December 30, 2017

வேண்டாம் முதல்வர் பதவி


       குறிப்பு:  எனக்கு  வரும் கேள்விகளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி திரும்பத் திரும்பப் பலரால் கேட்கப்படுகிறது. அதற்குப் பதில் அளித்தால் ரொம்ப நீண்டுப் போய்விடும் என்ற காரணத்தால் பதில் கூறாமலேயே தள்ளிப் போட்டு வந்தேன். ஆனால் பல்லாயிரக்க ணக்கான வாசகர்கள் (எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கான அளவு மிகை என்ற உண்மையைக் கூறிவிடுகிறேன்.!) ஓர் ஆர்வத்துடன் கேட்கும்போது பதில் சொல்லாவிட்டாலும் நன்றாக இருக்காது. ஆகவே இங்கு பதில் சொல்லிவிடுகிறேன்.
     கேள்வி இதுதான்; நீங்கள் ஏன் முதலமைச்சர் ஆகக் கூடாது?
     பதில்: ஒரே வார்த்தையில் சொல்வதானால்வேண்டாம்என்று சொல்ல வேண்டும் விளக்கமாகக் கூறாவிட்டால் திருப்தி ஏற்படாது. (எனக்குத்தான்!)
           *                *
     முதல் அமைச்சர் என்றால் தினந்தோறும் அலுவலகம் போகாவிட்டாலும், பேட்டி காண வரும் எம்.எல்.. க்களையும் பார்க்காமல் இருக்க முடியாது. அதற்காகக் காலையிலேயே எழுந்திருந்து (கஷ்டமான காரியம்) ஷேவ் பண்ணி (ரொம்பக் கஷ்டமான காரியம்) குளித்து (ரொம்ப ரொம்பக் கஷ்டமான காரியம்) தயாராக வேண்டும் !
     உதவி கேட்டு வரும் பிரமுகர்களைப் பார்த்து சிரிக்க வேண்டும். ஒரே ஒரு வேலை காலியாக உள்ள இடத்தில்நம்ப ஆளை போடணும்என்று கேட்டுக் கொண்டு தனித்தனியாக ஏழு எம்.எல்.ஏக்கள் வந்து கேட்பார்கள். “கட்டாயம் போட்டுடறேன்என்று ஏழு பேருக்கும் மனதறிந்து பொய் சொல்ல வேண்டும். ( பொய் சொல்வது லட்டு மாதிரி என்றாலும், ஒரு நாளைக்கு ஆயிரம்  லட்டு சாப்பிட முடியுமா?). ஏழு பேரையும் விரோதித்துக் கொண்டு என் மைத்துனியின்     பிள்ளைக்கு அந்த வேலையைக் கொடுக்க வேண்டும், (யாரை விரோதித்துக்   கொண்டாலும் என் மைத்துனியை விரோதித்துக் கொள்ள முடியாது!)
     அலுவலகத்துக்கு சென்றால் எனக்குப் புரியாத, தெரியாத, தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லாத   ஆயிரம் விஷயங்களை பற்றித்  தீவிர ஆலோசனைக்குப் பிறகு (!) முடிவு எடுத்து,  ஃபைல்களில் எழுதி அனுப்ப வேண்டும்.
     கவர்மென்ட் ஆபீஸில் யாரும் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மை என்பது எனக்குத் தெரியும். எல்லா கோப்புகளையும் முதல்வருக்கு அனுப்பிவிடுகிறார்களே! ஏதாவது ஒரு ஃபைலில்இதற்கு காம்பவுண்ட் வரி ஒரு சதவிகிதத்திலிருந்து ஒன்றே கால் சதவீதமாக மாற்றலாம்என்று அதிகாரி எழுதியிருப்பதைப் படித்து, இதனால் சர்க்காருக்கு வருவாய் என்று எண்ணிச் சம்மதம் தெரிவித்துவிடுவேன். (காம்பவுண்ட் என்றால் வீட்டைச் சுற்றி எழுப்பப்படும்  சுவர் வரி என்றுதான் புரிந்து கொள்வேன்!) 

