October 30, 2010

புள்ளிகள்: இந்திரா காந்தி

புது டில்லியில் பஹார்கஞ்ச் என்ற பகுதியில் ( நம்ம ஊர் கொத்தவால் சாவடி மாதிரி) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் உள்ளது, அங்கு  விசாலமான ஆடிட்டோரியம், புத்தகசாலை எல்லாம்  இருக்கிறது.\

அவ்வப்போது நாங்கள் புத்தகசாலைக்குப் போவோம்.
 ஒரு நாள் மாலை போனபோது, அங்கு ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது. “ மாலை 6 மணிக்கு  சுவாமி ரங்கநாதானந்தா பேசுகிறார்....” என்று அதில்  எழுதப்பட்டு இருந்தது..
ரங்கநாதானந்தா உரையைக் கேட்கும் ஆர்வம் எனக்கு இல்லை. அவரைப் பற்றி எனக்குத் தெரியாததும் ஒரு காரணம்.
 நாங்கள் புத்தகசாலைக்குள் போய் படிக்க ஆரம்பித்து விட்டோம்.
 சுமார் 6 மணி வாக்கில்  புத்தகசாலைக்கு வெளியே  பரபரப்பு எற்பட்டது தெரிந்தது. எட்டிப் பார்த்தோம்.
சர்ரென்று நாலைந்து கார்கள் வந்தன. சில போலீஸ்காரர்கள் தலைகளும் தெரிந்தன. விசில், சைரன், “ சலோ, சலோ”  அதட்டல்கள் எதுவும் இல்லை.   துறவிகள் சிலர் காரிலிருந்து இறங்குபவரை வரவேற்றனர்.. காரிலிருந்து இறங்கியவர்”: பிரதம மந்திரி இந்திரா காந்தி!

’அட, இந்திரா காந்தியே உரையைக் கேட்க வருகிறர் என்றால் சுவாமி ரங்கநாதானந்தா சாதாரணத் துறவி அல்ல. நாமும் போய் அவரது உரையைக் கேட்கலாம்’  என்று எண்ணி ஆடிட்டோரியத்திற்குள் போய் உட்கார்ந்தோம்.

இந்திரா காந்தி முதல் வரிசையில் உட்காந்திருந்தார். நாலைந்து வரிசைகள் தள்ளி நாங்கள் உட்கார்ந்தோம். சுவாமி  ரங்கநாதானந்தா உரையைத் துவக்கினார். தெளிவான ஆங்கில உச்சரிப்புடன்,  சரளமாகத் தங்கு தடையில்லாமல் சொற்களைப் பொழிந்தார். கேட்டுக் கொண்டே இருக்கலாம்போல் இருந்தது!
சுவாமி  ரங்கநாதானந்தா பேசி முடித்ததும், இந்திரா காந்தி எழுந்து நின்று அவருக்கு ஒரு ‘நமஸ்தே’ போட்டுவிட்டுப் புறப்பட்டு விட்டார். ஒரு பந்தா, ஒரு அலட்டல், ஒரு கெடுபிடி,எதுவும் இல்லை!
தினசரிப் பத்திரிகையில்வந்த “ இன்றைய நிகழ்ச்சிகள்” பத்தியைப் பார்த்து இந்திராகாந்தி அவராகவே சுவாமி  ரங்கநாதானந்தாவின் உரையைக் கேட்க வந்தார் என்பது சிலர் பேசிக்கொண்டதிலிருந்து தெரிந்தது!

ஹூம்.. ( பெருமூச்சு!)

Love - Roy Croft

I love you
Not only for what you are,
But for what I am
When I am with you.

I love you,
Not only for what
You have made of yourself,
But for what
You are making of me.

I love you
For the part of me
That you bring out;
I love you
For putting your hand
Into my heaped-up heart
And passing over
All the foolish, weak things
That you can't help
Dimly seeing there,
And for drawing out
Into the light
All the beautiful belongings
That no one else had looked
Quite far enough to find.

