April 25, 2011

நலங்கு பாட்டி -கடுகு

``சௌம்யா! மெஹந்தி போடறதுக்கு நீ இன்னும் ஏற்பாடு பண்ணலை. முகூர்த்த நாளுக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை...''
``சொல்லிட்டேன்மா. அப்புறம் ஒரு விஷயம். நலங்கு அது இதுன்னு பண்ணறதுக்கு எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் பாட்டி முதல்ல வந்து, .சாரட்டு வண்டிலே சனக மகாராசன் பிள்ளை போல வர்றான், நம்ப சரோஜாவுக்கு வங்கி, ஒட்டியாணம், புல்லாக்கு, நத்து, ஜிமிக்கி போட வர்றான், மீசைக்கார வீரன்' என்கிற மாதிரி எல்லா கலியாணத்திலேயும் நம்ப பாட்டி பாடுவாள். என் கலியாணத்தில் பாட வேண்டாம்னு சொல்லு. எங்க கம்ப்யூட்டர் கம்பெனியிலே இருந்து வர்றவங்க `சரியான நாட்டுப்புறம்’னு சொல்லிச் சிரிப்பாங்க'' என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டி, ``ஆயிரம் கல்யாணத்தில நலங்குப் பாட்டு பாடியிருக்கேன். என் பேத்திக்கு இஷ்டமில்லைன்னா பாடலை'' என்றாள்.

சௌம்யா-சுரேஷ் கலியாணம் தடபுடலாக நடந்தது. கலியாணம் ஆனவுடன் அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் வேலை கிடைத்து போய் விட்டார்கள்
இரண்டு வருஷம் கழித்து கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள பாட்டியை நியூஜெர்ஸிக்கு வரவழைத்துக் கொண்டாள் சௌம்யா.

பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரா கோயிலில் ஒரு கலியாணத்திற்குப் பாட்டியை  சௌம்யா. அழைத்துக் கொண்டு போனாள்
கலியாணத்தின் போது, ``யாராவது நலங்கு பாட்டுப் பாடுங்கோளேன்'' என்றார் புரோகிதர்.
சட்டென்று  “.சாரட்டு வண்டிலே சனக மகாராசன்....”என்று  பாட்டி பாட ஆரம்பிக்க, ஒரே கை தட்டல்! கேலியும் கிண்டலுமாக பல பாடல்கள். பாட்டிக்கு பலர் கை குலுக்கினார்கள். கரடிப் பிடியாக கட்டிப் பிடித்துப் பாராட்டினார்கள். ``சௌம்யா! யுவர் பாட்டி ஈஸ் கிரேட்! யூ ஆர் லக்கி!'' என்றார்கள்.
*
இரண்டு மாதம் கழித்து நலங்கு பாட்டியின் கலியாணப் பாடல்கள் சிடியை நியூஜெர்சி தமிழ் பண்பாட்டு மையம் வெளியிட்டது.
சௌம்யாவிற்கு பெருமை தலைகால் புரியவில்லை.

April 20, 2011

கனிவான கவனத்திற்கு...

கனிவான கவனத்திற்கு...

தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு 3,4  நான்கு தினங்களுக்குப் பிறகுதான் போட முடியும் என்று எண்ணுகிறேன்......அதுவரைக்கும்  ENJOY!
------------------------------------------------------

