிக் கொண்டார்.
     அந்த திருப்புகழ் பிரதி என் நண்பருடையது.   அந்தப் பிரதியை எனக்குக் கொடுத்த அவர் “முருகன் அருள் தருவான்என்று எழுதிக் கொடுத்திருந்தார்.
 மருத்துவர் அடுத்த ’ஷாக்’ கொடுத்த பிறகும்   அந்த அம்மாவிற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தச் சமயத்தில், அவருடைய கிராமத்திலிருந்து ஒரு தந்தி வந்தது., அந்த அம்மாளின் தாயார் கிராமத்தில் காலமாகிவிட்டதாகத் தந்தியில் தெரிவித்து இருந்தார்கள்.  தன் நோயை மறந்து, “ ஐயோ அம்மா”  என்று அழுது அரற்றினார் என் நண்பரின்மனைவி.