I love you because you
Are helping me to make
Of the lumber of my life
Not a tavern
But a temple.
Out of the works
Of my every day
Not a reproach
But a song.

I love you
Because you have done
More than any creed
Could have done
To make me good.
And more than any fate
Could have done
To make me happy.

You have done it
Without a touch,
Without a word,
Without a sign.
You have done it
By being yourself.
Perhaps that is what
Being a friend means,
After all.
                    - Roy Croft

    October 24, 2010

    அருமைநாயகம் - கேரக்டர்

    அருமைநாயகம் நன்றாகப் படித்தவர். திறமையை விட. சர்வீஸ் காரணமாகப் பதவி உயர்வு பெற்று பம்பாய் அணு கமிஷனில் ஓர் உயர் அதிகாரியாக இருக்கிறவர். வெள்ளை மனது ஆசாமி. தலை முடியும் வெள்ளை. பக்திமான். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் மேரியும் மாரியம்மனும் அவர் வணங்கும் தெய்வங்கள்.
    "என்னைப் பொறுத்த வரை எல்லா சாமியும் ஒன்றுதான்.'' என்பார். அவரது அறையில் சுவரை மறைத்துக் கொண்டு பலவித தெய்வப் படங்கள் மாட்டப்பட்டிருக்கும்.
    அருமைநாயகம் அப்பாவி மனிதராகக் காட்சி அளிப்பார். "இவர் எப்படி இந்த பதவிக்கு வந்தார்?'' என்று பலருக்கு அவ்வப்போது சந்தேகம் எழும். "போகிறார், நல்ல மனிதர். சமயத்தில் சிறு பிள்ளை மாதிரி  ஏதாவது பேசுவார். தொலைந்து போகட்டும். புரமோஷன் கொடுக்கலாம்,'' என்று சொல்லியே பதவி உயர்வுகள் தரப்பட்டனவே தவிர, இவர் திறமைக்காக அல்ல!
    சாதாரண பியூனிடம் கூட "ஏம்பா, இந்த பைலைக் கொண்டுபோய் கொடுக்கிறியா?... இல்லை, வேண்டாம், நீ உட்கார்ந்துகிட்டு இரு. நான் அந்தப் பக்கம் போகும்போது கொடுக்கிறேன்... சரி, பொடி இருந்தால் கொடு, என்பார்''

    மறக்க முடியாத ராபர்ட் - கடுகு

    சில ஆண்டுகளுக்கு முன்பு  அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் உள்ள சேப்பல்ஹில் என்ற ஊரில் நான் சில மாதங்கள் தங்கி இருந்தேன். அங்குள்ள சர்வகலாசாலை மாணவர்கள் குடியிருப்பில் தங்கி இருந்தேன். அந்த சர்வகலாசாலையில் மிகப் பெரிய புத்தகசாலை இருந்தது. .மாணவர்கள் பல்வேறு ஹாஸ்டல்கள், டிபார்ட்மெண்டுகள் எல்லாம் போவதற்கு இலவச பஸ் சேவையும் இருந்தது.  பத்து பதினைந்து நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். அந்த பஸ்ஸில் நான் லைப்ரரிகளுக்கு  அடிக்கடி போவதுண்டு.
    ஒரு நாள் கல்லூரி விடும் நேரம் புத்தகசாலையிலிருந்து வீட்டுக்கு வர ஒரு பஸ்ஸில் ஏறினேன்.

    பஸ் கிளம்பியதும். பஸ்ஸிலிருந்த மைக்கில் ஒரு அறிவிப்பு வந்தது. மாணவர்கள் சட்டென்று பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள். பஸ் திடீரென்று நிசப்தமாகி விட்டது.  மைக்கில் தொடர்ந்து வந்த அறிவிப்பு:” .. ஹலோ. நான் உங்கள் பஸ் டிரைவர் ராபர்ட் பேசுகிறேன்... CALL ME BOB...குட் ஈவினிங்” என்றார்.. உடனே எல்லா மாணவர்களும் ஒற்றைக் குரலில்  ”குட் ஈவினிங், பாப்” என்றார்கள்.
    ” உங்களுடைய ஐந்து நிமிஷத்தை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்... நீங்கள் எல்லாரும் நமது சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்று பல திசைகளுக்கும் செல்லப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை நமது சர்வகலாசாலை அமைத்துத் தருகிறது.