December 19, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் -- பாகம்-4

              
    அடுத்த இரண்டு நாள் பிரச்சனை இல்லாமல் கழிந்தது.
     வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு ஸ்டார்ட் செய்தேன். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்பது போல், ஓசைபடுத்தாமல் வேலை செய்தது.
     “கமலா…. வாஷிங் மெஷின் பரவாயில்லை. தெரியாமல் பாதி விலைக்கு கொடுத்துவிட்டார் போலிருக்கிறது, “என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதை வாஷிங் மெஷின் கேட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ, தன்னைப் பற்றி குறைவாக நான் சொல்லிவிட்டேன் என்று நினைத்ததோ என்னவோ, சட்டென்று நாலைந்து தும்மல், ஐந்தாறு இருமல், மூன்று நான்கு ஹைஜம்ப் என்று செய்தது…” கமலாகமலா.. முதல்லே வாஷிங் மெஷினை நிறுத்துஅது என்னவோ ஸ்கிப்பிங் கயிறு இல்லாமலேயே குதிக்கிறது. கொஞ்சம் விட்டால் தவளை மாதிரி தத்தித் தத்தி ஹாலுக்கு வந்துவிடும்…” எந்த ஸ்பிரிங்கெல்லாம் உடைஞ்சிருக்கோ,, வெளியில்பாடியெல்லாம் காட்பாடியாக  இருந்ததே என்று பார்த்தேன். கொஞ்சம் துரு தானே என்று நினைச்சேன்….” இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே , காலிங்பெல் அடித்தது…” கமலா.. யாரோ யாரோ மணி அடிக்கிறாங்க.. இந்த வாஷிங்மெஷின் ஊரையே கூட்டிடும் போல இருக்கு.. நம்பியார் மாதிரி இன்னொரு வில்லனாக இருக்கும்..” என்றேன்.
     “ஏன் பயந்து சாகறீங்க? நான் போய் பார்க்கிறேன்என்று சொல்லிக் கொண்டே, கமலா போய், மெல்ல கதவைத் திறந்தாள்.
     ஒரு மாமி கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தாள். (எனக்கு நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது’)
     “நமஸ்காரம் மாமி.. நான் மேல் வீட்டிலே இருக்கிறேன்.. நீங்க புதுசா வந்திருக்கீங்களா?... என் பேர் பாமா சித்தி.. ஆமாம்மா.. இந்த சித்தி என் பேரோட எப்படியோ ஒட்டிண்டுத்துஎங்க குடும்பத்துலேயே நான் தான் கடைசிப் பொண்ணு. என் அக்கா பசங்க, சித்தி சித்தின்னு கூப்பிட்டு சித்தி என் பேரோட ஒட்டிக் கொண்டது. எல்லாருக்கும் நான் சித்தி.. எங்க ஆத்துக்காரர் கூட பாமா சித்தின்னு தான் கூப்பிடுவார்.. போகட்டும் .. உங்க பேர் என்ன?”
“      “என் பேரு கமலா…” என்றாள் கமலா..
       கீழே போனேன். தபால்காரர் நாலைந்து கவரைக் கொடுத்துட்டு, இந்த அட்ரஸ்க்கு வந்த கவர்இந்தாம்மா ,” என்று சொல்லி தபால்களைக் கமலாவிடம் கொடுத்தார்.
      ”ரொம்ப தாங்ஸ் பாமா சித்திஎன்றாள் கமலாபாமா சித்திக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
      “ஆமாம் ..கமலா,, இந்தக் கவரில் ஒன்றுஅமுதம்பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறது. .. உன் ஆத்துக்காரர் அங்க வேலை செய்யறாரா?”
      “இல்லை சித்தி. அவர் கதை எழுதறவர்..”
       ”அப்படியா..ரொம்ப சந்தோஷம். கவர்லசெக் வந்திருக்குமாக்கும்’  என்று கேள்வியாக கேட்காமல், ஒரு யூகமாகச் சொன்னார்.
       ”ஆமாம்.. சித்தி..”
      “கமலாநான் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.. உன்னைப் பார்த்தால் என் அக்கா பேத்தி மாதிரி இருக்கிறதுஅதனால் உரிமையுடன் கேட்கிறேன்..”