April 15, 2011

நியூயார்க்கர் கார்ட்டூன்கள் -- கடுகு



சென்ற ஆண்டு நான் அமெரிக்க போயிருந்தபோது ( ”போதுமே உங்கள் ஜம்பம்” என்று யாரோ ஒருவர்  உரக்கக் கத்துவது என் காதில் விழவில்லை!) ஒரு நண்பர் வீட்டில் ஒரு தடிமனான புத்தகம் கண்ணில் பட்டது. ஆர்ட் பேப்பரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. பெரிய சைஸ்.  . 672 பக்கங்கள், மிகவும் கனமான புத்தகம்/ சொல்லாமல் நைசாக எடுத்து வரமுடியாது என்பதால் வேறு வழியின்றி’ (!)கேட்டு வாங்கி வந்தேன். படித்து விட்டுத் தருகிறேன்; என்று சொல்லி எடுத்து வந்தேன். 1925-லிருந்து  2004   வரை நியூயார்க்கர் வாரப் பத்திரிகையில் வந்த கார்ட்டூன்களிலிருந்து 68647 கார்ட்டூன்களை எடுத்து போட்டிருந்தார்கள். ஒரு கார்ட்டூன் கூட விடாமல் பார்த்தேன். ஓவியர்களின் கற்பனை திறனைக் கண்டு  வியந்தேன். ( ஒரு சில கார்ட்டூன்கள் புரியவில்லை. அந்த  கால கட்டத்தில்  நடந்த நிகழ்ச்சிகளை மனதில் வைத்து வரையப்பட்டவையாக இருக்கும்.)
அந்த  புத்தகத்திலிருந்து   சில கார்ட்டூன்களை ‘தாளிப்பு’வில் அவ்வப்போது போடலாம் என்றிருக்கிறேன். இதோ முதல் கார்ட்டூன்!

( ” ஆமாம். புத்தகத்தைச் சுருட்டிக் கொண்டு வந்துவிட்டீர்களா? இல்லாவிட்டால் அவ்வப்போது கார்ட்டூன்களை  எப்படி போடமுடியும்? என்று கேட்கும் சந்தேக ரத்னாக்களுக்கு இதோ பதில்: அத்தனை கார்ட்டூன்களையும்   CD-யிலும் கொடுத்து இருந்தார்கள் ,CD -களை கடனா வாங்கி வந்தேன்.).

’பீசாவின் சாய்ந்த கோபுரம்’   படத்தை வாங்கி வந்து வீட்டில் மாட்டியதன் விளைவு - 1925 வருஷ ஜோக்!

April 11, 2011

கிண்டல்கார மகாராஜா --கடுகு

 நகைச்சுவைக்குப் புகழ்பெற்ற ஏர் இந்தியா மகாராஜா சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு FOOLISHLY YOURS  என்ற துண்டுப் பிரசுரத்தை (36 பக்கங்கள்.) வெளியிட்டிருக்கிறார். இதை எழுதியவர் ஏர் இந்தியாவின் சேர்மனாக இருந்த  திரு கூக்கா.  S K KOOKAஏர் இந்தியா மகாராஜா லோகோவை உருவாக்கியவர். நல்ல நகைச்சுவையாளர். பின்னால்  HINDUSTAN THOMPSON ASSOCIATES என்னும்  பிரபல விளம்பரக் கம்பெனியின் சேர்மனாகப் பணிபுரிந்தார்.
 
(அந்த கால கட்டத்தில்தான் நான் அதில் ஒரு காபிரைட்டராகப் பணிபுரிந்தேன்.இந்த தகவலையும் மற்ற ஜம்பத் தகவலையும் முன்பேயே எழுதிவிட்டேன்,)
இந்த  FOOLISHLY YOURS  என்ற புத்தகம் ( 36  பக்கங்கள்.) வெளியானதும் பாராளுமன்றத்தில் அமளி எற்பட்டது: ”நம் நாட்டைப் பற்றி நாமே மட்டமாக எழுதலாமா?.. புத்தகங்களை விநியோகிக்க்கூடாது; வாபஸ் பெறவேண்டும்.” என்று எம்.பிக்கள்  குதித்தார்கள். அப்படியே வாபஸ் பெற்ப்பட்டது  ஆனால் சில மாதங்கள் கழித்து திரு கூக்கா மற்றொரு கிண்டல் புத்தகம் எழுதினார்..
அதன் பெயர்:  THIS MAKES NO SENSE (48 பக்கங்கள்.)
  அந்த பிரசுரத்திலிருந்து சில    துணுக்குகளை  இங்கு தருகிறேன். முடிந்தால் இரண்டு புத்தகங்களையும்  PDF  புத்தகமாகப் போடப்பார்க்கிறேன்.

* இந்தியாவிற்கு வந்தால் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி எல்லாம் ஏற்படும் என்பதை நம்பாதீர்கள். தினமும் ஒரு `இன்டெஸ்டொபான்' மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும்.

* உலகில் ஒரே ஒரு இந்தியாதான் இருக்கிறது. வருஷத்தில் 15 மிலியன் ஜனத்தொகை ஏறுவதால் இந்தியா மாறிக் கொண்டே இருககிறது. ஆகவே விரைவில் வாருங்கள்.