    October 18, 2010

    ஆபீசுக்குள் பாம்பு! அடிப்பதா, வேண்டாமா?-கடுகு

        வேலை செய்யாத லிஃப்ட்டை சபித்துக் கொண்டே ஐந்து மாடிகளையும் கடந்து ஆறாவது மாடியில் உள்ள தன் டிபார்ட்மென்டிற்குள் நுழைந்தார் ஹெட்கிளார்க் தலசயனம்.

      ஒரு   அரசுத்துறை கட்டிடத்தில்  ஆறாவது மாடியில் உள்ள
    அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்டில் தலைமை குமாஸ்தா அவர். \
    அட்டென்டன்ஸ் ரிஜிஸ்தரில் கையெழுத்துப் போட்டு விட்டுச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு குமாஸ்தா கூட வரவில்லை. மணி பத்தரை ஆகியிருந்தது. ஆபீஸ் நேரம் ஒன்பதரை.
    "என்னய்யா அக்கிரமம்! ஏழு மாசமா பென்ஷன் கேஸ், ஜி.பி.எஃப் அக்கவுண்ட் எல்லாம் பெண்டிங்காக இருக்கிறது. எந்தப் பயலாவது நேரத்தில் வந்து வேலை செய்து, நேரத்தில் வீடு போவோம் என்று கிடையாது. ஓவர்டைம் பில் தவிர வேறு  எதையும் கவனிக்க மாட்டார்கள். மனச்சாட்சி என்று இருந்தால் தானே? நிதானமாக ஆடி அசைந்து வர வேண்டியது. காப்பி சாப்பிடுவது, லஞ்ச், டீ,  ... இன்றைக்கு எல்லோரையும்என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?"

    தலசயனம் தனியாக இருக்கும்போது தன் கீழ் உள்ள குமாஸ்தாக்கள் மேலுள்ள கோபத்தை இப்படிப் பேசித் தீர்த்துக் கொள்வார்:
    "அப்படித்தான் வருகிறார்களே, நாலு நிமிஷம் தொடர்ந்தாற்போல் ஸீட்டில் உட்கார்ந்திருப்பார்களா? பேசக் கூடாது. நான்அப்படி ஒரு லைட்டாக கண்ணை மூட வேண்டியதுதான். பாம்பு மாதிரி நழுவி விடுவார்கள். சரியான நல்ல பாம்புகள்... சரியான... ந..ல்..ல..பா..ம்........."
    தலசயனம் முடிக்கவில்லை. மூலையில் பைல்களுக்கு இடையே ஏதோ பளபளவென்று மழமழவென்று தெரிந்தது. உற்றுப் பார்த்தார். அது நெளிந்தது. சரசரவென்று  ஊர்ந்து பைல் காடுகளில் புகுந்தது... பாம்புதான்...
    "பாம்புதான் வந்திருக்கிறது." என்று தலசயனம், வேறு யாரிடமோ கூறுவது போல் உரக்கத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
    கால்களைத் தூக்கி நாற்காலியில் வைத்துக் கொண்டு பாம்பு நுழைந்த மூலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
    அவருக்கு பாம்பைக் கண்டு பயம் இல்லை; கவலைதான், அந்த மூலையில் இருக்கும் ஷெல்ஃபில் அவருடைய பிளாஸ்க்கும், டிபன் டப்பாவும் இருந்ததுதான் காரணம்.!
    இரண்டு நிமிஷம்அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அவரையறியாமல் உட்கார்ந்தபடியே தூங்கி விட்டார். (தலசயனம் நின்று கொண்டே தூங்கக் கூடியவர். ஏன், கண்களை திறந்து கொண்டு கூடத் தூங்குவார்!)

    October 12, 2010

    தடை செய்யத் தடை ஏதுமில்லை -கடுகு


    அவ்வப்போது சில புத்தகங்கள் அல்லது கட்டுரைகள் மீது தடை விதிக்கப் பட்டிருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி படிக்கிறோம். ஏன் தடை விதிக்கப்பட்டது என்று சில சமயம் காரணங்களும் தரப்படுகின்றன. அரசாங்கத்திற்குப் பிடிக்காத கட்டுரையையோ, கவிதையையோ தடை செய்வது கடினமான காரியமல்ல. ஆனால் அதற்கு ஒரு காரணம் அல்லது சப்பைக் கட்டுத் தேடுவதுதான் கஷ்டமான வேலையாகப் போய்விடும். சற்று யோசித்தால் இதையும் சுலபமாகச் செய்து விடலாம் என்று புரியும். எப்படி? இதோ ஒரு சாம்பிள்!

    தடை உத்தரவு
    தமிழ்நாட்டில் பல இடங்களில் கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டு வருகிறது.
    நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா
    மலை மேல் ஏறி வா, மல்லிகைப் பூ கொண்டு வா

    இப்பாடல் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது.  தடைக்கான காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
    .
    இப்பாடல் நம்முடைய குழந்தைகளின் மனதில் தோல்வி மனப்பான்மையையும், கோழைத் தனத்தையும் வளர்ப்பதுடன் தைரியம், ஊக்கம், துணி ஆகியவைகளைக் குன்றச் செய்யும் என்பது தெளிவாகிறது.
    `நிலா நிலா ஓடி வா' என்னும் போது நிலவுதான் தன்னிடம் வர வேண்டும் என்று குழந்தை கருதுமே தவிர, தான் நிலவிற்குச் செல்ல வேண்டும் என்று விஞ்ஞான மனப்பான்மையோ, அதற்கான துணிவோ வராது.

    ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு அல்ல -கடுகு

    ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு அல்ல. அவனுக்கு யாருடைய உதவி எப்போது தேவைப்படும் என்பது தெரியாது. மற்றவர் உதவி இல்லாமல் வாழ முடியாது. பல் குத்த உதவும் சிறு துரும்பு போல் மிக எளியவரின் உதவியைக் கூட பல சமயம் நாம் நாட வேண்டி வரும்.

    அப்படி நாம் உதவி பெறும்போது நமது நன்றியைத் தெரிவிப்பது அவசியம். ஒப்புக்கு நன்றி கூறுவது தவறு. உளமாரச் சொல்லுங்கள். அப்போதே சொல்லுங்கள். இன்று பெற்ற உதவிக்கு நாளைக்கு நன்றி சொல்வது உங்கள் நன்றியை நீர்த்துப் போகச் செய்து விடும்.

    அது மட்டுமல்ல; மற்றவர் நமக்குச் செய்த உதவியைப் பற்றி வெளியே சொல்லாமல் கமுக்கமாக இருந்து விடாதீர்கள். மற்றவர்களுக்குச் சொல்வதால் லாபம் நமக்குத்தான். இது ஒரு முதலீடு மாதிரி. பின்னால் நிச்சயமாகப் பலன் தரும் முதலீடு..  இவை எல்லாம் என் கருத்துகள் அல்ல. பல சிந்தனையாளர்கள் கூறியவை.

    சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்:

    நான் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன்.
    ஒரு சமயம் `ஸாப்ட் டிரிங்'குக்கு விளம்பரப் படம் எடுக்க வேண்டி இருந்தது. இருபது செகண்ட் வரக்கூடிய படம்தான். இருந்தாலும் அதில் சிறியதாக ஒரு கதை இருக்க வேண்டும். நகைச்சுவை இருக்க வேண்டும். குறிப்பிட்ட குளிர்பானத்தின் பெயர் படம் பார்ப்பவரின் மனதில் பதிய வேண்டும். இது தவிர இன்னும் சில நிபந்தனைகளும் இருந்தன.