* கிராப் செய்து கொள்ள வேண்டுமெனில் நடைபாதையிலேயே முடி அலங்காரக் கலைஞர் செய்து விடுவார். ஹேர் கட்டிங்கிற்கு 12 சென்ட். ஆனால் அவரால் ஏற்படும் கத்திக் காயத்திற்கு டிராவலர் செக் கொடுத்தால் போதும்.

* பம்பாயில் உங்கள் உறவினர் இருந்தால் அவர்களைச் சந்திக்க வாருங்கள். உங்களுடன் எங்கள் கார்ப்பரேஷன்காரர்கள் கண்ணாமூச்சி விளையாடுவார்கள். ஆமாம், நகரில் வீதிகளின் பெயர்களை எல்லாம் மாற்றி விட்டார்கள். பம்பாய் தபால்காரர் உங்களிடம் வழி கேட்டால் தயவு செய்து உதவுங்கள்.
* டெலிபோனுக்கு அருகில் வெண்தாடிக் கிழவர் ஒருவர் உட்கார்ந்திருந்தால் அவரிடம் அன்பாக இருங்கள். ஒரு டெலிபோன் நம்பரைப் பிடிக்க அவர் கறுத்த முடி இளைஞனாக இருந்த காலத்திலிருந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!

* உங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆக்ஸ்போர்டில் படித்தவர்கள் கூட போஸ்டாபீஸ் வாசலில் உட்கார்ந்து எழுதித் தரும் வேலை செய்வதைப் பார்க்கலாம். காதல் கடிதங்களுக்கு குறைந்த சார்ஜ் வாங்குவார்கள்.

* எங்கள் ஓட்டலில் `டிப்ஸ் தராதீர்கள்' என்று நிறைய போர்டுகள் இருக்கும். விடிவதற்கு இரண்டு மூன்று மணி நேரத்திற்கு முன்பு ஓட்டலை விட்டுக் கிளம்பினால் ஓட்டல் வராந்தாக்கள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது புறப்பட்டால் பிழைத்தீர்கள்!

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியன் ஏர்லைன்ஸின் தனி உரிமையாக இருக்கிறது. அதிர்ஷ்டக்காரர்கள்! ஒரு நாளைக்கு இரண்டு தரம் விமான டிக்கட்டுகளின் விலையை ஏற்றி விடுகிறார்கள்!

 ===========
  இந்த பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்:
dagalti said... சிறப்பான நூல் ஏர் இந்தியா பம்பாய் அலுவலகத்தில் சுழல் நாற்காலிகள் சொகுசாக இருப்பதால் வந்தமரும் வாடிக்கையாளர் சுவாதீனமாக முடிவெட்டச் சொல்லிக் கேட்க, customer service என்று Air India-காரரும் வெட்டிவிடும் துணுக்கு ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. கதர்/காந்தித்குல்லாய் அணிந்த குண்டுமந்திரியை அணைத்து விடைதரும் சிப்பந்தினி அவர் ஜோபியிலிருந்து முட்கரண்டிகளை மீட்பதாக இருந்த கார்ட்டூன் சர்ச்சையைக் கிளப்பியதாகப் படித்த ஞாபகம்.

அவருக்காக அவர் குறிப்பிட்டுள்ள இரண்டு கார்ட்டூன்களை இங்கே போட்டுள்ளேன்,

நம்பர் பிளேட்டுகளில் குறும்பு

அமெரிக்காவில்,கார்களின் பம்பர்களில், நம்பர் பிளேட்டுகளில் பலர் குறும்புத்தனமான வாசகங்களை எழுதி வைக்கிறார்கள்.
இதோ சில நகைச்சுவையான வாசகங்கள்.

*  Watch out for the idiot behind me!"

* Stupidity is not a crime so you’re free to go

* All men are idiots, and I married their king.

* A day without sunshine is like, night.

* A fool and his money are a girl's best friend.
 
* Behind every successful man there is a woman,
  behind every unsuccessful man there are two.
 
* I don't find it hard to meet expenses. They're everywhere.

*  Laugh and the world laughs with you cry and the world laughs at you.

* Look before you open your eyes.

* Love is grand. Divorce is a hundred grand.
 