    சென்றால் குடையாம்

    சென்றால் குடை,யாம்;  இருந்தால் சிங்காசனம் ஆம்
    நின்றால் மர அடி ஆம்;  நீள் கடலுள் - என்றும்
    புணை ஆம்; மணி விளக்கு ஆம், பூம் பட்டு ஆம்; புல்கும்
    அணை ஆம் திருமாற்(கு) அரவு.
    - பொய்கை ஆழ்வார் ( முதல் திருவந்தாதி)

    பெருமாள் செல்லும்போது ஆதிசேஷன் குடை ஆவான்;
    உட்கார்ந்தால் சிம்மாசனம் ஆவான்;
     நின்றால் பாதுகை ஆவான்;
    அவர் சயனித்தால் படுக்கை ஆவான்;
    மங்கல விளக்கு ஆவான்;
    அவருக்குப் பூம்பட்டு ஆவான்,
    அவர் அணைத்துக் கொள்ள தலையணை ஆவான்!

    நாமும் ஆதிசேஷனைப் போல  இப்படிப் பல விதமாகப் பகவானுக்குப் பணி செய்து வாழ்வோம்!

    October 07, 2010

    தபால் தலை



    சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பு சென்னை ஜி.பி,ஓ.வில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் உதவி போஸ்ட்மாஸ்டரிடம் அழைத்துப் போனார் ஹெட் கிளார்க். போகும்போது கட்டடத்தின் உயர்ந்த கூரையையும். பார்சல், மணீயார்டர், போஸ்டல் ஆர்டர்  செக்ஷன்களையும், ‘கவுன் டர்’களையும் மலைப்புடன் பார்த்தபடி சென்றேன். எங்கு பார்த்தாலும் பேப்பர் கட்டுகள்.. பீரோக்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன..  மேஜை, நாற்காலிகள் கிளைவ் காலத்தைச் சேர்ந்தவைகளாக இருந்தன. ஒரே இரைச்சல். டமால்,. டமால் என்று முத்திரை குத்தும் ஓசை வேறு. பெரிய ஹாலில் சுமார் 50,60 தபால்காரர்கள், தபால்களைப் பிரித்துக் கொண்டும் ‘பீட்’ பிரகாரம் அடுக்கிக்கொண்டும் தமிழிலும், தெலுங்கிலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.(ஆம், தெலுங்கும் ஜி. பி. ஓ.வின் முக்கிய மொழியாக இருந்த காலகட்டம் அது! .”ஐயோ இந்த புராதன கட்டடத்தில், இந்த சத்தத்தில் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்று லேசான கவலை ஏற்பட்டது. சம்பளம் ரூபாய் 55 என்று தெரிந்தபோது இடிந்து போனது தனிக்கதை. மூன்று மாதத்திற்குப் பிறகு பயிற்சி காலம் முடிந்து விட்டது என்று கூறி சம்பளம் 125 ரூபாயாக ஆக்கப்பட்டது.
        வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஜி. பி. ஓ.  வின் அகன்ற படிகளில் ஏறும் போது இடது பக்கம் தரை தளத்தில் பளிச்சென்று ஒரு அறை இருப்பதைப் பார்த்தேன். அந்த அறையின் மேஜை நாற்காலிகள் பள பள என்றிருந்தன. ட்யூப் லைட்டுகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன. கண்ணாடி போடப்பட்ட போர்ட்டுகளில் தபால் தலைகள் அழகாக வைக்கப்பட்டிருந்தன வெளியே போர்ட்டில்  PHILATELIC BUREAU  என்று எழுதப்பட்டிருந்தது. ஓஹோ,, இது  தபால் தலை சேகரிப்பவர்களுக்காக விசேஷ விற்பனை அறை என்று தெரிந்து கொண்டேன். அவர்களுக்கென்ன விசேஷ ராஜ மரியாதை என்று எண்ணிக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது. தபால் தலை சேகரிப்பது  KING OF HOBBIES AND HOBBY OF KINGS  என்று!. எனக்கென்னவோ தபால் தலை சேகரிப்பதில் ஆர்வம் ஏற்படவில்லை. ( நான் ராஜாவாக இல்லாததும் ஒரு காரணம்!) சில வருடம் ஜி. பி. ஓ. வில் குப்பை கொட்டிக்கொண்டிருந்து விட்டு டில்லி சென்றேன்.
    அங்கு  பார்லிமென்ட் வீதி  தபால் நிலையம் எங்கள் அலுவலகத்தின் தரை தளத்தில் இருந்தது. புதிய தபால் தலைகள் வெளியிடும் போது அங்கு நல்ல கூட்டம் இருக்கும், தபால் நிலையத்தின் அகன்ற படிகளில் நிறைய பேர் பழைய தபால் தலைகளைப் பரப்பி வைத்து விற்றுக் கொண்டிருப்பார்கள், அந்த  குவியல்களில் தேடித் தேடி தேவையான தபால் தலைகளை பலர்  வாங்கிக் கொள்வார்கள். ஆளைப் பார்த்து விலையைச் சொல்லுவார்கள் இந்த வியாபாரிகள். இவர்களில் பலர் மற்ற நாட்களில் அயல் நாட்டு தூதரகங்கள் உள்ள வீதிகளில்  சதா அலைந்து கோண்டிருப்பார்கள். தூதரகங்களின் அருகில்  உள்ள. குப்பைத்தொட்டிகளில் உள்ள தபால் உறைகளை எடுத்துக் கொண்டுபோய் தபால் தலைகளை ஜாக்கிரதையாக எடுத்துச் சேகரிப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது.
    என்னுடன் பணி புரிந்து கொண்டிருந்தவர்கள் தபால் தலைகளையையும் முதல் நாள் கவர்களையும்  வாங்குவார்கள். இருந்தும் எனக்கு இந்த ஹாபியின் மீது ஆர்வம் ஏற்படவில்லை.
    எழுத்துth துறையில் ஆர்வம் இருந்ததால்  புத்தகசாலைகளே கதி என்று இருந்தேன். குமுதம், தினமணி கதிர், கல்கி என்று பல பத்திரிகைகளில் என் எழுத்துகளுக்கு இடம் கிடைத்தது. டில்லியில் ஓரளவு பெயர் தெரிந்த ஆசாமியானேன்.

    வாயு மைந்தன்

    அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக,  ஆருயிர் காக்க  ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்-  

    இது அனுமனைக் குறிக்கும் துதிப் பாடல்.

    பஞ்சபூதங்களையும் (காற்று , வானம், நீர், நெருப்பு,  நிலம்,)  இந்தப் பாடலில் கொண்டு வந்துள்ளார் கவிச் சக்ரவர்த்தி கம்பர். 

    அனுமன் வாயுவின் மகன்;
    ஆகாயம் வழியாகத் தாவி.
    கடல் மேல்  செல்கிறன்.
    பூமியின் மகள் சீதாபிராட்டியை க் காண்கிறான்.
    அயல் நாட்டில் தீயை வைக்கிறான்

    October 02, 2010

    கடிதப் புத்தகங்கள் இரண்டு - கடுகு ( UPDATED)

     சமீபத்தில் இரண்டு புத்தகங்களைப் படித்தேன். இரண்டு புத்தகங்களும் கடிதங்களின் தொகுப்பு. பிரபல எழுத்தாளர்களின் கடிதங்கள்.
    முதல் புத்தகம் இசாக் அசிமாவ் எழுதியவை.( தன் பெயர் இப்படித்தான் உச்சரிக்கப்பட வேண்டும்  என்று அவரே எழுதி இருக்கிறார்.)
    இரண்டாவது புத்தகம் நகைச்சுவை கவிதைகளை எழுதிக் குவித்த அக்டன் நாஷ்  தன் குடும்பத்தினருக்கு எழுதிய அன்புக் கடிதங்கள்.