* Mirrors can't talk. Luckily for you they can't laugh either.
   
* Never put off till tomorrow what you can avoid all together.
  

April 05, 2011

அம்புஜத்தின் அர்ச்சனைகள் - ஒரு பின்னூட்டம்!

இந்த தொடரை சென்ற பதிவில் எழுதிய அத்தியாயத்துடன்  முடித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அர்ச்சனைகள் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் All good things must come to an end எனறு 1374’ல் Chaucer சொல்லியிருக்கிறாரே!

இந்த அர்ச்சனைகள் என் சொந்த ஐடியா அல்ல. 1902’ம் வருஷம் வெளியான MRS. CAUDLE'S CURTAIN LECTURES என்ற புத்தகத்தைப் படித்ததின் விளைவு. இதை எழுதியவர் DOUGLAS JERROLD.  அவருடைய புத்தகத்தில் இன்னும் நிறைய அர்ச்சனைகள் உள்ளன.

டகள்ஸ் ஜெரால்ட்  ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கிறார். PUNCH  பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.
Mr.PUNCH  என்று குறிப்பிடும் அளவுக்குப் பிரபலமானவர். இவர் எழுதிய புத்தகங்கள் இண்டர்னெட்டில் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை PROJECT GUTENBURG  என்றஅமைப்பு  தங்கள் இணைய தளத்தில் (http://www.gutenberg.org/wiki/Main_Page)  வெளியிட்டு வருகிறார்கள். அதில் நான்  கண்டெடுத்த பல நல்ல புத்தகங்களில் இதுவும் ஒன்று.

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்தவர்களின் சராசரி வாழ்க்கை நமது வாழ்க்கை மாதிரியே  இருந்திருக்கிறது. ஆகவே தான் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே என் மனதில் அர்ச்சனைகள் அப்படியே தமிழில் வீடியோவாக ஓடிக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, ஓரே மூச்சில் ’அம்புஜத்தின் அர்ச்சனைகள்’ தொடரை எழுதினேன்.
இன்னும் வேறு பல புத்தகங்களையும் தமிழில் தர உத்தேசம்.

ஐயோடா, வக்கீல்கள் -கடுகு


வக்கீல்களிடம் எனக்கு அவ்வளவு மோகம் கிடையாது. எந்தத் தொழிலையும் கண்ணை மூடிக் கொண்டு இகழக் கூடாது தான். ஆனால் இந்தச் சட்ட நிபுணர்களால் எனக்கு ஏற்பட்ட  தொல்லைகள் சற்று மனக்கசப்பை வளர்த்து விட்டன.

      வாழ்க்கை மிகவும் சிக்கல் மிகுந்ததாக ஆகிவிட்டது. பக்கத்தில் வக்கீல் இல்லாத போது தும்மக் கூடக்கூடாது. எவையெல்லாம் சட்ட விரோதமான காரியங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள மற்றொரு ஜன்மம் எடுத்தால் தான் முடியும். அப்பாடி, வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் சட்ட திட்டங்கள்!

      வக்கீல்கள், டாக்டர்களைப் போல் ஆகிவிட்டார்கள். அவர்களிடமும் ஸ்பெஷலிஸ்ட் என்ற ஜாதி தோன்றிவிட்டது. இவர்களுக்குத் தெரியாத சட்டமே கிடையாது. அப்படி ஏதாவது சட்டச் சிக்கல் ஏற்பட்டால், லத்தீன் பிரெஞ்சு மொழிகளில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் பேசுவது நமக்குப் புரியாதது மட்டுமல்ல அவர்களுக்கும் புரியாது!

      இன்று நமக்குத் தேவையான வக்கீலைத் தேர்ந்தெடுக்கலாம். இன்கம்டாக்ஸ், சொத்து விவகாரம், அரசியல் போராட்டம், உயில், மான நஷ்டம், விவாகரத்து, இன்சால்வன்சி, விற்பனை வரி, மதுவிலக்கு, மனைவி கொலை போன்ற ஒவ்வொரு விவகாரத்திற்கும் ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பதால், சட்டத்தைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. வக்கீலைக் கண்டுதான் பயப்பட வேண்டும்!

      இவர்கள் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டு நம்மைப் பயமுறுத்துவார்கள். இப்படி பயமுறுத்துவதற்கு நம்மிடம் பணமும் வசூல் செய்து விடுவார்கள்!

      முன் காலத்தில் யாரும் உயில் எழுதவில்லை. இருந்தாலும் சொத்துக்கள் பற்றித் தகராறுகள் எழவில்லை.

உயில்களை எழுதாவிட்டால் ஆபத்து, வழக்கு விவகாரம் ஏற்படும் என்றெல்லாம் இப்போது சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். என்னைக் கேட்டால் உயில்கள் எழுத ஆரம்பித்த நாளிலிருந்தேதான் வம்புகள் ஆரம்பிக்கின்றன. இறந்தவரின் பெண், பிள்ளைகளிடம் கசமுச தோன்றும். ஏன், மனைவியே கூடப் பொருமக் கூடும்.

      முன்பெல்லாம் லட்சக்கணக்கான ரூபாய் வியாபாரம் கூட வாயாலேயே செட்டில் ஆகிவிடும். இப்போது கான்ட்ராக்ட், அக்ரிமென்ட் என்று இல்லாமல் சுண்டைக்காய் வியாபாரம் கூடச் செய்ய முடியாது.

      வக்கீல் வருகிறார். பத்திரங்கள் வருகின்றன. ரிஜிஸ்டிரேஷன், கோர்ட் எல்லாம் உருவாகின்றன. எல்லாருக்கும் நாம்தான் தீனி போட வேண்டும்.

      இன்று உலகம் முன்னேறிக் கொண்டே போகிறது. விஞ்ஞானிகள் வானவெளியைத் துருவி ஆராய்கிறார்கள். டாக்டர்கள் மனித உடலை அலசி ஆராய்கிறார்கள். ஆனால் வக்கீல்கள் எப்படி?

      ஒரு வக்கீலின் அறைக்குப் போய்ப் பாருங்கள். ஏகப்பட்ட ஷெல்ஃப்களில் தடிமனான புத்தகங்கள், கேஸ் கட்டுக்ள, தும்பு, தூசு ஆகியவை இருப்பதைப் பார்க்கலாம்.

      தும்பு! இது தான் வக்கீலுக்கு முக்கியமானது. மனித இனத்தைப் போன்று சட்டம் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது என்பதை நமக்கு எடுத்துக் காட்ட தும்பு அவசியம். எவ்வளவு தும்பு, தூசு படிந்திருக்கிறதோ, அவ்வளவு பெரிய வக்கீல் அவர்!

     
அது மட்டுமா? வக்கீலின் அறையில் மேஜை, நாற்காலிகள் எல்லாம் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கும். கடைசல் கால்கள், உயரமான முதுகு, ஏகப்பட்ட வளைவுகள் கொண்ட மேஜை, அழுக்குத் துணி, டேபிள் கிளாத், வார்னிஷ் பார்க்காத நாற்காலி, பத்து பேர் உட்காரக் கூடிய நீள பெஞ்சு ஒரு கால் சரியாக இல்லாததால் உயரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் லா-ஜர்னல், மைக்கூடு, பேனாக்கட்டை, ஸ்டாண்டில் வெளுத்துப் போயிருக்கும் கறுப்பு கவுன், கறுத்துக் கொண்டிருக்கும் வெளுப்பு தலைப்பாகை, சுவாமி படங்கள், வாசனை வராத ஊதுவத்திப் புகை -இது தான் வக்கீலின் அறை.

      எந்தக் கேஸைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலும் வக்கீல் சொல்வார் : ""இந்தக் கேஸை நான் பார்த்துக் கொள்கிறேன். தொள்ளாயிரத்துப் பதினேழில் காட்டாங்குளத்தூர் சமஸ்தானத்திற்கும் சிங்கப்பெருமாள் கோயில் மன்னருக்கும் நடந்த கேஸில்...'' என்று ஆரம்பிப்பார்கள்.

      "நாம் ஜெயிப்பது உறுதி என்றாலும் செக்க்ஷன் -----ன் படி ஒருக்கால் நீங்கள் தோற்றுப்போகலாம்...'' என்பார். ஜெயிப்பது பற்றி பேசும் போது "நாம்' என்பவர், தோல்வி என்னும் போது "நீங்கள்' என்பார்!