    அசிமாவ் ஒரு மேதை. விஞ்ஞான கதைகளிலிருந்து ஷேக்ஸ்பியரிலிருந்து பைபிளிலிருந்து நகைச்சுவை ஜோக்குகள் வரை ஏராளமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். "மூன்று நாட்களில் ஒரு புத்தகத்தை எழுதிவிடுவேன். ஆனால் ஒருவாரம் பத்து நாள் தாமதித்துத் தான் பதிப்பகத்தாருக்கு அனுப்புவேன். இல்லாவிட்டால் அவர்கள் நான் அவசரக்கோலமாக எழுதிவிட்டேன் என்று எண்ணி விடுவார்கள்” என்று அசிமாவ் தன் சுய சரிதத்தில் சொல்லியிருக்கிறார். 
    546 புத்தகங்களை எழுதியுள்ளவர் அசிமாவ்.   அத்துடன்,  தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு கடிதங்களை எழுதியுள்ளார், அவர் வாழ்நாளில் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுமாம். அவர் எப்போதும் கார்பன் பேப்பரை வைத்துத்தான் கடிதங்களைஎழுதுவாராம். சிலசமயம் அவர் கார்டுகளில் எழுதுவதும் உண்டு  அவைகளுக்குக் கணக்குக் கிடையாது.
    அசிமாவ் எழுதிய எல்லாப் புத்தகங்களின் பிரதிகளையும் கடிதங்களையும் விஸ்கான்சின் சர்வகலாசாலையில் ஒரு பெரிய ஹாலில் நிரந்தரமாக காட்சியாக  வைத்தி்ருக்கிறார்கள்.
    அசிமாவ் காலமான சில வருடங்களுக்குப் பிறகு அவரது மனைவி ஜேனட் ஜப்சன் அசிமாவின் கடிதங்களிலிருந்து பல கடிதங்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளார். புத்தகத்தின் தலைப்பு யுவர்ஸ்... (YOURS..). இப்படி ஒரு புத்தகத்தைத் தொகுக்கப் போகிறேன் என்று ஜேனட் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்த பலர், அசிமாவ் தங்களுக்கு எழுதிய கார்டுகளை ஃபோட்டோ காபி எடுத்து அனுப்பினார்களாம். சுமார் 330 பக்கப் புத்தகம். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு வரியும் மிக மிக அபாரமானவை. ஒரு வரி கூட   ஆம் ஒரு வரி கூட-- விடாமல் ரசித்துப் படிக்கக் கூடிய புத்தகம். அசிமாவ் கடிதங்களைப் பின்னால் தனிப் பதிவாகப் போடுகிறேன்.

    இரண்டாவது புத்தகம் ஆக்டன் நாஷ் தன் குடும்பத்தினருக்கு எழுதிய அன்புக் கடிதங்கள் தான். புத்தகத்தின் தலைப்பு:    LOVING  LETTERS  (லவ்விங்க் லெட்டர்ஸ்). கடிதங்கள் பாசத்திலும் நகைச்சுவையிலும் பரிவிலும் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளன.கடிதங்கள் எழுத சளைக்க மாட்டாராம்.  வெளியூர் சென்றால் தினமும் ஒரு கடிதம் போடுவாராம்.இந்த 400 பக்கப் புத்தகத்தைத் அவருடய மகள் லினெல் நாஷ் ஸ்மித் தொகுத்துள்ளர். அங்கங்கு குறிப்புகளையும் தந்துள்ளர். இன்னும் புத்தகத்தை  நான் படித்து முடிக்கவில்லை. ஆனால் அவரது பாடல் புத்தகங்களை ரசித்துப் படித்திருக்கிறேன். TRASHERYOF NASHERY. CANDY IS DANDY, THE BEST OF OGDEN NASH, OGDEN NASH OMNIBUS என்று   14  கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ளார். தான் எழுதிய சில   கவிதைகளை  சிறிது மாற்றி வேறொரு கவிதையாகவும் எழுதி இருக்கிறார் .